11th History - Book Back Answers - Unit 11 - Tamil Medium Guides

  

 


    Plus One / 11th History - Book Back Answers - History Unit 14 - Tamil Medium

    Tamil Nadu Board 11th Standard History Unit 14: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 14 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 14 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 12 - பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள்

    I. சரியான விடையைத் தேர்வு செய்க

    வினா 1.
    __________ கடல்வ ழிப் படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.
    அ) மூன்றாம் குலோத்துங்கன்
    ஆ) முதலாம் இராஜேந்திரன்
    இ) முதலாம் இராஜராஜன்
    ஈ) பராந்தகன்
    விடைகுறிப்பு:
    ஆ) முதலாம் இராஜேந்திரன்

    வினா 2.
    _________ படுகையில் இருந்த சோழ அரசின் மையப்பகுதி சோழ மண்டலம் எனப்படுகிறது.

    அ) வைகை
    ஆ) காவிரி
    இ) கிருஷ்ணா
    ஈ) கோதாவரி
    விடைகுறிப்பு:
    ஆ) காவிரி
     
    வினா 3.
    முதலாம் இராஜராஜனும் முதலாம் இராஜேந்திரனும் இணைந்து _________ ஆண்டுகள் சோழ அரசை ஆட்சி செய்தார்கள்.
    அ) 3
    ஆ) 2
    இ) 5
    ஈ) 4
    விடைகுறிப்பு:
    ஆ) 2
     
    வினா 4.
    __________ ஒரு கலத்துக்குச் சமம் ஆகும்.

    அ) 28 கி.கி
    ஆ) 27 கி.கி
    இ) 32 கி.கி
    ஈ) 72 கி.கி
    விடைகுறிப்பு:
    அ) 28 கி.கி

    வினா 5.
    கெடா _________ இல் உள்ள து.

    அ) மலேசியா
    ஆ) சிங்கப்பூர்
    இ) தாய்லாந்து
    ஈ) கம்போடியா
    விடைகுறிப்பு:
    அ) மலேசியா

    வினா 6.
    முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் _________ என்று அழைக்கப்பட்ட ஒரு குழுவால் நிர்வகிக்கப்பட்டது.

    அ) நாட்டார்
    ஆ) மாநகரம்
    இ) நகரத்தார்
    ஈ) ஊரார்
    விடைகுறிப்பு:
    ஆ) மாநகரம்
     
    வினா 7.
    பொருத்துக.
    1) படை முகாம்                     – படை வீடு
    2) புறங்காவல் படைகள் – தண்டநாயகம்
    3) தலைவர்                             – நிலைப்படை
    4 ) படைத்தளபதி                 – படைமுதலி
    அ) 1, 3, 4, 2
    ஆ) 4, 2, 1, 3
    இ) 2, 1, 3, 4
    ஈ) 2, 3, 1, 4
    விடைகுறிப்பு:
    ஈ) 2, 3, 1, 4

    வினா 8.
    _________ இல் பெற்ற வெற்றியின் நினைவாக முதலாம் இராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டினார்.
    அ) இலங்கை
    ஆ) வட இந்தியா
    இ) கேரளம்
    ஈ) கர்நாடகம்
    விடைகுறிப்பு:
    ஆ) வட இந்தியா

    வினா 9.
    _________ பாண்டியர்களின் முதல் தலைநகரமாகும்.
    அ) மதுரை
    ஆ) காயல்பட்டினம்
    இ) கொற்கை
    ஈ) புகார்
    விடைகுறிப்பு:
    இ) கொற்கை

    வினா 10.
    பொ.ஆ. 800ஐச் சேர்ந்த மானூர் கல்வெட்டு _________ நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகின்றது.
    அ) மத்திய அரசு
    ஆ) கிராமம்
    இ) படை
    ஈ) மாகாணம்
    விடைகுறிப்பு:
    ஆ) கிராமம்
     
    வினா 11.
    வறட்சிப்பகுதியான இராமநாதபுரத்தில் பாண்டிய அரசர்கள் _________ ஐக் கட்டினார்கள்.
    அ) அகழிகள்
    ஆ) மதகுகள்
    இ) அணைகள்
    ஈ) ஏரிகள்
    விடைகுறிப்பு:
    ஈ) ஏரிகள்
     

    II. குறுகிய விடை தருக

    1. சோழர் காலத்து இலக்கிய வடிவ வரலாற்று நூல்கள் எவை?
    • ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணி - கலிங்கப் போர் பற்றி கூறுகிறது.
    • ஒட்டகூத்தர் இயற்றிய மூவருலா, குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ்,
    • மூவருலா மூன்று சோழ அரசர்களின் வரலாற்றை தருகிறது.
     
     2. சோழ மண்டலம் "மும்முடிச் சோழ மண்டலம்என அழைக்கப்பட்டது ஏன்?
    • தொண்டை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, கங்கைவடி பகுதிகளை கைப்பற்றினர்.
    • சோழ நாடு, சேர நாடு, பாண்டிய நாடு என மூன்றையும் ஒன்றாக ஆட்சி செய்தனர்.
    • வடகிழக்கு இலங்கையைக் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என பெயரிட்டனர்.
     
     3. முதலாம் இராஜேந்திரனுக்கான பட்டங்கள் யாவை?
    • முடிகொண்ட சோழன் பாண்டியர்களை முறியடித்ததால் கிடைத்த பட்டம்.
    • கங்கை கொண்டான் வட இந்திய வெற்றியால் கிடைத்த பட்டம்.
    • கடாரம் கொண்டான் - ஸ்ரீவிஜயா, கடாரம் வெற்றியால் கிடைத்த பட்டம்.
     
     4. நிலத்தைக் கணக்கிடுவதற்கான வெவ்வேறு அலகுகளைக் கூறுக.
    • சோழர்கள் நிலங்களை முறையாக அளவீடு செய்து வரி விதித்தனர்.
    • நிலத்தை கணக்கிடும் அலகுகள் - குழி, மா, வெளி, பட்டி, பாடகம்,
    • நில அளவீடு செய்யும் பணியாளர்களை "நாடு வகை செய்கிற" என்றழைத்தனர்.
     
     5. சோழர் காலத்து கால்வாய்களில் அரசர்கள், அரசிகள், கடவுளரின் பெயர் சூட்டப்பட்ட கால்வாய்கள் யாவை?
    • அரசர் பெயரில் - உத்தமச் சோழன் வாய்க்கால்.
    • அரசி பெயரில் - பஞ்சவன் மாதேவி வாய்க்கால்.
    • கடவுள் பெயரில் - கணவதி வாய்க்கால்.
     
    6. தமிழ்ச் சங்கம் குறித்து எழுதுக.
    • இறையனார் அகப்பொருள் - சங்கம் என்பதன் பொருள் கலைக்கழகம்.
    • திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் சங்கம் என்பது கலைக்கழகம்.
    • பல்லவர்களுக்கு முந்தைய இலக்கியங்களில் சங்கம் என்பதன் பொருள் வேறு.
     
     7. பாண்டிய அரசின் மீதான மாலிக்காபூரின் படையெடுப்பின் விளைவுகள் யாவை?
    • மதுரையில் தில்லி சுல்தானியத்திற்கு கட்டுப்பட்ட ஓர் அரசு உருவானது.
    • அரச மரபினர் பாண்டிய நாட்டை தனித்தனி அரசுகளாக துண்டாடினர்.
    • மாலிக்காபூர் கோயில்களை இடித்து பெரும் செல்வத்தை எடுத்துச் சென்றார்.
     

    III. சுருக்கமான விடை தருக

    1. இராஜராஜ சோழனின் கடல்வழிப் படையெடுப்புகள் குறித்து குறிப்பு வரைக.
    • கடல்வழிப் படையெடுப்பில் மேற்குக் கடற்கரை மற்றும் இலங்கையை வென்றார்.
    • இலங்கையின் வடகிழக்குப் பகுதியை மும்முடிச் சோழ மண்டலமாக அறிவித்தார்.
    • இறுதியாக இந்தியப் பெருங்கடலில் இருந்த மாலத் தீவுகளைக் கைப்பற்றினார்.
    • முதலாம் இராஜராஜ சோழன் கடல் கடந்த பேரரசு உருவாக அடித்தளமிட்டார்.

     

    2. இராஜேந்திர சோழன் "கடாரம் கொண்டான்" என அழைக்கப்படுவது ஏன்?
    • தென்கிழக்கு ஆசியாவில் இருந்த ஸ்ரீவிஜயா, கடாரம் பகுதிகளை தாக்கினார்.
    • வணிகத்தில் சிறந்து விளங்கிய ஸ்ரீவிஜயாவை (தெற்கு சுமத்ரா) கைப்பற்றினார்.  
    • குறுநில மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்த கெடாவை (கடாரம்) கைப்பற்றினார்.
    • இந்த கடல் கடந்த படையெடுப்பால் கடாரம் கொண்டான் என்ற பட்டம் பெற்றார்.
     
     3. சோழர் காலத்தில் இருந்த வணிகக் குழுக்களின் பங்களிப்பு குறித்து எழுதுக.
    • அஞ்சுவண்ணத்தார், மணிக்கிராமத்தார் என்ற இரு வணிகக் குழுக்கள் இருந்தன.
    • அஞ்சுவண்ணத்தார் குழு - மேற்கு ஆசியாவைச் சேர்ந்த கடல்வழி வணிகர்கள்.
    • மணிக்கிராமத்தார் குழு நகரங்களில் வசித்த உள்நாட்டு வணிகர்கள்.
    • பிற வணிகக் குழுக்கள் -ஐநூற்றுவர், திசை ஆயிரத்து ஐநூற்றுவர், வளஞ்சியர்.
     
     4. சோழர் காலத்தில் வசூலிக்கப்பட்ட வரிகள் என்னென்ன?
    • நிலங்களை வகைப்படுத்தி, அளவீடு செய்தனர். வரிகளை பொருளாக வசூலித்தனர்.
    • இறை, காணிகடன், இறைகட்டின காணிகடன், கடமை வரி ஆகியன வசூலித்தனர்.
    • குத்தகைக்கு வேளாண்மை செய்தவர்களிடம் குடிமை வரி வசூலித்தனர்.
    • அரசர்களும் உள்ளூர் தலைவர்களும் 'ஒப்படி' என்ற வரியை வசூலித்தனர்.
     
     5. சோழர் காலச் சமூகத்தின் படிநிலையைக் கூறுக.
    • முதல் படிநிலை - பிரம்மதேய குடியிருப்புகளில் வசித்த நில உடமையாளர்கள்.
    • 2 வது படிநிலை - வேளாண் கிராமங்களைச் சேர்ந்த நில உடமையாளர்கள்.
    • 3 வது படிநிலை - சொந்தமாக நிலமில்லாத 'உழுகுடி' என்ற குத்தகைதாரர்கள்.
    • சமூகத்தின் அடிமட்டத்தில் உழைப்பாளிகளும் அடிமைகளும் இருந்தார்கள்.
     
     6. சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களைக் குறிப்பிடுக.
    • முதலாம் இராஜேந்திரன் எண்ணாயிரத்தில் வேதக்கல்லூரி ஒன்றை நிறுவினார்.
    • 1048-இல் திருபுவனியில் ஒரு சமஸ்கிருதக் கல்லூரியை தொடங்கினார்கள்.
    • 1061-இல் திருமுக்கூடலில் ஒரு சமஸ்கிருதக் கல்லூரியை தொடங்கினார்கள்.
    • வேதங்கள், தத்துவங்கள், சமஸ்கிருத இலக்கணம், ஆகியன கற்பிக்கப்பட்டன.
     
     7. தொடக்க காலப் பாண்டியரால் கட்டப்பட்ட குடைவரைக் கோயில்கள் யாவை?
    • தமிழ்நாட்டில் பல குடைவரைக் கோயில்களை பாண்டியர்கள் கட்டியுள்ளனர்.
    • கழுகுமலை, ஆனைமலை, சித்தன்னவாசல் ஆகிய குடைவரைக் யில்கள்.
    • பிள்ளையார்பட்டி, திருமயம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் கட்டியுள்ளனர்.
    • குன்றக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் உள்ள குடைவரைக் கோயில்கள்.

     8. பாண்டிய அரசு குறித்து வெளிநாட்டுப் பயண வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளைக் கூறுக.
    • பாண்டிய அரசு குறித்து வாசாஃப் மற்றும் மார்க்கோபோலோ குறிப்பிட்டுள்ளனர்.
    • பாண்டிய அரசர்கள் குதிரைகளில் அதிக முதலீடு செய்தனர் என்று கூறியுள்ளனர்.
    • காயல் துறைமுகம் முழுவதும் அரேபிய, சீன கப்பல்கள் நிறைந்திருந்தது என்றார்.
    • நேர்மையான நிர்வாகம் செய்தனர். அரசர்கள் பலதார மணம் செய்து கொண்டனர்.

    IV. விரிவான விடை தருக  

    1. சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசன, விவசாய நிர்வாகத் திட்டங்கள் அதிக வருமானத்துக்கு வழிவகுத்தன ஆராய்ந்து எழுதுக.
    • சோழ நாட்டிற்கு வேளாண்மை மூலமே அதிக வருமானம் கிடைத்தது.
    • சோழர்கள் நீர் ஆதாரங்களை நிர்வகிப்பதில் தனிக் கவனம் செலுத்தினர்.
    • குளம், கிணறு, கால்வாய் போன்ற நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தினர்.
    • வடி என்பது வடக்கு தெற்காக நீரை வெளியேற்றும் வடிகாலாக அமைந்தது.
    • வாய்க்கால் என்பது கிழக்கு மேற்காக நீரைக் கொண்டு வருவதாக அமைந்தது.
    • விளை நிலத்திற்கு வாய்க்கால் வழியாக வரும் நீர் வடிக்கு திருப்பப்பட்டன.
    • வடிக்கு திருப்பப்பட்ட நீர் பின்னர் மற்றொரு வாய்க்காலுக்கு திருப்பப்பட்டன.
    • 'புறவுவரித் திணைக்களம்' என்ற துறை நில வருவாய் நிர்வாகத்தை கவனித்தது.
     

    2. சோழர் காலக் கட்டுமானக் கலையின் சிறப்புகளை எழுதுக.
    • தஞ்சை பெரிய கோயிலை முதலாம் இராஜராஜ சோழன் கட்டினார்.
    • கருவறை மீதுள்ள விமானம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆனது.
    • இக்கோயிலில் லட்சுமி, விஷ்ணு, அர்த்தநாரிசுவரர், பிச்சாடனர் சிலைகள் உள்ளன.
    • கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை முதலாம் இராஜேந்திர சோழன் கட்டினார்.
    • இக்கோயிலில் துர்கா, விஷ்ணு, அர்த்தநாரிசுவரர், சூரியன் சிலைகள் உள்ளன.
    • தாராசுரம் கோயிலை இரண்டாம் இராஜராஜ சோழன் கட்டினார்.
    • இக்கோயிலில் பெரிய புராண நிகழ்வுகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு உள்ளன.
    • தாராசுரம் கோயில் சோழர் காலக் கட்டுமானக் கலைக்கு சான்றாக உள்ளது.
     
     3. கோயில் - ஒரு சமூக நிறுவனம் இக்கூற்றை நிறுவுக.
    • கோயில்கள் சமூகத் திருவிழாக்கள் நடைபெறும் ஒரு களமாக மாறியது.
    • அரசியல், சமூகம், பண்பாட்டு மையங்களாகக் கோயில்கள் விளங்கின.
    • கோயில்களில் இசை, ஓவியம், நடனம், நாடகம், கலைகள் வளர்ச்சி பெற்றன. 
    • தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • மேலும் கார்த்திகை விழா, ஐப்பசி விழா ஆகியவற்றையும் கொண்டாடினார்கள். 
    • கோயில்களில் வழிபாட்டுப் பாடல்கள் வாய்மொழிக் கல்வியை வளர்த்தன. 
    • குடக் கூத்து, சாக்கைக் கூத்து போன்ற மரபு நடனங்கள் வளர்ச்சி பெற்றன. 
    • கோயில்கள் நன்கொடைகளை பெற்றன. வங்கிகள் போன்று கடன்களை வழங்கின.
     
     4. பாண்டியர் ஆட்சியில் வணிகத்திலும் வர்த்தகத்திலும் ஏற்பட்ட வளர்ச்சியைக் கூறுக.
    • வெளிநாட்டுப் பயணிகளான மார்க்கோபோலோ, வாசாஃப் இந்தியாவிற்கு வந்தனர்.
    • பாண்டியர் ஆட்சியில் நடைபெற்ற வணிகம் பற்றிய செய்திகளை குறிப்பிட்டுள்ளனர்.
    • அரபு வணிகர்களுக்கு சுங்க வரி, துறைமுகக் கட்டணங்கள் விலக்கு அளிக்கப்பட்டன.
    • பாண்டியர் ஆட்சியில் பல்வேறு வகையான வணிகக் குழுக்கள் செயல்பட்டு வந்தன.
    • அவைகள் நானாதேசி, திசைஆயிரத்து ஐநூற்றுவர், ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார்.
    • வணிகப் பொருட்கள் : மிளகு, முத்து, விலை உயர்ந்த கற்கள், குதிரைகள், யானைகள்.
    • பாண்டியர்கள் துறைமுகம் காயல்பட்டினம். குதிரைகள் மீது அதிக முதலீடு செய்தனர்.
    • வணிகத்தில் பயன்பட்ட தங்க நாணயங்கள் - காசு, பழங்காசு, கனம், கழஞ்சு, பொன்.
     
     5. சோழர், பாண்டியர் காலக் கட்டடக்கலையின் ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராய்க.

    சோழர் காலக் கட்டடக் கலை

    பாண்டியர் காலக் கட்டடக் கலை

    தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் கோயில் போன்ற கோயில்களைக் கட்டினர்.

    கல்லறைக் கோயில்கள், குடைவரைக் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள் என பல்வேறு மாதிரிகளில் கட்டினர்.

    சோழர்களின் கோயில்கள் பிரமாண்டமாக பெரிய அளவில் கட்டப்பட்டது.

    பாண்டியர்களின் கோயில்கள் எளிமையாக சிறிய அளவில் கட்டப்பட்டது.

    சோழர்களின் முதன்மைக் கடவுளான சிவன் சிலையை பல்வேறு வடிவங்களில் செதுக்கி உள்ளனர்.

    சிவன், விஷ்ணு, பிரம்மன், கணேசன், சுப்பிரமணியர், சூரியன், கொற்றவை சிலைகள் வடிக்கப்பட்டு உள்ளன.

    சோழர்கள் மண்டபங்களைக் கட்டுவது, பிரகார வீதிகளை அமைப்பது, புதிய கோபுரங்களை எழுப்புவது போன்ற விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டனர்.

    பாண்டியர்கள் மண்டபங்களைக் கட்டுவது, பிரகார வீதிகளை அமைப்பது, புதிய கோபுரங்கள் எழுப்புவது போன்ற விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டனர்.

    இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்த மடாலயம் கட்டப்பட்டது.

    பாண்டியர்கள் ஆனைமலை, கழுகுமலை ஆகிய இடங்களில் சமண கட்டப்பட்டது.

     

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive