11th History - Book Back Answers - Unit 13 - Tamil Medium Guides

  

 


    Plus One / 11th History - Book Back Answers - History Unit 13 - Tamil Medium

    Tamil Nadu Board 11th Standard History Unit 13: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 13 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 13 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு13 - பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம்


    I. சரியான விடையைத் தேர்வு செய்க

    வினா 1.
    அத்வைதம் என்னும் தத்துவத்தை இந்து மதத்திற்கு வழங்கியவர் _________

    அ) ஆதிசங்கரர்
    ஆ) இராமானுஜர்
    இ) இராமானந்தர்
    ஈ) சைதன்யர்
    விடைகுறிப்பு:
    அ) ஆதிசங்கரர்

    வினா 2.
    வைதீக வேதப்பிரிவுகளுக்கும், சிரமணப் பிரிவுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைப் பற்றிக் குறிப்பிடுவது _________

    அ) இராமாயணம்
    ஆ) பாகவத புராணம்
    இ) திருத்தொண்டர்களின் புகழ் பாடும் தொகுப்புகள்
    ஈ) பால லீலா
    விடைகுறிப்பு:
    இ) திருத்தொண்டர்களின் புகழ் பாடும் தொகுப்புகள்

    வினா 3.
    கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர் _________

    அ) முதலாம் மகேந்திரவர்மன்
    ஆ) மாறவர்மன் அரிகேசரி
    இ நரசிம்மவர்மன்
    ஈ) சுந்தரபாண்டியன்
    விடைகுறிப்பு:
    ஆ) மாறவர்மன் அரிகேசரி

    வினா 4.
    சமண மதத்திலிருந்த போது அப்பர் இவ்வாறு அறியப்பட்டார் _________

    அ) அரிசேனா
    ஆ தீர்த்தங்கரர்
    இ சிவஞான சித்தியார்
    ஈ) தர்மசேனர்
    விடைகுறிப்பு:
    ஈ) தர்மசேனர்
     
    வினா 5.
    பக்கீர் எனக் குறிப்பிடப்படுபவர் _________

    அ) இஸ்லாமிய ஞானி
    ஆ) பௌத்தத் துறவி
    இ) இந்துத் துறவி
    ஈ) சீக்கிய குரு
    விடைகுறிப்பு:
    அ) இஸ்லாமிய ஞானி

    வினா 6.
    மாதாவாச்சாரியார் _________ தத்துவப் பள்ளியைச் சார்ந்தவர்.

    அ) துவைதம்
    ஆ) அத்வைதம்
    இ) விசிஷ்டாத்வைதம்
    ஈ) புஷ்டி மார்க்கம்
    விடைகுறிப்பு:
    அ) துவைதம்

    வினா 7.
    இராமானந்தரின் சீடர் _________
    அ) சைதன்யர்
    ஆ) ரவிதாஸ்
    இ) குருநானக்
    ஈ) கபீர்
    விடைகுறிப்பு:
    ஈ) கபீர்

    வினா 8.
    முதன்முதலாக இந்தி மொழியில் தனது மதத் தத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர்_________

    அ) ரவிதாஸ்
    ஆ) இராமானந்தர்
    இ) கபீர்
    ஈ) நாமதேவர்
    விடைகுறிப்பு:
    ஆ) இராமானந்தர்
     
    வினா 9.
    அக்பரின் அரசவையில் “ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகர்” என்று அறியப்பட்டவர் _________

    அ) சூர்தாஸ்
    ஆ) துக்காராம்
    இ இராமானந்தர்
    ஈ) மீராபாய்
    விடைகுறிப்பு:
    அ) சூர்தாஸ்
     
    வினா 10.
    மராத்திய மன்னர் சிவாஜியின் சமகாலத்தவர் _________ ஆவார்

    அ) இராமானந்தர்
    ஆ) மீராபாய்
    இ) சூர்தாஸ்
    ஈ) துக்காராம்
    விடைகுறிப்பு:
    ஈ) துக்காராம்
     
    வினா 11.
    சரியான கூற்றினைத் தேர்ந்தெடு.

    அ. தனது தொடக்கக் கால வாழ்வில் சைவராக இருந்த அப்பர் தனது தமக்கையால் சைவ மதத்திலிருந்து சமண மதத்திற்கு மாறினார்
    ஆ. சூஃபி இயக்கத்தவர் கடவுளை அழகின் உச்சமாகக் கருதினர்
    இ. இராம பக்தியை முன்னிலைப்படுத்தி வங்காள வைணவர்கள் இந்து மதத்தைச் சீர்திருத்த முயன்றனர்.
    ஈ. பௌத்த மத நூல்களில் ரவிதாஸின் பக்திப்பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
    விடைகுறிப்பு:
    ஆ. சூஃபி இயக்கத்தவர் கடவுளை அழகின் உச்சமாகக் கருதினர்
     
    வினா 12.
    கூற்று : மத சீர்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கொள்கையைப் போதித்தனர்

    காரணம் : அவர்கள் சிலை வழிபாட்டை விமர்சித்தனர்
    அ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
    ஆ. கூற்று தவறு; காரணம் தவறு
    இ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
    ஈ. கூற்று தவறு; காரணம் சரி
    விடைகுறிப்பு:
    இ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
     
    வினா 13.
    பொருத்துக
    i) கபீர்                                – 1. சாகித்திய லாகிரி
    ii) சூர்தாஸ்                     – 2.ஷேக் தாதி
    iii) சூபியிஸம்               – 3. சம்பந்தர்
    iv) கூன் பாண்டியன்  – 4. நெசவாளர்
    அ) 2 3 4 1
    ஆ) 4 3 2 1
    இ) 2 4 3 1
    ஈ) 3 4 2 1
    விடைகுறிப்பு: 
    ஆ) 4 3 2 1
     

    II. குறுகிய விடை தருக

    1. பக்தி இயக்கத்திற்கு இராமானுஜர் ஆற்றிய சேவைகள் யாவை?

    • இராமானுஜர் சமய சமத்துவத்திற்குப் பெரும் ஆதரவாளராகத் திகழ்ந்தார்.
    • பக்தி இயக்கம் ஒரு தத்துவ, சிந்தாந்த இயக்கமாக மறுவடிவம் கொண்டது.
    • இராமானுஜர் வசிஷ்டாத்வைதம் தத்துவத்தை உருவாக்கினார்.

     

    2. பக்தி இயக்கத்தில் ரவிதாஸின் பங்கினைப் பற்றி நீவிர் அறிவன யாவை?
    • பக்தி இயக்கத் துறவியும் புலவருமான ரவிதாஸ் இராமானந்தரின் சீடராவார்.
    • ஆன்மீக விடுதலைக்கு ஒற்றுமையை ஊக்குவித்தார்.
    • சமூகப் பிரிவுகள், ஆண் - பெண் சமத்துவமின்மை ஆகியவற்றை எதிர்த்தார்.

     

    3. இராமானந்தரின் போதனைகள் யாவை?
    • இராமானுஜரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு வைணவத்தை போதித்தார்.
    • இராமர், சீதை மீது பக்தி கொள்ளக் கூறினார். சாதி முறையை நிராகரித்தார்.
    • கடவுளின் முன்னால் அனைவரும் சமம் என்ற கொள்கையைப் போதித்தார்.

     

    4. பண்பாட்டுப் பாரம்பரியத்தின் சிறப்பிற்குக் காரணமாக மீராபாயின் பாடல்களும் கவிதைகளும் அமைந்தன. விளக்குக.
    • மீராபாய் அன்பு ஒன்றே கடவுளை அடையும் வழியென போதனை செய்தார்.
    • மீராபாய் கிருஷ்ணர் வழிபாட்டை போதித்தார். பஜனைப் பாடல்களைப் பாடினார்.
    • அவரது பக்திப் பாடல்களும், இசைப் பாடல்களும் வளமான பண்பாட்டு மரபாகும்.

     

    5. இந்துத் துறவிகள் இஸ்லாமின் மீது கொண்டிருந்த இரண்டு வெவ்வேறு அணுகு முறைகள் யாவை?

     

    1. எதிரிகளாக கருதினர்.
    • இஸ்லாம் உருவ வழிபாட்டை கடுமையாக எதிர்த்தது.
    • இஸ்லாமியர்களை இந்து சமயத்தின் எதிரிகளாகக் கருதினர்.
    2. சகோதரர்களாக கருதினர்.
    • இஸ்லாத்தின் ஒரே கடவுள் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர்.
    • இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரர்களே எனக் கருதினர்.

    III. சுருக்கமான விடை தருக

    1. மத மறுமலர்ச்சியின் உறைவிடமாகத் தென்னிந்தியா விளங்கியதை விளக்குக.
    • நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோற்றுவித்த மத மறுமலர்ச்சியே பக்தி இயக்கம்.
    • நாயன்மார்கள் சைவத்தையும், ஆழ்வார்கள் வைணவத்தையும் போற்றி வளர்த்தனர்.
    • உள்ளத்தை உருக்கும் பாடல்களால் பக்தி கோட்பாட்டிற்கு ஒரு வடிவம் கொடுத்தனர்.
    • மத மறுமலர்ச்சி அரசியல், சமூகம், பண்பாடு, மொழியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    2. சூர்தாஸ், துக்காராம் ஆகியோரின் போதனைகளை ஆய்க.

     

    சூர்தாஸ் :
    • அன்பு எனும் மதத்தையும், கடவுளிடம் பக்தியோடு இருப்பதையும் போதித்தார்.
    • சூர்தாஸ் கிருஷ்ணர் குறித்து இந்தி மொழியில் பல பாடல்களை இயற்றினார்.
    துக்காராம்:
    • துக்காராம் கடவுள் பற்று, மன்னிக்கும் குணம், மனஅமைதி ஆகியன போதித்தார்.
    • உருவ வழிபாட்டை நிராகரித்தார். சமத்துவம், சகோதரத்துவத்தைப் பரப்பினார்.

     

    3. கபீரின் போதனைகளை விவரி.
    • கபீர் தனது பாடல்களின் மூலம் சடங்குகள், சம்பிரதாயங்களை கேலி செய்தார்.
    • கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் எனக் கருதினார். ஒற்றுமையை போதித்தார்.
    • இந்து - இஸ்லாம் மதங்கள் இடையே காணப்பட்ட பிரிவினைகளை சாடினார்.
    • உருவ வழிபாடு, பல கடவுள் வழிபாடு, சாதிமுறை ஆகியவற்றை எதிர்த்தார்.

     

    4. கபீரிடமிருந்து சைதன்யர் எவ்வாறு வேறுபடுகிறார்?
    • கபீர் இறைவனை புரிந்து கொள்ள அனைத்து பிரிவு மக்களையும் ஒருங்கிணைத்தார்.
    • சைதன்யர் நடத்தியது ஒருமைப்பாட்டிற்கான இயக்கமல்ல, அது ஒரு மீட்பு இயக்கம்.
    • விஷ்ணுவை பல வடிவங்களில் வழிபட்டார். கிருஷ்ணர் வழிபாட்டை வலியுறுத்தினார்.
    • சைதன்யர் மற்ற கடவுள்களைவிட கிருஷ்ணர் உயர்வானவர் எனப் போதித்தார்.
    5. பக்தி இயக்கத்தின் விளைவுகளைச் சுட்டிக் காட்டுக.
    • பக்தி என்பது அனைத்து பிரிவு மக்களுக்கும் உரியது என்ற கருத்து உருவானது.
    • பிராந்திய மொழிகளில் அதிக அளவில் பக்தி இலக்கியங்கள் எழுதப்பட்டன.
    • பெண்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் ஆன்ம விடுதலைக்கு வழிகாட்டியது.
    • துறவிகள் துவைதம், அத்வைதம் ஆகிய தத்துவக் கோட்பாடுகளை வழங்கினர்.
     

    IV. விரிவான விடை தருக  

    1. சூபியிஸத்தின் தாக்கம் பற்றி விவரி.
    • பக்தி இயக்கத்திற்கு இணையாக இஸ்லாம் மதத்தில் தோன்றியதே சூபியிஸம்.
    • சூபிகள் ஒட்டு மொத்தமனித குலத்தின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினர்.
    • இறைவனை அனைத்துக்கும் மேலான அழகின் உச்சம் என கருதினர்.
    • அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
    • மதச் சம்பிரதாயம், பழமைவாதம், வெளிவேடம் ஆகியவற்றை எதிர்த்தது.
    • ஆன்மீகப் பேரின்ப நிலையை மட்டும் இலக்காகக் கொண்டு செயல்பட்டது.
    • சூபிகள் உலகில் அமைதி மற்றும் மகிழ்ச்சியை நிலைநாட்டப் பணியாற்றினர்.
    • இந்து - முஸ்லீம் இடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தியது.

     

    2. பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகளை வரிசைப்படுத்துக.
    • ஒரே கடவுள் கொள்கையைப் போதித்தனர். உருவ வழிபாட்டை விமர்சித்தனர்.
    • இறைவனிடம் ஆழமான பற்றும் நம்பிக்கையும் இருந்தால் முக்தி அடைய முடியும்.
    • முக்தி அடைந்தால் பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபட முடியும் என நம்பினர்.
    • இறைவனுடைய அருளைப் பெற அர்ப்பணிப்புடன், பக்தியுடன் பாடல்கள் பாடுவது.
    • குருவானவர் வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் இருத்தல் வேண்டும் என்றனர்.
    • உலக சகோதரத்துவக் கொள்கையை போதித்தனர். சாதி முறையை கண்டித்தனர்.
    • மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களும் கடவுளின் குழந்தைகளே என்றனர்.
    • சடங்குகள், சம்பிரதாயங்கள், புனித யாத்திரைகள், நோன்புகளை கண்டித்தனர்.
    • புனித மொழி என எதையும் கூறவில்லை. மக்களின் மொழியில் பாடல்கள் இயற்றினர்.

     

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive