8th Social Science - Book Back Answers - History Unit 1 - Tamil Medium Guide

  

 


    8th Social Science - Book Back Answers - History Unit 1 - Tamil Medium

    Tamil Nadu Board 8th Standard Social Science - History Unit 1: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 1 – History from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 1 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 1: ஐரோப்பியர்களின் வருகை


    I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

    1. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
    அ) வாஸ்கோடகாமா
    ஆ) பார்த்தலோமியோடயஸ்
    இ) அல்போன்சோ-டி-அல்புகர்க்
    ஈ) அல்மெய்டா
    விடைக்குறிப்பு:
    இ) அல்போன்சோ-டி-அல்புகர்க்

    2. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
    அ) நெதர்லாந்து (டச்சு)
    ஆ) போர்ச்சுகல்
    இ) பிரான்ஸ்
    ஈ) பிரிட்டன்
    விடைக்குறிப்பு:
    ஆ) போர்ச்சுகல்

    3. 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி - நோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
    அ) பிரான்ஸ்
    ஆ) துருக்கி
    இ) நெதர்லாந்து (டச்சு) 
    ஈ) பிரிட்டன்
    விடைக்குறிப்பு:
    ஆ) துருக்கி

    4. சர் வில்லியம் ஹாக்கின்ஸ் __________ நாட்டைச் சேர்ந்தவர்.
    அ) போர்ச்சுக்கல்
    ஆ) ஸ்பெயின்
    இ) இங்கிலாந்து
    ஈ) பிரான்ஸ்
    விடைக்குறிப்பு:
    இ) இங்கிலாந்து

    5. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
    அ) வில்லியம் கோட்டை
    ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை
    இ) ஆக்ரா கோட்டை
    ஈ) டேவிட் கோட்டை
    விடைக்குறிப்பு:
    ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை

    6. பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்.
    (அ) ஆங்கிலேயர்கள்
    (ஆ) பிரெஞ்சுக்காரர்கள் 
    (இ) டேனியர்கள்
    (ஈ) போர்ச்சுக்கீசியர்கள்
    விடைக்குறிப்பு:
    (ஆ) பிரெஞ்சுக்காரர்கள் 

    7.தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள __________ தரங்கம்பாடி வர்த்தக மையமாக இருந்தது.
    (அ) போர்ச்சுக்கீசியர்கள் 
    (ஆ) ஆங்கிலேயர்கள் 
    (இ) பிரெஞ்சுக்காரர்கள்
    (ஈ) டேனியர்கள்
    விடைக்குறிப்பு:
    (ஈ) டேனியர்கள்

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

    1. இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) __________ ல் அமைந்துள்ளது.
    விடைக்குறிப்பு:

    புதுடெல்லி

    2. போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் __________ என்பவரால் ஆதரிக்கப்பட்டார்.
    விடைக்குறிப்பு:

    இரண்டாம் ஜான்

    3. இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் __________ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.
    விடைக்குறிப்பு:

    போர்ச்சுகீசிய

    4. முகலாயப் பேரரசர் __________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார்.
    விடைக்குறிப்பு:

    ஜஹாங்கீர்

    5. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் __________ என்பவரால் நிறுவப்பட்டது.
    விடைக்குறிப்பு:

    கால்பர்ட்

    6. __________ என்ற டென்மார்க் மன்னர் டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.
    விடைக்குறிப்பு:

    நான்காம் கிரிஸ்டியன்

    III. பொருத்துக. 

    1
    டச்சுக்காரர்கள்
    1664
    2
    ஆங்கிலேயர்கள்
    1602
    3
    டேனியர்கள்
    1600
    4
    பிரெஞ்சுக்காரர்கள்
    1616
    விடைக்குறிப்பு:
    1
    டச்சுக்காரர்கள்
    1602
    2
    ஆங்கிலேயர்கள்
    1600
    3
    டேனியர்கள்
    1616
    4
    பிரெஞ்சுக்காரர்கள்
    1664
     

    IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.   

    1. சுயசரிதை எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும். 
    விடைக்குறிப்பு:

    சரி

    2. நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.
    விடைக்குறிப்பு:
    சரி

    3. ஆனந்தரங்கம, பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.
    விடைக்குறிப்பு:

    தவறு

    4. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக் காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது. 
    விடைக்குறிப்பு:

    சரி

    V. 1) பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (✓) செய்க.

    1. கவர்னர் நினோ-டி-குன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
    2. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர்.
    3. டச்சுக்காரர்கள், சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர்.
    4. இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ், ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவை அனுப்பினார்.

    (அ) 1 மற்றும் 2 சரி
    (ஆ) 2 மற்றும் 4 சரி
    (இ) 3 மட்டும் சரி
    (ஈ) 1, 2 மற்றும் 4 சரி
    விடைக்குறிப்பு:
    (ஈ) 1, 2 மற்றும் 4 சரி

    V. 2) தவறான இணையைக் கண்டறிக.

    (அ) பிரான்சிஸ் டே - டென்மார்க்
    (ஆ) பெட்ரோ காப்ரல் - போர்ச்சுகல்
    (இ) கேப்டன் ஹாக்கின்ஸ் - இங்கிலாந்து
    (ஈ) கால்பர்ட் - பிரான்ஸ்
    விடைக்குறிப்பு:

    (அ) பிரான்சிஸ் டே - டென்மார்க்

    VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி.

    1. ஆவணக் காப்பகங்கள் பற்றி சிறுகுறிப்பு தருக.
    • வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்களாக உள்ளன.
    • இது கடந்த கால நிர்வாக முறையை தெரிந்து கொள்ள உதவுகின்றன.

    2. நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.
    • நிர்வாக வரலாற்றை அறிய ஆதாரமாக நாணயங்கள் உள்ளன.
    • நவீன இந்தியாவின் முதல் நாணயம் ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்டது.

    3. இளவரசர் ஹென்றி “மாலுமி ஹென்றி" என ஏன் அழைக்கப்படுகிறார்?
    • இளவரசர் ஹென்றி உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராய தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார்.
    • இதனால் அவர் மாலுமி ஹென்றி" என அழைக்கப்படுகிறார்.

    4. இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயரை எழுதுக.
    • சூரத்
    • கொச்சி
    • பழவேற்காடு
    • நாகப்பட்டினம்.

    5. இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக மையங்களைக் குறிப்பிடுக.
    • சூரத்
    • பம்பாய் 
    • சென்னை 
    • கல்கத்தா

    VII. விரிவான விடையளி.   

    1. நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் பற்றி குறிப்பிடுக.
    • இது நாட்டின் அரசியல், சமூக-பொருளாதார நிலைப் பற்றி அறிய உதவுகின்றன.
    • ஐரோப்பியர்கள் தங்களது அலுவலக செயல்பாடுகளை அரசாங்கப் பதிவேடுகளில் பதிவு செய்துள்ளனர்
    • பராமரிக்கப்பட்ட அவர்களது பதிவேடுகள் மதிப்பு மிக்க ஆதாரங்களாக உள்ளன.
    • பாண்டிச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள ஆவணக் காப்பகங்கள் விலை மதிப்பற்றதாகும்.

    2. போர்ச்சுகீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
    • வாஸ்கோடகாமா கி.பி. 1498 இல் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.
    • கள்ளிக்கோட்டை, கொச்சின் பகுதிகளில் வர்த்தக மையத்தை நிறுவினார்.
    • இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர் அல்போன்சோ டி-அல்புகர்க் ஆவார்.
    • போர்ச்சுகீசியர் 1530இல் தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
    • இவ்வாறு போர்ச்சுக்கீசியர் கோவா, பம்பாய் மற்றும் சென்னை போன்ற பகுதிகளையும் கைப்பற்றினர்.

    3. ஆங்கிலேயர்கள், எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
    • கி.பி. 1600 டிசம்பர் 31 ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது.
    • ஜஹாங்கீர் 1613 இல் சூரத்தில் ஆங்கில வர்த்தக மையத்தை அமைக்க அனுமதித்தார்.
    • பிரான்சிஸ் டே சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையை நிறுவினார்.
    • பின்னர் பம்பாய், கல்கத்தா ஆகிய பகுதிகளில் வர்த்தக மையங்கள் நிறுவப்பட்டது.
    • பிளாசிப் போர் மற்றும் பக்சார் போருக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் ஓர் அரசியல் சக்தியாக மாறினர்.

    VIII. உயர் சிந்தனை வினா.   

    1. கான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது?
    • உலக வரலாற்றில் கான்ஸ்டாண்டி நோபிளின் வீழ்ச்சி ஒரு முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது.
    • வாணிபத்தைப் பொருத்தவரையில் கான்ஸ்டாண்டி நோபிள் ஒரு சாதகமான இடத்தில் அமைந்திருந்தது. 
    • கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கிடையே நடந்த வாணிபத் தொடர்பு இதன் வழியாக நடைபெற்றது.
    • 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி நோபிளைத் துருக்கியர் கைப்பற்றினர். 
    • அவர்கள் கிழக்கு மத்திய தரைக் கடல் வழியாக கீழநாடுகளோடு நடந்த வாணிபத்தைத் தடை செய்தனர்.
    • கான்ஸ்டாண்டி நோபிள் வழியாகச் சென்ற பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்தனர்.
    • மேலும் அவர்கள் ஐரோப்பிய வணிகர்களைத் துன்புறுத்தவும் தொடங்கினர். இதனால் பழைய வழித்தடங்கள் அடைபட்டுப் போயின. 
    • இதன் விளைவாக கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்குப் பொருட்கள் வருவது தடைபட்டது.
    • ஆனால் ஐரோப்பியர்கள் பொன் கொழிக்கும் கிழக்கு நாடுகளோடு (Golden East) நடைபெற்ற வாணிபத்தை இழக்க விரும்பவில்லை. 
    • ஏனெனில் தாங்கள் மிகவும் விரும்பிய நறுமணப் பொருட்களை இப்போது பெற முடியவில்லை. 
    • எனவே ஐரோப்பியர் புதிய. கடல் வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive