8th Social Science - Book Back Answers - History Unit 8 - Tamil Medium Guide

  

 


    8th Social Science - Book Back Answers - History Unit 8 - Tamil Medium

    Tamil Nadu Board 8th Standard Social Science - History Unit 8: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 8 – History from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 8 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 8:காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை


    I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

    1. __________ சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
    அ) மனித
    ஆ) விலங்கு
    இ) காடு
    ஈ) இயற்கை
    விடைக்குறிப்பு:
    அ) மனித

    2. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
    அ) தர்மாம்பாள்
    ஆ) முத்துலட்சுமி அம்மையார்
    இ) மூவலூர் ராமாமிர்தம்
    ஈ) பண்டித ரமாபாய்
    விடைக்குறிப்பு:
    ஆ) முத்துலட்சுமி அம்மையார்

    3. சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு
    அ) 1827
    ஆ) 1828
    இ) 1829
    ஈ) 1830
    விடைக்குறிப்பு:
    இ) 1829

    4. B.M. மலபாரி என்பவர் ஒரு
    அ) ஆசிரியர்
    ஆ) மருத்துவர்
    இ) வழக்கறிஞர்,
    ஈ) பத்திரிகையாளர்
    விடைக்குறிப்பு:
    ஈ) பத்திரிகையாளர்

    5. பின்வருவனவற்றில் எவை/எது சீர்திருத்த இயக்கங்கள்?
    அ) பிரம்ம சமாஜம்
    ஆ) பிரார்த்தனை சமாஜம்
    இ) ஆரிய சமாஜம்
    ஈ) மேற்கண்ட அனைத்தும்
    விடைக்குறிப்பு:
    ஈ) மேற்கண்ட அனைத்தும்

    6. பெதுன் பள்ளி இல் __________ J.E.D பெதுன் என்பவரால் நிறுவப்பட்டது.
    அ) 1848
    ஆ) 1849
    இ) 1850
    ஈ) 1851
    விடைக்குறிப்பு:
    ஆ) 1849

    7. 1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது?
    அ) வுட்ஸ்
    ஆ) வெல்பி
    இ) ஹண்டர்
    ஈ) முட்டிமன்
    விடைக்குறிப்பு:
    இ) ஹண்டர்

    8. சாரதா குழந்தை திருமண மசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை என நிர்ணயித்தது.
    அ) 11
    ஆ) 12
    இ)13
    ஈ) 14
    விடைக்குறிப்பு:
    ஈ) 14

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

    1. __________ 1819 இல் கிறித்தவ சமயப்பரப்பு குழுக்களால் அமைக்கப்பட்டது.
    விடைக்குறிப்பு:

    பெண் சிறார் சங்கம்

    2. சிவகங்கையை சேர்ந்த __________ என்பவர் பிரிட்டிஷாரை எதிர்த்து வீரமாக போராடினார்.
    விடைக்குறிப்பு:

    வேலுநாச்சியார்

    3. இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவியவர் __________ 
    விடைக்குறிப்பு:

    கோபால கிருஷ்ண கோகலே

    4. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர் __________ ஆவார்.
    விடைக்குறிப்பு:

    பெரியார்

    5. கந்துகூரி வீரசலிங்கம் வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர் __________ ஆகும்.
    விடைக்குறிப்பு:

    விவேகவர்தினி
     

    III. பொருத்துக. 

    1.
    பிரம்மஞான சபை
    இத்தாலிய பயணி
    2.
    சாரதா சதன்
    சமூக தீமை
    3.
    வுட்ஸ் கல்வி அறிக்கை
    அன்னிபெசன்ட்
    4.
    நிக்கோலோ கோண்டி
    பண்டித ரமாபாய்
    5.
    வரதட்சணை
    1854
    விடைக்குறிப்பு:
    1.
    பிரம்மஞான சபை
    அன்னிபெசன்ட்
    2.
    சாரதா சதன்
    பண்டித ரமாபாய்
    3.
    வுட்ஸ் கல்வி அறிக்கை
    1854
    4.
    நிக்கோலோ கோண்டி
    இத்தாலிய பயணி
    5.
    வரதட்சணை
    சமூக தீமை
     

    IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.   

    1. ரிக் வேத காலத்தில் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர். 
    விடைக்குறிப்பு:

    சரி

    2. தேவதாசி முறை ஒரு சமூக தீமை. 
    விடைக்குறிப்பு:

    சரி

    3. இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி ராஜா ராம் மோகன் ராய். 
    விடைக்குறிப்பு:

    சரி

    4. பெண்களுக்கான 23 சதவீத இட ஒதுக்கீடு என்பது பெண்களின் சமூக அரசியல் நிலையை மேம்படுத்துவதைக் குறிக்கிறது. 
    விடைக்குறிப்பு:

    தவறு

    5. 1930ஆம் ஆண்டு சாரதா சட்டம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான திருமண வயதை உயர்த்தியது. 
    விடைக்குறிப்பு:

    சரி

    V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

    1. சரியான இணையை கண்டுபிடி.
    அ) மகளிர் பல்கலைக்கழகம் - பேராசிரியர் D.K. கார்வே
    ஆ) நீதிபதி ரானடே - ஆரிய சமாஜம்
    இ) விதவை மறுமணச் சட்டம் - 1855
    ஈ) ராணி லட்சுமிபாய் – டெல்லி
    விடைக்குறிப்பு:
    அ) மகளிர் பல்கலைக்கழகம் - பேராசிரியர் D.K. கார்வே

    2. மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி.
    அ) குழந்தை திருமணம்
    ஆ) சதி
    இ) தேவதாசி முறை
    ஈ) விதவை மறுமணம்
    விடைக்குறிப்பு:
    ஈ) விதவை மறுமணம்

    3. பின்வரும் கூற்றுகளை கவனிக்கவும்.
    i) பேகம் ஹஸ்ரத் மஹால், ராணி லட்சுமி பாய் ஆகியோர் ஆங்கிலேயர் மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
    ii) தமிழ்நாட்டின் சிவகங்கையைச் சேர்ந்த வேலுநாச்சியார், பிரிட்டிஷாருக்கு எதிராக வீரமாக போராடினார்.
    மேலே கொடுக்கப்பட்ட எந்த வாக்கியங்கள் சரியானவை?

    அ) i மட்டும்
    ஆ) ii மட்டும்
    இ) i மற்றும் ii
    ஈ) இரண்டுமில்லை
    விடைக்குறிப்பு:
    இ) i மற்றும் ii

    4. கூற்று: ராஜா ராம் மோகன்ராய் அனைத்து இந்தியர்களாலும் மிகவும் நினைவு கூறப்படுகிறார்.
    காரணம்: இந்திய சமுதாயத்தில் இருந்த சதி என்ற தீயபழக்கத்தை ஒழித்தார்.

    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை.
    ஆ) கூற்று சரியானது. காரணம் தவறு.
    இ) கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது.
    ஈ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
    விடைக்குறிப்பு:
    இ) கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது.

    VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி.

    1. பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களின் பெயரினை குறிப்பிடுக.
    • ராஜாராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, பெரியார் ஈ.வெ.ரா., டாக்டர். முத்துலட்சுமி அம்மையார்.

    2. சமூக தீமைகளில் சிலவற்றை பட்டியலிடுக.
    • பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணம், சதி, தேவதாசி முறை.

    3. இடைக்கால இந்தியாவில் குறிப்பிடத்தக்க பெண்கள் யாவர்?
    • ரசியா சுல்தானா, ராணி துர்காவதி, சாந்த் பீபி, மீராபாய்.

    4. இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான பெண்களை குறிப்பிடுக.
    • பேகம் ஹஸ்ரத் மஹால், ராணி லட்சுமிபாய் வேலுநாச்சியார்

    5. 'சதி' பற்றி ஒரு குறிப்பு வரைக.
    • இந்தியாவில் ராஜபுத்திரர்களிடையே சதி பழக்கம் காணப்பட்டது.
    • 1829இல் சதி தண்டனைக்குரிய குற்றம் என வில்லியம் பெண்டிங் பிரபு அறிவித்தார்.

    VII. விரிவான விடையளி.   

    1. சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கினைக் கண்டறியவும்.
    • தொடக்க கால காலனிய எதிர்ப்பு போராட்டத்தில் பெண்கள் பல்வேறு வகைகளில் முக்கிய பங்காற்றினர்.
    • பேகம் ஹஸ்ரத் மஹால், ராணி லட்சுமிபாய் வேலுநாச்சியார் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.
    • விடுதலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் அயல்நாட்டு பொருட்களை புறக்கணித்தனர்.
    • பெண்கள் சட்டங்களை மீறுதல் மூலம் தடியடி பெற்று சிறைக்கு சென்றனர்.
    • விடுதலைப் போராட்டத்தில் அவர்களது பங்களிப்பு புதிய பரிணாமத்தை சேர்த்தது.

    2. சமூக தீமைகளை ஒழிப்பதில் சமூக சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பை விளக்குக.
    • சமூக தீமைகளை ஒழிப்பதற்காக பல சமூக சீர்திருத்தவாதிகள் பல்வேறு சமூக சீர்திருத்த இயக்கங்களை உருவாக்கினர்
    • இவை பெண்களுக்கு கல்வி அளிப்பது, அவர்களின் திருமண வயதை உயர்த்துதல் ஆகியவற்றின் மூலம் பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்க முயன்றது.
    • இவ்வியக்கங்களை வழிநடத்திய சீர்திருத்தவாதிகளே நவீன இந்தியாவின் முன்னோடிகள் ஆவர்
    • ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, பெரியார் ஈ.வெ.ரா, டாக்டர்.தர்மாம்பாள் ஆகியோர் முக்கிய சீர்திருத்தவாதிகள் ஆவர். 

    3. சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம் குறித்து விரிவாக விடையளிக்கவும்.
    • பெண்களின் விடுதலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
    • இது மக்களிடையே தேசிய விழிப்புணர்வை உருவாக்கியது.
    • தியாகம், சேவை மற்றும் பகுத்தறிவு உணர்வு ஆகியவற்றை உருவாக்கியது.
    • சதி மற்றும் பெண் சிசுக்கொலை ஆகியவை சட்டவிரோதம் ஆக்கப்பட்டது.
    • விதவை மறுமணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive