Tamil Nadu Board 8th Standard Social Science - History Unit 2: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 2 – History from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of History Unit 2 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 2: வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. 1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்அ) சுஜா - உத் - தௌலா
ஆ) சிராஜ் – உத் - தௌலா
இ) மீர்காசிம்
ஈ) திப்பு சுல்தான்
விடைக்குறிப்பு:
ஆ) சிராஜ் - உத் - தௌலா
2. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1757
ஆ) 1764
இ) 1765
ஈ) 1775
விடைக்குறிப்பு:
அ) 1757
3. பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
அ) அலகாபாத் உடன்படிக்கை
ஆ) கர்நாடக உடன்படிக்கை
இ) அலிநகர் உடன்படிக்கை
ஈ) பாரிசு உடன்படிக்கை
விடைக்குறிப்பு:
அ) அலகாபாத் உடன்படிக்கை
4. பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி __________ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) ஏதுமில்லை
விடைக்குறிப்பு:
ஆ) இரண்டாம்
5. ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு __________.
அ) 1756
ஆ) 1761
இ) 1763
ஈ) 1764
விடைக்குறிப்பு:
ஆ) 1761
6. மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது
அ) பிரெஞ்சுக்கார்கள் மற்றும் திப்பு சுல்தான்
ஆ) ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்
இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
ஈ) திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்
விடைக்குறிப்பு:
இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
7. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் __________.
அ) இராபர்ட் கிளைவ்
ஆ)வாரன் ஹேஸ்டிங்ஸ்
இ) காரன்வாலிஸ்
ஈ) வெல்லெஸ்லி
விடைக்குறிப்பு:
இ) காரன்வாலிஸ்
8. ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் __________.
அ) இரண்டாம் பாஜிராவ்
ஆ) தௌலத்ராவ் சிந்தியா
இ) ஷாம்பாஜி போன்ஸ்லே
ஈ) ஷாயாஜி ராவ் கெய்க்வாட்
விடைக்குறிப்பு:
அ) இரண்டாம் பாஜிராவ்
9. மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா __________.
அ) பாலாஜி விஸ்வநாத்
ஆ) இரண்டாம் பாஜிராவ்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) பாஜிராவ்
விடைக்குறிப்பு:
ஆ) இரண்டாம் பாஜிராவ்
10. துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய அரசு எது?
அ) அயோத்தி
ஆ) ஹைதராபாத்
இ) உதய்பூர்
ஈ) குவாலியர்
விடைக்குறிப்பு:
ஆ) ஹைதராபாத்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு __________.விடைக்குறிப்பு:
1757
2. சிராஜ் உத் - தௌலாவின் தலைமை படைத் தளபதி __________.
விடைக்குறிப்பு:
மீர்ஜாபர்
3. இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் __________.
விடைக்குறிப்பு:
கர்நாடக மற்றும் ஹைதராபாத் வாரிசுரிமை போர்.
4. இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் __________.
விடைக்குறிப்பு:
டல்ஹௌசி பிரபு
5. திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் __________.
விடைக்குறிப்பு:
வெல்லெஸ்லி பிரபு
6. திப்பு சுல்தான் இறப்புக்கு பின் __________ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.
விடைக்குறிப்பு:
மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்
7. 1800ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் __________.
விடைக்குறிப்பு:
வெல்லெஸ்லி பிரபு
III. பொருத்துக.
|
1
|
அய் - லா - சப்பேல்
உடன்படிக்கை
|
முதல் ஆங்கிலேய
மைசூர் போர்
|
|
2
|
சால்பை உடன்படிக்கை
|
முதல் கர்நாடகப்
போர்
|
|
3
|
பாரிசு உடன்படிக்கை
|
மூன்றாம் கர்நாடகப்
போர்
|
|
4
|
ஸ்ரீரங்கபட்டின
உடன்படிக்கை
|
முதல் மராத்திய
போர்
|
|
5
|
மெட்ராஸ்
உடன்படிக்கை
|
மூன்றாம் ஆங்கிலே
மைசூர் போர்
|
|
1
|
அய் - லா - சப்பேல்
உடன்படிக்கை
|
முதல் கர்நாடகப்
போர்
|
|
2
|
சால்பை உடன்படிக்கை
|
முதல் மராத்திய
போர்
|
|
3
|
பாரிசு உடன்படிக்கை
|
மூன்றாம் கர்நாடகப்
போர்
|
|
4
|
ஸ்ரீரங்கபட்டின
உடன்படிக்கை
|
மூன்றாம் ஆங்கிலே
மைசூர் போர்
|
|
5
|
மெட்ராஸ்
உடன்படிக்கை
|
முதல் ஆங்கிலேய
மைசூர் போர்
|
IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.
1. அலிவர்திகான் மறைவுக்கு பின்னர் சிராஜ்- உத் தௌலா வங்காளத்தின் அரியணை ஏறினார்.விடைக்குறிப்பு:
சரி
2. பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்.
விடைக்குறிப்பு:
தவறு
3. ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது.
விடைக்குறிப்பு:
தவறு
4. வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.
விடைக்குறிப்பு:
சரி
5. காரன்வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்.
விடைக்குறிப்பு:
சரி
V. கீழ்க்கண்டவைகளுள் சரியாக பொருந்தியுள்ளது எது?
1. அடையாறு போர் - 17482. ஆம்பூர் போர் - 1754
3. வந்தவாசிப் போர் - 1760
4. ஆற்காட்டுப் போர் - 1749
விடைக்குறிப்பு:
3. வந்தவாசிப் போர் - 1760
VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி.
1. இருட்டறை துயரச் சம்பவம் பற்றி குறிப்பு வரைக.- சிராஜ்-உத்-தௌலா 146 ஆங்கிலேயர்களை சிறைப்பிடித்து காற்று புகாத ஒரு சிறிய இருட்டறையில் ஓர் இரவு முழுவதும் அடைத்து வைத்தார்.
- மறுநாள் காலை அறையை திறந்தபோது அவர்களுள் 123 பேர் மூச்சு திணறி இறந்தனர்.
2. பிளாசிப் போருக்குபின் ஆங்கிலேயர்கள் பெற்ற சலுகைகள் யாவை?
- பிளாசிப் போர் வெற்றி ஆங்கிலேயரது அரசியல் அதிகாரத்தை இந்தியாவில் தொடங்கி வைத்தது.
- இது இரண்டு நூற்றாண்டுகளுக்கு அவர்களது ஆதிக்கத்தை நீடிக்கவும் செய்தது.
3. பக்சார் போருக்கான காரணங்களை குறிப்பிடுக.
- வங்காள நவாப் மீர்காசிம் சுங்க வரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது கோபமடைந்து போரில் இறங்கினார்.
4. முதல் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள் யாவை?
- ஹைதர் அலியின் வளர்ச்சி, ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் எதிர்ப்புக்கு காரணமாயின.
- ஹைதர் அலிக்கு எதிராக ஆங்கிலேயர்கள் முக்கூட்டணியை ஏற்படுத்தினர்.
5. மூன்றாம் மராத்திய போரின் விளைவுகள் யாவை?
- மராத்திய பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது.
- மராத்திய அரசுகளின் பகுதிகள் ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டன.
6. துணைப்படைத்திட்டத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக.
- ஹைதராபாத்
- அயோத்தி
- குவாலியர்
- தஞ்சாவூர்
VII. விரிவான விடையளி.
1. இரண்டாம் கர்நாடக போர் குறித்து ஒரு கட்டுரை எழுதுக.காரணங்கள்:
- கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை பிரச்சனையே இப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
- ஆம்பூரில் நடைபெற்ற போரில் பிரெஞ்சு கூட்டுப் படைகளால் கர்நாடக நவாப் அன்வாருதீன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
- சந்தாசாகிப்பை பிரெஞ்சுக்கார்கள் கர்நாடக நவாப் ஆக்கினர்.
- இச்சமயத்தில் ஆற்காட்டை இராபர்ட் கிளைவ் கைப்பற்றினார்.
- அன்வாருதீனின் மகன் முகமது அலி ஆங்கிலேயரின் உதவியுடன் ஆற்காட்டு நவாப் ஆனார்.
- பிரெஞ்சு அரசு ஆங்கிலேயருடன் பாண்டிச்சேரி உடன்படிக்கையினை செய்து கொண்டது.
- போருக்கு முன்னர் இருந்த பகுதிகள் அவரவரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
2. நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் பற்றி எழுதுக.
காரணங்கள்:
- திப்பு சுல்தானின் ஆங்கிலேயருக்கு எதிரான வெளிநாட்டு கூட்டணிக்கான முயற்சி.
- ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கையின் மூலம் ஏற்பட்ட அவமரியாதை.
- 1799 ல் வெல்லெஸ்லி பிரபு திப்புவின் மீது போர் தொடுத்தார்.
- திப்பு சுல்தான் வீரதீரமாக போரிட்டாலும் இறுதியில் கொல்லப்பட்டார்.
- கோயமுத்தூர், தாராபுரம் ஆகிய பகுதிகளை ஆங்கிலேயர் இணைத்து கொண்டனர்.
- திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டைக்கு அனுப்பட்டனர்.
3. பிரிட்டிஷ் ஆட்சியை விரிவுபடுத்த டல்ஹௌசி பிரபு கொண்டு வந்த கொள்கையை பற்றி விவரி?
- டல்ஹௌசி பிரபு ஆங்கிலேய பேரசை விரிவுபடுத்த வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தார்.
- இக்கொள்கையின்படி, சுதேச மன்னர்கள் வாரிசுகளை தத்தெடுக்க சில கட்டுப்பாடுகளை விதித்தனர்.
- இதன்படி சுதேச மன்னரின் ஆட்சிப்பகுதி ஆங்கிலேயரிடம் செல்ல நேரிடும் எனப்பட்டது.
- இக்கொள்கையினை இந்தியர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
- 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்கு இக்கொள்கை முக்கிய காரணமாக அமைந்தது.
4. வெல்லெஸ்லி பிரபு எவ்வாறு ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியாவில் விரிவுபடுத்தினார்?
- வெல்லெஸ்லி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே துணைப்படைத் திட்டமாகும்.
- இந்தியாவில் இருந்த சுதேச அரசுகளை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதே இதன் நோக்கம் ஆகும்.
- ஆங்கிலேயர் இந்திய சுதேச அரசர்களின் செலவிலேயே தன்னுடைய படையை பராமரித்தனர்.
- ஆங்கிலேயரைத் தவிர மற்ற ஐரோப்பியர்கள் அனைவரும் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
- இந்த இராஜதந்திர முயற்சி ஆங்கிலேயரை இந்தியாவில் தலையாய சக்தியாக மாற்றியது.
VIII. உயர் சிந்தனை வினா.
1. இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.- இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகக் கடும் போட்டியிட்டவர்கள் பிரெஞ்சுக்காரர்களே.
- ஆயினும் இந்தியாவில் தங்களது மேலாண்மையை நிலை நாட்டுவதில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர்.
- ஆங்கிலேயரிடம் மிகுந்த பண பலமும், படை வலிமையும் இருந்தது.
- ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குத் தேவையான எல்லா உதவிகளையும் ஆங்கில அரசு செய்தது.
- ஆங்கிலேயருக்கு சிறந்த வாணிப வசதிகள் இருந்தன.
- ஆங்கிலேயரிடம் மிக வலிமையான கப்பற்படை இருந்தது.
- ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் உயர் அதிகாரிகளுக்கிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தது.
- நெசவுத் தொழிலில் ஏற்பட்ட முன்னேற்றமும் ஒரு முக்கிய காரணமாகும்.
- ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பொருளாதார வளமும், இராஜதந்திரமும் அவர்களின் வெற்றிக்கு காரணமாகும்.
- ஆனால் இந்திய வணிகர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை.
- இந்திய மன்னர்களின் ஏற்றத்தாழ்வுகளும், அறியாமையும் ஆங்கிலேயரின் வெற்றிக்குக் காரணமாயிற்று.







0 Comments:
Post a Comment