9th Social Science - Book Back Answers - Civics Unit 3 - Tamil Medium Guides

 

 


    9th - Social Science - Book Back Answers - Civics Unit 3 - Tamil Medium

    Tamil Nadu Board 9th Standard Social Science - Civics Unit 3: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 3 – Civics from the Tamil Nadu State Board 9th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Civics Unit 3 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!

    பாடத்தலைப்பு:

    அலகு 3 : மனித உரிமைகள் 

     

    I. சரியான விடையைத் தேர்வு செய்க

    வினா 1. நிறவெறியைத் தொடர்ந்து ____________
    (அ) தெற்கு சூடான்
    (ஆ) தென்னாப்பிரிக்கா
    (இ) நைஜீரியா
    (ஈ) எகிப்து
    விடைகுறிப்பு:
    (ஆ) தென்னாப்பிரிக்கா

    வினா 2. அரசாங்கத்தை உருவாக்குவதிலும் நிர்வகிப்பதிலும் ____________ உரிமைப் பயிற்சிகள்.
    (அ) சமூக
    (ஆ) பொருளாதார
    (இ) அரசியல்
    (ஈ) கலாச்சார
    விடைகுறிப்பு:
    (இ) அரசியல்
     
    வினா 3. ஒரு 10 வயது சிறுவன் ஒரு கடையில் வேலை செய்கிறான். அவனை மீட்க நீங்கள் எந்த உரிமையைப் பயன்படுத்தலாம்?
    (அ) சமத்துவ உரிமை
    (ஆ) சுதந்திர உரிமை
    (இ) குழந்தைத் தொழிலாளர் சுரண்டலுக்கு எதிரான உரிமை
    (ஈ) மத சுதந்திர உரிமை
    விடைகுறிப்பு:
    (இ) குழந்தைத் தொழிலாளர் சுரண்டலுக்கு எதிரான உரிமை

    வினா 4. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இலிருந்து தகவல்களைப் பெறுவதற்கான கால அவகாசம் என்ன?
    (அ) 20 நாட்கள்
    (ஆ) 25 நாட்கள்
    (இ) 30 நாட்கள்
    (ஈ) 35 நாட்கள்
    விடைகுறிப்பு:
    (இ) 30 நாட்கள்

    வினா 5. பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
    (i) மாநில மனித உரிமைகள் ஆணையம் 1993 இல் நிறுவப்பட்டது.
    (ii) இது ஒரு சிவில் நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
    (iii) இது மாநிலத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
    (iv) பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் இது பரிந்துரைக்க முடியும்.

    (a) i மற்றும் ii உண்மை
    (b) i மற்றும் iii உண்மை
    (c) i, ii மற்றும் iii உண்மை
    (d) ii, iii மற்றும் iv உண்மை
    விடைகுறிப்பு:
    (ii), (ii) மற்றும் (iv) உண்மை
     
    வினா 6. பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.
    கூற்றுகள் (A): உரிமைகளும் கடமைகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
    காரணம் (R): மத சுதந்திரத்திற்கான உரிமை நமக்கு உள்ளது. நாம் நல்லிணக்கத்தையும் பிற மத மக்களின் மனப்பான்மையையும் ஊக்குவிக்க வேண்டும்.

    (a) A மற்றும் R இரண்டும் சரியானவை மற்றும் R விளக்குகிறது A
    (b) A மற்றும் R இரண்டும் சரியானவை ஆனால் R விளக்கவில்லை A
    (c) A சரியானது ஆனால் R தவறானது
    (d) A தவறானது ஆனால் R சரியானது
    விடைகுறிப்பு:
    (a) A மற்றும் R இரண்டும் சரியானது மற்றும் R விளக்குகிறது A

    வினா 7. ஐ.நா.வின் கூற்றுப்படி, ஒரு குழந்தை என்பது ________ வயது பூர்த்தி செய்யாத ஒரு நபர்.
    (அ) 12
    (ஆ) 14
    (இ) 16
    (ஈ) 18
    விடைகுறிப்பு:
    (ஈ) 18
     
    வினா 8. கைலாஸ்தா சத்யார்த்தி மற்றும் மலாலா ஆகியோருக்கு ______________ க்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    (அ) இலக்கியம்
    (ஆ) அமைதி
    (இ) இயற்பியல்
    (ஈ) பொருளாதாரம்
    விடைகுறிப்பு:
    (ஆ) அமைதி



    II. கோடிட்ட இடங்களை நிரப்புக

    1.மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் ____________ கட்டுரைகள் உள்ளன.
    2.அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பில் ____________ திருத்தச் சட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டன.
    3.தேசிய மனித உரிமைகள் ஆணையம் ____________ அன்று நிறுவப்பட்டது.
    4.1989 ஆம் ஆண்டு பெண்களின் மூதாதையர் சொத்துரிமைச் சட்டத்தை அமல்படுத்திய இந்திய மாநிலம் ____________ ஆகும்.

    விடைகுறிப்பு:
    1.30 மீனம்
    2.42வது
    3.12 அக்டோபர் 1993
    4.தமிழ்நாடு

    III. பொருத்துக  


    1.வாக்களிக்கும் உரிமை                                   - (i) கலாச்சார உரிமைகள்
    2.தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை        - (ii) சுரண்டலுக்கு எதிரான உரிமை
    3.பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் உரிமை – (iii) அரசியல் உரிமைகள்
    4.இந்து வாரிசுரிமைச் சட்டம்                          - (iv) சுதந்திர உரிமை
    5.குழந்தைத் தொழிலாளர்                                – (v) 2005

    விடைகுறிப்பு:
    1.வாக்களிக்கும் உரிமை                                   - (iii) அரசியல் உரிமைகள்
    2.தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை        - (iv) சுதந்திர உரிமை
    3.பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் உரிமை – (i) கலாச்சார உரிமைகள்
    4.இந்து வாரிசுரிமைச் சட்டம்                         - (v) 2005
    5.குழந்தைத் தொழிலாளர்                               – (ii) சுரண்டலுக்கு எதிரான உரிமை


    IV. சுருக்கமான விடையளிக்கவும்

    1. மனித உரிமைகள் என்றால் என்ன?

    • எவ்வித வேறுபாடும் இல்லாமல் மனிதர்களாக பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை ஆகும்.

     

    2. அடிப்படை உரிமைகள் யாவை?

    • சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டுலுக்கெதிரான உரிமை, சமய உரிமை, பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள், அரசியலமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை.

     

    3. குழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா.சபை அறிவித்துள்ளவை யாவை?
    • வாழ்வதற்கான உரிமை, குடும்பச் சூழலுக்கான உரிமை, கல்விக்கான உரிமை, சமூக பாதுகாப்பு உரிமை, விற்பது அல்லது கடத்தலுக்கெதிரான உரிமை.

     

    4. அரசியலமைப்புத் தீர்வு வழிகளுக்கான உரிமையைப் பற்றி சிறு குறிப்பு வரைக.
    • ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில் அரசியலமைப்பு தரும் தீர்வு காணும் உரிமையின்படி அந்த நபர் நீதிமன்றத்தை அணுகலாம்.
    •  நீதிமன்றம் அக்குடிமகனின் உரிமையை மீட்டு தர அரசுக்கு ஆணையிடும்.

     

    5. போக்சா (POCSO) வரையறு.
    • பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து 18 வயது வரை உள்ள குழந்தைகளை பாதுகாக்கும் சட்டமே போக்சா ஆகும்.

     

    6. குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுவது ஏன்?

    • குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாகும்போது அவர்களுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது.

     

    7. தொழிலாளர் நலனுக்காக பி.ஆர்.அம்பேத்காரின் பங்களிப்பு யாவை?
    • தொழிற்சாலை வேலை நேரம் குறைப்பு
    • தொழிலாளர் காப்பீட்டுக் கழகம்
    • குறைந்தபட்ச ஊதியம்
    • தொழிற்சங்கங்களின் கட்டயா அங்கீகாரம்

     

    8. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் பெண்களுக்கான தனிச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நியாயப்படுத்துக.
    • குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், பெண்சிசுக்கொலை, சமூகத்தில் சமமதிப்பின்மை, போன்ற காரணங்களால் பெண்கள் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு தனிச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

     

    9. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் தொழிலாளர் நலனுக்காக அளித்த பங்களிப்பை பற்றி ஏதேனும் இரண்டு கூறு.
    • சம வேலை - சம ஊதியம்
    • பணி நேர குறைப்பு - ஊதிய உயர்வு
    • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

     

    10. வேறுபடுத்துக.
     

    மனித உரிமைகள்

    அடிப்படை உரிமைகள்

    1. மனிதர்களாய் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை.

    2. சுதந்திரம் சமத்துவம் ஆகியவற்றை நிலைநிறுத்தி உள்ளன.

    1. மனிதனின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு தேவையான உரிமைகள் அடிப்படை உரிமைகள்.

    2. பேசும் உரிமை, வாழும் உரிமைகள் வழங்கி மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளன.

     

     

    V. விரிவான விடையளிக்கவும்   

    1. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் பற்றி ஒரு பத்தியில் விடை தருக.

    • வெவ்வேறு சட்ட மற்றும் பண்பாட்டு பின்னணியுடன் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்ட பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்டது.
    • இது மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல்.
    • 1948- ஆம் ஆண்டு டிசம்பர் 10-ல் ஜ.நா சபையால் நிறைவேற்றப்பட்டது.
    • அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
    • இதில் 30 உறுப்புகள் உள்ளன.
    • இதில் உள்ள பெரும்பாலான உத்திரவாதங்கள் தரமிக்க விதிமுறைகளாக நிலைபெற்று விளங்குகின்றன.

     

     

    2. அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன? அவற்றை எவ்வாறு உன் பள்ளி வளாகத்தில் செயல்படுத்துவாய்?

    அடிப்படைக் கடமைகள்:

    • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குடிமக்களின் கடமைகள் பொறுப்புகள் என்ற பொருளில் அமைந்துள்ளது.

    பள்ளி வளாகத்தில் செயல்படுத்தும் விதம்:

    • பள்ளியின் விதிமுறைகளை மதித்து நடப்பேன்.

    • தேசிய சின்னங்களான தேசியக்கொடி, தேசிய கீதம் ஆகியவற்றை மதித்து நடப்பேன்.

    • சக மாணவர்களுடன் ஒற்றுமையாக சகோதரத்துவம் பேணுவேன்.

    • பள்ளியின் பொதுச் சொத்துகளை பாதுகாப்பேன்.

     

     

    3. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நம் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கிறது?
    • தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் நாள் அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பு.
    • மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல்.
    • மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துதல்.
    • மனித உரிமைகள் குறித்த வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல்.
    • அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் முயற்சிகளை ஊக்குவித்தல்.

     

     

    4. தொழிலாளர் சட்டத்தின் மூலம் தொழிலாளர் பெறும் நன்மைகள் யாவை?
    • சமத்துவத்திற்கான உரிமை
    • பொது வேலை வாய்ப்பில் சமத்துவம்
    • அமைப்புகள் சங்கம் தொடங்குவதற்கான உரிமை
    • வாழ்வாதார உரிமை
    • கடத்தலைத் தடுத்தல்
    • சம வேலை- சம ஊதியம்

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive