11th History - Book Back Answers - Unit 4 - Tamil Medium Guides

  

 


    Plus One / 11th History - Book Back Answers - History Unit 4 - Tamil Medium

    Tamil Nadu Board 11th Standard History Unit 4: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 4 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 4 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!

    பாடத்தலைப்பு :

    அலகு 4 : அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

    I. சரியான விடையைத் தேர்வு செய்க

    வினா  1.
    அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்தவர் …………………..

    அ) தாமஸ் சாண்டர்ஸ்
    ஆ) ஜேம்ஸ் பிரின்செப்
    இ) சர் ஜான் மார்ஷல்
    ஈ) வில்லியம் ஜோன்ஸ்
    விடைகுறிப்பு:
    ஆ) ஜேம்ஸ் பிரின்செப்

    வினா  2.
    மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர். ஹர்யங்காவம்சத்தைச் சேர்ந்த ……………………

    அ) பிம்பிசாரர்
    ஆ) அஜதாசத்ரு
    இ) அசோகர்
    ஈ) மகாபத்ம நந்தர்
    விடைகுறிப்பு:
    அ) பிம்பிசாரர்
     
    வினா  3.
    ……………………… என்ற இலங்கையில் கிடைத்த, பாலியில் எழுதப்பட்ட விரிவான வரலாற்று நூல் மௌரியப் பேரரசு பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றாகும்.

    அ) மகாவம்சம்
    ஆ) தீபவம்சம்
    இ) பிரமாணம்
    ஈ) முத்ராராட்சசம்
    விடைகுறிப்பு:
    அ) மகாவம்சம்

    வினா  4.
    ………………… என்ற விசாகதத்தரின் நாடகம் சந்திரகுப்தர் பற்றியும், அவர் மகதப் பேரரசின் அரியணை ஏறியது பற்றியும் கூறுகிறது.

    அ) முத்ராராட்சசம்
    ஆ) ராஜதரங்கிணி
    இ) அர்த்தசாஸ்திரம்
    ஈ) இண்டிகா
    விடைகுறிப்பு:
    அ) முத்ராராட்சசம்
     
    வினா  5.
    மெகஸ்தனிஸ் எழுதிய ……………….. சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது.

    அ) இண்டிகா
    ஆ) முத்ராராட்சசம்
    இ) அஷ்டத்யாயி
    ஈ) அர்த்தசாஸ்திரம்
    விடைகுறிப்பு:
    அ) இண்டிகா

    வினா  6.
    ………………….. நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.

    அ) அர்த்தசாஸ்திரம்
    ஆ) இண்டிகா
    இ) ராஜதரங்கிணி
    ஈ) முத்ராராட்சசம்
    விடைகுறிப்பு:
    அ) அர்த்தசாஸ்திரம்
     


    II. குறுகிய விடை தருக

    1. பிம்பிசாரர் எவ்வாறு மகதப் பேரரசை விரிவுபடுத்தினார்?
    • மகதப் பேரரசை திருமண உறவுகள் மற்றும் போர்கள் மூலம் விரிவுபடுத்தினார்.
    • லிச்சாவி, மாத்ரா இளவரசிகளை மணந்தார். அங்கம் போர் மூலம் இணைத்தார்.
    • தனது சகோதரியை கோசல அரசனுக்கு மணம் முடித்து காசியை பரிசாக பெற்றார்.

     

    2. மகாபத்ம நந்தர் பற்றி குறிப்பு வரைக.
    • மகத நாட்டை ஆட்சி செய்த முதல் நந்த அரசர் மஹாபத்ம நந்தர்.
    • சிசுநாக அரசரைக் கொன்று விட்டு மஹாபத்ம நந்தர் அரியணை ஏறினார்.
    • அவரது அதிகாரம் எதிரிகளுக்கு அச்சமூட்டியது.

     

    3. எதன் காரணமாக மகா அலெக்சாண்டர், போரஸின் அரியணையைத் திருப்பித் தந்தார்?
    • போரஸின் கண்ணியத்தால் அலெக்சாண்டர் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
    • அலெக்சாண்டரின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ள போரஸ் சம்மதித்தார்.
    •  போரில் களைப்படைந்த வீரர்கள் மேலும் முனேறிச் செல்ல மறுத்தனர்.

     

    4. ஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் முக்கியப் அம்சங்கள் யாவை?
    • பேரரசின் முழுவதும் ஒரே மாதிரியான நிர்வாக அமைப்பு காணப்படும்.
    • அதிகார வர்க்கத்தை உருவாக்குதல், வரிகள் மூலம் நிதி திரட்டுதல்.
    • நாட்டை நிர்வாகித்தல் மற்றும் இராணுவத்தை வழி நடத்துதல்.

     

    5. மௌரிய அரசு பற்றி ஆய்வுக்கு உதவும் இலக்கியச் சான்றுகள் பற்றிச் சிறு குறிப்பு தருக.
    • அரசியல் சாணக்கியர் கௌடில்யர் இயற்றிய அர்த்தசாஸ்திரம்.
    • கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனிஸ் இயற்றிய இன்டிகா.
    • விசாகதத்தர் இயற்றிய முத்ராராட்சசம் என்ற நாடக நூல்.

     

    6. அலெக்சாண்டரின் படையெடுப்பு எந்த வகைகளில் இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக அமைகிறது?
    • இந்தியா - கிரேக்கம் இடையே நேரடித் தொடர்பு ஏற்பட்டது.
    • மேற்கு உலகிற்கு நான்கு வணிகப் பெருவழிகள் திறக்கப்பட்டன.
    • சந்திரகுப்த மௌரியர் முதல் இந்தியப் பேரரசை உருவாக்கினார்.

     

    III. சுருக்கமான விடை தருக

    1. தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலம் தெரியவரும் நகரப் பண்புகளைக் கூறுக.
    • போக்குவரத்து வசதிக்காக ஆறுகளை ஒட்டியப் பகுதிகளில் அமைந்திருந்தன.
    • பாதுகாப்பிற்காக அகழிகளும், கோட்டைச் சுவர்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
    • நகரங்களில் உறைகிணறுகள், கழிவுநீர் கால்வாய்கள், குடிமை வசதிகள் இருந்தன.
    • வீடுகள் செங்கற்களால் கட்டப்பட்டு இருந்தன. சுகாதார வசதிகள் காணப்பட்டன.

     

    2. கங்கைச் சமவெளியின் முடியாட்சிகளின் அம்சங்களை விளக்குக.
    • சிறிய நாடுகளையும் கணசங்கங்களையும் கைப்பற்றி பேரரசுகளை உருவாக்கினர்.
    • பேரரசர்கள் சக்ரவர்த்தி அல்லது ஏக்ராட் போன்ற உயர்ந்த பதவிகளை ஏற்றனர்.
    • கங்கைச் சமவெளி பகுதிகளில் ஒரு மையப்படுத்தப்பட்ட பேரரசு உருவானது.
    • சர்வாதிகாரமான அரசு சமூக, பொருளாதார, நிர்வாக அமைப்பை மாற்றியது.

     

    3. இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்களைக் குறிப்பிடுக.
    • வடமேற்குப் பகுதியில் கிரேக்க சத்ரப்புகள் (மாகாணங்கள்) அமைக்கப்பட்டன.
    • மேற்கு உலகிற்கு சென்றுவர நான்கு வணிகப் பெருவழிகள் திறக்கப்பட்டன.
    • இந்தியாவின் வடமேற்கில் பல கிரேக்க குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.
    • கிரேக்க வணிகர்களும் கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர்.

     

    4. அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நீவிர் அறிவது என்ன?
    • அசோகர் எட்டாவது ஆட்சி ஆண்டில் கலிங்கத்தின் மீது படையெடுத்தார்.
    • மகதப் பேரரசில் இருந்து பிரிந்து சென்ற கலிங்கத்தை தண்டிவே படையெடுத்தார்.
    • போரில் பல பத்தாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர்; பலர் காயம்பட்டனர்.
    • போரின் அழிவுகளைக் கண்டு வருந்திய அசோகர் பௌத்த மதத்திற்கு மாறினார்.

     

    5. மௌரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி.
    • நூல் நூற்றலும் பருத்தி ஆடைகள் நெய்தலும் முக்கியத் தொழிலாக இருந்தன.
    • முரட்டு ரகம், மெல்லிய ரகம் எனப் பல ரகங்களில் பருத்தித் துணிகள் தயாரித்தனர்.
    • அரச குடும்பத்தார்கள் தங்க, வெள்ளி ஜரிகை நெய்த ஆடைகளை அணிந்தார்கள்.
    • சீனப் பட்டு மௌரியப் பேரரசில் கடல்வழி வணிகம் நடந்ததைக் காட்டுகிறது.

     

    6. இந்தியா மற்றும் மேற்கு, மத்திய ஆசியா இடையில் வணிகம் செய்யப்பட்ட பொருள்கள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
    • கம்பளி, பட்டு, நவரத்தினக் கற்கள், விலங்குகளின் தோல், வாசனைக் கட்டைகள்.
    • இந்தியாவில் தயாரான பருத்தி ஆடைகள் வணிகத்தில் முக்கிய பங்கு வகித்தன.
    • அவுரிச் சாயம், தந்தம், ஆமைஓடு, முத்து ஆகியன ஏற்றுமதி செய்யப்பட்டன.
    • வாசனை திரவியங்களும், அபூர்வ மரக்கட்டைகளும் எகிப்திற்கு ஏற்றுமதியாயின.

     

    IV. விரிவான விடை தருக  

    1. மௌரியப் பேரரசு பற்றி நாம் அறிய உதவும் சான்றுகளைப் பற்றி விளக்கவும்.
    • மௌரியர்கள் பற்றி கூறும் சமண - பௌத்த இலக்கியங்கள் மற்றும் பிராமணங்கள்.
    • இலங்கையில் கிடைத்துள்ள பாலி மொழியில் எழுதப்பட்ட நூலான மகாவம்சம்.
    • இந்தியாவைப் பற்றி எழுதிய கிரேக்க வரலாற்று அறிஞர்களின் பதிவுகள்.
    • தொல்லியல் சான்றுகள் கட்டுமானங்கள், உலோகங்கள், கருவிகள் ஆகியன.
    • நாட்டின் பல பகுதிகளில் கிடைத்துள்ள அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள்.
    • குஜராத்தில் கிர்நார்-க்கு அருகில் ஜூனாகத்தில் உள்ள பாறைக் கல்வெட்டு.
    • மெகஸ்தனிஸ் எழுதிய இன்டிகா. விசாகதத்தர் எழுதிய முத்ராராட்ச்சம்.

     

    2. மௌரிய ஆட்சியமைப்பின் முக்கியக் கூறுகளை விவரிக்கவும்.
    • மௌரியப் பேரரசில் நாட்டின் நிர்வாகத்தின் தலைவராக அரசர் இருந்தார்.
    •   மௌரியத் தலைநகர் பாடலிபுத்திரம் நேரடியாக அரசனால் நிர்வகிக்கப்பட்டது.
    • அரசருக்கு உதவியாக ஒரு மதகுரு, அமைச்சரவை, மஹாமாத்திரியர்கள் இருந்தனர்.
    • நிர்வாகப் பிரிவுகள் பேரரசு, மாகாணங்கள், மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்கள்.
    • பேரரசு நான்கு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு இளவரசர்களால் ஆளப்பட்டன.
    • எல்லா பகுதியிலும் ஒரே மாதிரியான வருவாய் மற்றும் நீதி நிர்வாகம் நிலவியது.
    • வரி வசூலுக்கு பொறுப்பான அதிகாரி சமஹர்த்தா என்று அழைக்கப்பட்டார்.
    • நகரங்களில் இருவகை நீதிமன்றங்கள் இருந்தன - தர்மஸ்தியா, கந்தகோசந்தனா.

     

    3. இந்தியாவின் மீது பாரசீகர்களின் தாக்கம் குறித்து நாம் அறிவது என்ன?
    • வடமேற்கு இந்தியா பாரசீக இந்தியப் பண்பாடுகளின் சங்கமமாக மாறியது.
    • பாரசீகத் தொடர்பு பண்டைய இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
    • கலை கட்டிடக்கலை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
    • கரோஷ்டி எழுத்து முறையை  அசோகர் தனது கல்வெட்டுகளில் பயன்படுத்தினார்.
    • நாணயத்தின் இந்தியச் சொல் 'கார்சா' பாரசீக மொழியில் இருந்தே வந்தது.
    • பாரசீகத்தைப் பின்பற்றி இந்தியாவிலும் நாணயங்கள் உருவாக்கப்பட்டன.
    • அசோகர் தூண்களின் உச்சி ஆக்கிமீனைட் பேரரசின் தூண்களை ஒத்துள்ளன.
    • பாடலிபுத்திரம் அரண்மனையின் எஞ்சிய தூண்கள் பாரசீகத் தாக்கத்துடன் உள்ளது.

     

    4. அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் பற்றிக் கூறுக.
    • அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் நம்பகமான சான்றுகளாக உள்ளன.
    • அசோகர் மொத்தம் 33 கல்வெட்டுக் கட்டளைகளை வெளியிட்டுள்ளார்.
    • அவற்றில் 14 பாறைக் கல்வெட்டுகள், 7 தூண் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
    • அசோகர் கல்வெட்டுகளை பெரும்பாலும் பிராமி எழுத்து முறையில் வெளியிட்டார்.
    • சில கல்வெட்டுகளை மகதி, பிராகிருதம், கரோஷ்டி எழுத்து முறையில் வெளியிட்டார்.
    • அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் அவரது பேரரசின் பரப்பளவைக் காட்டுகிறது.
    • மௌரியப் பேரரசின் எல்லைக்கு வெளியே இருந்த நிலப்பரப்புகளைக் கூறுகிறது.
    • அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றில் அசோகருக்கு இருந்த நம்பிக்கை கூறுகின்றன.

     


     

     

     

     







    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive