8th Social Science - Book Back Answers - Civics Unit 7 - Tamil Medium Guide

  

 


    8th Social Science - Book Back Answers - Civics Unit 7 - Tamil Medium

    Tamil Nadu Board 8th Standard Social Science - Civics Unit 7: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 7 – Civics from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Civics Unit 7 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 7:

    I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.


    1. இந்தியாவின் மிக உயர்ந்த மற்றும் இறுதியான நீதித்துறை__________
    அ) குடியரசுத் தலைவர்
    ஆ) நாடாளுமன்றம்
    இ) உச்ச நீதிமன்றம்
    ஈ) பிரதம அமைச்சர்
    விடைகுறிப்பு:
    இ) உச்ச நீதிமன்றம்
     
    2. ___________க்கு இடையே பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு செயல்முறையை நீதிமன்ற அமைப்பு வழங்குகிறது.
    அ) குடிமக்கள்
    ஆ) குடிமக்கள் மற்றும் அரசாங்கம்
    இ) இரண்டு மாநில அரசாங்கங்கள்
    ஈ) மேற்கண்ட அனைத்தும்
    விடைகுறிப்பு:
    ஈ) மேற்கண்ட அனைத்தும்
     
    3. கீழ்க்கண்ட எந்த அதிகார வரம்பின் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை உச்ச நீதிமன்றம் தீர்க்க வழிவகை செய்கிறது?
    அ) முதன்மை அதிகார வரம்பு
    ஆ) மேல்முறையீட்டு அதிகார வரம்பு
    இ) ஆலோசனை அதிகார வரம்பு
    ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
    விடைகுறிப்பு:
    அ) முதன்மை அதிகார வரம்பு
     
    4. பின்வரும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது?
    அ) பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர்
    ஆ) அஸ்ஸாம் மற்றும் வங்காளம்
    இ) பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர்
    ஈ) உத்தரபிரதேசம் மற்றும் பீகார்
    விடைகுறிப்பு:
     இ) பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர்
     
    5. பொது நல வழக்கு முறை இந்தியாவில்__________ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    அ) உச்சநீதிமன்றம்
    ஆ) நாடாளுமன்றம்
    இ) அரசியல் கட்சிகள்
    ஈ) அரசியலமைப்பு சட்டதிருத்தங்கள்
    விடைகுறிப்பு:
    அ) உச்சநீதிமன்றம்
     
    6. இந்தியாவில் உச்ச நிலையில் உள்ள நீதிமன்றங்கள் எத்தனை?
    அ) ஒன்று
    ஆ) இரண்டு
    இ) மூன்று
    ஈ) நான்கு
    விடைகுறிப்பு:
    அ) ஒன்று
     
    7. உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம்
    அ) சண்டிகர்
    ஆ) பம்பாய்
    இ) கல்கத்தா
    ஈ) புது தில்லி
    விடைகுறிப்பு:
    ஈ) புது தில்லி
     
    8. FIR என்பது
    அ) முதல் தகவல் அறிக்கை
    ஆ) முதல் தகவல் முடிவு
    இ) முதல் நிகழ்வு அறிக்கை
    ஈ) மேற்கூறிய எவையுமில்லை
    விடைகுறிப்பு:
    அ) முதல் தகவல் அறிக்கை
     
    9. குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம்__________என அழைக்கப்படுகின்றன.
    அ) மாவட்ட நீதிமன்றங்கள்
    ஆ) அமர்வு நீதிமன்றம்
    இ) குடும்ப நீதிமன்றங்கள்
    ஈ) வருவாய் நீதிமன்றங்கள்
    விடைகுறிப்பு:
    ஆ) அமர்வு நீதிமன்றம்

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 


    1. கல்கத்தா நீதிமன்றம் இந்தியாவின் பழமையான நீதிமன்றம் ஆகும்.
    2. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் சுதந்திரம் மற்றும் நடுநிலைத்தன்மை உடன் இந்திய நீதித்துறையை நிறுவினர்.
    3. புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானியான மாண்ட்டெஸ்கியு ஒரு சுதந்திரமான நீதித்துறை" என்ற கருத்தை முன்மொழிந்தார்.
    4. உரிமையியல் சட்டங்கள் பணம், சொத்து, சமூகம் தொடர்பான பிரச்சனைகளைக் கையாளுகிறது.
    5. பழங்காலத்தில் பெரும்பாலான அரசர்களின் நீதிமன்றங்கள் தர்மத்தின்படி நீதியை வழங்கின.

    III. பொருத்துக. 


    1 உச்ச நீதிமன்றம்  -   இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றம்
    2 உயர் நீதிமன்றம் -    மாநிலத்தின் உயர்ந்த நீதிமன்றம்
    3 லோக் அதாலத்    -    விரைவான நீதி
    4 சர் எலிஜா இம்ஃபே   -   முதல் தலைமை நீதிபதி
    5 ஸ்மிருதி                 -     சமூக கடமைகள்

    IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.   


    1. 1951ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் இந்திய உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டது.
    விடைகுறிப்பு:
    தவறு
     
    2. துக்ளக் ஆட்சிக்காலத்தில் சட்ட நடைமுறைகள் அரபுமொழியில் எழுதப்பட்டன.
    விடைகுறிப்பு:
    சரி
     
    3. 1773ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச்சட்டம் உச்ச நீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகுத்தது.
    விடைகுறிப்பு:
    சரி
     
    4. சதர் திவானி அதாலத் ஒரு குற்றவியல் நீதிமன்றமாகும். 
    விடைகுறிப்பு: 
    தவறு
     
    5. இந்தியாவில் மிகப்பெரிய நீதிமன்றம் அலகாபாத் நீதிமன்றம் ஆகும்.
    விடைகுறிப்பு:
    சரி
     
    6. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கான ளுக்கான நீதியை பாதுகாக்கிறது.
    விடைகுறிப்பு:
    சரி

    V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.


    1. பின்வரும் கூற்றை ஆராய்க.
    i) மெக்காலே பிரபுவால் ஒரு சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது.
    ii) இது இந்தியச் சட்டங்களை நெறிமுறைப்படுத்தியது.
    மேலே கொடுக்கப்பட்ட எந்த கூ கூற்றுகள் சரியானவை
    அ) i மட்டும்
    ஆ) ii மட்டும்
    இ) i மற்றும் ii
    ஈ) இரண்டும் இல்லை
    விடைகுறிப்பு:
    இ) i மற்றும் ii
     
    2. பின்வரும் கூற்றை ஆராய்க
    i) இந்திய தண்டனைச் சட்டம் 1860 இல் உருவாக்கப்பட்டது.
    ii) கல்கத்தா உயர்நீதிமன்றம் 1862 இல் நிறுவப்பட்டது.
    iii) 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியது. மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை
    அ) i மட்டும்
    ஆ) ii மற்றும் iii மட்டும்
    இ) i, ii மட்டும்
    ஈ) அனைத்தும்
    விடைகுறிப்பு:
    ஈ) அனைத்தும்
     
    3. இந்திய உச்ச நீதிமன்றம் பற்றிய பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல.
    i) இந்தியாவின் உச்ச நீதிமன்றம் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும்.
    ii) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது அத்தியாயத்தின் கீழ் பகுதி V-இன்படி நிறுவப்பட்டது.
    i) ஒரு உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தால் மாற்ற முடியாது.
    iv) இதன் முடிவுகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
    அ) i
    ஆ) ii
    )iii
    ) iv
    விடைகுறிப்பு:
    )iii
     
    4. கூற்று: உச்ச நீதிமன்றம் ஒரு ஆவண நீதிமன்றமாகும்.
    காரணம்: இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளைப் பராமரிக்கிறது மற்றும் அதன் முடிவுகள் கீழ் நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும்.
    அ) கூற்று சரி, காரணம் தவறு
    ஆ) கூற்று காரணம் இரண்டும் தவறு
    இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஈ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
    விடைகுறிப்பு:
    இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
     
    5. ஆம் / இல்லை எனக் கூறுக.
    அ) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். ஆம்
    ஆ) பணக்காரர் மற்றும் சக்தி படைத்த மக்கள் நீதித்துறை அமைப்பை கட்டுப்படுத்துகின்றனர். இல்லை
    இ) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நீதிமன்றங்களின் மூலம் நீதியைப் பெற உரிமை உடையவராவர். ஆம்
    ஈ) அரசியல்வாதிகள் நீதிபதிகளைக் கட்டுப்படுத்த முடியாது. ஆம்

    VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி.


    1. நீதித்துறை அமைப்பு நமக்கு ஏன் தேவைப்படுகிறது?
    • மக்கள் அனைவருக்கும் முறையான நீதி கிடைப்பதை உறுதி செய்ய நீதித்துறை அமைப்பு நமக்கு தேவைப்படுகிறது.
     2. இந்திய நீதிமன்றங்களின் பல்வேறு படிநிலைகள் யாவை?
    • இந்திய உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் - துணை நீதிமன்றங்கள்.
     3. சட்டம், நீதித்துறை - வேறுபடுத்துக.
     

    சட்டம்

    நீதித்துறை
    1
    இது மக்களை ஆள்வதற்கு ஓர் அரசாங்கத்தால் விதிக்கப்படும் விதிகளின் அமைப்பு ஆகும்.
    சட்டப்பபடி, ஒரு நாட்டின் பெயரால் நீதியை வழங்குகின்ற நீதிமன்றங்களின் அமைப்பு நீதித்துறை எனப்படுகிறது.
     
    4. மக்கள் நீதிமன்றம் பற்றி குறிப்பு எழுதுக.
    • விரைவான நீதியை வழங்க லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.
    • இது மக்கள் பேசும் மொழியிலேயே பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது.
     5. நடமாடும் நீதிமன்றங்களின் நன்மைகள் யாவை?
    • நடமாடும் நீதிமன்றங்கள் கிராமப்புற மக்களின் செலவைக் குறைத்து, அவர்களின் வாழிடங்களிலேயே நீதியை வழங்க வகை செய்கிறது

    VII. விரிவான விடையளி.   


    1. நீதித்துறையின் பங்கு பற்றி எழுதுக.
    • ஒரு நாட்டின் நீதி அமைப்பு அனைவருக்கும் முறையான நீதி கிடைப்பதை உறுதி செய்யகிறது.
    • இந்தியா ஒருங்கிணைந்த நீதித்துறை அமைப்பைக் கொண்டுள்ளது.
    • அரசாங்கத்தின் ஓர் அங்கமாக நீதித்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.
    • இது நீதியை நிர்வகித்தல் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல்.
    • அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது.
     2. உரிமையியல் சட்டம், குற்றவியல் சட்டம் - வேறுபடுத்துக.

     
    உரிமையியல் சட்டம்
    குற்றவியல் சட்டம்
    1
    இது சொத்து மற்றும் சமூகம் தொடர்பான பிரச்சனைகளைக் கையாளுகிறது. எ.கா. நிலம், திருமணம் ஆகியன.
    குற்றம் என சட்டம் வரையறுக்கும் நடத்தைகள் அல்லது செயல்களை இது விசாரிக்கிறது. எ.கா. திருட்டு, கொலை ஆகியன.
    2
    உரிமையியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களால் ஒரு புகார் தாக்கல் செய்யப்பட வேண்டும்
    இது வழக்கமாக காவல்துறை விசாரணையுடன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
    3
    மனுதாரரின் கோரிக்கையின்படி பணம் செலுத்தும்படியான தண்டனைகள் வழங்கப்படுகிறது
    குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் சிறைக்கு அனுப்பப்படுவார்.
     
    3. உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை விவரி.
    1. முதன்மை அதிகார வரம்பு:-
    இது மத்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் ஆகியன முதன்மை அதிகார வரம்புக்குள் அடங்கும்.
    2. மேல் முறையீட்டு அதிகார வரம்பு:-
    உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது.
    3. ஆலோசனை அதிகார வரம்பு: -
    குடியரசுத் தலைவரின் கேள்விற்கு குறித்த ஆலோசனை வழங்கும் அதிகாரத்தினை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது..
    4. நீதிப் பேராணை அதிகார வரம்பு:-
    புச்இந்திய அரசியலமைப் சட்டத்தின் படி உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் நீதிப் பேராணைகளை வழங்குகின்றன.
    5. சிறப்பு அதிகாரங்கள்:-
    இது கீழ் நீதிமன்றங்களின் செயல்பாட்டை கண்காணிக்கிறது.

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive