10th Science - Book Back Answers - Biology Unit 12 - Tamil Medium Guides

 


    SSLC / 10th - Science - Book Back Answers - Biology Unit 12 - Tamil Medium

    Tamil Nadu Board 10th Standard  Science - Biology Unit 12: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 12 – Biology from the Tamil Nadu State Board 10th Standard  Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Biology Unit 12 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!

    Topic: தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்

    I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

    1. காஸ்பேரியன் பட்டைகள் வேரின் ………… பகுதியில் காணப்படுகிறது.
    அ) புறணி
    ஆ) பித்
    இ) பெரிசைக்கிள்
    ஈ) அகத்தோல்
    விடைகுறிப்பு:

    ஈ) அகத்தோல்
     
    2. உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
    அ) வேர்
    ஆ) தண்டு
    இ) இலைகள்
    ஈ.) மலர்கள்
    விடைகுறிப்பு:

    ஆ) தண்டு
     
    3. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது …………. எனப்படும்.
    அ) ஆரப்போக்கு அமைப்பு
    ஆ) சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
    இ) ஒன்றிணைந்தவை
    ஈ) இவற்றில் எதுவுமில்லை
    விடைகுறிப்பு:

    இ) ஒன்றிணைந்தவை
     
    4. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
    அ) கார்போஹைட்ரேட்
    ஆ) எத்தில் ஆல்கஹால்
    இ) அசிட்டைல் கோ.ஏ
    ஈ) பைருவேட்
    விடைகுறிப்பு:

    ஆ) எத்தில் ஆல்கஹால்
     
    5. கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது
    அ) பசுங்கணிகம்
    ஆ) மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (ஸ்ட்ரோமா)
    இ) புறத்தோல் துளை
    ஈ) மைட்டோ காண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு
    விடைகுறிப்பு:

    ஆ) மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (ஸ்ட்ரோமா)]
     
    6. ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?
    அ) ATP யானது ADP யாக மாறும் போது
    ஆ) CO
    2 நிலை நிறுத்தப்படும் போது
    இ) நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
    ஈ) இவை அனைத்திலும்.
    விடைகுறிப்பு:

    இ) நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது


    II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

    1. புறணி இதனிடையே உள்ளது ……………
    விடைகுறிப்பு:

    எபிபிளமா மற்றும் அகத்தோல்
     
    2. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் காணப்படும் வாகுலார் கற்றை ………….
    விடைகுறிப்பு:

    ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை
     
    3. கிளைக்காலிஸிஸ் நடைபெறும் இடம்……………
    விடைகுறிப்பு:

    சைட்டோ பிளாசம்
     
    4. ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்ஸிஜன் ……….. லிருந்து கிடைக்கிறது.
    விடைகுறிப்பு:

    நீர்
     
    5. செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை …..
    விடைகுறிப்பு:

    மைட்டோகாண்டிரியா

    III. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

    1. தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு புளோயம்.
    விடைகுறிப்பு:

    தவறு.
    சரியான கூற்று: தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு சைலம்.
     
    2. தாவரத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் மெழுகுப்படலம் கியூடிக்கிள்.
    விடைகுறிப்பு:

    சரி.

    3. ஒருவித்திலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பிரியம் காணப்படுகிறது.
    விடைகுறிப்பு:

    தவறு.
    சரியான கூற்று: இருவித்திலை தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுகிறது.
     
    4. இருவித்திலைத் தாவர வேரில் மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது.
    விடைகுறிப்பு:

    தவறு.
    சரியான கூற்று: இருவித்திலைத் தாவர இலையின் மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது.
     
    5. இலையிடைத் திசு பசுங்கணிகங்களைப் பெற்றுள்ளது.
    விடைகுறிப்பு:

    சரி.
     
    6. காற்று சுவாசத்தைவிட காற்றில்லா சுவாசம் அதிக ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.
    விடைகுறிப்பு:

    தவறு.
    சரியான கூற்று: காற்று சுவாசத்தை விட காற்றில்லா சுவாசம் குறைவான ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.


    IV.  பொருத்துக.

    1.
    புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை
    டிரசீனா
    2.
    கேம்பியம்
    உணவு கடத்துதல்
    3.
    சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
    பெரணிகள்
    4.
    சைலம்
    இரண்டாம் நிலைவளர்ச்சி
    5.
    புளோயம்
    நீரைக்கடத்துதல்
    விடைகுறிப்பு:
    1.
    புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை
    பெரணிகள்
    2.
    கேம்பியம்
    இரண்டாம் நிலைவளர்ச்சி
    3.
    சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
    டிரசீனா
    4.
    சைலம்
    நீரைக்கடத்துதல்
    5.
    புளோயம்
    உணவு கடத்துதல்


    V.  ஓரிரு வார்த்தைகளில் விடையளி

    1. ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் ஒரு கற்றையில் அமைந்திருந்தால், அதற்கு ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்று பெயர்.
     
    2. ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது?
    விடைகுறிப்பு:

    ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான கார்பன், வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடிலிருந்து பெறப்படுகிறது.
     
    3. காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி எது?
    விடைகுறிப்பு:

    காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி கிளைக்காலிஸிஸ் ஆகும்.
     
    4. கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரண மடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் என்ன?
    விடைகுறிப்பு:

    கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரண மடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் காற்றில்லா சுவாசம்.


    VI. சுருக்கமாக விடை யளி

    1. இருவித்திலைத் தாவரத் தண்டின் வாஸ்குலார் கற்றையின் அமைப்பைப் பற்றி எழுதுக.
    விடைகுறிப்பு:

    1. அகத்தோலுக்கு உட்புறமாக அமைந்த தண்டின் மையப்பகுதி ஸ்டீல் ஆகும். இதில் பெரிசைக்கிள், வாஸ்குலார் கற்றைகள் மற்றும் பித் காணப்படுகின்றன.
    2. வாஸ்குலார் கற்றைகள் : வாஸ்குலார் கற்றைகள் ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை, திறந்தவை, மற்றும் உள்நோக்கு சைலம் கொண்டவை.
     
    2. இலையிடைத்திசு (மீசோபில்) பற்றி குறிப்பு எழுதுக.
    விடைகுறிப்பு:

    இலையிடைத்திசு: மேல்புறத் தோலுக்கும் கீழ்புறத் தோலுக்கும் இடையே காணப்படும் தளத்திசு இலையிடைத்திசு அல்லது மீசோபில் எனப்படும். இதில் பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என இருவகை செல்கள் உள்ளன.
    1. பாலிசேட் பாரன்கைமா: மேல்புறத் தோலுக்கு கீழே காணப்படுகிறது. நெருக்கமாக அமைந்த நீளமான செல்கள், அதிக பசுங்கணிகங்களுடன் காணப்படுகிறது. இச்செல்கள் ஒளிச்சேர்க்கை பணியை மேற்கொள்கின்றன.
    2. ஸ்பாஞ்சி பாரன்கைமா: இவ்வடுக்கு பாலிசேட் பாரன்கைமாவிற்கு கீழே உள்ளது. இதில் கோளவடிவ அல்லது உருளையான அல்லது ஒழுங்கற்ற வடிவம் கொண்ட செல்கள் நெருக்கமின்றி செல் இடைவெளிகளுடன் அமைந்துள்ளன. இது வாயு பரிமாற்றத்திற்கு உதவுகிறது.
     
    3. ஒரு ஆக்ஸிஸோமின் படம் வரைந்து பாகங்களை குறி.
    விடைகுறிப்பு:
     
     
    4. மலரும் தாவரங்களில் காணப்படும் மூன்று வகையான திசுத் தொகுப்புகளை குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:

    தாவரங்களில் உள்ள திசுத் தொகுப்புகளை மூன்று வகைகளாக வகைப்படுத்தியுள்ளனர். அவை
    1. மேல் திசுத்தொகுப்பு அல்லது புறதோல் திசுத்தொகுப்பு.
    2. அடிப்படை அல்லது தளத்திசு தொகுப்பு.
    3. வாஸ்குலார் திசுத்தொகுப்பு.
     
    5. 1 ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது?
    விடைகுறிப்பு:

    ஒளிச்சேர்க்கை:
    1. ஒளிச்சேர்க்கை என்பது தற்சார்பு ஊட்ட உயிரினங்களான, ஆல்காக்கள், தாவரங்கள், பச்சைய நிறமிகளைக் கொண்ட பாக்டீரியங்கள் போன்றவை சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி தமக்கு வேண்டிய உணவை தாமே தயாரித்துக் கொள்ளும் நிகழ்ச்சியாகும்.
    2. இந்த நிகழ்ச்சியில் கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் நீரின் உதவியால், சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையத்தில் கார்போஹைட்ரேட் தயாரிக்கப்படுகிறது.
    3. இந்நிகழ்ச்சியின் போது ஆக்ஸிஜன் வெளியேற்றப்படுகிறது.

    குளோரோபில் கார்பன் டை ஆக்சைடு + நீர் → குளுக்கோஸ் + நீர் + ஆக்ஸிஜன்
    4. ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடங்கள்:
    பசுந்தாவரங்களில் ஒளிச்சேர்க்கையானது இலைகள், பசுமையான தண்டுகள் மற்றும் மலர் மொட்டுகள் ஆகிய உறுப்புகளில் நடைபெறுகிறது.
     
    6. ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு ஏன் ஒளி வினை நடைபெற வேண்டும்?
    விடைகுறிப்பு:

    1. ஒளிச்சேர்க்கையின் முழு நிகழ்ச்சியும் பசுங்கணிகத்தில் உள்ளே நடைபெறுகிறது. ஒளிசார்ந்த வினை அல்லது ஒளிவினை பசுங்கணிகத்தின் கிரானாவில் நடைபெறுகிறது.
    2. இந்நிகழ்வு (ஒளிவினை) சூரிய ஒளியின் முன்னிலையில் தைலக்காய்டு சவ்வில் நடைபெறுகிறது. ஒளிச் சேர்க்கை நிறமிகள் சூரிய ஆற்றலை ஈர்த்து ATP மற்றும் NADPH,-வை உருவாக்குகின்றன. இவை இரண்டும் இருள் வினைக்குப் பயன்படுகின்றன.
    3. ஒளி சாரா வினை அல்லது இருள்வினை பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது. இந்நிகழ்வின் போது ஒளிசார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH, உதவியுடன் CO
    2 ஆனது, கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது.
    4. எனவே, ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு ஒளிவினை நடைபெற வேண்டும்.

    7. ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாட்டை எழுதுக.
    விடைகுறிப்பு:

    கார்பன்டை ஆக்சைடு + நீர் → குளுக்கோஸ் + நீர் + ஆக்ஸிஜன்

    VII. விரிவாக விடை யளி.

    1. வேறுபாடு தருக.
    அ. ஒரு வித்திலைத் தாவர வேர் மற்றும் இரு வித்திலைத் தாவர வேர்
    ஆ. காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம்
    விடைகுறிப்பு:

    அ) ஒரு வித்திலைத் தாவர வேர் மற்றும் இரு வித்திலைத் தாவர வேர்
    .எண்
    திசுக்கள்
    இரு விதையிலைத் தாவரவேர்
    ஒரு விதையிலைத் தாவரவேர்
    1
    சைலக்கற்றைகளின் எண்ணிக்கை
    நான்குமுனைசைலம்
    பலமுனை சைலம்
    2
    கேம்பியம்
    காணப்படுகிறது (இரண்டாம் நிலை வளர்ச்சியின் பொழுது மட்டும்)
    காணப்படவில்லை.
    3
    இரண்டாம் நிலை வளர்ச்சி
    உண்டு
    இல்லை
    4
    பித் அல்லது மெட்டுல்லா
    இல்லை
    உண்டு
    5
    இணைப்புத்திசு
    பாரன்கைமா
    ஸ்கிளிரன்கைமா
     
    ஆ) காற்று சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம் வேறுபாடு
     
    வ.
    எண்
    காற்று சுவாசம்
    காற்றில்லா சுவாசம்
    1.
    உணவானது ஆக்சிஜன் உதவியால் முழுவதுமாக ஆக்சிஜகரண மடைந்து விடுகிறது.
    ஆக்சிஜன் உதவி இல்லாமல் உணவு சிதைக்கப் படுகிறது.
    2.
    உணவானது கார்பன்டை ஆக்சைடு, நீர் மற்றும் ஆற்றலாக மாற்றப்படுகிறது.
    குளுக்கோஸானது எத்தனாலகவும் லேக்டோஸ் ஆகவும் மாற்றப்படுகிறது.
    3.
    அதுக அளவு ஆற்றல் உற்பத்தியாகிறது.
    மிக குறைந்த அளவு ஆற்றல் உற்பத்தியாகிறது.
     
    காற்று சுவசாம் மூன்று படிநிலைகளில் நடைபெறுகிறது.
    காறில்லா சுவாசம் எளிய முறையில் நடைபெறுகிறது.
     
    எ.கா. C6H12O6+6O26CO2+6H2O+ATP
    எ.கா. C6H12O62Co2
    +2C2H5OH+ஆற்றல்(ATP)
     
     
    2. காற்று சுவாசிகள் செல்சுவாசத்தின் போது எவ்வாறு குளுக்கோஸிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன ? அதற்கான மூன்று படிநிலைகளை எழுதி விவரிக்கவும்.
    விடைகுறிப்பு:
     
    காற்று சுவாசத்தின் படிநிலைகள் :
    அ. கிளைக்காலிஸிஸ் (குளுக்கோஸ் பிளப்பு):
    1. இது ஒரு மூலக்கூறு குளுக்கோஸானது (6 கார்பன்) இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலமாக (3 கார்பன்) பிளக்கப்படும் நிகழ்ச்சியாகும்.
    2. இது சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது.
    3. இந்நிகழ்ச்சியானது காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவானதாகும்.
    ஆ. கிரப்சுழற்சி :
    1. இந்நிகழ்ச்சி மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறத்தில் நடைபெறுகிறது (உட்கூழ்மம் – matrix).
    2. கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சியின் முடிவில் உண்டான இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதும் ஆக்ஸிகரணம் அடைந்து கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நீராக மாறும்.
    3. இந்த சுழற்சிக்கு கிரப் சுழற்சி அல்லது ட்ரை கார்பாக்ஸிலிக் அமில சுழற்சி (TCA சுழற்சி) என்று பெயர்.
    இ) எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு:
    1. மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச்சவ்வில் எலக்ட்ரான் கடத்து சங்கிலி என்ற எலக்ட்ரான்களை கடத்தும் அமைப்பு உள்ளது.
    2. கிளைக்காலிஸிஸ் மற்றும் கிரப் சுழற்சியின் போது உண்டான NADH
    2 மற்றும் FADH2 வில் உள்ள ஆற்றலானது இங்கு வெளியேற்றப்பட்டு அவை NAD+ மற்றும் FAD+ ஆக ஆக்ஸிகரணமடைகின்றன.
    3. இந்நிகழ்ச்சியின் போது வெளியான ஆற்றல் ADP யால் எடுத்துக் கொள்ளப்பட்டு ATP ஆக உருவாகிறது.
    4. இது ஆக்ஸிகரண பாஸ்பேட் சேர்ப்பு என்று அழைக்கப்படும்.
    5. இந்நிகழ்ச்சியின் போது வெளியேற்றப்பட்ட எலக்ட்ரானை ஆக்ஸிஜன் எடுத்துக் கொண்டு நீராக (H
    2O) ஒடுக்கமடைகிறது.
     
    3. ஒளிச்சேர்க்கையின் ஒளிசார்ந்த செயல் எவ்வாறு ஒளிச்சாராத செயலிலிருந்து வேறுபடுகிறது? இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் மூலப்பொருள்கள் யாவை? இறுதிப் பொருட்கள் யாவை? இவ்விருநிகழ்ச்சிகளும் பசுங்கணிகத்தில் எங்கு நடைபெறுகின்றன?
    விடைகுறிப்பு:
    வ.
    எண்
    ஒளி சார்ந்த வினை
    ஒளி சாரா வினை
    1.
    இந்த வினை சூரியஒளியின் உதவியுடன் நடைபெறுகிறது.
    இந்த வினைக்கு சூரியஒளி தேவையில்லை.
    2.
    இது தைலக்காய்டு சவ்வில் நடைபெறுகிறது.
    இது பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது.
    ஈடுபடும் மூலப்பொருட்கள் : ஒளி சார்ந்த வினை – ஒளிச்சேர்க்கை நிறமி, சூரிய ஒளி ஒளிசாரா வினை – ATP, NADPH2, CO2
    இறுதிப்பொருட்கள் : ஒளி சார்ந்த வினை – ATP, NADPH2 ஒளிசாரா வினை – கார்போஹைட்ரேட்
    நடைபெறும் இடம் : ஒளிசார்ந்தவினை – கிரானாவில் நடைபெறுகிறது. ஒளிசாரா வினை – ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது.

    VIII. உயர் சிந்தனைக்கான வினாக்கள் .

    1. ஒளிச்சேர்க்கை ஒரு உயிர் வேதியியல் நிகழ்ச்சியாகும்.
    அ) ஒளிவினையின் போதும், இருள் வினையின் போதும் மனிதனுக்கு தேவையான முக்கிய பொருள்கள் கிடைக்கின்றன. அவை யாவை? 
    ஆ) ஒளிச்சேர்க்கையின் உயிர்வேதி வினையில் ஈடுபடும் சில வினைபடு பொருட்கள் : இந்நிகழ்ச்சியின் சுழற்சியில் மீண்டும் மீண்டும் ஈடுபடுகின்றன. அந்த வினைபடு பொருட்களை குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:

    அ)
    ஒளி சார்ந்த வினை
    கிடைக்கும் பொருள்கள்
    ஆக்ஸிஜன்
    ATP
    NADPH2
    இருள் வினை
    கார்போஹைட்ரேட்  

    ஆ) வினைபடுபொருள்கள் : சூரிய ஒளி, நீர், ஒளிச்சேர்க்கை நிறமி, ATP, CO2 மற்றும் NADPH2
     
    2. பசுங்கணிகத்தின் எந்தப்பகுதியில் ஒளிச்சார்ந்த செயல் மற்றும் கால்வின் சுழற்சி நடைபெறுகின்றன?
    விடைகுறிப்பு:

    1. ஒளிச்சார்ந்த செயல் பசுங்கணிகத்தின் கிரானா பகுதியில் நடைபெறுகிறது.
    2. கால்வின் சுழற்சி பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமாவில் நடைபெறுகிறது.




     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive