10th Science - Book Back Answers - Chemistry Unit 9 - Tamil Medium Guides

 


    SSLC / 10th - Science - Book Back Answers - Chemistry Unit 9 - Tamil Medium

    Tamil Nadu Board 10th Standard  Science - Chemistry Unit 9: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 9 – Chemistry from the Tamil Nadu State Board 10th Standard  Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Chemistry Unit 9 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!

    Topic: கரைசல்கள்

    I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

     1. நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது ………….. கலவை
    அ) ஒருபடித்தான
    ஆ) பலபடித்தான
    இ) ஒருபடித்தான மற்றும் பலபடித்தானவை
    ஈ) ஒருபடித்தானவை அல்லாதவை
    விடைகுறிப்பு:

    அ) ஒருபடித்தான

     2. இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை ……..
    அ) 2
    ஆ) 3
    இ) 4
    ஈ) 5
    விடைகுறிப்பு:

    அ) 2
     
    3. கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ……
    அ) அசிட்டோன்
    ஆ) பென்சீன்
    இ) நீர்
    ஈ) ஆல்கஹால்
    விடைகுறிப்பு:

    இ) நீர்
     
    4. குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாதோ அக்கரைசல் …
    எனப்படும்.
    அ) தெவிட்டிய கரைசல்
    ஆ) தெவிட்டாத கரைசல்
    இ) அதி தெவிட்டிய கரைசல்
    ஈ) நீர்த்த கரைசல்
    விடைகுறிப்பு:

    அ) தெவிட்டிய கரைசல்
     
    5. நீரற்ற கரைசலை அடையாளம் காண்க
    அ) நீரில் கரைக்கப்பட்ட உப்பு
    ஆ) நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்
    இ) நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்
    ஈ) கார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்
    விடைகுறிப்பு:

    ஈ) கார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்

    6. குறிப்பிட்ட வெப்பநிலையில் அழுத்தத்தை அதிகரிக்கும்போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் ……………………….. .
    அ) மாற்றமில்லை
    ஆ) அதிகரிக்கிறது
    இ) குறைகிறது
    ஈ) வினை இல்லை
    விடைகுறிப்பு:

    ஆ) அதிகரிக்கிறது
     
    7. 100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி. நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும்?
    அ) 12 கி
    ஆ) 11 கி
    இ) 16 கி
    ஈ) 20 கி
    விடைகுறிப்பு:

    ஆ) 11 கி
     
    8. 25% ஆல்க ஹால் கரைசல் என்பது ……………
    அ) 100 மி.லி. நீரில் 25 மி.லி. ஆல்க ஹால்
    ஆ) 25 மி.லி. நீரில் 25 மி.லி. ஆல்க ஹால்
    இ) 75 மி.லி. நீரில் 25 மி.லி. ஆல்க ஹால்
    ஈ) 25 மி.லி. நீரில் 75 மி.லி. ஆல்க ஹால்
    விடைகுறிப்பு:

    இ) 75 மி.லி. நீரில் 25 மி.லி. ஆல்கஹால்
     
    9. ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் ….
    அ) ஈரம் மீது அதிக நாட்டம்
    ஆ) ஈரம் மீது குறைந்த நாட்டம்
    இ) ஈரம் மீது நாட்டம் இன்மை
    ஈ) ஈரம் மீது மந்தத்தன்மை
    விடைகுறிப்பு:

    அ) ஈரம் மீது அதிக நாட்டம்
     
    10. கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது ………….
    அ) ஃபெரிக் குளோரைடு
    ஆ) காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்
    இ) சிலிக்கா ஜெல்
    ஈ) இவற்றுள் எதுமில்லை
    விடைகுறிப்பு:

    இ) சிலிக்கா ஜெல்



    II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

    1. ஒரு கரைசலில் உள்ள மிகக் குறைந்த அளவு கொண்ட கூறினை …………….. என அழைக்கிறோம்.
    விடைகுறிப்பு:

    கரைபொருள்

    2. திண்மத்தில் நீர்மம் வகை கரைசலுக்கு ஒரு எடுத்துக்காட்டு ………….
    விடைகுறிப்பு:

    பாதரசத்துடன் கலந்த சோடியம் (இரசக் கலவை)
     
    3. கரைதிறன் என்பது ……………….. கி கரைப்பானில் கரைக்கப்படும் கரைபொருளின் அளவு ஆகும்.
    விடைகுறிப்பு:

    100
     
    4. முனைவுறும் சேர்மங்கள் ………… கரைப்பானில் கரைகிறது.
    விடைகுறிப்பு:

    முனைவுறு
     
    5. வெப்பநிலை அதிகரிக்கும் போது கனஅளவு சதவீதம் குறைகிறது ஏனெனில் …….
    விடைகுறிப்பு:

    திரவங்கள் வெப்பத்தால் விரிவடையும்


    III. பொருத்துக.

    asas
    1.
    நீல விட்ரியால்
    CaSO4 .2H2O
    2.
    ஜிப்சம்
    CaO
    3.
    ஈரம் உறிஞ்சிக்கரைபவை
    CaSO4 ..5H2O
    4.
    ஈரம் உறிஞ்சி
    NaOH
    விடைகுறிப்பு:
    1.
    நீல விட்ரியால்
    CaSO4 ..5H2O
    2.
    ஜிப்சம்
    CaSO4 .2H2O
    3.
    ஈரம் உறிஞ்சிக்கரைபவை
    NaOH
    4.
    ஈரம் உறிஞ்சி
    CaO
     
     

    IV.  சரியா? தவறா ? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

     1. இருமடிக்கரைசல் என்பது மூன்று கூறுகளைக் கொண்டது.
    விடைகுறிப்பு:

    தவறு.
    சரியான விடைகுறிப்பு:
    இருமடிக்கரைசல் என்பது இரண்டு கூறுகளைக் கொண்டது.
     
    2. ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறுக்கு கரைப்பான் என்று பெயர்.
    விடைகுறிப்பு:

    தவறு.
    சரியான விடைகுறிப்பு:
    ஒரு கரைசலில் குறைந்த அளவு எடை கொண்ட கூறுக்கு கரைபொருள் என்று பெயர்.
     
    3. சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும் கரைசல் நீரற்ற கரைசலாகும்.
    விடைகுறிப்பு:

    தவறு.
    சரியான விடைகுறிப்பு:
    சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும் கரைசல் நீர்க்கரைசல் ஆகும்.
     
    4. பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்பாடு
    MgSO4.7H2O
    விடைகுறிப்பு:
    தவறு.
    சரியான விடைகுறிப்பு:
    பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்பாடு FeSO
    4.7H2O
     
    5. சிலிகா ஜெல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்கிறது. ஏனெனில் அது ஒரு ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மம் ஆகும்.
    விடைகுறிப்பு:

    சரி.

     

    V.  சுருக்கமாக விடையளி.

    1. கரைசல் – வரையறு:
    விடைகுறிப்பு:

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களின் ஒரு படித்தான கலவை கரைசல் எனப்படும்.
     
    2. இருமடிக்கரைசல் என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    ஒரு கரைபொருளையும் ஒரு கரைப்பானையும் கொண்டிருக்கும் கரைசல் இருமடிக்கரைசல் எனப்படும்.

    3. கீழ்க்கண்டவற்றுக்கு தலா ஒரு எடுத்துக்காட்டு தருக.
    1. திரவத்தில் வாயு
    2. திரவத்தில் திண்ம ம்
    3. திண்மத்தில் திண்மம்
    4. வாயுவில் வாயு
    விடைகுறிப்பு:

    1. நீரில் கரைக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு (சோடா நீர்)
    2. நீரில் கரைக்கப்பட்ட சோடியம் குளோரைடு
    3. தங்கத்தில் கரைக்கப்பட்ட காப்பர் (உலோகக் கலவைகள்)
    4. ஆக்ஸிஜன் – ஹீலியம் வாயுக்கலவை

    4. நீர்க்கரைசல் மற்றும் நீரற்ற கரைசல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    விடைகுறிப்பு:

    1. நீர்க்கரைசல் : எந்தவொரு கரைசலில், கரைபொருளைக் கரைக்கும் கரைப்பானாக நீர் செயல்படுகிறதோ அக்கரைசல் நீர்க் கரைசல் எனப்படும்.
    2. நீரற்ற கரைசல் : எந்த ஒரு கரைசலில் நீரைத்தவிர, பிற திரவங்கள் கரைப்பானாக செயல்படுகிறதோ அக்கரைசல் நீரற்ற கரைசல் என அழைக்கப்படுகிறது.

    5. கன அளவு சதவீதம் – வரையறு.
    விடைகுறிப்பு:

    (i) ஒரு கரைசலில் உள்ள கரைபொருளின் கன அளவை சதவீதத்தில் குறித்தால் அது அக்கரைசலின் கனஅளவு சதவீதம் என வரையறுக்கப்படுகிறது.
    (ii)

    6. குளிர் பிரதேசங்களில் நீர்வாழ் உயிரினங்கள் அதிகம் வாழ்கின்றன. ஏன்?
    விடைகுறிப்பு:

    1. குளிர் பிரதேசங்களில் உள்ள நீர்நிலைகளில் அதிக அளவு ஆக்ஸிஜன் கரைந்துள்ளது.
    2. ஏனெனில், வெப்பநிலை குறையும் போது ஆக்ஸிஜனின் கரைதிறன் அதிகரிக்கிறது. எனவே நீர்வாழ் உயிரினங்கள் குளிர் பிரதேசங்களில் அதிகமாக வாழ்கின்றன.
     
    7. நீரேறிய உப்பு – வரையறு.
    விடைகுறிப்பு:

    1. அயனிச் சேர்மங்கள் அவற்றின் தெவிட்டிய கரைசலில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நீர் மூலக்கூறுகளுடன் சேர்ந்து படிகமாகிறது.
    2. இந்தப் படிகங்களுடன் காணப்படும் நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கையே படிகமாக்கல் நீர் எனப்படும்.
    3. அத்தகைய படிகங்கள் நீரேறிய உப்புகள் எனப்படும்.
     
    8. சூடான தெவிட்டிய காப்பர் சல்பேட் கரைசலைக் குளிர்விக்கும்போது படிகங்களாக மாறுகிறது. ஏன்?
    விடைகுறிப்பு:

    1. நிறமற்ற, நீரற்ற காப்பர் சல்பேட் உப்பில் சில துளி நீரினைச் சேர்க்கும்போது அல்லது குளிர்விக்கும்போது கரைசலில் உள்ள மூலக்கூறுகள் நெருங்கி அமைகின்றன.
    2. எனவே, அவை நீரேறிய உப்பாக அல்லது படிகங்களாக மாறுகின்றன.
     
    9. ஈரம் உறிஞ்சிகள் மற்றும் ஈரம் உறிஞ்சிக் கரைபவைகளை அடையாளம் காண்க.
    (அ) அடர் சல்பியூரிக் அமிலம்
    (ஆ) காப்பர் சல்பேட் பென்டா ஹைட்ரேட்
    (இ) சிலிக்கா ஜெல்
    (ஈ) கால்சியம் குளோரைடு
    (உ) எப்சம் உப்பு
    விடைகுறிப்பு:

    ஈரம் உறிஞ்சிகள்
    ஈரம் உறிஞ்சிக் கரைப்பவைகள்
    அ) அடர் சல்பியூரிக் அமிலம்
    ஆ) காப்பர் சல்பேட்பெண்டா ஹைட்ரேட்
    இ) சிலிகா ஜெல்
    ஈ) கால்சியம் குளோரைடு
    உ) எப்சம் உப்பு
               

    VI. விரிவாக விடையளி.

    1. குறிப்பு வரைக: அ) தெவிட்டிய கரைசல் ஆ) தெவிட்டாத கரைசல்.
    விடைகுறிப்பு:
    (அ) தெவிட்டிய கரைசல்:

    ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசல் மேலும் கரைபொருளை கரைக்க முடியாதோ அக்கரைசல் தெவிட்டிய கரைசல். உதாரணமாக 25°C வெப்பநிலையில் 100 கி நீரில், 36 கி சோடியம் குளோரைடு உப்பினைக் கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது. மேலும் கரைபொருளைச் சேர்க்கும்போது அது கரையாமல் முகவையின் அடியில் தங்கிவிடுகிறது. –
    (ஆ)தெவிட்டாத கரைசல்:
    குறிப்பிட்ட வெப்பநிலையில் தெவிட்டிய கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவை விடக் குறைவான கரைபொருள் அளவைக் கொண்ட கரைசல் தெவிட்டாத கரைசல் ஆகும். உதாரணமாக 25°C வெப்பநிலையில் 100 கி நீரில், 10 கி அல்லது 20 கி அல்லது 30 கி சோடியம் குளோரைடு உப்பினைக் கரைத்து தெவிட்டாத கரைசல் உருவாக்கப்படுகிறது.
     
    2. கரைதிறனை பாதிக்கும் பல்வேறு காரணிகள் பற்றி குறிப்பு வரைக.
    விடைகுறிப்பு:

    ஒரு கரைபொருளின் கரைதிறனை மூன்று முக்கிய காரணிகள் தீர்மானிக்கின்றன. அவைகளாவன:
    (i) கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை
    (ii) வெப்பநிலை
    (iii) அழுத்தம்
    (i) கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை:
    • கரைதிறனில், கரைப்பான் மற்றும் கரைபொருளின் தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது.
    • நீர் பெரும்பான்மையான பொருட்களை கரைக்கும் தன்மையை கொண்டிருந்தாலும், சில பொருள்கள் நீரில் கரைவதில்லை.
    • இதனையே ஒத்த கரைபொருட்கள் ஒத்த கரைப்பானில் கரைகிறது என்கிறோம்.
    • கரை பொருளுக்கும் கரைப்பானுக்கும் இடையே ஒற்றுமை காணப்படும் போதுதான் கரைதல் நிகழ்கிறது.
    • முனைவுறும் சேர்மங்கள் *முனைவுறும் கரைப்பானான நீரில் எளிதில் கரைகிறது.
    • முனைவுறாச் சேர்மங்கள் முனைவுறாக் கரைப்பானில் எளிதில் கரைகிறது.
    • ஆனால் முனைவுறாச் சேர்மங்கள் முனைவுறு கரைப்பானிலும், முனைவுறுச் சேர்மங்கள் முனைவுறா கரைப்பானிலும் கரைவதில்லை.
    (ii) வெப்பநிலை:
    திரவத்தில் திண்மங்களின் கரைதிறன்:
    • பொதுவாக வெப்பநிலை அதிகரிக்கும் போது நீர்ம கரைப்பானில் திண்மப் பொருளின் கரைதிறன் அதிகரிக்கிறது.
    • வெப்பக்கொள் செயல்முறையில், வெப்பநிலை அதிகரிக்கும்போது கரைதிறன் அதிகரிக்கிறது.
    • வெப்ப உமிழ் செயல்முறையில் வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைதிறன் குறைகிறது.
    திரவத்தில் வாயுக்களின் கரைதிறன்:
    • திரவத்தின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது வாயுவின் கரைதிறன் குறைகிறது.
    • திரவத்தின் வெப்பநிலை குறையும் போது வாயுவின் கரைதிறன் அதிகரிக்கிறது.
    (iii) அழுத்தம் :
    • வாயுக்களை கரைபொருளாக கொண்ட திரவ கரைசல்களில் மட்டுமே அழுத்தத்தின் விளைவு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.
    • திரவ அழுத்தத்தை அதிகரிக்கும் போது ஒரு திரவத்தில் வாயுவின் கரைதிறன் அதிகரிக்கிறது.
     
     3. (i) 
    MgSO4.7H2O உப்பை வெப்பப்படுத்தும் போது என்ன நிகழ்கிறது?
    (ii) கரைதிறன் – வரையறு.
    விடைகுறிப்பு:
     
    (i) 
    MgSO4.7H2O வெப்ப விளைவு:
    மெக்னீசியம் சல்பேட் ஹெப்டா ஹைட்ரேட் படிகத்தை வெப்பப்படுத்தும் போது ஏழு நீர் மூலக்கூறுகளை இழந்து நீரற்ற மெக்னீசியம் சல்பேட்டாக மாறுகிறது.

    (ii) கரைதிறன்:
    கரைதிறன் என்பது எவ்வளவு கரைபொருள் குறிப்பிட்ட அளவு கரைப்பானில் கரையும் என்பதற்கான அளவீடாகும்.
     
    4. ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை?
    விடைகுறிப்பு:
    ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள்
    ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள்
    சாதாரண வெப்ப நிலையில், வளி மண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் | போது அதிலுள்ள ஈரத்தை உறிஞ்சுகிறது. ஆனால் கரைவதில்லை.
    சாதாரண வெப்பநிலையில், வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதிலுள்ள ஈரத்தை உறிஞ்சிக் கரைகிறது.
    வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது தன்னுடைய இயற்பியல் நிலையை இழப்பதில்லை
    வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது தன்னுடைய இயற்பியல் நிலையை இழக்கிறது.
    இவை படிக திண்மங்களாக மட்டுமே காணப்படுகின்றன.
    படிக உருவற்ற திண்மங்களாகவோ, திரவங்களாகவோ காணப்படுகின்றன.
     
    5. 180 கி நீரில் 45 கி சோடியம் குளோரைடைக் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. கரைபொருளின் நிறை சதவீதத்தை காண்க.
    விடைகுறிப்பு:

     
    6. 15லி எத்தனால் நீர்க்கரைசலில் 3.5லி எத்தனால் கலந்துள்ளது. எத்தனால் கரைசலின் கன அளவு சதவீதத்தை கண்டறிக.
    விடைகுறிப்பு:


     

     VII. உயர்சிந்தனைக்கான வினாக்கள்.

    1. விணு 50 கி சர்க்கரையை 250 மி.லி. சுடுநீரில் கரைக்கிறார். சரத் 50 கி அதே வகை சர்க்கரையை 250 மி.லி. குளிர்ந்த நீரில் கரைக்கிறார். யார் எளிதில் சர்க்கரையை கரைப்பார்கள்? ஏன்?
    விடைகுறிப்பு:

    1. விணு சர்க்கரையை வேகமாக கரைப்பார். ஏனெனில், குளிர்ந்த நீரில் கரைவதை விட சர்க்கரை, சுடுநீரில் அதிக அளவில் கரைகிறது.
    2. ஏனெனில், வெப்பநிலை அதிகரிக்கும் போது நீர்ம கரைப்பானில் திண்மப் பொருளின் கரைதிறன் அதிகரிக்கிறது.

     
    2. ‘A’ என்பது நீல நிறப் படிக உப்பு. இதனைச் சூடுபடுத்தும் போது நீல நிறத்தை இழந்து ‘B’ ஆக மாறுகிறது. ‘B’-இல் நீரைச் சேர்க்கப்படும்போது ‘B’ மீண்டும் ‘A’ ஆக மாறுகிறது. ‘A’ மற்றும் ‘B’ யினை அடையாளம் காண்க. 
    விடைகுறிப்பு:
     
     
    3. குளிர்பானங்கள் மலை உச்சியில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? அல்லது அடிவாரத்தில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? விளக்குக.
    விடைகுறிப்பு:

    1. குளிர்பானங்கள் மலை உச்சியில் அதிகமாக நுரைத்துப் பொங்குகின்றன.
    2. ஏனெனில், மலை உச்சியில் அழுத்தம் குறைவதால் கரைதிறனும் குறைகிறது.
    3. இதனால் CO
    2 வாயு குமிழ்களாக வெளியேறுகிறது.



     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive