Tamil Nadu Board 8th Standard Social Science - History Unit 5: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 5 – History from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of History Unit 5 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 5: இந்தியாவில் கல்வி வளர்ச்சி
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) நிகிடின்
ஆ) யுவான் சுவாங்
இ) டொமிங்கோ பயஸ்
ஈ) பெர்னியர்
விடைக்குறிப்பு:
ஈ) பெர்னியர்
2. வங்காளத்தில் அரசர் தர்மபாலரால் நிறுவப்பட்டப் பல்கலைக்கழகம் எது?
அ) தட்சசீல பல்கலைக்கழகம்
ஆ) விக்ரமசீல பல்கலைக்கழகம்
இ) பனாரஸ் பல்கலைக்கழகம்
ஈ) நாளந்தா பல்கலைக்கழகம்
விடைக்குறிப்பு:
ஆ) விக்ரமசீல பல்கலைக்கழகம்
3. யாருடைய ஆட்சியின் போது சீனத்துறவி யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு
வருகை புரிந்தார்?
அ) இரண்டாம் சந்திரகுப்தர்
ஆ) மகேந்திர பல்லவன்
இ) முதலாம் நரசிம்ம பல்லவன்
ஈ) ஹர்ஷ வர்த்தனர்
விடைக்குறிப்பு:
இ) முதலாம் நரசிம்ம பல்லவன்
4. நாளந்தாவை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ எந்த ஆண்டு அறிவித்தது?
அ) 2006
ஆ) 2007
இ)2008
ஈ) 2009
விடைக்குறிப்பு:
ஈ) 2009
5. கல்கத்தாவில் முதல் மதரசாவை நிறுவிய கவர்னர் ஜெனரல் யார்?
அ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஆ) ராபர்ட் கிளைவ்
இ) வில்லியம் பென்டிங்
ஈ) ரிப்பன்
விடைக்குறிப்பு:
அ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
6. காலங்காலமாக ஓரங்கட்டப்பட்டிருந்த சமூகப் பெண்களுக்கெனப் பள்ளி ஒன்றை நிறுவியவர் யார்?
அ) ஜோதிபா புலே
ஆ) ராஜாராம் மோகன்ராய்
இ) கேசவ சந்திரசென்
ஈ) சர் சையது அகமது கான்
விடைக்குறிப்பு:
அ) ஜோதிபா புலே
7. ஜெர்மானிய சமயப் பரப்பாளர் பார்த்தலோமஸ் சீகன்பால்கு, தமிழ்நாட்டில் எங்கு முதல் பள்ளியை நிறுவினார்?
அ) தரங்கம்பாடி
ஆ) திருநெல்வெலி
இ) தஞ்சாவூர்
ஈ) திருச்சிராப்பள்ளி
விடைக்குறிப்பு:
அ) தரங்கம்பாடி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. அந்தணர் மற்றும் அரச குலத்தோரின் மகள்கள், மகன்கள் மட்டுமே __________ இந்தியாவில் கல்வி கற்க முடிந்தது.விடைக்குறிப்பு:
பழங்கால
2. பாப்டிஸ்ட் மிஷன் கல்லூரி 1818 இல் __________ செராம்பூர் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது.
விடைக்குறிப்பு:
செராம்பூர்
3. பேராசிரியர் கார்வே __________ வில் இந்து விதவைகளுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார்.
விடைக்குறிப்பு:
பூனா
4. அகில இந்திய மகளிர் மாநாடு தீர்மானம் இயற்றி __________ யை டில்லியில் தொடங்கியது.
விடைக்குறிப்பு:
இர்வின் சீமாட்டி கல்லூரி
5. முதல் இடை நிலைக் கல்விக்குழுவின் தலைவர் __________ ஆவார்.
விடைக்குறிப்பு:
டாக்டர் லட்சுமணசுவாமி முதலியார்
III. பொருத்துக.
|
1
|
பல்கலைக்கழக
மானியக் குழு
|
1964
|
|
2
|
கோத்தாரி கல்விக்
குழு
|
ஆங்கிலக் கல்வி
|
|
3
|
மெக்காலே
|
பெங்களுரு
|
|
4
|
இலவச, கட்டாயக் கல்வி
|
1956
|
|
5
|
டாடாவின் இந்திய
அறிவியல் கழகம்
|
6-14 வயது வரை
|
|
1
|
பல்கலைக்கழக
மானியக் குழு
|
1956
|
|
2
|
கோத்தாரி கல்விக்
குழு
|
1964
|
|
3
|
மெக்காலே
|
ஆங்கிலக் கல்வி
|
|
4
|
இலவச, கட்டாயக் கல்வி
|
6-14 வயது வரை
|
|
5
|
டாடாவின் இந்திய
அறிவியல் கழகம்
|
பெங்களுரு
|
IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.
1. சிந்துவெளி எழுத்துக்களும் கீழடியில் அகழ்தெடுக்கப்பட்ட பானையோடுகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் ஒன்றே என்பதை வெளிக்காட்ட நமக்குச் சான்றுகள் கிடைத்துள்ளன.விடைக்குறிப்பு:
சரி
2. நாலடியார் சமணர் வழங்கிய நூலாகும்.
விடைக்குறிப்பு:
சரி.
3.உப-நி-ஷத் என்ற சொல்லுக்கு, ஒருவருக்கு அருகில் உட்காருதல்' என்று பொருள்.
விடைக்குறிப்பு:
சரி
4. புத்தர், மகாவீரர் மற்றும் கோசலர் ஆகியோர் வேதங்களின் மேலாதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.
விடைக்குறிப்பு:
சரி
5. நாளந்தா ஒரு சிறந்த வேதக் கல்வி மையமாக இருந்தது.
விடைக்குறிப்பு:
தவறு
V. பின்வருவனவற்றுள் சரியானவற்றறைத் தேர்ந்ததெடு.
i) சமஸ்கிருதக் கல்வியானது வேதங்கள், உபநிடதங்கள், தர்ம சாஸ்திரங்கள் மற்றும் காவியங்களைப் பயிற்றுவித்தது.ii) வாரணாசியில் இருந்த குருகுலக் கல்வி முறையில் ஆசிரியர்கள் தங்கள் இல்லங்களில் கற்பித்தார்கள்.
iii) பல்கலைக்கழக வளாகப் பாணியில் மடாலயங்கள் கட்டப்பட்டிருந்தன.
iv) குருகுலக் கல்வி முறையில் ஆசிரியர்கள் மன்னர்களின் மானியங்களால் பயனடைந்தனர்.
அ) i) மற்றும் ii) சரியானவை
ஆ) ii) மற்றும் iv) சரியானவை
இ) ii) மற்றும் iv) சரியானவை
ஈ) i) மற்றும் iii) சரியானவை
விடைக்குறிப்பு:
ஈ) i) மற்றும் iii) சரியானவை
VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி.
1. புறநானூறு, கல்வியின் முக்கியத்துவம் குறித்துக் கூறுவதை எழுதவும்.- ஏழ்மை நிலையில் இருப்பவரும் ஆசிரியர்களிடம் சென்று கல்வி கற்க வேண்டும்.
- மேல்தட்டு மக்கள், கற்றுச் சிறந்தோர் கீழ்த்தட்டு மக்களாயினும் அவர் சொல்லுக்குத் தலை வணங்குவர்.
2. தமிழ் இலக்கியத்திற்குச் சமணர்களின் பங்களிப்பினை எடுத்துரைக்க.
- தமிழ் இலக்கியத்திற்குச் சமணர்கள் ஆற்றியப் பணிகள் அளப்பரியவை.
- அவைகளுள் பெரிதும் போற்றப்படுபவை திருக்குறள் மற்றும் நாலடியார் ஆகியன.
3. நாளந்தா பல்கலைக்கழகம் பற்றி உங்களுக்கு தெரிவது யாது?
- பீகாரில் சிறந்த பௌத்த கல்வி மையமாகத் திகழ்ந்தது.
- இது கல்வி பயில வெளிநாட்டு மாணவர்களை ஈர்த்தது.
4. இடைக்கால இந்தியாவில் இஸ்லாமியக் கல்வியின் சாராம்சத்தைச் சுட்டிக்காட்டவும்.
- இஸ்லாமியப் பள்ளிகள் எத்தகையத் தடையுமின்றி அனைவருக்குமானதாகச் செயல்பட்டன.
- இங்கு மாணவர்கள், வட்டார மொழிகள் மற்றும் பாரசீக மொழியினையும் கற்றனர்.
5. காந்தியடிகளின் வார்தா கல்வித் திட்டம் என்றால் என்ன?
- வார்தா கல்வித் திட்டம் அனைவருக்கும் தொடக்கக் கல்வியையும் கைத்தொழில் சிலவற்றைக் கற்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
VII. கீழ்கண்டவற்றிற்கு ஒரு பத்தி அளவில் விடையளி.
1. சமண, பௌத்த மடாலயங்களில் கல்வியின் முக்கியக் கூறுகளைப் பற்றி விவாதிக்கவும்.- சமண - பௌத்த மடாலயங்கள் தங்களது துறவிகளுக்குக் கல்வி கற்பித்து வந்தன.
- இங்கு மாணவர்கள் தங்களது கல்வி பயிலும் காலம் முடியும்வரை தங்கிக் கல்வி கற்றனர்.
- சமண, பௌத்த கல்வி மையங்கள், பல்கலைக் கழகங்களைப் போன்ற பெரிய வளாகங்களில் கல்வியை வழங்கின.
- பீகாரில் சிறந்த பௌத்த கல்வி மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது.
- கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வங்காளத்தில் அரசர் தர்மபாலர், விக்ரமசீல பல்கலைக் கழகத்தை நிறுவி புத்தரின் கோட்பாடுகளைப் பரவச் செய்தார்.
2. மெக்காலேயின் புகழ்பெற்ற அறிக்கை பற்றி,சுருக்கமாக எழுதுக.
- மெக்காலே 1835ஆம் ஆண்டு தனது புகழ்பெற்ற கல்விக்கான வரைவுக் கொள்கையைத் தயாரித்தார்.
- இதன் நோக்கம் 'இந்திய மக்களிடையே ஐரோப்பிய இலக்கியத்தையும் அறிவியலையும் மேம்படுத்துவது' ஆகும்.
- இதனைக் கற்பிக்க ஆங்கில மொழியினைப் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- கவர்னர் வில்லியம் பெண்டிங் மெக்காலேயின் வரைவுக் கொள்ககைக்கு ஒப்புதல்ம் அளித்தார்.
- கல்விக்கான நிதியை இனி ஆங்கில வழிக் கல்விக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்றும் முடிவு செய்தார்.
3. விடுதலைக்குப் பிறகு இந்திய அரசால் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நிறுவனங்கள் யாவை ?
- இந்திய அரசால் மூன்று ஐந்தாண்டுத் திட்டத்திற்குள் ஐந்து ஐஐடி'கள் நிறுவப்பட்டன.
- பல்வேறு ஆராய்ச்சிப் பிரிவுகளில் 17 தேசிய ஆய்வகங்கள் நிறுவப்பட்டன.
- அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் நிறுவப்பட்டது.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிறுவப்பட்டது.
- இந்திய அரசால் அணு ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டது.
4. கோத்தாரி கல்விக் குழுவின் முக்கியமானப் பரிந்துரைகளைச் சுட்டிக்காட்டுக.
- 10 + 2 + 3 கல்விமுறை
- இடை நிலைக் கல்வியைத் தொழில் கல்வியாக்கல்.
- பொதுப் பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் கற்கலாம்.
- 6-14 வயதுள்ள குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி.
- மத்திய அரசு மொத்த உற்பத்தியில் குறைந்தபட்சம் 6 கல்வித்துறையில் முதலீடு செய்யவேண்டும்.







0 Comments:
Post a Comment