8th Social Science - Book Back Answers - History Unit 3 - Tamil Medium Guide

  

 


    8th Social Science - Book Back Answers - History Unit 3 - Tamil Medium

    Tamil Nadu Board 8th Standard Social Science - History Unit 3: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 3 – History from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 3 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 3: கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்


    I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

    1. ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?
    அ) மகல்வாரி முறை
    ஆ) இரயத்துவாரி முறை
    இ) ஜமீன்தாரி முறை
    ஈ) இவற்றில் எதுவுமில்லை
    விடைக்குறிப்பு:
    இ) ஜமீன்தாரி முறை

    2. எந்த கவர்னர் ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?
    அ) ஹேஸ்டிங்ஸ் பிரபு
    ஆ) காரன்வாலிஸ் பிரபு
    இ) வெல்லெஸ்லி பிரபு
    (ஈ) மிண்டோ பிரபு
    விடைக்குறிப்பு:
    ஆ) காரன்வாலிஸ் பிரபு

    3. மகல்வாரி முறையில் 'மகல்' என்றால் என்ன?
    அ) வீடு
    ஆ) நிலம்
    இ) கிராமம்
    ஈ) அரண்மனை
    விடைக்குறிப்பு:
    இ) கிராமம்

    4. மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்து கொள்ளப்பட்டது?
    அ) மகாராஷ்டிரா
    ஆ) மதராஸ்
    இ) வங்காளம்
    ஈ) பஞ்சாப்
    விடைக்குறிப்பு:
    ஈ) பஞ்சாப்

    5. கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
    அ) ஹேஸ்டிங்ஸ் பிரபு
    ஆ) காரன்வாலிஸ் பிரபு
    இ) வெல்லெஸ்லி பிரபு
    ஈ) வில்லியம் பெண்டிங் பிரபு
    விடைக்குறிப்பு:
    ஈ) வில்லியம் பெண்டிங் பிரபு

    6. ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?
    அ) பம்பாய்
    ஆ) மதராஸ்
    இ) வங்காளம்
    ஈ) இவற்றில் எதுவுமில்லை
    விடைக்குறிப்பு:
    இ) வங்காளம்

    7. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?
    அ) மகாத்மா காந்தி
    ஆ) கேசப் சந்திரராய்
    இ) திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்
    ஈ) சர்தார் வல்லபாய் பட்டேல்
    விடைக்குறிப்பு:
    இ) திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்

    8. பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?
    அ) சர்தார் வல்லபாய் பட்டேல்
    ஆ) மகாத்மா காந்தி
    இ) திகம்பர் பிஸ்வாஸ்
    ஈ) கேசப் சந்திர ராய்
    விடைக்குறிப்பு:

    அ) சர்தார் வல்லபாய் பட்டேல்

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

    1. __________ என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்.
    விடைக்குறிப்பு:

    மகல்வாரி முறை

    2. மகல்வாரி முறை __________ என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம்.
    விடைக்குறிப்பு:

    ஹோல்ட் மெகன்சி

    3. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி __________ நடைபெற்றது.
    விடைக்குறிப்பு:

    வங்காளத்தில்

    4. மாப்ளா கலகம் __________ நடைபெற்றது.
    விடைக்குறிப்பு:

    கேரளாவில்

    5. 'சம்பரான் விவசாயச் சட்டம்' நிறைவேற்றப்பட்ட ஆண்டு __________.
    விடைக்குறிப்பு:

    1918

    III. பொருத்துக. 

    1
    நிரந்தர நிலவரி திட்டம்
    மதராஸ்
    2
    மகல்வாரி முறை
    இண்டிகோ விவசாயிகளின் துயரம்
    3
    இரயத்துவாரி முறை
    வடமேற்கு மாகாணம்
    4
    நீல் தர்பன்
    வங்காளம்
    5
    சந்தால் கலகம்
    முதல் விவசாயிகள் கிளர்ச்சி
    விடைக்குறிப்பு:
    1
    நிரந்தர நிலவரி திட்டம்
    வங்காளம்
    2
    மகல்வாரி முறை
    வடமேற்கு மாகாணம்
    3
    இரயத்துவாரி முறை
    மதராஸ்
    4
    நீல் தர்பன்
    இண்டிகோ விவசாயிகளின் துயரம்
    5
    சந்தால் கலகம்
    முதல் விவசாயிகள் கிளர்ச்சி
     

    IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.   

    1. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும்.
    அ) இந்த முறை 1793 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
    ஆ) ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர் ஆவர்
    இ) விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.
    ஈ) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
    விடைக்குறிப்பு:
    இ) விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.

    2. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாய புரட்சி பற்றிய சரியான கூற்று எது?
    அ) சந்தால் கலகம் வங்காளத்தில் நடைபெற்றது.
    ஆ) நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.
    இ) தக்காண கலகம் 1873 ல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது.
    ஈ) மாப்ளா கலகம் தமிழகத்தில் நடைபெற்றது.
    விடைக்குறிப்பு:
    ஆ) நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.

    V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (✓) செய்க.

    1. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாண்டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 
    விடைக்குறிப்பு:

    சரி 

    2. இரயத்துவாரி முறை தாமன் மன்றோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
    விடைக்குறிப்பு:

    சரி

    3. குஜராத்தின் யூசுப்ஷாகி என்ற பர்கா னாவில் பாப்னா கலகம் ஏற்பட்டது. 
    விடைக்குறிப்பு:

    தவறு

    4. "பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்" 1918ல் நிறைவேற்றப்பட்டது.
    விடைக்குறிப்பு:

    தவறு

    VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி.

    1. நிரந்தர நிலவரி திட்டத்தின் சிறப்புக்கூறுகள் ஏதேனும் இரண்டினை குறிப்பிடுக.
    • ஜமீன்தார்கள் நில உடைமையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.
    • விவசாயிகளிடமிருந்து வரியை வசூல் செய்யும் அரசின் முகவர்களாக செயல்பட்டனர்.

    2. இரயத்துவாரி முறையின் சிறப்புக் கூறுகள் யாவை?
    • வருவாய் ஒப்பந்தம் நேரடியாக விவசாயிகளுடன் செய்துகொள்ளப்பட்டது.
    • நில அளவு மற்றும் விளைச்சலின் மதிப்பீடு கணக்கிடப்பட்டது.

    3. மகல்வாரி முறையின் விளைவுகளைக் கூறுக.
    • இம்முறையானது விவசாயிகளுக்கு இலாபகரமானதாக இல்லை.
    • இது கிராமத்தின் உயர் வகுப்பினருக்கு இலாபகரமானதாக அமைந்தது.

    4. 1859-60 ல் நடைபெற்ற இண்டிகோ (அவுரி) கலகத்திற்கு காரணம் என்ன?
    • விவசாயிகள் தீமை தரும் இண்டிகோவை வளர்ப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர்.
    • இண்டிகோவை குறைந்த விலைக்கு விற்கும் படியும் வற்புறுத்தப்பட்டனர்.

    5. சம்பரான் சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியின் பங்கினை குறிப்பிடுக?
    • சம்பரான் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு மகாத்மா காந்தி உதவ முன்வந்தார்.
    • அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, மகாத்மா காந்தியை ஓர் உறுப்பினராக சேர்த்துக் கொண்டது.

    6. பர்தோலி சத்தியாகிரகத்தில் வல்லபாய் பட்டேலின் பங்கு பற்றி எழுதுக.
    • 1928ல் 30 சதவீதம் அளவிற்கு அரசு நிலவருவாயை உயர்த்தியது.
    • அதனால், பர்தோலி விவசாயிகள் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

    VII. விரிவான விடையளி.   

    1. நிலையான நிலவரி திட்டத்தின் நிறை குறைகளை விவாதிக்க.
    நிறைகள்:
    • தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன.
    • ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளராயினர்.
    • ஆங்கில அரசுக்கு நிலையான வருவாய் கிடைப்பதை உறுதி செய்தது.
    குறைகள்:
    • ஆங்கிலேய அரசு விவசாயிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை.
    • விவசாயிகள் ஜமீன்தார்களின் பொறுப்பில் விடப்பட்டனர்.
    • விவசாயிகள் பெரும்பாலும் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர்.

    2. ஆங்கிலேயர்களின் நிலவரி திட்டங்கள் இந்திய விவசாயிகள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?
    • அனைத்து நிலவரி முறைகளும் விவசாயத் தொழில் அழிவிற்கு வழிவகுத்தது.
    • விவசாயிகள் அதிக வரிவிதிப்பினால் பாதிக்கப்பட்டனர்.
    • பஞ்சத்தினால் மக்கள் வறுமையாலும், கடன்சுமையாலும் அவதிப்பட்டனர்
    • ஜமீன்தார்கள், வட்டிக்காரர்கள்,ஆகியோர்களால் ஏழை விவசாயிகள் சுரண்டப்பட்டனர்.
    • ஆங்கிலேய இறக்குமதி பொருட்களால் இந்தியக் குடிசைத் தொழில்கள் மறைந்தன.

    3. மாப்ளா கிளர்ச்சி பற்றி ஒரு பத்தியில் எழுதுக.
    • மாப்ளா முஸ்லீம் விவசாயிகள், ஜமீன்தார்கள் மற்றும் ஆங்கில அரசால் சுரண்டப்பட்டனர்.
    • ஆகஸ்ட் 1921ல் மாப்ளா விவசாயிகள், ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
    • விவசாயிகள் ஆரம்பத்தில் காவல் நிலையங்கள், பொது அலுவலகங்களை தாக்கினர்.
    • ஆனால் 1921 டிசம்பரில் அரசு இரக்கமின்றி மாப்ளா கிளர்ச்சியை அடக்கியது.
    • இதில் 2337 மாப்ளா கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

    VIII. உயர் சிந்தனை வினா.   

    1. வரிகள் மட்டும் அல்லாமல் வேறு எந்த வகைகளில் ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகளின் நிலங்களை சுரண்டினர்.
    • ஆங்கிலேயர்கள் இந்தியப் பொருளாதாரத்தைச் சுரண்டும் கொள்கையைப் பின்பற்றினர்.
    • அவர்கள் அறிமுகப்படுத்திய வாரிசு இழக்கும் கொள்கை இந்தியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
    • கிறிஸ்தவப் பாதரியார்கள் கிருஸ்தவ மதத்தைப் பரப்பினர்.
    • ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் சமூக பழக்கவழக்கங்களில் தலையிட்டனர்.
    • இந்திய சிப்பாய்கள் இழிவாக நடத்தப்பட்டனர்.
    • நாட்டின் பொருளாதாரச் சுரண்டலில் ஏராளமான செல்வம் வெளியேற்றப்பட்டது. 
    • இயந்திரத்தினால் செய்யப்பட்ட ஆங்கிலப் பொருட்கள் இந்தியத் தொழிற்சாலைகளைப் பெரிதும் பாதித்தது. 
    • எனவே வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டது.
    • இந்தியர்களுக்கு அரசியலிலும், இராணுவத்திலும் உயர் பதவிகள் மறுக்கப்பட்டன.
    • பாரசீக மொழிக்குப் பதிலாக ஆங்கில மொழி புகுத்தப்பட்டது.

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive