Tamil Nadu Board 8th Standard Social Science - History Unit 4: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 4 – History from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of History Unit 4 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 4: மக்களின் புரட்சி
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டுஅ) 1519
ஆ) 1520
இ)1529
ஈ) 1530
விடைக்குறிப்பு:
இ)1529
2. பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்
அ) பூலித்தேவன்
ஆ) யூசுப்கான்
இ) கட்டபொம்மன்
ஈ) மருது சகோதரர்கள்
விடைக்குறிப்பு:
அ) பூலித்தேவன்
3. காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்
அ) மதுரை
ஆ) திருநெல்வேலி
இ) இராமநாதபுரம்
ஈ) தூத்துக்குடி
விடைக்குறிப்பு:
இ) இராமநாதபுரம்
4. வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த கோட்டையின் முன்பு தூக்கிலிடப்பட்டார்?
அ) பாஞ்சாலங்குறிச்சி
ஆ) சிவகங்கை
இ) திருப்பத்தூர்
ஈ) கயத்தாறு
விடைக்குறிப்பு:
ஈ) கயத்தாறு
5. வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?
அ) நாகலாபுரம்
ஆ) சிவகிரி
இ) சிவகங்கை
ஈ) விருப்பாச்சி
விடைக்குறிப்பு:
இ) சிவகங்கை
6. 'திருச்சிராப்பள்ளி பிரகடனம்' யாரால் வெளியிடப்பட்டது.
அ) மருது பாண்டியர்கள்
ஆ) கிருஷ்ணப்ப நாயக்கர்
இ) வேலு நாச்சியார்
ஈ ) தீரன் சின்னமலை
விடைக்குறிப்பு:
அ) மருது பாண்டியர்கள்
7. கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?
அ) திண்டுக்கல்
ஆ) நாகலாபுரம்
இ) புதுக்கோட்டை
ஈ) ஓடாநிலை
விடைக்குறிப்பு:
ஈ) ஓடாநிலை
8. ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?
அ) மத்திய இந்தியா
ஆ) டெல்லி
இ) கான்பூர்
ஈ) பரெய்லி
விடைக்குறிப்பு:
அ) மத்திய இந்தியா
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. கிழக்குப்பகுதி பாளையங்கள் __________ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.விடைக்குறிப்பு:
கட்டபொம்மன்
2. விஸ்வநாத நாயக்கர் அவரது அமைச்சர் __________ உடன் கலந்தாலோசித்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார்.
விடைக்குறிப்பு:
அரியநாதர்
3. கட்டபொம்மனின் முன்னோர்கள் __________ பகுதியைச் சார்ந்தவர்கள்.
விடைக்குறிப்பு:
ஆந்திரா
4. __________ தமிழர்களால் வீர மங்கை எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார்
விடைக்குறிப்பு:
வேலுநாச்சியார்
5. __________ 'சிவகங்கையின் சிங்கம்' என அழைக்கப்படுகிறார்.
விடைக்குறிப்பு:
சின்னமருது
6. 1857 புரட்சியை __________ என்பவர் 'முதல் இந்திய சுதந்திரப்போர் என விவரிக்கிறார்.
விடைக்குறிப்பு:
விசவார்க்கர்.டி.
III. பொருத்துக.
|
1
|
டெல்லி
|
கன்வர் சிங்
|
|
2
|
கான்பூர்
|
கான் பகதூர் கான்
|
|
3
|
ஜான்சி
|
நானா சாகிப்
|
|
4
|
பரெய்லி
|
லட்சுமி பாய்
|
|
5
|
பீகார்
|
இரண்டாம் பகதூர் ஷா
|
|
1
|
டெல்லி
|
இரண்டாம் பகதூர் ஷா
|
|
2
|
கான்பூர்
|
நானா சாகிப்
|
|
3
|
ஜான்சி
|
லட்சுமி பாய்
|
|
4
|
பரெய்லி
|
கான் பகதூர் கான்
|
|
5
|
பீகார்
|
கன்வர் சிங்
|
IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.
1.விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர்.விடைக்குறிப்பு:
சரி
2. சிவசுப்பிரமணியம் என்பவர் மருது பாண்டியர்களின் அமைச்சர் ஆவார்.
விடைக்குறிப்பு:
தவறு
3. 1799 அக்டோபர் 17 ம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.
விடைக்குறிப்பு:
சரி
4. திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதர் ஆவார்.
விடைக்குறிப்பு:
சரி
V. அ) பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியான விடையைக் குறிப்பிடவும்.
I. வேலூர் புரட்சி 1801 ஆம் ஆண்டு ஏற்பட்டது.II. நான்காம் மைசூர் போருக்குப்பின் திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்.
III. வேலூர் புரட்சியின் போது வில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக இருந்தார்
IV. ஆங்கிலேயருக்கு எதிரான வேலூர் கலகத்தின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.
a) I & II சரி
b) III & IV சரி
c) II & III சரி
d) I, II, & IV சரி
விடைக்குறிப்பு:
c) II & III சரி
V. ஆ) தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்.
1. மருது பாண்டியர் - எட்டயபுரம்2. கோபால நாயக்கர் - திண்டுக்கல்
3. கேரளவர்மன் - மலபார்
4. துண்டாஜி – மைசூர்
விடைக்குறிப்பு:
1. மருது பாண்டியர் - எட்டயபுரம்
V. இ) மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
கட்டபொம்மன் ஊமத்துரை
செவத்தையா
திப்பு சுல்தான்
விடைக்குறிப்பு:
திப்பு சுல்தான்
VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி.
1. பாளையக்காரர்கள் என்பவர் யார்? சிலரின் பெயரைக் கூறுக?- விஸ்வநாதர் நாயக்கர் பாளையக்காரர் முறையை ஏற்படுத்தினார்.
- பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள்.
2. பாளையக்கார புரட்சியில் வேலு நாச்சியாரின் பங்கு என்ன?
- இந்தியாவில் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல்பெண்ணரசி ஆவார்.
- இவர் தமிழர்களால் 'தென்னிந்தியாவின் ஜான்சி ராணி' என அறியப்படுகிறார்.
3. தென்னிந்திய புரட்சியில் பாளையக்கார கூட்டமைப்பின் தலைவர்கள் யாவர்?
- சிவகங்கை - மருது சகோதரர்கள், திண்டுக்கல் கோபால நாயக்கர்.
- மலபார்- கேரளவர்மன், மைசூர் கிருஷ்ணப்ப நாயக்கர்.
4. 'திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின்' முக்கியத்துவம் யாது?
- ஜூன் 1801ல் மருது சகோதரர்கள் 'திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்டனர்.
- இது ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் அழைப்பாக இருந்தது.
5. வேலூர் கலகத்தின் விளைவுகளை எழுதுக?
- புதிய சீருடை முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
- திப்புவின் குடும்பத்தினர் வேலூரிலிருந்து கல்கத்தாவிற்கு அனுப்ப்பட்டனர்.
6. 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான உடனடிக் காரணம் என்ன?
- இராணுவத்தில் புதிய என்பீல்டுரக துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது.
- இதுவே புரட்சிக்கான உடனடிக் காரணமாக இருந்தது.
VII. விரிவான விடையளி.
1. பூலித்தேவர் பற்றி உனக்குத் தெரிந்தவற்றை எழுதுக?- இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் முன்னோடியாக இருந்தவர் ஆவார்.
- அவர் நெற்கட்டும் செவல் என்ற பாளையத்தின் பாளையக்காரர் ஆவார்.
- ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்த முதல் இந்திய மன்னர் ஆவார்.
- ஆங்கிலேயரை எதிர்க்க பாளையக்காரர்களின் கூட்டமைப்பை உருவாக்க முயன்றார்.
- அவரது விடுதலைக்கான போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
2. தீரன் சின்ன மலைக்கும் ஆங்கிலேயருக்கும் இடையேயான போராட்டத்திற்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளை விவரி?
- தீரன் சின்னமலை ஆங்கிலேயரை எதிர்த்த கொங்குநாட்டு பாளையக்காரர் ஆவார்.
- மைசூர் போர்களுக்குப் பிறகு கொங்குநாடு முழுவதும் ஆங்கிலேயரின் வசமானது.
- இவர் ஓடாநிலையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட அங்கு ஒரு கோட்டையைக் கட்டினார்.
- ஆங்கிலேயரைத் தாக்க அவர் மராத்தியர் மற்றும் மருது சகோதரர்களின் உதவியைப் பெற முயன்றார்.
- இச்சூழ்நிலைகள் தீரன் சின்ன மலைக்கும் ஆங்கிலேயருக்கும் இடையேயான போராட்டத்திற்கு வழிவகுத்ததது.
3. 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்களை எழுதுக?
- ஆங்கிலேயரின் பொருளாதார சுரண்டல் கொள்கை.
- வாரிசு இழப்புக் கொள்கை மற்றும் துணைப்படைத் திட்டம்.
- கிறித்துவ சமய பரப்பு குழுவினரின் மதமாற்ற நடவடிக்கைகள்.
- இந்திய சிப்பாய்களுக்கு குறைவான ஊதியம் மற்றும் பதவி உயர்வு மறுக்கப்பட்டது.
- இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு ரக துப்பாக்கியே புரட்சிக்கான உடனடிக் காரணமாக இருந்தது.
4. 1857 ஆம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணங்களை எழுதுக.
- இந்திய புரட்சியாளர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை.
- நவீன ஆயுதங்கள் புரட்சியாளர்களிடையே இல்லை
- கலகத்தில் ஈடுபட்டவர்கள், ஆங்கில படைக்கு இணையானவர்களாக இல்லை.
- வங்காளம், பம்பாய், சென்னை ஆகிய பகுதிகள் புரட்சியில் கலந்து கொள்ளவில்லை
- நவீன கல்வி கற்ற இந்தியர்கள் புரட்சியை ஆதரிக்கவில்லை.
VIII. உயர் சிந்தனை வினா.
1. 1857ஆம் ஆண்டு புரட்சியில் தலைவர்களிடையே ஒருபொதுவான குறிக்கோள் இல்லை – நிரூபி.- 1857 ஆம் ஆண்டு பெரும்புரட்சியின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், புரட்சியில் ஈடுபட்ட தலைவர்களிடையே பொதுவான ஒரே நோக்கமும் குறிக்கோளும் இல்லை என்பது வெளிப்படையான உண்மை.
- ஆங்கிலேயரை எதிர்ப்பது என்பதைத் தவிர வேறு பொதுவான குறிக்கோள் ஒன்றும் இல்லை.
- பொதுவாக ஒரு இடத்தைக் கைப்பற்றியதும், அடுத்து என்ன செய்வது என்பதை அறியாமல் கொள்ளையடிப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தனர்.
- தலைவர்களிடையே ஒருமித்த குறிக்கோள் இல்லை.
- உதாரணமாக இஸ்லாமியர்கள் முகலாய அரசை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினார்கள்.
- ஆனால் இந்துக்கள் மராத்திய செல்வாக்கை மீண்டும் நிறுவ முயற்சித்தனர்.
- சில இந்தியத் தலைவர்கள் புரட்சியில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தனர்.
- இவ்வாறு தலைவர்களிடையே ஒரே நோக்கமும் குறிக்கோளும் இல்லாதது புரட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணமாயிற்று.







0 Comments:
Post a Comment