11th History - Book Back Answers - Unit 9 - Tamil Medium Guides

  

 


    Plus One / 11th History - Book Back Answers - History Unit 9 - Tamil Medium

    Tamil Nadu Board 11th Standard History Unit 9: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 9 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 9 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 9 : தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

    I. சரியான விடையைத் தேர்வு செய்க

    வினா 1.
    கீழ்க்கண்டவற்றில் எது சரியாக இணைக்கப் படவில்லை

    அ) மூன்றாம் கோவிந்தன் – வாதாபி
    ஆ) ரவிகீர்த்தி – இரண்டாம் புலிகேசி
    இ) விஷயம் – ராஷ்ட்டிரகூடர்
    ஈ) நம்மாழ்வார் – குருகூர்
    விடைகுறிப்பு:
    அ) மூன்றாம் கோவிந்தன் – வாதாபி
     
    வினா 2.
    தேர்ந்தெடுத்துப் பொருத்துக .
    1) சிம்மவிஷ்ணு – சாளுக்கியா
    2) முதலாம் ஜெயசிம்மன் – பல்லவர்கள்
    3) முதலாம் ஆதித்தன் – கப்பல் தளம்
    4) மாமல்லபுரம் – சோழ அரசன்

    அ) 4, 3, 1, 2
    ஆ) 4, 1, 2, 3
    இ) 2, 1, 4, 3
    ஈ) 4,3,2,1
    விடைகுறிப்பு:
    இ) 2, 1, 4, 3

    வினா 3.
    காம்போஜம் என்பது நவீன ………….

    அ) அஸ்ஸாம்
    ஆ) சுமத்ரா
    இ) ஆனம்
    ஈ) கம்போடியா
    விடைகுறிப்பு:
    ஈ) கம்போடியா
     
    வினா 4.
    ……………… சமணர்களால் நிறுவப்பட்ட ஒரு சமய மையம். (மார்ச் 2019)

    அ) சரவணபெலகொலா
    ஆ) மதுரை
    இ) காஞ்சி
    ஈ) கழுகுமலை
    விடைகுறிப்பு:
    அ) சரவணபெலகொலா

    வினா 5.
    அரச குடும்பம் தொடர்பான சடங்குகளை
    நடத்துவதற்காகச் சாளுக்கியரால் கட்டப்பட்ட கோயில்கள் எங்கு உள்ளது?

    அ) ஐஹோல்
    ஆ) வாதாபி
    இ) மேகுடி
    ஈ) பட்டாடக்கல்
    விடைகுறிப்பு:
    ஈ) பட்டாடக்கல்

    வினா 6.
    அயல்நாட்டு வணிகர்கள் ………….. என்று அறியப்பட்டனர்.

    அ) பட்டணசாமி
    ஆ) நானாதேசி
    இ) விதேசி .
    ஈ) தேசி
    விடைகுறிப்பு:
    ஆ) நானாதேசி
     
    வினா 7.
    ஆதிசங்கரரால் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடு …

    அ) அத்வைதம்
    ஆ) விசிஷ்டாத்வைதம்
    இ) சைவசித்தாந்தம்
    ஈ) வேதாந்தம்
    விடைகுறிப்பு:
    ஈ) வேதாந்தம்


    II. குறுகிய விடை தருக

    1. திருபுறம்பியம் போரைப் பற்றி நீ அறிந்தது என்ன?
    • திருப்புறம்பியம் போர் பல்லவர்கள் பாண்டியர்கள் இடையே நடைபெற்றது.
    • சோழர்கள் மற்றும் மேலைக் கங்கர் ஆதரவோடு நந்தி வர்மன் போரிட்டான்.
    • திருபுறம்பியம் / ஸ்ரீபிரம்பியம் போரில் பாண்டியர்கள் தோல்வியுற்றனர்.

     

    2. ஐஹோல் கல்வெட்டு குறித்துச் சிறு குறிப்பு வரைக.
    • இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டை ரவிகீர்த்தி எழுதினார்.
    • இது சாளுக்கிய அரச மரபினர் வரலாற்றை விவரிக்கும் மெய்கீர்த்தி.
    • இரண்டாம் புலிகேசி தன் பகைவர்களைத் தோற்கடித்தார் எனக் கூறுகிறது.

     

    3. சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட இரண்டு முக்கியமான இலக்கியங்களைக் குறிப்பிடுக.
    • கவிராஜமார்கம் கன்னட மொழியின் முக்கிய இலக்கண நூலாகும்.
    • பம்ப-பாரதம், விக்கிரமார்ஜூன விஜயம் ஆகியன கன்னடத்தில் எழுதப்பட்டன.
    • சாளுக்கிய கல்வெட்டு கன்னட மொழியை உள்ளூர் பிராகிருதம் என்கிறது.

     

    4. அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றிய ராமானுஜரின் பங்களிப்பைக் குறிப்பிடுக.
    • வைணவத்தில் பிராமணர் அல்லாதோரையும் இணைத்துக் கொண்டார்.
    • அனைத்து பிரிவு மக்களிடமும் வைணவ பக்தி கோட்பாட்டை பரப்பினார்.
    • ராமானுஜர் ஒரு சிறந்த ஆசிரியர், சீர்திருத்தவாதி என போற்றப்பட்டார்.

     

    III. சுருக்கமான விடை தருக

    1. பல்லவர்களின் நிர்வாகப் பிரிவுகள்.
    • பல்லவர்கள் காலத்தில் அரச பதவி தெய்வீக உரிமையாகக் கருதப்பட்டது.
    • அரசருக்கு உதவியாக மந்திரி மண்டல என்னும் அமைச்சர் குழு இருந்தது.
    • மாநில ஆளுநர்களுக்கு மாவட்ட அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கினர்.
    • கிராமப்புறங்களில் மக்கள் பங்குபெறும் மன்றங்கள் சிறப்பாகச் செயல்பட்டன.

     

    2. எல்லோராவிலுள்ள கைலாசநாதர் குகைக்கோயில்
    • முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் குகைக் கோயிலை கட்டினார்.
    • கைலாசநாதர் கோயில் ஒரே பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டு உள்ளது.
    • கைலாச மலையை ராவணன் அசைப்பது, நடனமாடும் சிவன் சிற்பங்கள் உள்ளன.
    • தசாவதார காட்சிகள், விஷ்ணு லசஷ்மி இசையில் லயிக்கும் சிற்பங்கள் உள்ளன.

     

    3. புகழ்பெற்ற சைவ மூவர்கள்
    • புகழ்பெற்ற சைவ மூவர்கள் -திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.
    • இம்மூவர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறைகளில் தொகுக்கப்பட்டுள்ளன.
    • இம்மூவரும் பாடிய முதல் ஏழு திருமுறைகளே தேவாரம் எனப்படுகிறது.
    • முதல் 3 - சம்பந்தர்: 4 முதல் 6 வரை நாவுக்கரசர்; 7 வது சுந்தரர் பாடியுள்ளனர்.

     

    4. தமிழகத்தில் வைணவத்தை பரவலாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு
    • பாடல்கள், சமயத் தொண்டுகள் மூலம் ஆழ்வார்கள் வைணவத்தை வளர்த்தனர்.
    • கண்ணனின் குழந்தைப் பருவமே பெரியாழ்வார் பாடல்களின் கருவாக இருந்தது.
    • ஆண்டாளின் பாடல்கள் கண்ணனின் மீது கொண்டிருந்த காதலை காட்டுகிறது.
    • ஆழ்வார்களில் சிறந்தவரான நம்மாழ்வார் திருவாய்மொழி எழுதியுள்ளார்.

     

     

    5. சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவம்
    • சாளுக்கியர்கள் அரசகுலப் பெண்களை மாநில ஆளுநர்களாக நியமித்தனர்.
    • அரசகுலப் பெண்கள் பல கோயில்கள் எழுப்பினர், கொடைகள் வழங்கினர்.
    • லோகமாதேவி ஆணைப்படி பட்டடக்கல் விருப்பாக்ஷா கோயில் கட்டப்பட்டது.
    • சாளுக்கிய இளவரசி விஜயபத்திரிகா கல்வெட்டு ஆணைகளைப் பிறப்பித்தார்.

     

    IV. விரிவான விடை தருக  

    1. பல்லவ அரசர்கள் வெளியிட்ட நிலக்கொடை ஆணைகளின் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டு.
    • அதிகாரிகள் வருவாய் மானியமும், பிராமணர்கள் நில மானியமும் பெற்றனர்.
    • 'பிரம்மதேய கிராமங்கள்' பிராமணர்களுக்கு கொடையாக வழங்கப்பட்டன.
    • வரி விலக்கு அளிக்கப்பட்டதால் பிரம்மதேய கிராமங்கள் செழிப்பாக இருந்தன.
    • 'தேவதான கிராமங்கள்' கோயில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்டன.
    • தேவதான கிராமங்களில் கிடைத்த வருவாயை கோயில் நிர்வாகிகள் பெற்றனர்.
    • அரசருக்கு சொந்தமான நிலங்கள் குடியானவர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டன.
    • குத்தகைக்கான கால அளவைப் பொறுத்து கிராமங்களின் தகுதி நிலைகள் மாறுபடும்.

     

    2. பல்லவரின் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை விவாதி.
    • பல்லவர்கள் காலத்தில் மாமல்லபுரம் ஒரு முக்கியத் துறைமுகமாக விளங்கியது.
    • தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு கடல் கடந்த வணிகத்தில் ஈடுபட்டனர்.
    • ஏற்றுமதி - நறுமணப் பொருள்கள், பருத்தி ஆடைகள், விலை உயர்ந்த கற்கள் ஆகியன.
    • ஏற்றுமதியான நாடுகள் இலங்கை, சீனா, ஜாவா, சுமத்ரா, கம்போடியா, மியான்மர்.
    • மேலை நாடுகளுடனான வணிகம் நேரடியாக இல்லாமல் அரேபியா வழியாக அமைந்தது.
    • மேற்கு கடற்கரையில் வணிகத்தில் அராபிய வணிகர்களே முன்னிலை வகித்தனர்.
    • இந்திய வணிகர்கள் சரக்குகளை அயல்நாடுகளுக்கு சுமந்து சென்ற நிலை மாறியது.

     

    3. மாமல்லபுரம் கடற்கரைக் கோவில்களின் கட்டடக்கலை மேன்மைகளை விளக்குக.
    • மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலை பல்லவ அரசன் ராஜசிம்மன் எழுப்பினார்.
    • இந்த கோயில் தென் இந்தியக் கட்டுமானக் கோயில்களில் முதன்மையானது.
    • பல்லவர்களின் அடையாளமாக உள்ள இக்கோயிலில் மூன்று கருவறைகள் உள்ளன.
    • சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் முக்கியமான கருவறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • விஷ்ணு கருவறையின் வெளிச் சுவரிலும் சுற்றுச் சுவரிலும் தொடர் சிற்பங்கள் உள்ளன.
    • இக்கோயில் பாறையில் செதுக்கப்பட்ட ஐந்து அடுக்குகளைக் கொண்டுள்ளது.
    • ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விமானங்கள் இக்கோயில்களின் சிறப்பம்சமாகும்.

     


     

     

     

     







    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive