Tamil Nadu Board 11th Standard History Unit 10: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 10 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of History Unit 10 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 10 :அரபியர், துருக்கியரின் வருகை
I. சரியான விடையைத் தேர்வு செய்க
வினா 1.8ஆம் நூற்றாண்டில் அரபியர் படையெடுப்பின்போது சிந்து அரசர் ……… ஆவார்.
அ) ஹஜா
ஆ) முகமது – பின்-காஸிம்
இ) ஜெயசிம்ஹா
ஈ) தாகிர்
விடைகுறிப்பு:
ஈ) தாகிர்
வினா 2.
கஜினி மாமுது, இந்தியாவுக்குள் ……….. முறை இராணுவத் தாக்குதல்கள் நடத்தினார்.
அ) 15
ஆ) 17
இ) 18
ஈ) 19
விடைகுறிப்பு:
ஆ) 17
வினா 3.
பாலம் பவோலி கல்வெட்டு …………… மொழியில் இருக்கிறது.
அ) சமஸ்கிருதம்
ஆ) பாரசீக மொழி
இ) அரபி
ஈ) உருது
விடைகுறிப்பு:
அ) சமஸ்கிருதம்
வினா 4.
உலகப் புகழ்பெற்ற கஜுராஹோ கோயிலைக் கட்டியவர்கள்……
அ) ராஷ்டிரகூடர்
ஆ) டோமர்
இ) சண்டேளர்
ஈ) பரமர்
விடைகுறிப்பு:
இ) சண்டேளர்
வினா 5.
மம்லுக் என்ற பெயர் ஒரு ………………. க்கான அரபுத் தகுதிச்சுட்டாகும்.
அ) அடிமை
ஆ) அரசர்
இ) இராணி
ஈ) படைவீரர்
விடைகுறிப்பு:
அ) அடிமை
வினா 6.
இப்ன் பதூதா ஒரு ……………… நாட்டுப் பயணி.
அ) மொராக்கோ
ஆ) பெர்சியா
இ) துருக்கி
ஈ) சீனா
விடைகுறிப்பு:
அ) மொராக்கோ
வினா 7.
அரசப் பதவியை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் ……….
அ) முபாரக்ஷா
ஆ) ஆலம் ஷா
இ) கிசர் கான்
ஈ) துக்ரில் கான்
விடைகுறிப்பு:
ஆ) ஆலம் ஷா
வினா 8.
சரியாகப் பொருத்தி, விடையைத் தெரிவு செய்க.
1) ராமச்சந்திரர் – 1. காகதீயர்
2) கான் – இ-ஜஹான் – 2. பத்மாவத்
3) மாலிக் முஹமத் ஜெய்சி – 3. மான் சிங்
4) மன் மந்திர் – 4. தேவகிரி
(அ) 2, 1, 4, 3
(ஆ)1, 2, 3, 4
(இ) 4, 1, 2, 3
(ஈ) 3, 1, 2, 4
விடைகுறிப்பு:
(ஈ) 3, 1, 2, 4
II. குறுகிய விடை தருக
- தனது சகோதரன் இஸ்மாயிலை
வீழ்த்தி மாமுது கஜினியின் அரசரானார்.
-
மாமுது அரசரானதை கலிபா
பதவியேற்பு அங்கி அளித்து அங்கீகரித்தார்.
- மாமுதுக்கு பேரரசின் வலது கை என்ற பட்டத்தையும் கலிபா வழங்கினார்.
- கஜினி மாமுது ஆதரித்த அறிஞர் அல்-பெருனி அவருடன் இந்தியா வந்தார்.
- கஜினி மாமுது ஆதரித்த மற்றொரு அறிஞர் ஷாநாமா இயற்றிய பிர்தௌசி.
- வரலாற்று அறிஞர்கள் உத்பி, கல்வியாளர்அன்சாரி ஆகியோரை ஆதரித்தார்.
- தில்லி - டோமர்கள்
-
ராஜஸ்தான் - சௌகான்கள்
-
குஜராத் - சோலாங்கிகள்
-
புந்தேல்கந்த்
-சந்தேலர்கள்.
-
மால்வா - பரமர்கள்
- கன்னோசி கடவாலாகள்.
- இல்துமிஷ் நாற்பதின்மர்
கொண்ட அமைப்பு ஒன்றை உருவாக்கினார்.
-
இல்துமிஷ் இறந்த பிறகு
நாற்பதின்மர் குழு வலிமையானதாக மாறியது.
- சுல்தானியத்திற்கு பேராபத்து எனக்கூறிய பால்பன் அதை ஒழித்தார்.
- ரபாப், ஸாரங்கி போன்ற இசைக் கருவிகளை அறிமுகப்படுத்தினர்.
-
இசையோடு காதல் கவிதைகள்
பாடுவது இசையை வளர்க்க உதவியது.
- இந்திய இசையே உலகத்தில் மேம்பட்டது என அமிர் குஸ்ரு அறிவித்தார்.
III. சுருக்கமான விடை தருக
- கடல் கொள்ளையர்களை அடக்க
அரபியர் சிந்துவின் மீது படையெடுத்தனர்.
-
தரைவழி, கடல்வழி என இரு தனித்தனி படைப் பிரிவுகள்
அனுப்பப்பட்டன.
-
இரு படைப் பிரிவுகளும்
சிந்துவின் அரசர் தாகிரிடம் தோல்வி அடைந்தன.
- இரு படைப் பிரிவுகளின் தளபதிகளும் போரில் தாக்கி கொல்லப்பட்டனர்.
- கஜினி மாமுது, 17 முறை இந்தியாவின் மீது தாக்குதல்களை
நடத்தினார்.
-
செல்வக் களஞ்சியமாகத்
திகழ்ந்த இந்து கோயில்களில் கொள்ளை அடிப்பது.
-
இந்தியாவில் இருந்த இந்து
கோயில்களை இடிப்பது, சிலைகளைத்
தகர்ப்பது.
- பிற மதத்தினரை வெட்டிக் கொல்வது படை வீரர்களின் மதப்பற்றாக இருந்தது.
- இரஸியா அரியணை ஏறியதை
துருக்கிய பிரபுக்கள் கடுமையாக எதிர்த்தனர்.
-
இரஸியா அரச பரிவாரங்கள்
சூழ குதிரை மீது ஏறி சவாரி செய்தார்.
-
இரஸியா கையில் வில்
அம்புடன் இருந்தார். முகத்துக்கு திரையிடவில்லை.
- யாகுத் என்ற அபிசீனிய அடிமையை குதிரை படைத் தலைவராக்கினார்.
- 1307-இல் மாலிக் காஃபூரின் படை
தேவகிரி கோட்டையைக் கைப்பற்றியது.
-
1309-இல் வாரங்கல் காகதீய
அரசர் பிரதாபருத்ரதேவாவை வீழ்த்தினார்.
-
1310-இல் ஹொய்சாள அரசர்
மூன்றாம் வீரவல்லாளன் சரணடைத்தார்.
- தமிழ் நாட்டில் சிதம்பரம், திருவரங்கம் மற்றும் மதுரையை சூறையாடினார்.
- தௌலதாபாத்தில் இருந்து வட
இந்தியாவை ஆள்வதை கடினமாக உணர்ந்தார்.
-
புதிய அடையாள நாணயங்களைப்
போலவே போலி நாணயங்களை அச்சடித்தது.
-
பஞ்ச காலத்தில் தோவாப்
பகுதியில் புதிய வேளாண் முயற்சிகளை பரிசோதித்தார்.
- தமது திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டிய மனவுறுதி இல்லை.
IV. விரிவான விடை தருக
- கஜினி மாமுது 17 முறை இந்தியா மீது கொள்ளைத் தாக்குதல்களை
நடத்தினார்.
-
இந்து கோயில்களைத் தாக்கி
அங்கிருந்த செல்வங்களைக் கொள்ளை அடித்தார்.
-
கடவுள் திருவுருவங்களை
அழிப்பது அதிகாரத்தின் வெளிப்பாடாகக் கருதப்பட்டன.
-
பெரும் படையைப்
பராமரிக்கிற செலவை ஈடுசெய்ய கோயில்களைச் சூறையாடினார்.
-
ஆயுதங்களை வாங்கவும்,
பிற இராணுவச்
செலவுகளுக்காகவும் கொள்ளையடித்தார்.
-
துருக்கியப் படை
நிரந்தரமானது. வில்லாளிகளின் பிரிவை மையமாகக் கொண்டது.
-
வில்லாளிகள், படை வீரர்களுக்கு ஊதியம் வழங்க கொள்ளைத்
தாக்குதல் நடத்தினார்.
- கொள்ளைத் தாக்குதல்கள் நடத்துவது என்பது ஒரு வழக்கமான போர் நடவடிக்கை.
- முகமது கோரி, தோல்விக்கு பழிதீர்க்க அஜ்மீர் மீது மீண்டும்
படையெடுத்தார்.
-
கோரியை குறைவாக
மதிப்பிட்ட பிருத்விராஜ் ஒரு சிறிய படையுடன் சென்றார்.
-
1192 இல் இரண்டாம் தரெய்ன்
போரில் முகமது கோரி மாபெரும் வெற்றி பெற்றார்.
-
போரில் தோல்வியடைந்த
பிருத்விராஜ் கைது செய்யப்பட்டு சிறை பிடிக்கப்பட்டார்.
-
அஜ்மீரின் ஆட்சியை
மீண்டும் பிருத்விராஜ் சௌகானிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
ஆனால் பிருத்விராஜ் மீது
இராஜதுரோக குற்றம் சுமர்த்தப்பட்டு கொல்லப்பட்டார்.
-
தனது தளபதி குத்புதீன்
ஐபக்கை இந்தியப் பகுதிக்கு ஆட்சியாளராக நியமித்தார்.
- இரண்டாம் தரெய்ன் போர் இந்தியாவில் முஸ்லீம்கள் ஆட்சி ஏற்பட வழிவகுத்தது.
கஜினி மாமுது |
கோரி முகமது |
1) கஜினியின் அரசர். 2) துருக்கிய இனத்தைச் சேர்ந்தவர். 3) ஒரு மாபெரும் படையெடுப்பாளர். |
1) கோரியின் அரசர். 2) துருக்கிய இனத்தைச் சேர்ந்தவர். 3) ஒரு மாபெரும் படையெடுப்பாளர். |
1) கஜினி மாமுது இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்தார். 2) அனைத்து போர்களிலும் மாபெரும் வெற்றி கண்டார். |
1) கோரி முகமது முதல் தரெய்ன் போரில் தோல்வி அடைந்தார். 2) இரண்டாம் தரெய்ன் போரில் மாபெரும் வெற்றி கண்டார். |
1) கஜினி மாமுது இந்தியாவில் இருந்த செல்வங்களைக் கொள்ளையடிக்கும் நோக்குடன் படையெடுத்தார். |
1)கோரி முகமது இந்தியாவில் ஒரு வலிமையான முஸ்லீம் ஆட்சியை நிறுவும் நோக்குடன் படையெடுத்தார். |
- அலாவுதீன் கில்ஜி படை
வீரர்களுக்குக் ஊதியத்தை பணமாக வழங்கினார்.
-
ஒரு பெரிய படை இருந்ததால்
வீரர்களுக்குக் குறைந்த ஊதியமே அளித்தார்.
-
அத்தியாவசியப்
பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.
-
நாடு முழுவதும் இருந்த
கள்ளச் சந்தை, பதுக்கல்
குறித்து விவரம் சேகரித்தார்.
-
சந்தை கண்காணிப்பாளர்கள்
பொருட்களின் விலை குறித்து அறிக்கை அளித்தனர்.
-
கொடுக்கல்-வாங்கல்,
விற்பனை, பேரங்கள் பற்றி ஒற்றர்கள் தெரிவித்தனர்.
-
விலை ஒழுங்குமுறை விதிகளை
மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.
- பொருட்களின் எடை குறைந்தால் அதே அளவு சதை வெட்டி வீசப்பட்டது.
- பெரோஸ் துக்ளக்
பிரபுக்கள், மதத் தலைவர்கள்
சொத்துகளை திரும்பத் தந்தார்.
-
அலுவலர்களைப்
பரம்பரையாகப் பணியமர்த்தும் முறை மீண்டும் அறிமுகமானது.
-
பணியாளர்களின் ஊதியத்தை
உயர்த்தினார். வீண் செலவுகளை நிறுத்தினார்.
-
பல்வேறு வரிகளைக்
குறைத்தார். பல்வேறு சித்திரவதை முறைகளை ஒழித்தார்.
-
இசுலாமியர் அல்லாதவர்கள்
மீதும் பிராமணர்கள் மீதும் ஜிஸியா வரியை விதித்தார்.
-
பல நகரங்கள், கோட்டைகள், அரண்மனைகள், கால்வாய்கள், மசூதிகள் நிறுவினார்.
-
அடிமைகளுக்கு கைவினைத்
தொழில்களில் முறையான பயிற்சி தரப்பட்பட்டது.
- அடிமைகள் அரசாங்கத்தின் தொழில்கூடங்களில் பணி அமர்த்தப்பட்டனர்.
- தில்லி சுல்தானியம்
கலிபாவால் அங்கீகரிக்கப்பட்ட முறையான இசுலாமிய அரசு.
-
சுல்தான் முழு அதிகாரம்
பெற்ற சுதந்திர ஆட்சியாளராக விளங்கினார்.
-
இந்தியா முழுவதும் தில்லி
சுல்தானியத்தின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
-
சுல்தான் வருவாய்த் துறை,
இராணுவம், நீதித் துறை தலைவராக இருந்தார்.
-
ஆயுதம் தாங்கிய படைகளின்
தலைமைத் தளபதியாக சுல்தான் விளங்கினார்.
-
மேல்முறையீட்டு உச்ச
நீதிமன்ற தலைமை நீதிபதியாகச் சுல்தான் செயல்பட்டார்.
-
சுல்தான் பதவிக்கு
வாரிசுரிமை சட்டம் இல்லாததால் வாரிசுரிமை போட்டி நிலவியது.
- உற்பத்தியில் பாதி பங்கு நிலவரி. முக்திகள் என்போர் வரிகளை வசூலித்தனர்.
0 Comments:
Post a Comment