11th History - Book Back Answers - Unit 5 - Tamil Medium Guides

  

 


    Plus One / 11th History - Book Back Answers - History Unit 5 - Tamil Medium

    Tamil Nadu Board 11th Standard History Unit 5: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 5 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 5 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!

    பாடத்தலைப்பு :

    அலகு 5 : தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

    I. சரியான விடையைத் தேர்வு செய்க

    வினா  1.
    கரிகாலன் …………….. மகனாவார்.

    அ) செங்கண்ணன்
    ஆ) கடுங்கோ
    இ) இளஞ்சேட் சென்னி
    ஈ) அதியமான்
    விடைகுறிப்பு:
    இ) இளஞ்சேட் சென்னி

    வினா  2.
    கீழ்க்கண்டவற்றில் எந்த இணை தவறானது?
    i) தலையாலங்கானம் – நெடுஞ்செழியன்
    ii) பட்டினப்பாலை – உருத்திரங்கண்ணனார்
    iii) கஜபாகு – இலங்கை
    iv) திருவஞ்சிக்களம் – சோழர்

    அ) i)
    ஆ) ii)
    இ) iii)
    ஈ) iv)
    விடைகுறிப்பு:
    (ஈ) iv) திருவஞ்சிக்களம் – சோழர்
     
    வினா  3.
    …………….. ராஜசூய யாகத்தை நடத்தினார்.

    அ) பெருநற்கிள்ளி
    ஆ) முதுகுடுமிப் பெருவழுதி
    இ) சிமுகா
    ஈ) அதியமான்
    விடைகுறிப்பு:
    அ) பெருநற்கிள்ளி

    வினா  4.
    இக்சவாகுகள் ……………….. பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்.

    அ) ஆந்திரா – கர்நாடகா
    ஆ) ஒடிசா
    இ) தக்காணப் பகுதி
    ஈ) பனவாசி
    விடைகுறிப்பு:
    அ) ஆந்திரா – கர்நாடகா
     
    வினா  5.
    கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்து தவறான கூற்றை வெளிக் கொணர்க.
    i) களப்பிரர்கள் கலியரசர்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.
    ii) களப்பிரர்கள் சைவத்தை ஆதரித்தனர்.
    iii) பல்லவரையும் பாண்டியரையும் களப்பிரர் தோற்கடித்தனர்.
    iv) இக்சவாகுகள் வேதவேள்விகளை ஆதரித்தனர்.

    (அ) (i) மற்றும் (ii)
    (ஆ) (ii) மற்றும் (iii)
    (இ) (i) மற்றும் (iii)
    (ஈ) (iii) மற்றும் (iv)
    விடைகுறிப்பு:
    (அ) (i) மற்றும் (ii)


    II. குறுகிய விடை தருக

    1. பண்டமாற்று முறையை விளக்கு.
    • ஒரு பொருளை கொடுத்து தமக்கு தேவையான மற்றொரு பொருளை வாங்குவது.
    • விலையுயர்ந்த ஆபரணக் கற்களைக் கொடுத்து மூலப் பொருட்களைப் பெற்றனர்.
    • அதில் பல்வேறு பொருட்களை தயாரித்து வேறு பொருளாக பண்டமாற்று செய்தனர்.

     

    2. மதுரைக் காஞ்சியிலிருந்து நீ அறிவது என்ன?
    • சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சி கடை வீதிகளைப் பற்றி கூறுகிறது.
    • பகல் நேரக் கடை நாளங்காடி, இரவு நேரக் கடை அல்லங்காடி.
    • அங்கு விற்பனையாகும் பலவகை கைவினைப் பொருட்கள் பற்றியும் பேசுகிறது.
     

    III. சுருக்கமான விடை தருக

    1. சங்க காலத்தில் தமிழ் நிலத்தின் ஐந்து திணைகள்.
    • குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த பகுதி. முக்கியத் தொழில் வேட்டையாடுதல்.
    • முல்லை - காடும் காடு சார்ந்த பகுதி. முக்கியத் தொழில் மேய்த்தல்.
    • மருதம் - வயலும் வயல் சார்ந்த பகுதி. முக்கியத் தொழில் வேளாண்மை.
    • நெய்தல் கடலும் கடல் சார்ந்த பகுதி. முக்கியத் தொழில் மீன்பிடித்தல்.
    • பாலை - மணலும் மணல் சார்ந்த பகுதி. முக்கியத் தொழில் கொள்ளையடித்தல்.

     

    2. சோழ அரசர்களில் தலைசிறந்தவன் கரிகாலன்.
    • இளஞ்சேட்சென்னியின் மகனான கரிகாலன் பற்றி பட்டினப்பாலை கூறுகிறது.
    • கரிகாலன் வெண்ணிப் போரில் சேரர், பாண்டியர் மற்றும் 11 வேளிர்களை வென்றார்.
    • கரிகாலன் காவிரியில் அணை கட்டினார். காடுகளை வெட்டி நாடாக்கினார்.
    • குளங்கள், வாய்க்கால்கள் வெட்டி நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தித் தந்தார்.

     

    3. கௌதமிபுத்திர சதகர்னியின் சாதனைகள்.
    • கௌதமிபுத்திர சதகர்னியின் வெற்றிகளைப் பற்றி நாசிக் கல்வெட்டு கூறுகிறது.
    • சாக அரசர் நாகபனா, பகல்வர், யவனர்கள் ஆகியோரை வெற்றி கொண்டார்.
    • நாகபனாவின் நாணயங்களைத் தன் அரச முத்திரையோடு மீண்டும் வெளியிட்டார்.
    • கௌதமிபுத்திர சதகர்னி அஸ்வமேத யாகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

     

    4. கிழார்- வேளிர் இருவருக்குமுள்ள வேறுபாடுகள்.
    கிழார்
    வேளிர்

    ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் பழங்குடி இனச் சமூகங்களின் தலைவர்களே கிழார்.

    ஒரு சிறிய பகுதியின் தலைவராக இருந்து, பின்னர் நாடு என்ற நிர்வாகப் பிரிவின் தலைவராக மாறியவர்.

    மலைப்பாங்கான காட்டுப் பகுதியை தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்த குறுநில மன்னர்களே வேளிர்.

    ஆநிரை கவர்தல் காரணமாக அடிக்கடி போர்கள் மூண்டன. புலவர்கள் மற்றும் கலைஞர்களை ஆதரித்தனர்.

     

    IV. விரிவான விடை தருக  

    1. "சங்ககால அரசியல் முறையானது அரசு உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்த தலைமை உரிமையே ஆகும்". இக்கூற்றை ஆதரித்தோ எதிர்த்தோ உனது காரணங்களை வழங்கு.

    (i) ஆதரவாக முன்வைக்கும் காரணங்கள்:

    • சங்க காலத்தில் சமூகப் பிரிவினைகள் வெளிப்படவில்லை.
    • அரசுகளின் எல்லைகள் தெளிவாக வரையறை செய்யப்படாதது.
    • வரி விதிப்பு இருந்ததாகச் சான்றுகள் இல்லை.
    • ஒரு அரசு உருவாகத் தேவையான வேளாண் வளர்ச்சி போர்களால் நாசமாயின.

    (ii) எதிராக முன்வைக்கும் காரணங்கள்:

    • மருத நிலப் பகுதியில் சமூக வேற்றுமைகள் தோன்றி இருந்தன.
    • மூவேந்தர்கள் தங்கள் நிலத்தின் மீது பற்றும் செல்வாக்கும் கொண்டிருந்தனர்.
    • வணிகப் பெருவழிகள் மற்றும் துறைமுகங்களில் வரி வசூலிக்கப்பட்டது.
    • தங்கள் ஆட்சிப் பகுதியை விரிவுபடுத்த போர்கள் மேற்கொண்டனர்.

     

     

    2. மூவேந்தர் அரசுகளுடைய நிர்வாகக் கட்டமைப்பை விவரிக்கவும்.
    • மூவேந்தர்களும் தங்கள் வலிமையை நிரூபிக்க போரிட்டுக் கொண்டனர்.
    • கிழார்களையும் வேளிர்குலத் தலைவர்களையும் அடிபணியச் செய்தனர்.
    • போர்புரிய வேண்டி தங்களுக்கென படை வீரர்களை அணி திரட்டினர்.
    • சில போர்களில் வேளிர்குலத் தலைவர்களின் உதவியையும் நாடினர்.
    • புலவர்களையும், கலைஞர்களையும் ஆதரித்ததோடு அரசவையிலும் அமர்த்தினர்.
    • தங்களது வலிமையைப் பறைசாற்ற சிறப்புப் பட்டங்களைச் சூட்டிக் கொண்டனர்.
    • பட்டப் பெயர்கள் - கடுங்கோ, இமயவரம்பன், வானவரம்பன், பெருவழுதி
    • தங்களை வேளிர்குல தலைவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொண்டனர்.

     

    3. களப்பிரர் என்போர் யார்? அவர்கள் குறித்து பூலாங்குறிச்சிக் கல்வெட்டிலிருந்து அறிந்து கொள்வதென்ன?
    • களப்பிரர் காலம் என்பது சங்க காலத்தைத் தொடர்ந்து வந்த காலமாகும்.
    • சங்க காலத்திற்கும், பல்லவர்கள் பாண்டியர்கள் காலத்திற்கும் இடைப்பட்ட காலம்.
    • களப்பிரர்கள் மூவேந்தர்களையும் வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
    • களப்பிரர்கள் தமிழகத்தில் தோராயமாக, பொ.ஆ. 300-600 வரை ஆட்சி செய்தனர்.
    • பூலாங்குறிச்சிக் கல்வெட்டு சிவகங்கை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சேந்தன், கூற்றன் என்ற இரு அரசர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    • அவர்களது குடும்பம், வம்சாவளி பற்றிய குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை.
    • களப்பிரர்கள் காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இயற்றப்பட்டன.

     

    4. சங்க காலம், சங்க காலத்தைத் தொடர்ந்து உடனடியாக வந்த காலத்தைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் தொலைதூர வணிகம் பற்றி விளக்குக.

    வணிகர்கள்:

    • வணிகன், சாத்தன், நிகம போன்ற சொற்கள் தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் உள்ளன.
    • சாத்து என்பது இடம் விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களைக் குறிப்பது.
    • உப்பு வணிகத்தில் ஈடுபட்டவர்கள் உமணர் என்று அழைக்கப்பட்டனர்.
    • உப்பு வணிகர்கள் மாட்டு வண்டிகளில் குடும்பத்தோடு வணிகம் செய்தனர்.

    தொலைதூர வணிகம்:

    • வணிகத்தில் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்தில் இருந்தது.
    • ரோமானியத் தங்க, வெள்ளி நாணயங்கள் பரிமாற்றத்திற்கு உதவின.
    • ரோம நாட்டு ஜாடிகள், கண்ணாடிப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
    • ரோமானிய நாணயங்கள் கோயம்புத்தூரைச் சுற்றிய பகுதிகளில் அதிகம் உள்ளன.
     

     

     

     

     







    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive