11th History - Book Back Answers - Unit 2 - Tamil Medium Guides

  


 


    Plus One / 11th History - Book Back Answers - History Unit 2 - Tamil Medium

    Tamil Nadu Board 11th Standard History Unit 2: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 2 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 2 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 2 : பண்டைய இந்தியா : செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

    I. சரியான விடையைத் தேர்வு செய்க


    வினா  1.
    வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்.

    அ) பிராமணங்கள்
    ஆ) சங்கிதைகள்
    இ) ஆரண்யகங்கள்
    ஈ) உபநிடதங்கள்
    விடைகுறிப்பு:
    ஆ) சங்கிதைகள்

    வினா  2.
    மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    அ) குருபாஞ்சாலம்
    ஆ) கங்கைச்சமவெளி
    இ) சிந்துவெளி
    ஈ) விதேகா
    விடைகுறிப்பு:
    அ) குருபாஞ்சாலம்
     
    வினா  3.
    ஆதிச்சநல்லூர் ………………. மாவட்டத்தில் அமைந்துள்ளது.

    அ) கோயம்புத்தூர்
    ஆ) திருநெல்வேலி
    இ) தூத்துக்குடி
    ஈ) வேலூர்
    விடைகுறிப்பு:
    இ) தூத்துக்குடி

    வினா  4.
    கீழ்க்காணும் இணைகளை கவனிக்கவும்.

    (i) சேனானி – படைத்தளபதி
    (ii) கிராமணி – கிராமத்தலைவர்
    (iii) பலி – தன்னார்வத்தால் கொடுக்கப் பட்டது
    (iv) புரோகிதர் – ஆளுநர்
    மேற்கண்டவற்றில் எந்த இணை தவறானது?

    அ) (i)
    ஆ) (ii)
    இ) (iii)
    ஈ) (iv)
    விடைகுறிப்பு:
    ஈ) (iv) புரோகிதர் – ஆளுநர்
     
    வினா  5.
    கூற்று (கூ): முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை
    காரணம் (கா) :பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

    அ) கூற்றும் காரணமும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.
    ஆ) கூற்றும் காரணமும் சரியானவை. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை,
    இ) கூற்று சரியானது. காரணம் தவறானது.
    ஈ) கூற்று , காரணம் இரண்டும் சரியானவை.
    விடைகுறிப்பு:
    ஆ) கூற்றும் காரணமும் சரியானவை. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை,


    II. குறுகிய விடை தருக

    1. வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.
    • நான்கு வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள்.
    • வேதப் பாடல்களின் தொகுப்பான சங்கிதைகள் மற்றும் பிராமணங்கள்.
    • ஆரண்யகங்கள், உபநிடதங்கள் வேதகாலத்தின் இறுதியில் தோன்றின.

     

    2. ஜென்ட் அவஸ்தாவைப் பற்றி எழுதுக.
    • ஜொராஸ்டிரிய மதத்தைச் சேர்ந்த பாரசீக / ஈரானிய மொழி நூலாகும்.
    • இந்தோ-ஈரானிய மொழி மக்களின் நிலப்பரப்பு, கடவுள்கள் பற்றி கூறுகிறது.
    • வேத சமஸ்கிருதச் சொற்களோடு மொழி ஒப்புமை கொண்டுள்ளது.

     

    3. தொடக்க வேத காலத்தில் பெண்களின் நிலையை கோடிட்டுக் காட்டுக.
    • தொடக்க வேத காலத்தில் பெண்கள் உயரிய இடத்தை வகித்தனர்.
    • கிராமக் கூட்டங்களிலும் வேள்விகளிலும் பங்கெடுத்தனர்.
    • பலதார மணமும் மறுமணமும் வழக்கத்தில் இருந்துள்ளது.

     

    4. ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக.
    • ரிக்வேதக் காலத்தில் புரந்தரா என்ற இந்திரனே முக்கியக் கடவுள்.
    • இருளை நீக்கும் கடவுள் சூரியன். நீர்க் கடவுள் வருணா.
    • வலிமையின் கடவுள் மாருத். தாவரங்களின் கடவுள் சோமா.
    • உஷா எனும் பெண் கடவுள் விடியலின் கடவுள்.

     

    5. இந்தியாவின் இரும்புக் காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன.
    • இந்தியாவில் இரும்புக் காலமானது இருவேறு பண்பாட்டைக் கொண்டுள்ளது.
    • வட இந்தியா ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாடு.
    • தென் இந்தியா ஈமச் சின்னங்களுடன் கூடிய பெருங்கற்கால பண்பாடு.
     
     

    III. சுருக்கமான விடை தருக

    1. தென் இந்தியாவின் செம்புக்காலப் பண்பாடுகளைச் சுருக்கமாக விவரிக்கவும்.
    • செம்புகாலப் பண்பாடு தென் இந்தியாவில் நிலவியதற்கான சான்றுகள் இல்லை.
    • துளையிட்ட பாண்டங்கள், கெண்டி வடிவிலானப் பாண்டங்கள் கிடைத்துள்ளன.
    • கற்கருவிகளும் இருந்தன. பழங்கள், இலைகள், கிழங்குகள் ஆகியன உண்டணர்.
    • வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகும்.

     

    2. தொடக்ககால வேதகாலத்தின் புவியியல் பரவல்களைப் பட்டியலிடுக.
    • தொடக்க வேதகாலம் இந்தியத் துணைக் கண்டத்தின் சில பகுதிகளில் நிலவியது.
    • கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளது.
    • இந்தியாவில் பஞ்சாப் மற்றும் மேற்கு உத்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகள்.
    • தொடக்க வேதகால வசிப்பிடங்கள் பற்றி ரிக் வேதப் பாடல்கள் தெரிவிக்கிறது.

     

    3. ரிக் வேதகால சமூகப் பிரிவுகளைக் கோடிட்டு காட்டுக.
    • புருஷ பலியிடப்பட்ட போது அவனுடைய வாயிலிருந்து பிராமணர்கள் தோன்றினர்.
    • அதேபோல் அவனுடைய இரண்டு கைகளில் இருந்து சத்திரியர்கள் தோன்றினர்.
    • தொடைகளில் இருந்து வைசியர்களும், கால்களில் இருந்து சூத்திரர்களும் தோன்றினர்.
    • போர் புரிவோரும், கால்நடை வளர்ப்போரும், வேளாண்மை செய்வோரும் இருந்தனர்.

     

    4. மேய்ச்சல் சமூகத்தின் இயல்புகளை ஆய்க.
    • மேய்ச்சல் சமூகத்தில் கால்நடைகளை மையப்படுத்தி பல மோதல்கள் நடைபெற்றன.
    • மேய்ச்சல் சமூகம் இனக் குழுக்கள், மரபுவழிக் குடும்பங்களை கொண்டிருந்தன.
    • மேய்ச்சல் தொழிலுக்கு அடுத்த நிலையிலேயே வேளாண்மை தொழில் இருந்தது.
    • வர்ணக் கோட்பாடு தோன்றிவிட்டாலும் மேய்ச்சல் சமூகத்தில் பாகுபாடுகள் இல்லை.

     

    5. தொடக்க வேதகால சமூகத்திற்கும் பின் வேதகால சமூகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைக் காட்டுக.
    தொடக்க வேதகால சமூகம்
    பின் வேதகால சமூகம்

    ஆரியர்கள் ஏனைய மக்களிடம் இருந்து மேம்படுத்திக் காட்டிக் கொண்டனர். 

    நிறம், வகையைச் சுட்டிக்காட்ட வர்ண என்ற சொல் பயன்படுத்தினர்.

    வர்ண அடிப்படையிலான சமூகப் படிநிலை ஆழமாகக் காலூன்றியது.

     சூத்திரர்களுக்கும் கீழாக சில சமூகக் குழுக்கள் வைக்கப்பட்டன.

    சமூகத்தில் பெண்கள் மிகவும் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டனர்.

    பெண்கள் கிராமக் கூட்டங்களிலும் வேள்விகளிலும் பங்கெடுத்தனர்.

    சமூகத்தில் பெண்களின் நிலைமை தாழ்ந்து காணப்பட்டது.

    பெண் குழந்தைகள் பிரச்சனைகளின் தோற்றுவாய் என கருதப்பட்டனர்.

     

     

    IV. விரிவான விடை தருக  

    1. இந்தியாவில் பழுப்பு மஞ்சள்நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.
    • வடஇந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.
    • பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் செம்புக் காலப் பண்பாட்டுடன் தொடர்புடையது.
    • மட்பாண்டங்கள் சிவப்புநிற அடிப்புறத்தின் மேல் பழுப்பு மஞ்சள் நிறம் கொண்டுள்ளது.
    • அதில் ஜாடிகள், கொள்கலன்கள், தட்டுகள், கிண்ணங்கள் போன்றவைகள் உள்ளன.
    • வீடுகளில் மேற்கூரை, மரதட்டிகளின் மேல் களிமண் பூசப்பட்ட சுவர்கள் இருந்தன.
    • செம்பாலான உருவங்களும் ஏனைய பொருள்களும் அதிகம் கிடைத்துள்ளன.
    • இப்பண்பாடு "செம்பு பொருட்குவியல் பண்பாடு" என்று அழைக்கப்படுகிறது.
    • சிந்து -கங்கை சமவெளியில் தொடக்க வேதகாலப் பண்பாடோடு தொடர்புடையது.

     

    2. தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.

    ஆதிச்சநல்லூர்:

    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. தாழிகள், மட்பாண்டங்கள் அதிகம் உள்ளன.
    • ஆணிகள், கல்மணிகள், ஆயுதங்கள், வெண்கல பொம்மைகள் கிடைத்துள்ளன.

    பையம்பள்ளி :

    • வேலூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு 1906 இல் அகழ்வாய்வு நடைபெற்றது.
    • கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்கள், ஈமத் தாழிகள் கண்டறியப்பட்டன.

    கொடுமணல் :

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. அண்மையில் 2012 இல் அகழ்வாய்வு நடந்தது.
    • மட்பாண்டங்கள், ஆயுதங்கள், கருவிகள், அணிகலன்கள், மணிகள் கிடைத்துள்ளன.

     

    3. வேதகால அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து ஒரு கட்டுரை வரைக.

    அ) தொடக்க வேதகாலம் :

    • தொடக்க வேதகால அரசியல் என்பது இனக்குழுக்களின் அரசியலே ஆகும்.
    • இனக்குழுவின் தலைவர் ராஜன் (அரசன்) என்று அழைக்கப்பட்டார்.
    • அரசருடைய முக்கியப் பணி இனக்குழுவைக் காப்பது, எதிரிகளோடு போரிடுவது.
    • சபா, சமிதி, விததா, கணா ஆகிய அமைப்புகள் அரசியலில் பங்கேற்றன.

    ஆ) பிந்தைய வேதகாலம் :

    • அரசர் வாஜ்பேயம், ராஜசூயம், அஸ்வமேதம் யாகங்களை நடத்தினார்.
    • முடியாட்சி முறை வலுப்பெற்றதால் அரசரின் அதிகாரம் பெருகியது.
    • பேரரசுகள் தோன்றி சாம்ராட், சாம்ராஜ் போன்ற கோட்பாடுகள் வளர்ச்சி பெற்றன.
    • சபா, சமிதி, வித்தா, கணா ஆகிய அமைப்புகள் அரசியலில் செல்வாக்கு இழந்தன.

     


     

     

     

     







    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive