11th History - Book Back Answers - Unit 1 - Tamil Medium Guides

  

 


    Plus One / 11th History - Book Back Answers - History Unit 1 - Tamil Medium

    Tamil Nadu Board 11th Standard History Unit 1: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 1 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 1 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 1 : பண்டைய இந்தியா : தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

    I. சரியான விடையைத் தேர்வு செய்க


    வினா 1.
    எழுத்துகள் அறிமுகமாவதற்கு முந்தைய காலகட்டம் ……………………… எனப்படுகிறது.

    அ) வரலாற்றுக்கு முந்தைய காலம்
    ஆ) வரலாற்றுக் காலம்
    இ) பழங்கற்காலம்
    ஈ) புதிய கற்காலம்
    விடைகுறிப்பு:
    அ) வரலாற்றுக்கு முந்தைய காலம்

    வினா 2.
    வரலாற்றின் பழமையான காலம் ……………….. ஆகும்.

    அ) பழங்கற்காலம்
    ஆ) புதிய கற்காலம்
    இ) செம்புக்காலம்
    ஈ) இரும்புக்காலம்.
    விடைகுறிப்பு:
    அ) பழங்கற்காலம்
     
    வினா 3.
    பழங்கற்காலக் கருவிகள் முதன் முதலில் ………………. இல் அடையாளம் காணப்பட்டன.

    அ) 1860
    ஆ) 1863
    இ) 1873
    ஈ) 1883
    விடைகுறிப்பு:
    ஆ) 1863

    வினா 4.
    மத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர் – 1, பாகோர் – 3, ஆகியவை …………………. நாகரிகம் நிலவிய இடங்கள்

    அ) கீழ்ப்பழங்கற்காலம்
    ஆ) இடைப்பழங்கற்காலம்
    இ) மேல்பழங்கற்காலம்
    ஈ) புதிய கற்காலம்
    விடைகுறிப்பு:
    இ) மேல்பழங்கற்காலம்
     
    வினா 5.
    மெஹர்கார் …………………… பண்பாட்டுடன் தொடர்புடையது.

    அ) பழைய கற்காலப்
    ஆ) புதிய கற்காலப்
    இ) இடைக்கற்காலப்
    ஈ) செம்புக்காலப்
    விடைகுறிப்பு:
    ஆ) புதிய கற்காலப்

    வினா 6.
    …….. கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியா வுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத்தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.

    அ) க்யூனிபார்ம்
    ஆ) ஹைரோக்ளைபிக்ஸ்
    இ) தேவநாகரி
    ஈ) கரோஷ்டி
    விடைகுறிப்பு:
    அ) க்யூனிபார்ம்
     
    வினா 7.
    பர்சஹோம் …………………….. நிலவிய இடமாகும்

    அ) காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு
    ஆ) கங்கைச் சமவெளியின் புதிய கற்காலப் பண்பாடு
    இ) கிழக்கிந்தியாவின் புதிய கற்காலப்பண்பாடு
    ஈ) தென்னிந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு
    விடைகுறிப்பு:
    அ) காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு

    வினா 8.
    தொடக்கஹரப்பா காலகட்டம் என்பது …………………. ஆகும்.

    அ) பொ .ஆ.மு.3000 – 2600
    ஆ) பொ.ஆ.மு.2600-1900
    இ) பொ .ஆ.மு.1900-1700
    ஈ) பொ.ஆ.மு.1700-1500
    விடைகுறிப்பு:
    அ) பொ .ஆ.மு.3000 – 2600
     
    வினா 9.
    ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக …………………… இருந்தது.

    அ) வேளாண்மை
    ஆ மட்பாண்டம் செய்தல்
    இ) கைவினைத்தொழில்கள்
    ஈ) மீன்பிடித்தல்
    விடைகுறிப்பு:
    அ) வேளாண்மை

    வினா 10.
    சிந்து நாகரிகம் ஏறத்தாழ ………………… இலிருந்து வீழ்ச்சி அடைந்தது.

    அ) பொ .ஆ.மு. 1800
    ஆ) பொ.ஆ.மு. 1900
    இ) பொ .ஆ.மு.1950
    ஈ) பொ .ஆ.மு. 1955
    விடைகுறிப்பு:
    ஆ) பொ.ஆ.மு. 1900


    II. குறுகிய விடை தருக

    1. வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?
    • கற்கருவிகள்
    • தொல்லியல் சான்றுகள்
    • எலும்புக் கருவிகள்
    • நிலவியல் அடுக்குகள்
    • பாறை ஓவியங்கள்
    • தொல்லியல் ஆய்விடங்கள்
    • விலங்குகளின் எலும்புகள்
    • கைவினைப் பொருட்கள்

     

    2. பழங் கற்காலம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?

     பழங் கற்காலம் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றது.
     1. கீழ் பழங் கற்காலம்
     2. இடைப் பழங் கற்காலம்
     3. மேல் பழங் கற்காலம்
     
     
    3. ஹோமினின் குறித்து சிறுகுறிப்பு வரைக.
    • தற்கால மனிதனுக்கு நெருக்கமான தோற்றம் கொண்ட மனித மூதாதையர்.
    • ஹோமினின் ஆப்பிரிக்காவில் அதிகமாக வாழ்ந்தனர்.
    •  நர்மதை மனிதனின் மண்டையோடு ஹத்னோராவில் கிடைத்துள்ளது.

     

    4. இடைக் கற்காலப் பண்பாடு : குறிப்பு வரைக.
    • இடைக் கற்காலப் பண்பாட்டின் காலம் இடத்திற்கு இடம் மாறுபடும்.
    • இந்தியாவில் ஏறத்தாழ பொ.ஆ.மு. 10,000 வாக்கில் தோன்றியது.
    • கேரளா, தமிழ்நாட்டில் இரும்புக் காலத்தின் தொடக்கம் வரை நீடித்தது.

     

    5. ஹரப்பா நாகரிகம் வெவ்வேறு கட்டங்களாக எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
    1. தொடக்ககால ஹரப்பா நாகரிகம் ( பொ.ஆ.மு. 3000 -2600)
    2. முதிர்ச்சி அடைந்த ஹரப்பா நாகரிகம் (பொ.ஆ.மு. 2600 - 1900)
    3. பிற்கால ஹரப்பா நாகரிகம் ( பொ.ஆ.மு. 1900 1700)

     

    6. பெருங்குளம் : சிறுகுறிப்பு வரைக.
    •  நான்கு பக்கங்களிலும் நடைபாதை மற்றும் பல அறைகள் இருக்கின்றன.
    • வடக்கிலும் தெற்கிலும் படிக்கட்டுகள், கழிவுநீர் வடிகால் வசதி உள்ளன.
    • சுவர்கள் ஜிப்சம் கலந்த சுண்ணாம்பு சாந்தால் பூசப்பட்டு இருக்கின்றன.

     

    7. சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.
    • காலநிலை மாற்றம், வெள்ளப் பெருக்கு, ஆறு தன் போக்கை மாற்றியது.
    • தொடர் வறட்சியின் காரணமாக ஆறுகள் மற்றும் நீர் நிலைகளின் மறைவு.
    • அயலவர் படையெடுப்பு, மெசபடோமியாவுடன் வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி.
     
     

    III. சுருக்கமான விடை தருக

    1. அச்சூலியன், சோஹானியக் கருவித் தொழில்நுட்பம் குறித்து எழுதுக.
    அச்சூலியன் கருவிகள்
    சோஹானியன் கருவிகள்
    அச்சூலியன் மரபு கைக்கோடாரி வகைக் கருவிகளைக் கொண்டது.
    சோஹானியன் மரபு கூழாங்கல்லைச் செதுக்கி கருவிகளை உருவாக்கினர்.
    அச்சூலியன் மரபினர் பெருமளவில் கோடாரிகள், வெட்டுக் கத்திகள் ஆகியன பயன்படுத்தினர்.
    சோஹானியன் மரபினர் துண்டாக்கும் கருவிகள் மற்றும் அதைச் சார்ந்த கருவிகளைப் பயன்படுத்தினர்.

     

     

    2. இந்தியாவின் இடைப் பழங்கற்காலத்தின் முக்கியக் கூறுகளை எழுதுக.
    • திறந்த வெளியிலும், குகைகளிலும், பாறைப் படுக்கைகளிலும் வசித்தார்கள்.
    • வேட்டையாடுதல், உணவைச் சேகரித்தல் ஆகியன முக்கியத் தொழில்.
    • கருவிகள் சிறியதாயின. கோடாரியைப் பயன்படுத்தும் பழக்கம் குறைந்தது.
    • கற்கருவி உற்பத்தியில் மூலக்கல்லை தயார் செய்யும் நுட்பத்தை பயன்படுத்தினர்.

     

    3. இடைக் கற்கால நாகரிகம் நிலவிய இடங்களைக் குறிப்பிடுக.
    • இடைக் கற்காலம் ஒருசில பகுதிகள் தவிர இந்தியா முழுவதும் நிலவியது.
    • தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேரிக் குன்றுகள்.
    • ஆந்திரம் - சனகனகல்லு; கர்நாடகம் - கிப்பன ஹள்ளி; பீகார் - பயிஸ்ரா.
    • குஜராத் - வங்ஜன்; உத்திரப் பிரதேசம் சாராய் நகர், தம்தமா.

     

    4. இடைக் கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகள் யாவை?
    •  ஓரளவு நிரந்தர மற்றும் தற்காலிகக் குடியிருப்புகளில் வசித்தனர்.
    • திறந்த வெளியிலும், குகைகளிலும் வசித்தனர். இறந்தோரைப் புதைத்தனர்.
    • கலைத் திறன் மிக்கவர்களாக இருந்ததை பிம்பேட்காவில் காணமுடிகிறது.
    • சிறிய விலங்குகள், பறவைகளை வேட்டையாட நுண் கற்கருவிகள் உதவின.

     

    5. சிந்து நாகரிகம் நிலவிய பகுதியின் எல்லைகளைக் குறிப்பிடுக.
    • கிழக்கு - உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஆலம்கிர்புர்
    • மேற்கு - பாகிஸ்தான், ஈரான் எல்லையின் சட்காஜென் - டோர் குடியிருப்புகள்
    • வடக்கு - ஆப்கானிஸ்தானில் உள்ள ஷார்ட்டுகை.
    • தெற்கு - மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தைமாபாத்.

     

    6. ஹரப்பா பொருளாதாரத்துக்குப் பங்களித்த கைவினைத் தயாரிப்பு குறித்து எழுதுக.
    • மணிகள் செய்தல், சங்கு வளையல்கள் செய்தல் மற்றும் உலோக வேலைகள்
    • தங்கம், செம்பு, வெண்கலம், பீங்கான் ஆகியவற்றிலான அணிகலன்கள்.
    • சங்கு, சுடுமண், கார்னிலியன் மணிகள் ஆகியவற்றிலான அணிகலன்கள்.
    • கிரிஸ்டல் (படிகக்கல்), ஸ்டீட்டைட் (நுரைக்கல்) ஆகியவற்றிலான அணிகலன்கள்.

     

    7. ஹரப்பா மக்களின் நம்பிக்கைகள் குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
    • இறை நம்பிக்கைக் கொண்டிருந்தனர். இயற்கையை வழிபட்டனர்.
    • அரச மரம், தாய் தெய்வம் போன்ற சுடுமண் உருவங்களை வழிபட்டனர்.
    • இறப்பிற்கு பின்னரான வாழ்க்கையில் நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.
    • புதைகுழிகளில் மட்பாண்டங்கள், அணிகலன்கள், மணிகள் வைத்தனர்.
     
     

    IV. விரிவான விடை தருக  

    1. வரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.
    • வரலாற்றுக்கு முந்தைய இந்தியா என்பது எழுத்துமுறை தோன்றாத காலமாகும்.
    • கற்காலம், வெண்கலக் காலம், செம்புக் காலம், இரும்புக் காலம் எனப் பிரிக்கலாம்.
    • இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம் முழுவதும் ஒரே பகுதி.
    • இந்தியாவில் 10 முதல் 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தார்கள்.
    • முதலில் நாகரிகம் கண்டறியப்பட்ட இடத்தின் பெயரை பண்பாடுக்கு சூட்டினர்.
    • மக்கள் பயன்படுத்திய பொருட்கள் அடிப்படையிலும் பண்பாடுக்கு பெயரிட்டனர்.
    • வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த ஹரப்பா பண்பாடு கண்டறியப்பட்டது.
    • இந்தியாவில் ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாடு நிலவியது.

     

    2. கீழ் மற்றும் இடைப் பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பீடுக.

     கீழ்ப் பழங்கற்காலப் பண்பாடு:

    • சென்னைக்கருகில் பல்லாவரத்தில் இராபர்ட் புரூஸ் பூட் அடையாளம் கண்டார்.
    • பரவல் - அத்திரம்பாக்கம், பல்லாவரம், குடியம், பிம்பெட்கா, இசாம்பூர் ஆகியன.
    • கோடாரிகள், துண்டாக்கும் கருவிகள், பிளக்கும் கருவிகள் உருவாக்கினர்.
    • கற்கருவிகளை வடிவமைக்க சுத்தியல் போன்ற கற்களைப் பயன்படுத்தினர்.
    இடைப் பழங்கற்காலப் பண்பாடு:
    • பிரவாரா ஆற்றங்கரையில் நெவாசாவில் H. D. சங்கலியா அடையாளம் கண்டார்.
    • பரவல் - யமுனை, நர்மதை, கிருஷ்ணா, கோதாவரி, ஆறுகளின் சமவெளிகள்.
    • சுரண்டும் கருவிகள், துளையிடும் கருவிகள் போன்றவற்றை உருவாக்கினர்.
    • கருவிகள் சிறியதாயின. கோடாரியைப் பயன்படுத்தும் பழக்கம் குறைந்தது.

     

    3. "காஷ்மீர் பகுதியின் புதிய கற்காலப் பண்பாடு ஹரப்பா நாகரிகத்தின் காலத்தைச் சேர்ந்தது" கூற்றை நிறுவுக.
    • காஷ்மீரின் புதிய கற்காலப் பண்பாடும் ஹரப்பா நாகரிகமும் சமகாலத்தவை.
    • காஷ்மீரில் உள்ள பர்சாஹோம் முக்கியமான புதிய கற்கால ஆய்விடமாகும்.
    • பர்சாஹோமைச் சேர்ந்த மக்கள் ஹரப்பா மக்களோடு வணிகத்தில் ஈடுபட்டனர்.
    • கோதுமை, பார்லி, பட்டாணி, பருப்பு ஆகிய விதைகள் கண்டெடுக்கப்பட்டன.
    • சிவப்பு நிற மட்பாண்டங்கள், செம்பாலான அம்புகள் ஆகியவற்றை செய்தார்கள்.
    • கார்னிலியன் மணிகளையும், வண்ணம் பூசிய பானைகளையும் பயன்படுத்தினர்.
    • துணியில் விலங்குகளின் தோலைச் சேர்த்து தைக்கும் குத்தூசிகள் பயன்பட்டன.

     

    4. தென்னிந்தியாவில் புதிய கற்காலப் பண்பாடு எங்கு நிலவியது? அதன் முக்கியமான கூறுகளைக் குறிப்பிடுக.
    • கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, துங்கபத்திரா சமவெளிகளில் நிலவியது.
    • கர்நாடகாவில் - பிரம்மகிரி, மாஸ்கி, வடகல் ஆகிய இடங்கள்.
    • ஆந்திராவில் -நாகர்ஜூன கொண்டா, ராமாபுரம், வீராபுரம் ஆகிய இடங்கள்.
    • தமிழ்நாட்டில் - பையம்பள்ளி மற்றும் காவிரி ஆற்றின் சமவெளிகள்.
    • ஒரு சாம்பல் மேட்டைச் சுற்றிலும் குடியிருப்புகள் சூழ்ந்த கட்டமைப்பு இருந்தன.
    • மெல்லிய சாம்பலும், சிதைக்கப்பட்ட மாட்டுச்சாண அடுக்குகளும் கிடைத்தன.
    • சாம்பல் மேட்டைச் சுற்றிலும் வீடுகளும் புதை குழிகளும் காணப்படுகின்றன.

     

    5. சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது?
    • சிந்து நாகரிகத்தின் அடையாளம் முதலில் ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்டது.
    • முதலில் கண்டறியப்பட்ட இடத்தின் பெயரால் ஹரப்பா நாகரிகம் என்றழைக்கின்றனர்.
    • லாகூரில் இருந்து முல்தானுக்கு ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்றது.
    • ரயில்பாதை அமைக்கும் பணியின் போதுதான் ஹரப்பா நகரம் கண்டறியப்பட்டது.
    • அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் ஹரப்பாவில் ஒரு முத்திரையைக் கண்டெடுத்தார்.
    • ஹரப்பாவில் ஆய்வுகள் மேற்கொள்ள சர் ஜான் மார்ஷல் காரணமாக இருந்தார்.
    • 1940 ஆம் ஆண்டுகளில் மார்டிமர் வீலர் ஹரப்பாவில் ஆய்வுகள் நடத்தினார்.

     

    6. திட்டமிடப்பட்ட நகரங்களான ஹரப்பா, மொகஞ்சதாரோ பற்றி எழுதுக.
    • ஹரப்பா - பாதுகாப்பு அரண்கள், திட்டமிடப்பட்ட தெருக்கள், சந்துகள் இருந்தன.
    • கட்டுமானத்துக்கு சுட்ட மற்றும் சுடாத செங்கற்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
    • நகரங்கள் சட்டக வடிவமைப்பைக் கொண்டதாக அமைக்கப்பட்டு இருந்தன.
    • மொகஞ்சதாரோ ஒர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம்.
    • பெருங்குளம் நீர் புகாதபடி ஜிப்சம் செறிந்த சுண்ணாம்பு சாந்தால் பூசப்பட்டிருந்தன.
    • வீடுகள், கழிவுநீர் வடிகால்கள் சுட்ட செங்கற்களால் திட்டமிட்டு கட்டப்பட்டன.
    • வீடுகளும் குளியலறைகளும் கழிவுநீர் வடிகாலுடன் இணைக்கப்பட்டன.

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive