11th History - Book Back Answers - Unit 18 - Tamil Medium Guides

 

 


    Plus One / 11th History - Book Back Answers - History Unit 18 - Tamil Medium

    Tamil Nadu Board 11th Standard History Unit 18: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 18 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 18 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 18 - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்

    I. சரியான விடையைத் தேர்வு செய்க

    வினா  1.
    உடையார் அரசர்களுக்கு எதிராக மராத்தியர்களை வெற்றிகரமாக கையாண்ட பின்……………. உண்மையான அரசர் ஆனார்.

    அ) ஹைதர் அலி
    ஆ) நஞ்சராஜா
    இ) நாகம நாயக்கர்
    ஈ) திப்பு சுல்தான்
    விடைகுறிப்பு:
    அ) ஹைதர் அலி
     
    வினா  2.
    திப்பு சுல்தான் ………..பகுதியைக் கைப்பற்றியதால் மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் தொடங்கியது.

    அ) கள்ளிக்கோட்டை
    ஆ) குடகு
    இ) கொடுங்களூர்
    ஈ) திண்டுக்கல்
    விடைகுறிப்பு:
    இ) கொடுங்களூர்

    வினா  3.
    பாளையக்காரர் முறை முதன்முதலில் …………………………………..பேரரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

    அ) விஜயநகர்
    ஆ) பாமனி
    இ) காகதிய
    ஈ) ஹொய்சாள
    விடைகுறிப்பு:
    இ) காகதிய

    வினா  4.
    நெற்கட்டும் செவல், வாசுதேவநல்லூர், பனையூர் ஆகிய புலித்தேவரின் மூன்று முக்கியமான கோட்டைகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

    அ) மாபுஸ்கான்
    ஆ) யூ சுப்கான்
    இ) கர்னல்ஹெரான்
    ஈ) நபிகான் கட்டக்
    விடைகுறிப்பு:
    ஆ) யூ சுப்கான்
     
    வினா  5.
    வேலு நாச்சியார் ……………….. அரசருடைய மகள்.

    அ) சிவகங்கை
    ஆ) புதுக்கோட்டை
    இ) இராமநாதபுரம்
    ஈ) பழவநத்தம்
    விடைகுறிப்பு:
    இ) இராமநாதபுரம்

    வினா  6.
    வீரபாண்டிய கட்டப்பொம்மன் தொடர்பான பிரச்சனைகளை தவறாகக் கையாண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய ஆட்சியர் ………. ஆவார்.

    அ) W.Cஜாக்சன்
    ஆ) A. பானர் மேன்
    இ) S.Rலூஹிங்டன்
    ஈ) P.A ஆக்னியூ
    விடைகுறிப்பு:
    அ)W.Cஜாக்சன்

    வினா  7.
    வேலூர் புரட்சிக்கு உடனடிக் காரணமாக அமைந்த நிகழ்வு ……….  ஆகும்.

    அ) என்ஃபீல்டு ரக துப்பாக்கித் தோட்டாக்கள்
    ஆ) நவீன சீருடை மாற்றம்
    இ) புதிய தலைப்பாகை
    ஈ) கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள்
    விடைகுறிப்பு:
    இ) புதிய தலைப்பாகை
     
    வினா  8.
    கோல் எழுச்சிக்குக் காரணமானவர் ………………. ஆவார்.
    அ) பின்த்ராய் மன்கி
    ஆ) சிடோ
    இ) பிர்சா முண்டா
    ஈ) கானூ
    விடைகுறிப்பு:
    அ) பின்த்ராய் மன்கி

    வினா  9.
    1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் – ஜெனரலாக இருந்தவர்……………………. ஆவார்.

    அ) டல்ஹௌசி
    ஆ) கானிங்
    இ மின்டோ
    ஈ) ஜேம்ஸ் அன்ட்ரியூ ராம்சே
    விடைகுறிப்பு:
    ஆ) கானிங்

    வினா  10.
    1857 ஆம் ஆண்டு புரட்சியின்போது நானா சாகேப்பின் படைகளைத் தோற்கடித்தவர் …………..

    அ) ஹென்றி லாரன்ஸ்
    ஆ) மேஜர் ஜெனரல் ஹோவ்வாக்
    இ) சர் ஹீயூக் வீலர்
    ஈ) ஜெனரல் நீல்
    விடைகுறிப்பு:
    ஆ) மேஜர் ஜெனரல் ஹோவ்வாக்
     
    வினா  11.
    சரியான கூற்றினைத் தேர்வு செய்

    1. வாரன் ஹேஸ்டிங்ஸ், திப்பு சுல்தானை பழிவாங்கும் நோக்கில் அணுகினார்.
    2. திப்புவின் ஆட்சியை அகற்றியதும் மைசூரில் மீண்டும் உடையார் வம்ச ஆட்சி நிறுவியதும் தென்னிந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
    3. ஆற்காட்டு நவாப் வேலு நாச்சியாருக்கு ஆதரவு அளித்தார்.
    4. திருநெல்வேலி காடுகளின் மையத்தில் காளையார் கோயில் உள்ளது.
    விடைகுறிப்பு:
    2. திப்புவின் ஆட்சியை அகற்றியதும் மைசூரில் மீண்டும் உடையார் வம்ச ஆட்சி நிறுவியதும் தென்னிந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.

    வினா  12.
    கூற்று (கூ) : சிவகிரி கோட்டைத் தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பானதாக இருந்தது. (மார்ச் 2019)
    காரணம் (கா) : மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வலுவான அரண்களோடு அது அமைக்கப்பட்டிருந்தது.

    அ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
    ஆ) கூற்று மற்றும் காரணம் தவறானவை.
    இ கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
    ஈ) கூற்று தவறு; காரணம் சரி
    விடைகுறிப்பு:
    இ) கூற்று சரி, காரணம், கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

    வினா  13.
    பொருத்துக
    i) ஜில்லெஸ்பி – 1. ஸ்ரீரங்கப்பட்டினம்
    ii) மஞ்சி – 2. பாரக்பூர்
    iii) ஜாக்கோபியன் கழகம் – 3. வேலூர் கழகம்
    iv) மங்கள் பாண்டே – 4. சந்தால்கள்

    அ) 1,2,3,4
    ஆ) 3,4,1,2
    இ) 3,2,1,4
    ஈ) 2,3,4,1
    விடைகுறிப்பு:
    ஆ) 3,4,1,2


    II. குறுகிய விடை தருக

    1. திப்பு சுல்தான் மீது சுமத்தப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின் (1792) அவமானகரமான விதிமுறைகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.
    • திப்பு தனது ஆட்சிப் பகுதியில் பாதியை ஆங்கிலேயருக்குத் தர வேண்டும்.
    • திப்பு சுல்தான் போர் இழப்பீடாக மூன்று கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்.
    • திப்பு தனது இரண்டு மகன்களை பிணைக் கைதிகளாக அனுப்ப வேண்டும்.

     

    2. "வராகன்" (பகோடா) என்றால் என்ன?
    • விஜயநகர அரசில் அறிமுகமான தங்க நாணயம் பகோடா எனப்பட்டது.
    • பகோடா என்பதை தமிழில் வராகன் என்ற பெயரில் அழைத்தனர்.
    • திப்பு சுல்தான் ஆட்சியில் ஒரு பகோடா என்பது மூன்றரை ரூபாய்க்கு சமம்.

     

    3. கொங்குப் பகுதியில் தீரன் சின்னமலையின் கிளர்ச்சிகள் பற்றி நீவிர் அறிவது யாது?
    • பிரெஞ்சுக்காரர் மற்றும் திப்பு சுல்தானால் பயிற்சி அளிக்கப்பட்டவர்.
    • ஆங்கிலேயருக்கு எதிராக மூன்று முக்கியமான போர்களில் ஈடுபட்டார்.
    • தீரன் சின்னமலை சிவகிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

     

    4. "சாயில்ரகப்" படுகொலை பற்றி சிறு குறிப்பு வரைக.
    • பிர்சா முண்டா சோட்டா நாக்பூர் பகுதியில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினார்.
    • முண்டா சமூகத்தினர் பிர்சா முண்டா தலைமையில் ஆங்கிலேயர்களை எதிர்த்தனர்.
    • செயில்ராகப் என்ற இடத்தில் முண்டா இன பெண்கள் பலர் கொல்லப்பட்டார்கள்.

     

    5. கான்பூர் படுகொலை.
    • கான்பூர் கிளர்ச்சிக்கு மராட்டிய பேஷ்வா நானாசாகிப் தலைமை வகித்தார்.
    • பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 125 ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.
    • கான்பூர் படுகொலையில் இறந்தவர்கள் உடல்கள் ஒரு கிணற்றுக்குள் வீசப்பட்டன.
     

    III. சுருக்கமான விடை தருக

    1. ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே கையெழுத்தான மதராஸ் உடன்படிக்கைக்கான சூழ்நிலைகளை விளக்குக.
    • கேப்டன் நிக்சனை வீழ்த்திய ஹைதர் அலி கரூர், ஈரோடு கைப்பற்றினார்.
    • ஆங்கிலேயர் மீதான தாக்குதலில் தஞ்சாவூர், கடலூர் வரை முன்னேறினார்.
    • ஹைதர் அலிக்கு, மராத்தியர் படையெடுப்பின் அச்சுறுத்தல் காணப்பட்டது.
    • ஹைதர் அலி - ஆங்கிலேயர் இடையே மதராஸ் உடன்படிக்கை கையெழுத்தானது.

     

    2. 1801 ஆம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.
    • 1801 ஆம் ஆண்டு கிளர்ச்சி தென்னிந்திய கலகம் என்று அழைக்கப்படுகிறது.
    • ஊமைத்துரை, செவத்தையா, மருது சகோதரர்கள் கிளர்ச்சியை முன்னின்று நடத்தினர்.
    • சின்ன மருதுவும், வெள்ளை மருதுவும் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.
    • பாஞ்சாலங் குறிச்சியில் ஊமைத்துரை, செவத்தையா தலைகள் துண்டிக்கப்பட்டன.

     

    3. 1806 ஆம் ஆண்டு வேலூர் புரட்சி பற்றி எழுதுக.
    • புரட்சிக்கு காரணம் - அக்னியு தலைப்பாகை, சிலுவை பொறிக்கப்பட்ட சீருடைகள்.
    • 1806 ஜூலை 10 ஆம் நாள் அதிகாலை 2 மணிக்கு வேலூர் புரட்சி வெடித்தது.
    • பல ஆங்கில அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கோட்டை சிப்பாய்கள் வசமானது.
    • ஆற்காட்டில் இருந்த ஜில்லெஸ்பி, புரட்சியை அடக்கி வேலூர் கோட்டையை மீட்டார்.

     

    4. கோல் பழங்குடியினரின் எழுச்சியைப் பற்றி விளக்குக.
    • சோட்டா நாக்பூர் ராஜா கிராமங்களை பழங்குடி அல்லாதோருக்கு குத்தகை விட்டனர்.
    • 1831 டிசம்பர் 20 இல் சோட்டா நாக்பூரில் உள்ள சோனிப்பூர் பர்கானா தாக்கப்பட்டது.
    • 700 பேர் கொண்ட கோல் பழங்குடியினர் குழு சோனிப்பூர் பர்கானாவைத் தாக்கியது.
    • 1832 ஜனவரி 26 க்குள் சோட்டா நாக்பூர் முழுவதும் கோல்கள் கட்டுப்பாட்டில் வந்தது.

     

    5. 1857 ஆம் ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை?
    • கானிங் பிரபு முதல் வைஸ்ராய் ஆனார். இந்தியா அரசுச் செயலர் மூலம் ஆளப்படும்.
    • 15 பேர் கொண்ட இந்தியா கவுன்சில் அரசுச் செயலருக்கு உதவியாக இருக்கும்.
    • இந்திய அரசர்களின் கண்ணியம், கௌரவம், உரிமைகள் மதிக்கப்படும்.
    • புதிய பகுதிகள் எதுவும் இணைக்கப்படாது என உறுதியளித்தது.
     

    IV. விரிவான விடை தருக  

    1. தென் தமிழகத்தில் பாளையக்காரர் அமைப்பு முறை பற்றி விவரிக்கவும்.
    • விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, மதுரை நாயக்க அரசர் பாண்டியப் பேரரசை 72 பாளையங்களாக பிரித்தார்.
    • விஸ்வநாத நாயக்கர் மதுரையைச் சுற்றி வலிமை மிகுந்த ஒரு கோட்டையை எழுப்பி அதில் 72 அரண்களை அமைத்தார்.
    • பாளையக்காரரின் கடமை - அரசருக்கு ஆண்டு தோறும் கப்பம் செலுத்துதல், போரின் போது படை வீரர்களை அனுப்புதல்.
    • பாளையக்காரரின் முக்கியப் பணி - தங்கள் பாளையத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது. நீதி பரிபாலனம் செய்வது.
    • பாளையக்காரர் நிதி திரட்ட சில கிராமங்கள் வழங்கப்பட்டன. பல பட்டங்களும் சிறப்பு உரிமைகளும் வழங்கப்பட்டன.
    • பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில் குடிமையியல், குற்றவியல் பிரச்சனைகளில் விசாரணை நடத்தி நீதி வழங்கினார்.

     

    2. 1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கான காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும். புரட்சிக்கான காரணங்கள்:
    • சிப்பாய்கள் நெற்றியில் அணிந்திருந்த மதக் குறியீடுகள் தடை செய்யப்பட்டன.
    • சிப்பாய்கள் தங்களது மீசையை ஒரே மாதிரியாக வெட்டுவதற்கு அறிவுறுத்தினர்.
    • அக்னியு தலைப்பாகை மீதிருந்த ரிப்பன் மற்றும் குஞ்சம் மிருகத் தோலில் ஆனது.
    • சிப்பாய்கள் அணியும் சீருடையில் முன்பக்கம் சிலுவை பொறிக்கப்பட்டு இருந்தது.
    • இந்திய அரசர்களின் சந்ததியினர் ஆங்கிலேய ஆட்சியை அகற்ற முயன்றனர். 
    புரட்சியின் போக்கு:
    • 1806 ஜூலை 10 ஆம் நாள் அதிகாலை 2 மணிக்கு வேலூர் புரட்சி வெடித்தது.
    • 13 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 82 கீழ்நிலை இராணுவ வீரர்கள் இறந்தார்கள்.
    • கோட்டைக்கு வெளியே இருந்த மேஜர் கூட்ஸ், கில்லஸ்பிக்கு கடிதம் அனுப்பினார்.
    • ஆற்காட்டில் இருந்த கில்லஸ்பி குதிரைப் படையுடன் வந்து புரட்சியை அடக்கினார்.
    • புரட்சிக்கு உடந்தையாக இருந்த மைசூர் இளவரசர்களை கல்கத்தாவுக்கு அனுப்பினர்.

     

    3. 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்களையும் மற்றும் விளைவுகளையும் விவரிக்கவும். 

    புரட்சிக்கான காரணங்கள்:
    • டல்ஹௌசி வாரிசு உரிமை இழப்புக் கொள்கை மூலம் பல நாடுகளை ஆக்கிரமித்தார்.
    • ஆங்கிலயரின் பெருஞ்சுமையான நிலவருவாய் முறையால் விவசாயிகள் துயருற்றனர்.
    • முஸ்லீம் உயர்குடியினரும் கற்றறிந்தோரும் அரசுப் பணியில் இருந்து ஒதுக்கப்பட்டனர்.
    • சதி ஒழிப்புச் சட்டம், விதவை மறுமணச் சட்டம், பெண்சிசுக் கொலை தடுப்புச் சட்டம்.
    • பசு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவிய துப்பாக்கித் தோட்டாக்கள் அறிமுகமானது.
    புரட்சியின் விளைவுகள்:
    • விக்டோரியா ராணி பேரறிக்கை 1858 நவம்பர் 1 இல் அலகாபாத்தில் வெளியானது.
    • இந்தியாவுக்கான அரசுச் செயலர், 15 பேர் கொண்ட இந்தியா கவுன்சில் உருவானது.
    • கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர் குழுவும் கட்டுப்பாட்டு குழுவும் ஒழிக்கப்பட்டன.
    • வாரிசு உரிமை இழப்புக் கொள்கையும், நாடிணைப்புக் கொள்கையும் கைவிடப்பட்டது.
    • இந்திய அரசர்களின் கண்ணியம், கௌரவம், உரிமைகளை மதிக்கப்பதாக கூறியது.

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive