9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பா..? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, July 27, 2021

9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பா..? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்




தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இதனால் பொது முடக்கத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், பள்ளிகள் திறப்பது குறித்து அரசு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்தி வருவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது,

தமிழ்நாட்டில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். பிற மாநிலங்களில் உள்ள நிலவரம் பற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின், உரிய முடிவு எடுக்கப்படும். இது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.

சி.எஸ்.ஆர் சமூக பொறுப்பு நிதி மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என கூறினார்.


Post Top Ad