11th History - Book Back Answers - Unit 12 - Tamil Medium Guides

  

 


    Plus One / 11th History - Book Back Answers - History Unit 12 - Tamil Medium

    Tamil Nadu Board 11th Standard History Unit 12: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 12 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 12 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 12 - பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்


    I. சரியான விடையைத் தேர்வு செய்க

    வினா 1.
    ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக _________ இடம் பணி செய்தனர்.

    அ) காகதியர்
    ஆ) ஹொய்சாளர்
    இ பீஜப்பூர் சுல்தான்
    ஈ) யாதவர்
    விடைகுறிப்பு:
    ஆ) ஹொய்சாளர்
     
    வினா 2.
    கீழ்க்கண்டவற்றை காலவரிசைப்படுத்துக.

    அ) சங்கம வம்சம், ஆரவீடு வம்சம், சாளுவ வம்சம், துளுவவம்சம்
    ஆ) சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடுவம்சம்
    இ சாளுவ வம்சம், சங்கம வம்சம், துளுவ வம்சம், ஆரவீடுவம்சம்
    ஈ) சங்கம வம்சம், துளுவ வம்சம், சாளுவ வம்சம், ஆரவீடுவம்சம்
    விடைகுறிப்பு:
    ஆ) சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடுவம்சம்
     
    வினா 3.
    விஜயநகர அரசின் அரசமுத்திரை _________
    அ) பன்றி
    ஆ) புலி
    இ மீன்
    F) வில்
    விடைகுறிப்பு:
    அ) பன்றி
     
    வினா 4.
    _________ என்ற நூலைகங்காதேவி எழுதினார்.
    அ) மனுசரிதம்
    ஆ) ஆமுக்தமால்யதா
    இ பாண்டுரங்க மகாத்மியம்
    ஈ) மதுராவிஜயம்
    விடைகுறிப்பு:
    ஈ) மதுராவிஜயம்
     
    வினா 5.
    _________ சங்க ம வம்சத்தின் சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.
    அ) முதலாம் தேவராயர்
    ஆ) இரண்டாம் தேவராயர்
    இ கிருஷ்ண தேவராயர்
    ஈ) வீர நரசிம்மர்
    விடைகுறிப்பு:
    ஆ) இரண்டாம் தேவராயர்
     
    வினா 6.
    கிருஷ்ணதேவராயர் தன் வெற்றிகளின் நினைவாக வெற்றித் தூணை எழுப்பிய இடம் …………
    அ) பெல்காம்
    ஆ) கட்டாக்
    இ சிம்மாச்சலம்
    ஈ) இராஜமகேந்திரவரம்
    விடைகுறிப்பு:
    இ சிம்மாச்சலம்
     
    வினா 7.
    எந்த இரு பகுதிகளிடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது ________

    அ) சோழ மற்றும் விஜயநகர அரசுகள்
    ஆ) சோழ மற்றும் பாண்டிய அரசுகள்
    இ சேர மற்றும் பாண்டிய அரசுகள்’
    ஈ) சோழ மற்றும் சேர அரசுகள்
    விடைகுறிப்பு:
    ஆ) சோழ மற்றும் பாண்டிய அரசுகள்
     
    வினா 8.
    ஷாநாமாவை எழுதியவர் _________

    அ) பிர்தௌசி
    ஆ) இபன் பதூதா
    இ) நிக்கோலோடி கோன்டி
    ஈ) டோமிங்கோ பயஸ்
    விடைகுறிப்பு:
    அ) பிர்தௌசி
     
    வினா 9.
    முகம்மது கவான் ஒரு மதரசாவை நிறுவி அதில் 3000 கையெழுத்து நூல்களை வைத்திருந்த இடம் _________
    அ) பெரார்
    ஆ) பீஜப்பூர்
    இ பீடார்
    ஈ) அகமது நகர்
    விடைகுறிப்பு:
    இ பீடார்
     
    வினா 10.
    __________ கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார்.

    அ) இராஜா கிருஷ்ண தேவ்
    ஆ) சுல்தான் குலி- குதுப்- உல் – முல்க்
    இ) முகமது கவான்
    ஈ) பாமன்ஷா
    விடைகுறிப்பு:
    அ) இராஜா கிருஷ்ண தேவ்
     
    வினா 11.
    சரியான கூற்றினைத் தேர்ந்தெடு.
    அ) விஜயநகர அரசின் அரசர்கள் ஐந்து வம்சங்களாகச் சுமார் 300     ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.
    ஆ) ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் ஒரிசாவின் கஜபதி மற்றும் பாமினி அரசுகள் இடையே கடும் போர் நடைபெற்றது.
    இ) அப்துர் ரசாக் ஒரு பாரசீகத் தூதுவராகக் கொச்சியில் இருந்த சாமரியின் அவைக்கு வந்தார்.
    ஈ) பாமினி அரசர்கள் அதிக அளவில் தங்க நாணயங்களை பல்வேறு வகையான தெய்வங்களின் உருவங்களுடன் வெளியிட்டனர்.
    விடைகுறிப்பு:
    இ) அப்துர் ரசாக் ஒரு பாரசீகத் தூதுவராகக் கொச்சியில் இருந்த சாமரியின் அவைக்கு வந்தார்.
     
    வினா 12.
    கீழ்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
    (i) முதலாம் முகமது ஏற்படுத்திய சிறந்த அரசு அவருக்குப் பின் வந்த சுல்தான்களாலும் மராத்தியர்களாலும் பின்பற்றப்பட்டது.
    (ii) கவான் போர்ச்சுகீசிய வேதியியல் நிபுணர்களைக் கொண்டு வெடிமருந்தைத் தயார் செய்வது பயன்படுத்துவது ஆகியவற்றைக் கற்றுதரச் செய்தார்.

    அ) (1) மற்றும் (II) சரி
    ஆ) (i) மற்றும் (ii) தவறு
    இ) (i) சரி (ii) தவறு
    ஈ) (i) தவறு (ii) சரி
    விடைகுறிப்பு:
    இ) (i) சரி (ii) தவறு

    வினா 13.
    கீழ்கண்ட கூற்று, காரணத்தைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
    கூற்று (கூ) : பாமன்ஷா மிகச்சரியாகத் தாக்குதல் தொடுத்து வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி, கொண்டவீடு ஆகியன மீது ஆதிக்கம் செலுத்தி ஆண்டுதோறும் திரை செலுத்த வைத்தார்.
    காரணம் (கா): இது அடிக்கடி போர்கள் ஏற்பட வழி வகுத்தது.

    அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று.
    ஆ) கூற்று சரி, காரணம் தவறு.
    இ) கூற்றும் தவறு காரணமும் தவறு.
    ஈ) கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்.
    விடைகுறிப்பு:
    ஈ) கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்.
     
    வினா 14.
    பொருத்துக.
    (i) அப்துர் ரசாக் - 1. ரஷ்யா
    (ii) நிகிடின் - 2. சாளுவ நாயக்கர்
    (iii) டோமிங்கோ பயஸ் மற்றும் நூனிஸ் - 3. பாரசீகம்
    (iv) செல்லப்பா - 4. போர்த்துகல்
    அ) 1, 2, 3, 4
    ஆ) 4,3,2,1
    இ) 2, 1, 4, 3
    ஈ) 3, 1, 4, 2
    விடைகுறிப்பு:
    ஈ) 3, 1, 4, 2


    II. குறுகிய விடை தருக

    1. விஜயநகரைப் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள் பற்றி எழுதுக.
    • கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளிலுள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள்.
    • சமஸ்கிருத மொழி செப்புப் பட்டயங்கள், அரசர்கள் வெளியிட்ட நாணயங்கள்.
    • கோவில்கள், அரண்மணைகள், கோட்டைகள், மசூதிகள் போன்ற கட்டிடங்கள்.

     

    2. விஜயநகர அரசு யாரால் ஏற்படுத்தப்பட்டது? எதனால் அப்பெயர் வந்தது.
    • விஜயநகர அரசு ஏற்படுத்தியவர்கள்:சங்கமரின் புதல்வர்களான ஹரிஹார் மற்றும் புக்கர் ஏற்படுத்தினார்கள்.
    • 1336 ஆம் ஆண்டு விஜயநகர அரசு தோற்றுவிக்கப்பட்டது.
    • விஜயநகர அரசு பெயர் காரணம் :
    • வெற்றி நகரம் என்ற பொருள் கொண்ட விஜயநகரத்தில் ஒரு அரசை நிறுவினார்கள்.
    • விஜயநகரம் தலைநகரமாக விளங்கியதால் விஜயநகர அரசு என அறிவித்தார்கள்.

     

    3. பாமினி விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டதற்கான மூன்று முக்கியக் காரணங்கள் யாவை?
    • வளமான ரெய்ச்சூர் ஆற்றிடைப் பகுதியைக் கட்டுப்படுத்துதல்.
    • இராணுவத்திற்குத் தேவைப்படும் குதிரைகளை இறக்குமதி செய்தல்,
    • கோவா, ஹனோவர் ஆகிய மேற்கு கடற்கரை துறைமுகங்களை கட்டுப்படுத்துதல்.

     

    4. தராப் பற்றி எழுதுக.
    • பாமனஷா தனது ஆட்சிப் பகுதியை நான்கு மாகாணங்களாகப் பிரித்தார்.
    • மாகாணங்கள் - தராப்ஸ் என்று அழைக்கப்பட்டன. தனி ஆளுநர் இருந்தார்.
    • ஆளுநரே தாரப் பகுதியின் படைகளை வழிநடத்தினார்.

     

    5. முதலாம் முகமது பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
    • பாமனி சுல்தான் முதலாம் முகமது வாரங்கல் மீது படையெடுத்துச் சென்றார்.
    • கோல்கொண்டா கோட்டையைத் தாக்கி கைப்பற்றிக் கொண்டார்.
    • ரெய்ச்சூர் பகுதியைக் கைப்பற்ற விஜயநகர அரசுடன் நீண்டகாலம் போர் புரிந்தார்.
     

    III. சுருக்கமான விடை தருக

    1. பாமினி அரசு எவ்வாறு நிறுவப்பட்டது? யாரால் நிறுவப்பட்டது?
    • வடக்கு கர்நாடகா தில்லி சுல்தானியத்தின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதியாகும்.
    • ஜாபர்கான் வடக்கு கர்நாடகாவில் பாமினி அரசை 1347-இல் தோற்றுவித்தார்.
    • அலாவுதீன் பாமன் ஷா என்ற பட்டத்தை ஜாபர்கான் சூட்டிக் கொண்டார்.
    • தனது தலைநகரை தேவகிரியில் இருந்து குல்பர்காவிற்கு மாற்றிக் கொண்டார்.

     

    2. நாயக்க முறை.

    • நாயக்க முறை தெலுங்கு மற்றும் கன்னட பகுதிகளில் அதிகம் பின்பற்றப்பட்டது.
    • நாயக் என்னும் சொல் இராணுவ வீரர் அல்லது இராணுவத் தலைவரைக் குறிப்பது.
    • காகத்திய அரசில் இராணுவ சேவைக்காக ஒரு பகுதியின் வருவாய் வழங்கப்பட்டது.
    • விஜயநகர அரசில் இராணுவ சேவைக்காக வருவாய் தரும் நிலங்கள் வழங்கப்பட்டது.

     

    3. ராக்சஷி தங்கடி போர்.
    • தக்காண சுல்தான்கள் விஜயநகர அரசுக்கு எதிராக இறுதிப்போர் புரிந்தனர்.
    • 1565 இல் தலைக்கோட்டை போர் அல்லது ராக்சஷி தங்கடி போர் நடைபெற்றது.
    • ராக்சஷி - தங்கடி போரின் இறுதியில் விஜயநகரப் படைகள் தோல்வி அடைந்தது.
    • விஜயநகர படைக்கு தலைமையேற்ற ராமராஜர் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

     

    4. கிருஷ்ண தேவராயர் விஜயநகர அரசின் சிறந்த ஆட்சியாளராக போற்றப்படக் காரணங்கள் யாவை?

    • கிருஷ்ண தேவராயர் பாமினி சுல்தான்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றார்.
    • ஒரிசாவை ஆட்சி செய்த கஜபதி அரசன் மீது படையெடுத்து வெற்றி பெற்றார்.
    • நாயக் அல்லது நாயங்காரா முறையை மறுசீரமைத்து சட்ட அங்கீகாரம் கொடுத்தார்.
    • ஸ்ரீசைலம், திருப்பதி, காளஹஸ்தி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய கோவில்களுக்குக் கொடையளித்தார்.

     

    5. இரண்டாம் அலெக்சாண்டர் என்று அழைக்கப்பட்டவர் யார்? ஏன்?
    • பாமன்ஷா இரண்டாம் அலெக்சாண்டர் என்ற பெயரில் நாணயங்களை வெளியிட்டார்.
    • பாமினி அரசை நிறுவிய பாமன்ஷா 11 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார்.
    • தனது அரசியல் எதிரிகளை அடக்கி, கப்பம் வசூலிக்க பல போர்களை புரிந்தார்.
    • ராஜமுந்திரி, கொண்டவீடு அரசுகள் மீது பலமுறை படையெடுத்து வெற்றி பெற்றார்.

     

    6. கோல்கொண்டா கோட்டை எங்கே கட்டப்பட்டது? அதன் அமைப்பை விவரி.
    • ஹைதராபாத் அருகே உள்ள ஒரு மலைமீது 120 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
    • கோல்கொண்டா கோட்டை ஒலி அம்ச அடிப்படையில் ஒரு சிறந்த கட்டடமாகும்.
    • கோட்டையினுள் ஒரு அரசவையும், ஒரு அழகிய மாளிகையும் காணப்படுகிறது.
    • கோட்டையின் உயர்ந்த பகுதி பாலாஹிசார். ரகசிய நிலத்தடி சுரங்கப்பாதை உள்ளது.
     

    IV. விரிவான விடை தருக  

    1. விஜயநகரப் பேரரசின் சமுக மற்றும் பொருளாதார நிலையினை விவரி.
    • தொடர் போர்களின் விளைவாக மக்கள் இடம் விட்டு இடம் புலம் பெயர்ந்தனர்.
    • கன்னட, தெலுங்கு போர் மரபினர் தமிழகம் உட்பட பல பகுதிகளில் குடியேறினர்.
    • கன்னட, தெலுங்கு மொழி மரபினரே நாயக்கத் தலைவர்களாக இருந்தனர்.
    • விஜயநகர பேரரசில் மக்கள் வறுமையில் வாடினர். அடிமைமுறை நிலவியது.
    • வேளாண் சாராத கைவினைத் தொழில் உற்பத்தி வியத்தகு வளர்ச்சி கண்டது.
    • நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் வேளாண்மையைச் சார்ந்து இருந்தது.
    • நெசவு தொழில், உலோக வேலை, கட்டடக் கலைஞர் முக்கியத்துவம் பெற்றனர்.
    • தென்னிந்தியாவில் இருந்து ஏற்றுமதியான ஜவுளி முக்கியப் பண்டமாக விளங்கியது.

     

    2. விஜயநகர ஆட்சியாளர்களின் ஆட்சிமுறை பற்றி விவரி.

    • அரசரே அனைத்து அதிகாரங்களையும் பெற்றவராக இருந்தார்.
    • அரசருக்கு உதவியாக பல உயர்மட்ட அதிகாரிகள் உதவி செய்தனர்.
    • முதலமைச்சர் (மகாபிரதானி) கீழ்நிலை அதிகாரிகளுக்கு தலைமையாவார்.
    • ராஜ்யா என்னும் பல மண்டலங்களாக நாடு பிரிக்கப்பட்டு இருந்தது.
    • ராஜ்யாவின் ஆளுநர் பிரதானி. அவர் அரச குடும்பத்தின் உறவினர் அல்ல.
    • பிரதானி அரசவை உறுப்பினராக அல்லது ராணுவ அதிகாரியாக இருப்பார்.
    • பிரதானிக்கு உதவிபுரிய கணக்கர்களும் ராணுவ அதிகாரிகளும் இருந்தனர்.
    • ஒவ்வொரு ராஜ்யாவும் -  சீமை, ஸ்தலம், கம்பனா, கிராமம் எனப் பிரிக்கப்பட்டது.

     

    3. முதலாம் முகமது ஆட்சியின் கீழ் பாமினி அரசு பற்றிக் குறிப்பு வரைக.
    • ரெய்ச்சூரை கைப்பற்ற விஜயநகர அரசுடன் நீண்டகாலப் போர்கள் மேற்கொண்டார்.
    • வாரங்கல் மீது படையெடுத்தார். கோல்கொண்டா கோட்டையைக் கைப்பற்றினார்.
    • முதலாம் முகமது சிறந்த அரசு முறை நிர்வாகத்தைப் பின்பற்றினார்.
    • எட்டு அமைச்சர்களைக் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்தினார்.
    • வழிப்பறி கொள்ளையர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தார்.
    • நிறுவன மற்றும் புவியியல் ரீதியில் பேரரசில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினார்.
    • குல்பர்காவில் இரு மசூதிகள் கட்டினார். 1367 இல் ஒரு மசூதி கட்டி முடிக்கப்பட்டது.

     

    4. முகமது கவானின் ஆட்சிமுறை மற்றும் ராணுவ நிர்வாகம் பற்றி விவரி.
    • முகமது கவான் சிறந்த நிர்வாகத் திறன் கொண்டவராக விளங்கினார்.
    • முகமது கவான் மூன்றாம் முகம்மதுவின் பிரதம மந்திரியாக விளங்கினார்.
    • பாமினி பேரரசை நிர்வாக வசதியாக எட்டு மாகாணங்களாகப் பிரித்தார்.
    • மாகாணங்களின் எல்லைகளை வரையறை செய்தார்.
    • மாகாண ஆளுநர்களின் ராணுவ அதிகாரத்தை குறைத்தார்.
    • ஒரு ஆளுநருக்கு ஒரு கோட்டை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
    • மாகாண ஆளுநர்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி சிறந்த ஆட்சிக்கு அடித்தளமிட்டார்.
    • கொங்கணம், ஒரிசா, விஜயநகருக்கு எதிராக படை நடத்திச் சென்று வெற்றி பெற்றார்.
    • பாரசீக வேதியியல் வல்லுநர்களின் வழிகாட்டுதல்படி வெடிமருந்து பயன்படுத்தினார்.

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive