11th History - Book Back Answers - Unit 3 - Tamil Medium Guides

  

 


    Plus One / 11th History - Book Back Answers - History Unit 3 - Tamil Medium

    Tamil Nadu Board 11th Standard History Unit 3: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 3 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 3 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!

    பாடத்தலைப்பு :

    அலகு 3 : பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

    I. சரியான விடையைத் தேர்வு செய்க

    வினா 1.
    புத்தர் தனது முதல் போதனையை …………… இல் நிகழ்த்தினார்.

    அ) சாஞ்சி
    ஆ) வாரணாசி
    இ) சாரநாத்
    ஈ) லும்பினி
    விடைகுறிப்பு:
    இ) சாரநாத்
     
    வினா 2.
    அஜாத சத்ருவுக்கும் புத்தருக்குமிடையேயான சந்திப்பைக் குறிப்பிடும் பௌத்த நூல் ………….. ஆகும்?

    அ) சீவகசிந்தாமணி
    ஆ) அச்சரங்க சூத்திரம்
    இ) கல்பசூத்திரம்
    ஈ) சமனபலசுத்தா
    விடைகுறிப்பு:
    ஈ) சமனபலசுத்தா
     
    வினா 3.
    பகவதி சூத்திரம் ஒரு ………………… நூலாகும். இல் நிகழ்த்தினார்.

    அ) பௌத்தம்
    ஆ) சமணம்
    இ) ஆசீவகம்
    ஈ) வேதம்
    விடைகுறிப்பு:
    ஆ) சமணம்
     
    வினா 4.
    ……………………… வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.
    அ) இரும்பு
    ஆ) வெண்கலம்
    இ) செம்பு
    ஈ) பித்தளை
    விடைகுறிப்பு:
    அ) இரும்பு
     
    வினா 5.
    வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படைத்ததாக வளர்ந்த அரசு …………. ஆகும்.
    அ) கோசலம்
    ஆ) அவந்தி
    இ) மகதம்
    ஈ) குரு
    விடைகுறிப்பு:
    இ) மகதம்



    II. குறுகிய விடை தருக

    1. நமது ஆய்வுக்குச் சான்றாக உள்ள திரிபிடகங்களை எழுதுக.
    • பாலி மொழியில் எழுதப்பட்ட பௌத்த மதச் சட்டங்கள்.
    • அவை : வினய பிடகம், சுத்த பிடகம், அபிதம்ம பிடகம்.
    • மூன்று கூடைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

     

    2. சார்வாகம் குறித்து அறிந்ததைக் கூறுக.
    • சார்வாகம் என்பது இந்திய பொருள் முதல்வாதத்தைக் குறிக்கிறது.
    • இது சார்வாகர் என்பவர் பெயரால் அழைக்கப்படுகிறது.
    • சார்வாகர் இந்திய பொருள் முதல்வாதத்தை உருவாக்கினர்.

     

    3. மகாவீரருடைய போதனைகளின் மையக்கருத்து என்ன?
    • மகாவீரரின் போதனைகளின் மையக் கருத்து அகிம்சை.
    • எறும்பு போன்ற சிறு பூச்சிகளுக்கும் தீங்கு செய்யக் கூடாது.
    • வாயையும், மூக்கையும் துணியால் கட்டிக் கொள்வார்கள்.
    • நடக்கும் பாதையை இறகால் பெருக்கியபடியே செல்வார்கள்.

     

     

    4. ஜனபதங்களுக்கும் மகாஜனபதங்களுக்கும் இடையேயான வேறுபாட்டைக் கூறுக.
    ஜனபதங்கள்
    மகாஜன பதங்கள்

    கங்கை சமவெளியிலிருந்த சிறுநாடுகளே ஜனபதங்கள். அவற்றில் சில குடியரசுகள்.

    சில ஜனபதங்கள் மற்ற ஜனபதங்களை கைப்பற்றி மகாஜனபதங்களாக மாறின.

    வளங்களுக்காக மற்றும் அரசியல் ரீதியாக மேலாதிக்கம் செலுத்த சண்டையிட்டன.

    மகாஜனபதங்கள் என்ற மக்களை ஆட்சி செய்த முடியரசுகள் உருவாயின.

     

     

    5. தமிழ்நாட்டின் பௌத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.
    • இரண்டாம் நரசிம்ம வர்மன் ஆட்சியில் ஒரு பௌத்த கோயில் கட்டப்பட்டது.
    • முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் ஒரு பௌத்த கோயில் கட்டப்பட்டது.
    • சீனத் துறவி வு-கிங் நாகப்பட்டினம் பௌத்த மடத்துக்கு வருகை தந்தார்.

     

    III. சுருக்கமான விடை தருக

    1. காட்டைத் திருத்தியதில் இரும்பின் பங்களிப்பு குறித்து மதிப்பிடுக.
    • இரும்புக் கோடாரிகள் காடுகளைத் திருத்துவதில் முக்கியப் பங்காற்றியது.
    • இரும்புக் கத்திகள், மண்வெட்டிகள் காடுகளைத் திருத்தப் பேருதவி புரிந்தன.
    • இரும்புக் கொழுமுனை கொண்ட கலப்பைகள் காடுகளை வேளாண் நிலமாக்கியது.
    • மரவேலைகள், கைவினைப் பொருட்கள் செய்ய இரும்புக் கருவிகள் பயன்பட்டன.

     

    2. கங்கைச் சமவெளியில் நிகழ்ந்த நகரங்களின் தோற்றத்துக்கான காரணங்கள் யாவை?
    • வேளாண் உபரி வேளாண்மை செழித்ததால் உற்பத்தி வேகமாக அதிகரித்தது.
    • கைத்தொழில் -மக்கள் ஓய்வு நேரத்தை கைத்தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தினர்.
    • வணிக வளர்ச்சி - வேளாண் உபரியும், கைவினைப் பொருட்களும் ஏற்றுமதியாயின.
    • மக்கள் தொகை பெருக்கம் ஆடம்பர பாண்டங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

     

    3. இரண்டாம் நகரமயமாக்கத்துக்குப் பிறகு, வளர்ச்சி பெற்ற நகரங்கள் பற்றி எழுதுக.
    • கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்றியதே இரண்டாம் நகரமயமாக்கம் ஆகும்.
    • அரசியல் நிர்வாக மையங்கள் - ராஜகிருகம், சிராஸ்வதி, கௌசாம்பி, சம்பா
    • வணிக நகரங்கள் உஜ்ஜையினி, தட்சசீலம் நன்கு வளர்ச்சி பெற்றன.
    • சிறந்த புனிதத் தலங்கள் வைசாலி, புத்தகயா ஆகிய நகரங்கள்.

     

    4. பொ.ஆ.மு. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவைதீகச் சிந்தனையாளர்களை அடையாளம் காண்க.
    • பொ.ஆ.மு. 6 மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளே இந்தியாவில் அறிவு மலர்ச்சி காலம்.
    • கோசலர், கௌதம புத்தர், மகாவீரர், அஜித கேசகம்பளி ஆகியோர் தோன்றினர்.
    • ஆன்மா, மனம், உடல் ஆகிய வேதக் கருத்துக்களை கேள்விக்கு உட்படுத்தினர்.
    • புதிய மதங்களைத் தோற்றுவித்தனர். சமணமும் பௌத்தமும் பிரபலமாயின.

     

    5. தமிழ்நாட்டில் சமணம் செலுத்திய செல்வாக்கைக் குறிப்பிடுக.
    • பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சமணம் வேகமாகப் பரவியது.
    • மதுரை உள்ளிட்ட இடங்களில் சமணர்களின் குகைகள், கற்படுக்கைகள் உள்ளன.
    • தமிழில் சமண மத நூல்கள் நாலடியார், பழமொழி, சீவக சிந்தாமணி, நீலகேசி.
    • திருப்பருத்திக் குன்றம் சமணக் கோயில் 'சமணக் காஞ்சி' என அழைக்கப்படுகிறது.

     

    IV. விரிவான விடை தருக  

    1. பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவு மலர்ச்சிக்கான காரணங்கள் யாவை?
    • புதிய அரசுகள் உருவாக்கம் மனிதனின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியது.
    • வேத மதத்தின் கடுமையான நடைமுறைகளுக்கு எதிரான சிந்தனை தோன்றியது.
    • மேட்டுக்குடி மக்கள் சமூக அமைப்பு குறித்து அதிருப்தி கொண்டிருந்தனர்.
    • வேத மதம் இந்தியாவில் சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவவில்லை.
    • புதிதாகத் தோன்றிய அவைதீக மதங்களை பின்னற்றுவது கடினமாக இல்லை.
    • பிராமணர்களுக்கு மட்டுமே ஆசிரமங்களாகப் பிரிக்கப்பட்ட வாழ்க்கை முறை.
    • நகரமயமாக்கம், வணிக விரிவாக்கம் ஏற்பட்டதால் புதிய வர்க்கம் உருவானது.
    • மக்கள் தமது பொருளாதார நிலைக்கு ஏற்ற சமூக தகுதியைக் கோரினார்கள்.

     

    2. ஆசீவகம் குறித்து விளக்கவும். மேலும் இந்தியாவில் அதன் பரவலையும் குறிப்பிடவும்.
    • நந்தவாச்சா என்ற துறவியே ஆசீவகம் பிரிவைத் தோற்றுவித்தவர்.
    • நிர்வாணத் துறவிகளான ஆசீவகர்கள் ஊழ்வினைக் கோட்பாட்டை நம்பினார்கள்.
    • ஆசீவகர்களில் தலைசிறந்தவர் மக்காலி கோசலர் ஆவார்.
    • ஆசீவகத்தின் தலைமையிடமாக சிராவஸ்தி விளங்கியது.
    • ஆசீவகர்களின் அடிப்படைக் கொள்கை நியதி அல்லது விதி.
    • ஆசீவகத்தின்படி, வாழ்வில் தவிர்க்க முடியாத ஆறு அம்சங்கள் இருக்கின்றன.
    • அவையாவன: லாபம், நஷ்டம், இன்பம், துன்பம், வாழ்வு, மரணம்.
    • ஆசீவகம் செல்வாக்குடன் இல்லை என்றாலும் நாடு முழுவதும் பரவி இருந்தது.
    • குயவர்கள், வங்கியாளர்கள் போன்ற துறவறம் பூணாத சீடர்கள் இருந்தனர்.

     

    3. சமணத்தில் ஏற்பட்ட பிளவை விளக்குக.
    • மகாவீர் மறைந்து 500 ஆண்டுகள் கழித்து சமணத்தில் ஒரு பிளவு ஏற்பட்டது.
    • மகதத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டதால் பல சமணத் துறவிகள் வெளியேறினார்கள்.
    • பத்ரபாஹு தலைமையில் சில சமணத் துறவிகள் தெற்கு நோக்கிச் சென்றார்கள்.
    • உடைகள் எதுவுமின்றி இருந்த இவர்கள் திகம்பரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
    • எஸ்தூலபத்திரர் தலைமையில் மற்ற சமணத் துறவிகள் மகதத்திலேயே தங்கினார்கள்.
    • வெள்ளை ஆடையை உடுத்திய இவர்கள் ஸ்வேதாம்பரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
    • சமணத்தில் ஏற்பட்ட இந்த பிளவு மகதத்தில் சமணத்தைப் பலவீனப்படுத்தியது.
    • ஸ்தூலபத்திரர் பாடலிபுத்திரத்தில் ஒரு பெரிய சமண சமய மாநாட்டை நடத்தினார்.

     

     

    4. புத்தரின் எண்வழிப் பாதையை விவரி.
    • புத்தர் துன்பம் குறித்த நான்கு பெரும் உண்மைகளை வெளியிட்டார்.
    • புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற கருத்தை வெளியிட்டார்.
    • துன்பத்தில் இருந்து விடுதலை பெற எண்வழிப் பாதையை கடைபிடிக்கக் கூறினார்.
    • எண்வழிப் பாதை வேறுபெயர்கள் - மத்திமப் பாதை அல்லது அட்டாங்க மார்க்கம்.
    • புத்தரின் எண்வழிப் பாதை (அட்டாங்க மார்க்கம்):
    1. நல்ல நம்பிக்கை
    2. நல்ல ஆர்வம்
    3. நல்ல வாய்மை
    4. நல்ல செயல்
    5. நல்ல வாழ்க்கை
    6. நல்ல முயற்சி
    7. நல்ல சிந்தனை
    8. நல்ல தியானம்

     

    5. இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை?
    • பௌத்த மதத்தில் பல பிரிவுகள் தோன்றி அதன் உண்மைத் தன்மையை இழந்தது.
    • ஹீனயானா, மகாயானா, வஜ்ராயனா, சகஜயானா போன்ற பிரிவுகள் தோன்றின.
    • மக்களின் மொழியான பாலி, பிராகிருதம் ஆகியன தமது செல்வாக்கை இழந்தன.
    • பௌத்த மதச் செய்திகள் சமஸ்கிருத மொழியில் வெளியாக ஆரம்பித்தது.
    • ஹர்ஷ வர்த்தனருக்குப் பிறகு பௌத்த மதம் அரசர்களின் ஆதரவை இழந்தது.
    • ஹூணர்கள் படையெடுப்பு ஹூணர்கள் பௌத்த மதத்தினரை வெறுத்தனர்.
    • இராஜபுத்திரர்கள் பௌத்த மதத்தினரைத் துன்புறுத்தி கொல்வதில் ஈடுபட்டனர்.
    • அரேபியர், துருக்கியர் படையெடுப்புகள் பௌத்த துறவிகளை வெளியேற்றியது.

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive