Tamil Nadu Board 11th Standard History Unit 14: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 14 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of History Unit 14 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 14 - முகலாயப் பேரரசு
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில், பாபர் __________ யை திறம்பட பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார்.
அ) காலாட்படை
ஆ) குதிரைப்படை
இ) பீரங்கிப்படை
ஈ) யானைப்படை
விடைகுறிப்பு:
இ) பீரங்கிப்படை
கடைசிப்போரான காக்ரா போரில் பாபர் _________ எதிராகப் போரிட்டார்.
அ) ஆப்கானியர்களுக்கு
ஆ) ரஜபுத்திரர்களுக்கு
இ துருக்கியர்களுக்கு
ஈ) மராட்டியர்களுக்கு
விடைகுறிப்பு:
அ) ஆப்கானியர்களுக்கு
_________ தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் சௌசாப் போரில் வெற்றி பெற்றார்.
அ) பாபர்
ஆ) ஹுமாயூன்
இ) ஷெர்கான்
ஈ) அக்பர்
விடைகுறிப்பு:
இ) ஷெர்கான்
_________ நில உடைமை உரிமை முறையில், நிலத்திற்கான வரியை வசூலிக்கும் பொறுப்பும், அந்நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அ) ஜாகீர்தாரி
ஆ) மகல்வாரி
இ) ஜமீன்தாரி
ஈ) மன்சப்தாரி
விடைகுறிப்பு:
அ) ஜாகீர்தாரி
அக்பரது நிதி நிர்வாகம் _________ நிர்வாக முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது.
அ) பாபர்
ஆ) ஹுமாயூன்
இ) ஷெர்ஷா
ஈ) இப்ராஹிம் லோடி
விடைகுறிப்பு:
இ) ஷெர்ஷா
இளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலகத்தை தூண்டி விட்டதற்காக ஜ ஹாங்கீரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் _________ ஆவார்.
அ) குரு அர்ஜூன் தேவ்
ஆ) குரு ஹர் கோபிந்த்
இ) குருதேஜ் பகதூர்
ஈ) குருஹர்ராய்
விடைகுறிப்பு:
அ) குரு அர்ஜூன் தேவ்
_________ தனது ஆட்சியின் போது ஜிஸியா வரியை மீண்டும் விதித்தார்.
அ) அக்பர்
ஆ) ஜஹாங்கீர்
இ) ஷாஜகான்
ஈ) ஒளரங்கசீப்
விடைகுறிப்பு:
ஈ) ஒளரங்கசீப்
கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில் நுட்பத்தை உலகத்திலேயே கண்ட றிந்த முதல் அரசர் __________ ஆவார்.
அ) அக்பர்
ஆ) ஷாஜகான்
இ) ஷெர்ஷா
ஈ) பாபர்
விடைகுறிப்பு:
அ) அக்பர்
வினா 9.
_________ சேர்ந்த தான்சேனை அக்பர் ஆதரித்தார்.
அ) ஆக்ராவை
ஆ) குவாலியரை
இ) தில்லியை
ஈ) மதுராவை
விடைகுறிப்பு:
ஆ) குவாலியரை
வினா 10.
பாதுஷா நாமா என்பது _________ வாழ்க்கை வரலாறாகும்.
அ) பாபர்
ஆ) ஹூமாயூன்
இ) ஷாஜகான்
ஈ) அக்பர்
விடைகுறிப்பு:
இ) ஷாஜகான்
வினா 11.
__________ ஒரு ஜோதிட ஆய்வு நூலாகும்.
அ) தஜிகநிலகந்தி
ஆ) ரசகங்காதரா
இ மனுசரிதம்
ஈ) ராஜாவலிபதகா
விடைகுறிப்பு:
அ) தஜிகநிலகந்தி
வினா 12.
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை இயற்றியவர் _________.
அ) தாயுமானவர்
ஆ) குமரகுருபரர்
இ இராமலிங்க அடிகள்
ஈ) சிவப்பிரகாசர்
விடைகுறிப்பு:
ஆ) குமரகுருபரர்
வினா 13
தவறான கூற்றினை தேர்ந்தெடு.
அ. 1. இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமியக் கட்டடக்கலையின் பாணியில் முகலாயரின் கட்டடக்கலையின் மறுவடிவமாக தாஜ்மஹால் உள்ளது.
2. அக்பரது புதிய தலைநகரமான ஆக்ரா மற்றும் அதன் சுற்றுச் சுவர்களுக்குள் பல எழுச்சியூட்டும் கட்டடங்கள் உள்ளன.
3. மோதி மசூதி முழுவதும் பளிங்குக் கல்லால் கட்டப்பட்டது.
4. ‘புராண கிலா’ ஒரு உயர்ந்த கோட்டையாகும்.
விடைகுறிப்பு:
2. அக்பரது புதிய தலைநகரமான ஆக்ரா மற்றும் அதன் சுற்றுச் சுவர்களுக்குள் பல எழுச்சியூட்டும் கட்டடங்கள் உள்ளன.
வினா14
தவறான கூற்றினை தேர்ந்தெடு.
1. ஒவ்வொரு மன்சப்தாருக்கும் 10 முதல் 10,000 வரையிலான படைவீரர்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதை ஜாட்டுகள் தீர்மானித் தனர்.
2. ஷெர்ஷாவின் நாணய முறை, ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்டது.
3. முகலாயருக்கும் ராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே நடைபெற்ற ஹால்டிகாட்டி போர் மிகக் கடுமையான இறுதிப் போர் ஆகும்.
4. சீக்கியப் புனித நூலான “குருகிரந்த சாகிப்” குரு அர்ஜூன் தேவால் தொகுக்கப்பட்டது.
விடைகுறிப்பு:
1. ஒவ்வொரு மன்சப்தாருக்கும் 10 முதல் 10,000 வரையிலான படைவீரர்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதை ஜாட்டுகள் தீர்மானித் தனர்.
வினா 15.
பின்வருவனவற்றில் சரியான கூற்றினைக் கண்டுபிடி.
(i) ராணா சங்காவின் மூர்க்கமான வலிமை வாய்ந்த படைகள் பாபரின் சக்திவாய்ந்த படையை எதிர்கொண்டது.
(ii) கன்னோசிப் போருக்குப்பின் அக்பர் நாடு இல்லாத ஒரு இளவரசர் ஆனார்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) சரி (ii) தவறு
ஈ) (i)மற்றும் (ii) சரியானவை
விடைகுறிப்பு:
இ) (i) சரி (ii) தவறு
வினா 16.
பின்வருவனவற்றில் சரியான கூற்றினைக் கண்டுபிடி.
(i) ஷெர்ஷா மேற்கில் உள்ள சிந்து முதல் வங்காளத்தில் உள்ள சோனர்கான் வரையிலான கிராண்ட் டிரங்க் சாலையை சீர்படுத்தினார்.
(ii) அக்பர் தனது மிகப் பெரிய படையெடுப்பு களின் மூலமாக மாபெரும் பேரரசிற்கு அடித்தளம் இட்டார்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (i) மற்றும் (ii) சரியானவை
ஈ) (i) மற்றும் (ii) தவறானவை
விடைகுறிப்பு:
இ (i) மற்றும் (ii) சரியானவை
வினா 17.
கூற்று (கூ) : பாபர் முதலாம் பானிப்பட் போரில் வெற்றிபெற்றார்
காரணம் (கா) : பாபர் பீரங்கிப் படையை போரில் பயன்படுத்தினார்
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று தவறு; காரணம் சரி
இ) கூற்றுதவறு; காரணமும் தவறு
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
விடைகுறிப்பு:
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
வினா 18.
கூற்று (கூ) : ஒளரங்கசீப்பின் ஆட்சியின் இறுதியில் முகலாயப் பேரரசின் அழிவு ஆரம்பமாயிற்று
காரணம் (கா) : ஒளரங்கசீப் தக்காண அரசர்களிடம் நட்புறவாக இருந்தார்.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
ஆ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
இ கூற்று தவறு; காரணம் சரி
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
விடைகுறிப்பு:
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியானவிளக்கம் அல்ல.
வினா 19.
கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது
1. பாஸ்கராச்சார்யா – நீதி நெறி விளக்கம்
2. ஆமுக்தமால்யத – கிருஷ்ண தேவராயர்
3. ஜகன்னாத பண்டிதர் -ரசகங்காதரா
4. அல்லசானிபெத்தண்ணா -மனுசரித்ரா
விடைகுறிப்பு:
1. பாஸ்கராச்சார்யா – நீதி நெறி விளக்கம்
பொருத்துக
i) அபுல் பாசல் – 1. ஔரங்கசீப்
ii) ஜூம்மா மசூதி – 2. அக்பர்
iii) பாதுஷாஹி மசூதி – 3. ஷெர்ஷா
iv) புராண கிலா – 4. ஷாஜகான்
அ) 2 4 1 3
ஆ) 3 2 1 4
இ 3 1 4 2
ஈ) 1 3 2 4
விடைகுறிப்பு:
அ) 2 4 1 3
II. குறுகிய விடை தருக
- தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்து டெல்லியை சூறையாடினார்.
- பாபரை இந்தியாவின் மீது படையெடுக்க தொளலத்கான் லோடி அழைத்தார்.
- பாபரை இந்தியாவின் மீது படையெடுக்க ராணா சங்கா தூது அனுப்பினார்.
- பிரபுக்களிடம் இறுமாப்புடன் நடந்து கொண்ட பைராம்கானை பதவி நீக்கினார்.
- பைராம்கான் கலகத்தில் ஈடுபட்டார். ஆனால் அக்பர் கலகத்தை அடக்கினார்.
- பைராம்கானை மெக்காவிற்கு புனித யாத்திரை செல்லுமாறு அறிவுறுத்தினார்.
- இந்தியாவில் ஆங்கிலேய வணிகக் குடியேற்றம் நிறுவ அனுமதி கோரினார்.
- வில்லியம் ஹாக்கின்ஸ் கோரிக்கையை ஜஹாங்கீர் நிராகரித்தார்.
- சூரத் நகரில் ஒரு வணிகக் குடியேற்றத்தை நிறுவ அனுமதி கோரினார்.
- சர் தாமஸ்ரோ ஜஹாங்கீரிடம் நேரடியாக அனுமதிப் பெற்றார்.
- இளவரசர் குர்ரம் மேற்கொண்ட கிளர்ச்சியை நூர்ஜகான் முறியடித்தார்.
- தளபதி மகபத்கான் மேற்கொண்ட கலகத்தை நூர்ஜகான் அடக்கினார்.
- நூர்ஜகான் தனது மருமகன் ஷரியாரை அரசனாக்க முயன்றார்.
- தாஜ்மஹால் முகலாயக் கட்டடக் கலையின் மறுவடிவமாகக் கருதப்படுகிறது.
- மையத்தில் ஒரு கவிகை மாடம், அதைச் சுற்றி நான்கு ஸ்தூபி மாடங்கள் உள்ளன.
- நான்கு மூலைகளிலும் தனித்தனி கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
- மதுரா பகுதியைச் சேர்ந்த ஜாட் இனத்தவர் நடத்திய ஜாட்களின் கலகம்.
- ஹரியானா பகுதியைச் சேர்ந்த சத்னாமியர்கள் நடத்திய கிளர்ச்சி.
- ஒன்பதாவது சீக்கிய குரு தேஜ்பகதூர் நடத்திய சீக்கியர்களின் கிளர்ச்சி.
- சீக்கிய மதம் ஒரு கடவுள் கோட்பாட்டை வலியுறுத்துகிறது.
- சீக்கியர்களின் புனித நூல் குரு கிரந்த் சாகிப்.
- சூபியிஸம் இஸ்லாமின் உள்ளுணர்வு சார்ந்த இறைநிலைப் பற்றி கூறுகிறது.
- அது ஈரானில் உதயமான ஒரு மதக் கோட்பாடு ஆகும்.
- சமஸ்கிருத மொழிக்கு பதிலாக மக்கள் பேசும் மொழியைப் பயன்படுத்தினர்.
- கருத்தை கவரும் மொழிநடையில் இசையோடு பாடல்கள் பாடி பிரபலமாயினர்.
- பக்தி இயக்கத் துறவிகள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக இருந்தனர்.
- குமரகுருபரர் - மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், நீதிநெறி விளக்கம் இயற்றினார்.
- முகலாயர் கால தமிழ் அறிஞர்கள் - தாயுமானவர், ராபர்ட் டி நொபிலி, வீரமாமுனிவர்,
- ராபர்ட் டி நொபிலி, வீரமாமுனிவர்- தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பங்காற்றினர்.
- முகலாயர் ஓவியங்கள் பல நாடுகளின் அருங்காட்சியகங்களில் உள்ளன.
- இந்திய ஓவிய மரபுகள், மேற்காசிய ஓவிய மரபுகளோடு இணைந்தன.
- முகலாயர் ஓவியங்கள் உலகளவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.
III. சுருக்கமான விடை தருக
- பஞ்சாபை கைப்பற்றிய தனது சகோதரர் கம்ரானை தண்டிக்கத் தவறினார்.
- கிளர்ச்சியில் ஈடுபட்ட அஸ்காரி மற்றும் ஹிண்டாலை தண்டிக்கத் தவறினார்.
- பொய்யான வாக்குறுதிகளை அளித்த ஷெர்ஷாவை தண்டிக்கத் தவறினார்.
- ஹூமாயூன் 1555 இல் நூலகத்தின் மாடிப்படிகளில் தவறி விழுந்து இறந்தார்.
- அக்பர் 1582 இல் தீன் இலாகி என்ற ஒரு புதிய தத்துவத்தை வெளியிட்டார்.
- தீன் இலாகி தத்துவத்தை விளக்கும் சரியான சொல் தௌகித்– இ- இலாகி.
- தௌகித்-இ-இலாகி என்பதன் பொருள் தெய்வீக ஒரு கடவுள் கோட்பாடாகும்.
- தீன் இலாகி என்பது ஒரு புதிய மதமல்ல. அது ஒரு தத்துவக் கோட்பாடு மட்டுமே.
- அக்பர் சித்தூர் கோட்டையை ஆறு மாதகாலம் தொடர்ந்து முற்றுகையிட்டார்.
- மேவார் அரசன் ராணா உதய் சிங்கிடம் இருந்து சித்தூரை அக்பர் கைப்பற்றினார்.
- ஜெய்மால், பட்டா ஆகிய தளபதிகள் உட்பட 30,000 ரஜபுத்திர வீரர்கள் மாண்டனர்.
- ஜெய்மால், பட்டா இருவரின் வீரத்தைப் பாராட்டி ஆக்ராவில் சிலை வைக்கப்பட்டது.
- பிரபுக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மன்சப்தார் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
- மன்சப்தார் தகுதி ஜாட், சவார் என இருவகைப்பட்டது. ஊதியம் வழங்கப்பட்டது.
- ஜாட் என்பது ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.
- சவார் என்பது குதிரைகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.
- போர்த்துகீசியக் குடியேற்றங்கள் : கோவா, டையு, டாமன், பம்பாய், சால்செட்.
- டச்சுக் குடியேற்றங்கள் : மசூலிப்பட்டினம், நாகப்பட்டினம், புலிகாட், காசிம்பஜார்.
- டேனியர் குடியேற்றங்கள் : தரங்கம்பாடி மற்றும் செராம்பூர்.
- பிரெஞ்சுக் குடியேற்றங்கள்: பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம், சூரத்.
- ஆங்கிலேயக் குடியேற்றங்கள் : சென்னை, பம்பாய், கல்கத்தா.
- ஷாஜகானின் மூத்த மகன் தாராஷூகோ பட்டத்து இளவரசராக இருந்தார்.
- தாராஷூகோ வாரிசுரிமைப் போரில் ஔரங்கசீப்பிடம் தோல்வியுற்றார்.
- தாராஷூகோ தத்துவஞான இளவரசர் என்று அறியப்பட்டார்.
- உபநிடதங்களைப் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.
- கர்கானா என்பது மொகலாயர் காலத்தில் இருந்த தொழிற்கூடங்கள்.
- விலையுயர்ந்த கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்தனர்.
- உற்பத்தியானதை உள்ளூர், தொலைதூர சந்தைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
- அரச குடும்பங்களுக்கு அரண்மனையைச் சேர்ந்த கர்கானாக்கள் இருந்தன.
- கபீர் ஒரு நெசவாளர். அவர் ஒரு கடவுள் கோட்பாட்டை முன்வைத்தார்.
- கபீர் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே ஒற்றுமையை போதித்தார்.
- உருவ வழிபாடுகள், சமயச் சடங்குகள், சாதிமுறை ஆகியவற்றை கண்டித்தார்.
- கபீரின் பாடல்கள் வாய்மொழியாகவே வடஇந்தியாவின் பெரும் பகுதிகளில் பரவின.
- அபுல் பாசல் - அக்பரின் அரசவைப் புலவர். அபுல் பெய்சியின் சகோதரர்.
- அபுல் பாசல் - அக்பர் நாமா, அய்னி அக்பரி ஆகிய இரு நூல்களை இயற்றினார்.
- அக்பர் நாமாவில் அக்பரின் வரலாற்றை தொகுத்து வழங்கியுள்ளார்.
- அய்னி அக்பரியில் முகலாயர்கள் நிர்வாகத்தை பற்றி விவரித்துள்ளார்.
- சூபியிஸம் -இஸ்லாமின் உள்ளுணர்வு சார்ந்த இறைநிலை இணைப்பு பற்றியது.
- சூபியிஸம் ஈரானில் உதயமான ஒரு மதக் கோட்பாடாகும்.
- இந்தியாவில் சூபியிஸம் அரசியல், சமூக, பண்பாட்டுத் தாக்கத்தை ஏற்படுத்தியது.
- சூபியிஸம் மதச் சம்பிரதாயம், பழமைவாதம், வெளிவேடம் ஆகியவற்றை எதிர்த்தது.
IV. விரிவான விடை தருக
- அக்பரின் நிதி நிர்வாகம் ஷெர்ஷாவின் நிதி நிர்வாக முறையை அடித்தளமாக கொண்டது.
- ஷெர்ஷாவை போலவே நெகிழ்வுத் தன்மை கொண்ட வருவாய் முறையை பின்பற்றினார்.
- நிலத்தின் உற்பத்தித் திறன் மதிப்பிடப்பட்டது. நிலங்கள் முறையாக அளக்கப்பட்டன.
- ராஜா தோடர்மால் அறிமுகம் செய்த ஜப்தி முறையை அக்பர் பிரகடனம் செய்தார்.
- நிலத்தின் தரம், அளவு, விளைபயிர் அடிப்படையில் வரி நிர்ணயம் செய்யப்பட்டது.
- விவசாயிகள் வரியை பணமாக செலுத்த வேண்டும். விளைச்சலில் ஒரு பங்கு வரியாகும்.
- விவசாயிகள் செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான அட்டவணை தஸ்தர் எனப்பட்டன.
- ஜமீன்தாரி முறையும், ஜாகீர்தாரி முறையும் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டன.
அக்பர் |
ஔரங்கசீப் |
இந்துக்கள் மீதான ஜிஸியா வரியையும் புனிதப் பயண வரியையும் நிறுத்தினார். |
ஜிஸியா வரியையும், புனிதப் பயண வரியையும் மீண்டும் விதித்தார். |
இந்துக்கள் புதிதாக கோயில்கள் கட்டிக் கொள்ள தாராளமாக அனுமதித்தார். |
புதிய கோவில்கள் கட்டக் கூடாது என தடை செய்து உத்தரவிட்டார். |
சமய சகிப்புத் தன்மையை போதித்த அக்பர் தீன்இலாஹி என்ற ஒரு புதிய மதப்பிரிவைத் தோற்றுவித்தார். |
ஔரங்கசீப் இஸ்லாத்தின் மீது தீவிர பற்று கொண்டவராக இருந்தார். ஒரு உண்மையான முஸ்லீமாக வாழ்ந்தார். |
அனைத்து மதத்தின் கருத்துக்களையும் மதித்து ஆட்சி செய்தார். |
இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படி ஆட்சி செய்தார். பலவித வரிகளை நீக்கினார். |
- தக்காண விவகாரங்களில் ஔரங்கசீப் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
- அது பேரரசின் மற்ற பகுதிகளில் தோன்றிய எதிர்ப்புகளை அடக்க விடாமல் தடுத்தது.
- தக்காணப் படையெடுப்புகளின் விளைவாக முகலாயர்களின் கருவூலம் காலியானது.
- அங்கு நடந்த நீண்டகால போர்களால் முகலாயப் பேரரசு அழிவை நோக்கிச் சென்றது.
- மராத்தியரின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த வேண்டி சிவாஜியை எதிர்த்து போரிட்டார்.
- ஷியா பிரிவு சுல்தானிய அரசுகளான பீஜப்பூர், கோல்கொண்டா மீது படையெடுத்தார்.
- தக்காணத்தில் எழுந்த இளவரசர் அக்பரின் கிளர்ச்சிகளை ஒடுக்க படையெடுத்தார்.
- 1682 இல் தக்காணம் வந்தார். 1707 இல் தனது மரணம் வரை அங்கேயே தங்கினார்.
- முகலாயப் பொருளாதாரம் காடுகள் சார்ந்த வேளாண் பொருளாதாரம் ஆகும். கிணற்று நீர்ப் பாசனம் மேற்கொண்டனர்.
- காடுகளில் கிடைத்த கச்சாப் பொருட்களைக் கொண்டே பல்வேறு வகையான கைவினைத் தொழில்கள் நடைபெற்றன.
- கர்கானா எனும் தொழிற்கூடங்களில் விலை உயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்பட்டன.
- உபரி பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆறு மற்றும் சாலைகள் வழியாக கொண்டு சென்று வணிகம் செய்தனர்.
- பொருட்கள் இடம் விட்டு இடம் செல்வதற்கு உண்டி என்ற கடன் பத்திரங்கள், சராய்கள் என்றஓய்வு விடுதிகள் உதவின.
- மேற்கு ஆசியா,ஐரோப்பிய நாடுகள் ஆகிய பகுதிகளுடனான வணிகத்தை ஐரோப்பிய வணிகர்களே கட்டுப்படுத்தினர்.
- ஹூமாயூன் கல்லறை பாரசீகக் கட்டடக்கலை வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட
- இந்தியக் கலைஞர்களால் கட்டப்பட்டது. இக்கல்லறை ஒரு முன்மாதிரியாக இருந்தது.
- அக்பரின் தலைநகரான பதேபூர் சிக்ரி அழகிய கோட்டைகளால் சூழப்பட்ட நகரமாகும்.
- வியப்பூட்டும் வாயிற்பகுதியும் சிவப்பு பளிங்குக் கற்களாலான புலந்தர்வாசாவும் கட்டினார்.
- ஜஹாங்கீர் நூர்ஜஹரின் தந்தை இதிமத் உத் தௌலா-வின் கல்லறையை கட்டினார்.
- முழுவதும் வெள்ளைநிறப் பளிங்குக் கற்களால் முகலாயர் கட்டிய முதல் கட்டடமாகும்.
- தாஜ்மஹால், செங்கோட்டை, மோதி மசூதி மற்றும் ஜும்மா மசூதி ஆகியவை கட்டினார்.
- திவானி ஆம், திவானி காஸ், மோதி மஹால் ஆகியவை செங்கோட்டையில் கட்டினார்.
- தாஜ்மஹால் நடுவில் கவிகை மாடமும், அதைச் சுற்றி ஸ்தூபி மாடங்களும் உள்ளன.
- அதன் நான்கு மூலைகளிலும் நான்கு தனித்தனி கோபுரங்கள் காணப்படுகின்றன.
0 Comments:
Post a Comment