8th Social Science - Book Back Answers - History Unit 7 - Tamil Medium Guide

  

 


    8th Social Science - Book Back Answers - History Unit 7 - Tamil Medium

    Tamil Nadu Board 8th Standard Social Science - History Unit 7: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 7 – History from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 7 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 7: ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்புற மாற்றங்கள் 


    I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

    1. பழங்கால நகரங்கள் எனப்படுவது
    அ) ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ
    ஆ) டெல்லி மற்றும் ஹைதராபாத்
    இ) பம்பாய் மற்றும் கல்கத்தா
    ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
    விடைக்குறிப்பு:
    இ) பம்பாய் மற்றும் கல்கத்தா

    2. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரம் / நகரங்கள்
    அ) சூரத்
    ஆ) கோவா
    இ) பம்பாய்
    ஈ) மேற்கண்ட அனைத்தும்
    விடைக்குறிப்பு:
    ஈ) மேற்கண்ட அனைத்தும்

    3. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய நகரமயமாக்கலின் ஒரு புதிய நடைமுறை
    அ) சூயஸ் கால்வாய் திறப்பு
    ஆ) நீராவிப் போக்குவரத்து அறிமுகம்
    இ) ரயில்வே கட்டுமானம்
    ஈ) மேற்கண்ட அனைத்தும்
    விடைக்குறிப்பு:
    ஈ) மேற்கண்ட அனைத்தும்

    4. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது
    அ) வர்த்தகத்திற்காக
    ஆ) தங்கள் சமயத்தைப் பரப்புவதற்காக
    இ) பணி புரிவதற்காக
    ஈ) ஆட்சி செய்வதற்காக
    விடைக்குறிப்பு:
    அ) வர்த்தகத்திற்காக

    5. புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம்
    அ) பம்பாய்
    ஆ) கடலூர்
    இ) மதராஸ்
    ஈ) கல்கத்தா
    விடைக்குறிப்பு:
    இ) மதராஸ்

    6. 1744ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது எது?
    அ) புனித வில்லியம் கோட்டை
    ஆ) புனித டேவிட் கோட்டை
    இ) புனித ஜார்ஜ் கோட்டை
    ஈ) இவற்றில் எதுவுமில்லை
    விடைக்குறிப்பு:
    இ) புனித ஜார்ஜ் கோட்டை

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

    1. இந்தியாவில் இருப்புப் பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு __________.
    விடைக்குறிப்பு:

    1853

    2. இந்தியாவின் 'உள்ளாட்சி அமைப்பின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் __________. 
    விடைக்குறிப்பு:

    ரிப்பன் பிரபு

    3. 1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் __________ அறிமுகப்படுத்தியது.
    விடைக்குறிப்பு:

    இரட்டையாட்சி முறையை

    4. நகராட்சி உருவாவதற்கு பொறுப்பாக இருந்தவர் __________.
    விடைக்குறிப்பு:

    சர் ஜோசியா சைல்டு 

    5. __________ இல் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் மதராசபட்டினத்தில் ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனத்தை நிறுவதற்கு அனுமதி பெற்றனர்.
    விடைக்குறிப்பு:

    1639

    III. பொருத்துக.  

    1.
    பம்பாய்
    சமய மையம்
    2.
    இராணுவ குடியிருப்புகள்
    மலை வாழிடங்கள்
    3.
    கேதர்நாத்
    பண்டைய நகரம்
    4.
    டார்ஜிலிங்
    ஏழு தீவு
    5.
    மதுரை
    கான்பூர்

    விடைக்குறிப்பு:

    1.
    பம்பாய்
    ஏழு தீவு
    2.
    இராணுவ குடியிருப்புகள்
    கான்பூர்
    3.
    கேதர்நாத்
    சமய மையம்
    4.
    டார்ஜிலிங்
    மலை வாழிடங்கள்
    5.
    மதுரை
    பண்டைய நகரம்
     

    IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.   

    1. இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து நகரங்கள் செழித்து வளர்ந்தன.
    விடைக்குறிப்பு:

    சரி

    2. பிளாசிப் போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் அரசியல் ஆதிக்கம் பெற்றனர். 
    விடைக்குறிப்பு:

    சரி

    3. வில்லியம் கோட்டை சென்னையில் அமைந்துள்ளது. 
    விடைக்குறிப்பு:

    தவறு

    4. குடியிருப்புகளில் இராணுவ வீரர்கள் வாழத் தொடங்கினர். 
    விடைக்குறிப்பு:

    சரி

    5. மதராஸ் 1998இல் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது. 
    விடைக்குறிப்பு:

    தவறு

    V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

    1. கூற்று: இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது.
    காரணம்: பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகக் கொள்கை மற்றும் தொழில்துறை புரட்சி இந்திய உள்நாட்டு தொழில்களை அழித்தன.

    அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு
    ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
    இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது
    ஈ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை
    விடைக்குறிப்பு:
    இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

    2. பின்வரும் எந்த அறிக்கை / அறிக்கைகள் உண்மையற்றவை ?
    i) ஸ்ரீரங்க ராயலு ஆங்கிலேயர்களுக்கு மதராசபட்டணத்தை மானியமாக வழங்கினார்.
    ii) டே மற்றும் கோகன் ஆகிய இருவரும் புனித ஜார்ஜ் கோட்டை கட்டியதற்கு பொறுப்பானவர்கள்.
    iii) 1969ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.

    அ) i மட்டும்
    ஆ) i மற்றும் ii 
    இ) ii மற்றும் iii
    ஈ) iii மட்டும்
    விடைக்குறிப்பு:
    ஆ) i மற்றும் ii

    3. கூற்று: ஆங்கிலேயர்கள் தங்கள் மாற்று தலைநகரங்களை மலைப்பாங்கான பகுதிகளில் அமைத்தனர்.
    காரணம்: அவர்கள் இந்தியாவில் கோடைக்காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்.

    அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு
    ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
    இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது
    ஈ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை
    விடைக்குறிப்பு:
    இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

    VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி.

    1. நகர்ப்புற பகுதி என்றால் என்ன?
    • ஒரு நகர்ப்புற பகுதி என்பது அதிக மக்கள் தொகை அடர்த்தியோடு நன்கு கட்டமைக்கப்பட்ட சூழலில் வாழ்வதும் ஆகும்.

    2. மலைப்பிரதேசங்கள் காலனித்துவ நகர்ப்புற வளர்ச்சியில் தனித்துவமான அம்சமாக இருந்தன. ஏன்?
    • ஆங்கிலேயர்களுக்கு இந்திய மலைகளின் குளிர்ந்த காலநிலை பாதுகாப்பானதாக இருந்தது.
    • ஆகையால் அவர்கள் மாற்றுத் தலைநகரங்களை குளிர்ந்த பகுதிகளான டார்ஜிலிங்கிலும் டேராடூனிலும் ஏற்படுத்தினர்.

    3. மாகாண நகரங்கள் மூன்றின் பெயர்களைக் குறிப்பிடுக?
    • மதராஸ், கல்கத்தா பம்பாய்.

    4. 19ஆம் நூற்றாண்டில் நகரமயமாக்கலின் புதிய போக்குக்கு ஏதேனும் நான்கு காரணங்களைக் கூறுக.
    • சூயஸ் கால்வாய் திறப்பு.
    • ரயில்வே சாலைகள் அமைத்தல்.
    • துறைமுகங்கள் அமைத்தல்.
    • தொழிற்சாலைகள் வளர்ச்சி.

    5. இராணுவ குடியிருப்பு நகரங்கள் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
    • ஆங்கிலேயர் தங்கள் இராணுவ வீரர்க்களுக்கு இராணுவக் குடியிருப்புகளை ஏற்படுத்தினர்.
    • இப்பகுதிகள் படிப்படியாக இராணுவ நகரங்களாக வளர்ந்தன. எடுத்துகாட்டு: கான்பூர், லாகூர்.
    6. பிரிட்டிஷ் ஆட்சியின் போது மதராஸ் மாகாணம் உள்ளடக்கிய பகுதிகள் யாவை?
    தமிழ்நாடு, வடக்கு கேரளா, கடலோர ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெற்கு ஒடிசா.

    VII. விரிவான விடையளி.   

    1. காலனித்துவ நகர்ப்புற வளர்ச்சியை பற்றி விளக்குக.
    அ) துறைமுக நகரங்கள்:
    • துறைமுகங்களைச் சுற்றி மாகாணங்களின் தலைநகரங்கள் வளர்ச்சியடைந்ததது .
    • எ.கா: மதராஸ், கல்கத்தா மற்றும் பம்பாய்
    ஆ) இராணுவக் குடியிருப்பு நகரங்கள்:
    • ஆங்கிலேய இரணுவக் குடியிருப்புக்கள் படிப்படியாக இராணுவ நகரங்களாக வளர்ந்தன. 
    • எடுத்துகாட்டு: கான்பூர், லாகூர்
    இ) மலை வாழிடங்கள்:
    • ஆங்கிலேயர்களுக்கு இந்திய மலைகளின் குளிர்ந்த காலநிலை தலைநகரங்கள் பாதுகாப்பானதாக இருந்தது. 
    • எ.கா. டார்ஜிலிங், டேராடூன்
    ஈ) இரயில்வே நகரங்கள்:
    • ஆங்கிலேயர்களின் இரயில்வே நகரங்களும் ஒருவகை நகர்ப்புற குடியேற்றங்களாக ஏற்படுத்தப்பட்டன. 
    • எ.கா.சென்னை, மும்பை, கல்கத்தா.

    2. மதராஸின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை பற்றி எடுத்துரைக்கவும்.
    • மதராஸ் நகரத்தின் தொடக்கம் இந்தியாவில் பிரிட்டிஷ் வணிக நிறுவனத்திற்கு முன்பிருந்தே உள்ளது.
    • ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு கி.பி. 1600இல் தொடங்கப்பட்டது.
    • ஆங்கில வணிகர்களின் ஜவுளி வர்த்தகத்தேடல் கிழக்கு கடற்கரையிலும் இருந்தது.
    • பிரான்சிஸ் டே என்பவர் மதராசப்பட்டினத்தில் 1639இல் ஒரு புனித ஜார்ஜ் கோட்டையை அமைத்தார்.
    • இப்பகுதி பின்னர் மதராஸ் நகரம் என அழைக்கப்பட்டது.

    3. இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது எப்படி?
    • பிரிட்டிஷாரின் சுதந்திரமான வர்த்தகத்தின் விளைவாக இந்திய உற்பத்தித் தொழில்கள் அழிக்கப்பட்டன.
    • இந்தியா பாரம்பரிய கைவினைத் தொழில்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
    • பிரிட்டிஷாரின் தொழிற்புரட்சியின் விளைவாக இந்திய கைவினை நகரங்கள் அழிந்தன.
    • அதிகப்படியான இறக்குமதி வரி காரணமாக இந்தியப் பொருட்கள் ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதி செய்யப்படுவது குறையலாயின.
    • இவ்வாறு இந்தியா, பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது.

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive