Tamil Nadu Board 10th Standard Science - Chemistry Unit 10: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 10 – Chemistry from the Tamil Nadu State Board 10th Standard Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Chemistry Unit 10 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!
Topic: வேதிவினைகளின் வகைகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. H2 + Cl2(g) → 2HCl(g) என்ப துஅ) சிதைவுறுதல் வினை
ஆ) சேர்க்கை வினை
இ) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
ஈ) இரட்டை இடப்பெயர்ச்சி வினை
விடைகுறிப்பு:
இ) சேர்க்கை வினை
2. ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.
அ) வெப்பம்
ஆ) மின்னாற்றல்
இ) ஒளி
ஈ) எந்திர ஆற்றல்
விடைகுறிப்பு:
இ) ஒளி
3. கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் இடையேயான ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது. C(5) + O2(g) → CO2(g).
இது எவ்வகை வினையாக வகைப்படுத்தப்படுகிறது?
(i) சேர்க்கை வினை
(ii) எரிதல் வினை
(iii) சிதைவுறுதல் வினை
(iv) மீளா வினை
அ) (i) மற்றும் (ii)
ஆ) (i) மற்றும் (iv)
இ) (i), (ii) மற்றும் (iii)
ஈ) (i), (ii) மற்றும் (iv)
விடைகுறிப்பு:
ஈ) (i), (ii) மற்றும் (iv)
4. Na2SO4(aq) + BaCl2(aq) – BaSO4(s) ↓+ 2 NaCl(aq) என்ற வேதிச்சமன்பாடு பின்வருவனவற்றுள் எவ்வகை வினையைக் குறிக்கிறது?
அ) நடுநிலையாக்கல் வினை
ஆ) எரிதல் வினை
இ) வீழ்படிவாதல் வினை
ஈ) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
விடைகுறிப்பு:
இ) வீழ்படிவாதல் வினை
5. வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
(i) இயக்கத்தன்மை உடையது.
(ii) சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம்.
(iii) மீளா வினைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை.
(iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளை பொருள்களில் செறிவு வேறுபடலாம்.
அ) (i), (ii) மற்றும் (iii)
ஆ) (i), (ii), மற்றும் (iv)
இ) (ii), (iii) மற்றும் (iv)
ஈ) (i), (iii) மற்றும் (iv)
விடைகுறிப்பு:
அ) (i), (ii) மற்றும் (iii)
6. X5 + 2HCl(aq) → Cl2(aq) + H2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் X என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது?
(i) Zn
(ii) Ag
(iii) Cu
(iv) Mg
சரியான இணையைத் தேர்ந்தெடு.
அ) (i) மற்றும் (ii)
ஆ) (ii) மற்றும் (iii)
இ) (iii) மற்றும் (iv)
ஈ) (i) மற்றும் (iv)
விடைகுறிப்பு:
ஈ) (i) மற்றும் (iv)
7. பின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் → சேர்மம்” வகை அல்ல? [PTA-3]
அ) C(s) + O2(g) → CO2(g)
ஆ) 2K(s) + Br2(l) → 2KBr(s)
இ) 2CO(g) + O2(g) → 2CO2(g)
ஈ) 4Fe(s) + 3O2(g) → 2Fe2O3(s)
விடைகுறிப்பு:
இ) 2CO(g) + O2(g) → 2CO2(g)
8. பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையை குறிக்கிறது?
அ) A(s) + B(s) → C(s) + D(s)
ஆ) A(s) + B(s) → C(s) + D(aq)
இ) A(aq) + B(aq) → C(s) + D(aq)
ஈ) A(aq) + B(s) → C(aq) + D(l)
விடைகுறிப்பு:
இ) A(aq) + B(aq) → C(s) + D(aq)
9. ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில் அதன் (OH–) ஹைட்ராக்ஸைடு அயனி செறிவு என்ன?
அ) 1 × 10-3M
ஆ) 3M
இ) 1 × 10-11M
ஈ) 11 M
விடைகுறிப்பு:
இ) 1 × 10-11M
10. தூளாக்கப்பட்ட CaCO, கட்டியான CaCO, விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்
அ) அதிக புறப்பரப்பளவு
ஆ) அதிக அழுத்தம்
இ) அதிக செறிவினால்
ஈ) அதிக வெப்பநிலை
விடைகுறிப்பு:
அ) அதிக புறப்பரப்பளவு
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
1. அமிலம் மற்றும் காரத்திற்கு இடையேயான வினை ……………… என்று அழைக்கப்படுகிறது.விடைகுறிப்பு:
நடுநிலையாக்கல் வினை
2. ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் லித்தியம் உலோகம் வினைபுரியும்போது …………………. வாயு வெளியேறுகிறது.
விடைகுறிப்பு:
ஹைட்ரஜன்
3. பனிக்கட்டி உருகுதல் செயலில் நிகழும் சமநிலை ………….. என்று அழைக்கப்படுகிறது.
விடைகுறிப்பு:
இயற்பியல் சமநிலை
4. ஒரு பழச்சாறின் pH மதிப்பு 5.6 இதனுடன் நீர்த்த சுண்ணாம்பு சேர்க்கும் போது இதன் pH மதிப்பு …………….. (அதிகமாகிறது / குறைகிறது).
விடைகுறிப்பு:
அதிகமாகிறது
5. 25°C வெப்பநிலையில் நீரின் அயனிப் பெருக்கத்தின் மதிப்பு ……….
விடைகுறிப்பு:
1.00 × 10-14 மோல்’டெசிமீ-6
6. மனித ரத்தத்தின் பொதுவான pH மதிப்பு.
விடைகுறிப்பு:
7.35-7.45
7. மின்னாற்பகுப்பு என்பது ……………. வகை வினையாகும்.
விடைகுறிப்பு:
சிதைவடைதல்
விடைகுறிப்பு:
ஒன்று
9. வேதி எரிமலை என்பது …………… வகை வினைக்கு எடுத்துக்காட்டாகும்.
விடைகுறிப்பு:
சிதைவடைதல்
10. ஹைடிரஜன் (H+) அயனி நீரில் கரைவதால் உருவாகும் அயனி ………… என்று அழைக்கப் படுகிறது.
விடைகுறிப்பு:
ஹைட்ரோனியம் அயனி
III. பொருத்துக.


IV. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)
விடைகுறிப்பு:
தவறு.
சரியான கூற்று: சில்வர் உலோகம் நைட்ரிக் அமிலத்துடன் ஹைட்ரஜனை வெளியேற்றாது.
விடைகுறிப்பு:
சரி.
விடைகுறிப்பு:
தவறு
சரியான கூற்று: மீள்வினையில் சமநிலையில் செறிவில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.
விடைகுறிப்பு:
சரி.
விடைகுறிப்பு:
தவறு.
சரியான விடைகுறிப்பு: pH தாளை ஒரு கரைசலில் நனைக்கும் பொழுது மஞ்சளாக மாறுகிறது. எனவே அக்கரைசல் அமிலத்தன்மை கொண்டது.
V. சுருக்கமாக விடையளி
1. பொட்டாசியம் குளோரைடு நீர்க்கரைசலை சில்வர் நைட்ரேட் நீர்க்கரைசலுடன் சேர்க்கும்பொழுது வெண்மை நிற வீழ்படிவு உண்டாகிறது. இவ்வினையின் வேதிச்சமன்பாட்டைத் தருக. விடைகுறிப்பு:KCl + AgNO3 → KNO3 + AgCl ↓
2. வெப்பநிலை உயர்த்தும் பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?
விடைகுறிப்பு:
வெப்பம் அதிகரிக்கும் போது வினைபடுபொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து வினையின் வேகம் அதிகரிக்கின்றது.
3. சேர்க்கை அல்லது கூடுகை வினை வரையறு. வெப்ப உமிழ் சேர்க்கை வினைக்கு எடுத்துக்காட்டு தருக.
விடைகுறிப்பு:
1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருள்கள் இணைந்து ஒரு சேர்மம் உருவாகும் வினை சேர்க்கை வினை அல்லது கூடுகை வினை ஆகும்.
2. இதனை தொகுப்பு வினை அல்லது இயைபு வினை என்றும் அழைக்கலாம்.
எ.கா: 2Mg(s) + O2(g) → 2MgOs
4. மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.
விடைகுறிப்பு:
மீள் வினை
|
மீளா வினை
|
தகுந்த சூழ்நிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் நடைபெறும்.
|
முன்னோக்கு வினை மட்டும் நடைபெறும் (பின்னோக்கு வினை நடைபெறாது)
|
முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் ஒரே நேரத்தில் நடைபெறும்.
|
ஒரே திசையில் மட்டுமே நடைபெறும் வினை முன்னோக்கு வினையாகும்.
|
வினையானது சமநிலையை அடையும்.
|
வினையானது சமநிலையை அடையாது .
|
வினைபடு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாற இயலாது
|
வினைபடு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாறக்கூடியது.
|
இவ்வினை மெதுவாக நடைபெறும்.
|
வேகமாக நடைபெறும்.
|
VI. விரிவாக விடையளி.
1. வெப்பச்சிதைவு வினைகள் என்பது யாவை?விடைகுறிப்பு:
1. இவ்வகை வினைகளில் வினைபடு பொருள் வெப்பத்தினால் சிதைவுறுகிறது.
2. உதாரணமாக மெர்குரி (II) ஆக்சைடு வெப்பத்தினால் சிதைவுற்று மெர்குரி மற்றும் ஆக்சிஜன் வாயுவாக மாறுகிறது.
3. வெப்பத்தை எடுத்துக்கொண்டு இவ்வினை நிகழ்வதால் இது வெப்பச் சிதைவு வினை எனப்படுகிறது.
4. மேலும், இவ்வினை சேர்மத்திலிருந்து தனிமம் / தனிமம் சிதைவடைதல் என்ற வகையைச் சார்ந்தது.
5. அதாவது மெர்குரிக் ஆக்சைடு, மெர்குரி மற்றும் ஆக்ஸிஜன் என்ற தனிமங்களாகச் சிதைவடைகிறது.

6. இதுபோன்று, கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்தும் போது அது சிதைவுற்று கால்சியம் ஆக்சைடு மற்றும் கார்பன்-டை- ஆக்சைடாக மாறுகிறது. இவ்வினை சேர்மத்திலிருந்து சேர்மம் / சேர்மம் என்ற வகையைச் சார்ந்தது.
1%20-%20Tamil%20Medium%20Guide.png)
2. இரட்டை இடப்பெயர்ச்சி வினையின் வகைகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.
விடைகுறிப்பு:
இரு வகையான இடப்பெயர்ச்சி வினைகள் உள்ளன. அவையாவன
(1) வீழ்படிவாக்கல் வினை
(2) நடுநிலையாக்கல் வினை
1. வீழ்படிவாக்கல் வினை:
1. இரு சேர்மங்களின் நீர்க்கரைசல்களை கலக்கும் பொழுது, அவை வினைபுரிந்து நீரில் கரையாத ஒரு விளைபொருளும், நீரில் கரையும் ஒரு விளைபொருளும் தோன்றினால் அவ்வினை வீழ்படிவாக்கல் வினை எனப்படும்.
2. எடுத்துக்காட்டாக பொட்டாசியம் அயோடைடு மற்றும் லெட் நைட்ரேட்டின் தெளிவான நீர்க்கரைசல்களைக் கலக்கும் பொழுது ஒரு இரட்டை இடப்பெயர்ச்சி வினை நடக்கிறது.
Pb(NO3)2(aq) + 2 KI(aq) → PbI2(s) + 2 KNO3(aq)
3. இங்கு பொட்டாசியமும் லெட் உலோகமும் ஒன்றையொன்று இடப்பெயர்ச்சி செய்துகொண்டு மஞ்சள் நிற லெட் அயோடைடு வீழ்படிவைத் தருகிறது.
2. நடுநிலையாக்கல் வினை:
1. ஒரு அமிலமும், காரமும் வினைபுரிந்து உப்பும் நீரும் கிடைக்கின்றன. இவ்வினை நடுநிலையாக்கல் வினை எனப்படுகிறது.
2. எடுத்துக்காட்டாக சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்திற்கு இடையேயான வினையை கருதுவோம்.
3. இங்கு சோடியம், ஹைட்ரஜனை ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலிருந்து இடப்பெயர்ச்சி செய்கிறது.
4. இதன் விளைவாக சோடியம் குளோரைடு என்ற நடுநிலையான நீரில் கரையும் உப்பு கிடைக்கிறது.
3. ஒரு வினையின் வினை வேகத்தை பாதிக்கும் காரணிகளை விளக்குக.
விடைகுறிப்பு:
வினையின் வேகத்தை பின்வரும் காரணிகள் பாதிக்கின்றன:
1. வினைபடு பொருளின் தன்மை
2. வினைபடுபொருளின் செறிவு
3. வெப்பநிலை
4. அழுத்தம்
5. வினையூக்கி
6. வினைபடுபொருளின் புறப்பரப்பளவு
1. வினைபடு பொருளின் தன்மை:
1. சோடியம், ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வேகமாக வினைபுரிகிறது. ஆனால் அசிட்டிக் அமிலத்துடன் மெதுவாக வினைபுரிகிறது.
2. ஏனெனில் ஹைட்ரோகுளோரிக் அமிலம், அசிட்டிக் அமிலத்தை விட வினைதிறன் மிக்கது.
3. எனவே, வினைபடுபொருளின் இயல்பு வினைவேகத்தை பாதிக்கிறது.
2Na(s) + 2HCl(aq) → 2NaCl(aq) + H2(g) (வேகமாக)
2Na(s) + 2CH3COOH(aq) → 2CH3COONa(aq) + H2(g) (மெதுவாக)
2. வினைபடுபொருளின் செறிவு:
1. வினைபடுபொருளின் செறிவு அதிகரிக்கும் போது வினைவேகம் அதிகரிக்கிறது.
2. செறிவு அதிகமாக இருக்கும்போது குறிப்பிட்ட கனஅளவில் துகள்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். எனவே வினையின் வேகமும் அதிகரிக்கும்.
3. வெப்பநிலை:
1. வெப்பநிலை உயரும்போது வினையின் வேகமும் அதிகரிக்கும்.
2. ஏனெனில் வெப்பம் அதிகரிக்கும்போது வினைபடுபொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து வினையின் வேகம் அதிகரிக்கிறது.
4. அழுத்தம்:
1. வாயுநிலையிலுள்ள வினைபடு பொருள்களில் அழுத்தம் அதிகரிக்கும் போது வினையின் வேகமும் அதிகரிக்கும்.
2. ஏனெனில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது வினைப்படு பொருள்களின் துகள்கள் மிக அருகே வந்து அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றன.
5. வினையூக்கி:
வினையூக்கி என்பது வினையில் நேரடியாக ஈடுபடாது. ஆனால், அவ்வினையில் வேகத்தை அதிகரிக்கும்.
6. வினைபடு பொருள்களின் புறப்பரப்பளவு:
வேதிவினையில் கட்டியான வினைபடுபொருள்களை விட, தூளாக்கப்பட்ட வினைபடுபொருள்கள் விரைவாக வினைபுரியும்.
விடைகுறிப்பு:
அன்றாட வாழ்வின் pH-ன் பங்கு:
(1) தாவரங்களும், விலங்குகளும் pH சார்ந்த உணர்வுள்ளவையா?
1. நமது உடலானது 7.0 முதல் 7.8 வரை உள்ள pH எல்லை சார்ந்து வேலை செய்கிறது.
2. உயிரினங்கள் ஒரு குறுகிய pH எல்லைக்குள் மட்டுமே உயிர் வாழ இயலும்.
3. நம் உடலில் உள்ள திரவங்கள் வெவ்வேறு pH மதிப்புகளைக் கொண்டவை.
4. எடுத்துக்காட்டாக மனித ரத்தத்தின் pH மதிப்பு 7.35 லிருந்து 7.45 ஆகும். இந்த மதிப்பிலிருந்து
குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ, அது நோயை உண்டாக்கும்.
(2) மனித செரிமான மண்டலத்தில் pH மதிப்பு
1. நமது இரைப்பை ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கிறது என்பது ஒரு வியப்பூட்டும் செய்தியாகும்.
2. இந்த அமிலம் இரைப்பையை பாதிக்காமல் உணவைச் செரிக்க உதவுகிறது.
3. சரியான செரிமானம் இல்லாத போது, இரைப்பையானது கூடுதலான அமிலத்தைச் சுரந்து வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
4. இரைப்பையில் உள்ள திரவத்தின் தோராயமான pH மதிப்பு 2.0 ஆகும்.
(3) pH மாற்றம் – பற்சிதைவுக்குக் காரணம்
1. மனித உமிழ்நீரின் pH மதிப்பு 6.5 – 7.5 வரை உள்ளது.
2. நமது பற்களின் மேற்பரப்பு படலமானது கால்சியம் பாஸ்பேட் என்ற மிகக் கடினமான பொருளினால் ஆனது.
3. ஏனெனில் உமிழ்நீரின் pH 5.5-க்கும் கீழே குறையும் பொழுது, பற்களின் மேற்பரப்பு படலம் (எனாமல்) பாதிக்கப்படுகிறது. இது பற்சிதைவு எனப்படுகிறது.
4. பொதுவாக நாம் பயன்படுத்தப்படும் பற்பசைகள் காரத்தன்மை கொண்டவை. இவை கூடுதல் அமிலத்தன்மையை நடுநிலையாக்கம் செய்து பற்சிதைவைத் தடுக்கின்றன.
(4) மண்ணின் pH
1. விவசாயத்திற்கு மண்ணின் pH மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
2. சிட்ரிக் அமிலம் கொண்ட பழங்கள் சற்று காரத்தன்மை உள்ள மண்ணிலும், நெல் அமிலத்தன்மை கொண்ட மண்ணிலும், கரும்பு நடுநிலைத்தன்மை கொண்ட மண்ணிலும் வளரும்.
(5) மழை நீரின் pH
1. மழை நீரின் pH மதிப்பு ஏறக்குறைய 7 ஆகும். இது, மழைநீர் நடுநிலைத் தன்மையானது மற்றும் தூய்மையானது என்பதைக் குறிக்கிறது.
2. வளிமண்டலக் காற்று சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் ஆகிய வாயுக்களால் மாசுபடும் பொழுது அவை மழைநீரில் கரைந்து pH மதிப்பைப்பை 7ஐ விடக் குறையச் செய்கின்றன.
3. இவ்வாறு மழைநீரின் pH 7ஐ விட குறையும் பொழுது அம்மழை அமிலமழை எனப்படுகிறது.
4. இந்த அமிலமழை நீர் ஆறுகளில் சேரும் பொழுது அவற்றின் pH ஐ குறைக்கின்றன.
5. இதனால் நீர்வாழ் உயிரிகளின் வாழ்வு பாதிக்கப்படுகிறது.
5. வேதிச் சமநிலை என்றால் என்ன? அதன் பண்புகள் யாவை?
விடைகுறிப்பு:
(1) வேதிச்சமநிலை :
1. வேதிச்சமநிலை என்பது ஒரு மீள் வேதிவினையின் வினைபடு பொருள் மற்றும் வினை விளைபொருளின் செறிவில் எந்த மாற்றமும் நிகழாத நிலை ஆகும்.
2. சமநிலையில், முன்னோக்கு வினையின் வேகம்
= பின்னோக்கு வினையின் வேகம்.
(2) பண்புகள்:
1. வேதிச் சமநிலையில், முன்னோக்கு வினையின் வேகமும், பின்னோக்கு வினையின் வேகமும் சமம்.
2. நேரத்தை பொருத்து அழுத்தம், செறிவு, நிறம், அடர்த்தி, பாகுநிலை போன்றவை மாறாது.
3. வேதிச்சமநிலை என்பது ஒரு இயங்குச் சமநிலை. ஏனெனில் முன்னோக்கு வினையும், பின்னோக்கு வினையும் தொடர்ந்து நிலையாக நடந்து கொண்டிருக்கும்.
4. இயற்பியல் சமநிலையில், அனைத்து நிலைமைகளும் மாறாத கனஅளவைப் பெறுகின்றன.
VII. உயர்சிந்தனைக்கான வினாக்கள்.
1. ‘A’ என்ற திண்மச் சேர்மத்தை வெப்பப்படுத்தும் பொழுது சிதைந்து ‘B’ மற்றும் ‘C’ என்ற வாயுவைத் தருகிறது. ‘C’ என்ற வாயுவை நீரில் செலுத்தும்போது அமிலத்தன்மையாக மாறுகிறது. A, B மற்றும் C-யைக் கண்டறிக.விடைகுறிப்பு:
%20-%20Tamil%20Medium%20Guide.png)
B CaO கால்சியம் ஆக்சைடு
C CO2 கார்பன் டை ஆக்சைடு
2. காப்பர் சல்பேட் கரைசலை கலக்குவதற்கு நிக்கல் கரண்டியை பயன்படுத்தலாமா? உனது கூற்றை நியாயப்படுத்துக.
விடைகுறிப்பு:
1. காப்பர் சல்பேட் கரைசலை கலக்குவதற்கு நிக்கல் கரண்டியை பயன்படுத்தக்கூடாது.
2. ஏனெனில், நிக்கல், காப்பர் சல்பேட்டில் உள்ள காப்பரை இடமாற்றம் செய்கிறது.
3. மேலும் காப்பரானது நிக்கல் கரண்டியில் வீழ்படிவாக சேகரிக்கப்படுகிறது.
Nis + CuSO4(aq) → NiSO4(aq) + Cu(s)
VIII. கணக்கீடுகள்.
1. எலுமிச்சை சாறின் pH மதிப்பு 2 எனில், ஹைட்ரஜன் அயனியின் செறிவின் மதிப்பு என்ன?விடைகுறிப்பு:
எலுமிச்சை சாறின் pH மதிப்பு = 2
– log10 [H+] = -2
2. 1.0 × 10-4 மோலார் செறிவுள்ள HNO3 கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.
[H+] = 1.0 × 10-4
pH = – log10 [H+] = -log10 [1 × 10-4]
pH = – (log10 1 – 4 log10 10)
= (0) + (4 × log1010) = 0 + 4 × 1 = 4
3. 1.0 × 10-5 மோலார் செறிவுள்ள KOH கரைசலின் pH மதிப்பைக் காண்க.
\( \mathrm{KOH_{(aq)} \rightleftharpoons K^+_{(aq)} + OH^-_{(aq)}} \)
[OH–] = 1 × 10-5மோல் லி-1
pOH = – log10 [OH–] = – log= – log10 [10-5]
= – (-5 × log1010)
= – (-5) = 5
pH +pOH =14
pH = 14 – pOH
pH = 14 – 5
pH = 9
4. ஒரு கரைசலில் ஹைடிராக்சைடு அயனிச் செறிவு 1.0 × 10-11 மோல் எனில் அதன் pH மதிப்பு என்ன?
[OH–] = 1 × 10-11 M
pOH = -log10 [OH–]
= -log10 [10-11]
= -(-11 × log10 10)
= – (-11) = 11
pH + pOH = 14
pH = 14 – pOH = 14 – 11
pH = 3
0 Comments:
Post a Comment