9th Tamil - Book Back Answers - Unit 4 - Guide

  
 
 



 


    9th Tamil - Book Back Answers - Unit 4 - Download

    Tamil Nadu Board 9th Standard Tamil - Unit 4: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 4 – from the Tamil Nadu State Board 9th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 4 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 4

    I. திறன் அறிவோம்

    அ) பலவுள் தெரிக.

    1. கீழ்க்காணும் மூன்று தொடர்களுள்
    அ) இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப் பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்.
    ஆ) வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.
    இ) திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டவைகும்.

    i) அ, ஆ ஆகியன சரி; இ தவறு
    ii) அ, இ ஆகியன சரி; ஆ தவறு
    iii) அதவறு; ஆ, இ ஆகியன சரி
    iv) மூன்றும் சரி
    விடைகுறிப்பு:
    ii) அ, இ ஆகியன சரி; ஆ தவறு

    2. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
    அ) தேசியத் திறனாய்வுத் தேர்வு
    ஆ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு
    இ) தேசியத் திறனாய்வுத் தேர்வ
    ஈ) மூன்றும் சரி
    விடைகுறிப்பு:
    ஆ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு

    3. பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான் யார் என்று கண்டுபிடிக்க.
    அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்.
    எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்.
    இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்.

    அ) இணையம்
    ஆ) தமிழ்
    இ) கணிணி
    ஈ) ஏவுகணை
    விடைகுறிப்பு:
    ஆ) தமிழ்

    4. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனோடு என்பது எதைக் குறிக்கிறது?
    அ) நுகர்தல்
    ஆ) தொடு உணர்வு
    இ) கேட்டல்
    ஈ) காணல்
    விடைகுறிப்பு:
    ஆ) தொடு உணர்வு

    5. விடை வரிசையைத் தேர்க.
    அ) இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும். 
    ஆ) இது கடல் பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி
    i) நேவிக், சித்தாரா
    ii) நேவிக், வானூர்தி
    iii) வானூர்தி, சித்தாரா
    iv) சித்தாரா, நேவிக்
    விடைகுறிப்பு:
    iv) சித்தாரா, நேவிக்
     

    ஆ) குறு வினா

    1. கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துக்களை எழுதுக.
    விடைகுறிப்பு:

    பொறுமை, அடக்கம் என்னும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். கூட்டுப்புழுவாக இருந்து தான் பின்னாளில் பட்டுப்பூச்சியாய்க் கோலம் கொள்ளும் எனக் கவிஞர் குறிப்பிடுகிறார்.

    2. இணைய வழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:
     
    இணையவழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள்
    1. தொலைநகல் இயந்திரம் (Fax)
    2. தானியக்கப் பண இயந்திரம் (Automated Teller Machine)
    3. அட்டை பயன்படுத்துதல் இயந்திரம் (Swiping Machione)
    4. தமிழக அரசின் நியாய விலைக் கடை திறனட்டைக் கருவி (TNePDS)
    5. இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழக இணைய வழி பதிவு (Indian Railway Catering and Tourism Corporation)

    3. மூன்றறிவதுவே அவற்றோடு மூக்கே
    நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
    இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?
    விடைகுறிப்பு:

    4. செயற்கைக் கோள் ஏவு ஊர்தியில் பொருந்தும் செயலியைப் பற்றி திரு. சிவன் கூறுவது யாது?
    விடைகுறிப்பு:

            இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 1982 ஆம் ஆண்டுதான் வேலையில் சேர்ந்தார். திரு. சிவன் 1983 ஆம் ஆண்டு முதல் முதலில் பி.எஸ்.எல்.வி (Polar Satellite Launch Vehicle) திட்டத்தை தொடங்க மைய அரசு இசைவு தந்தது. அங்கு பணிபுரியும் அறிவியலாளர்கள் அனைவருக்குமே இத்திட்டப்பணி புதிதுதான். 
     
            ஆனால் சிவன் அவர்கள் இரவு பகலாக முயற்சி செய்து ஒரு செயலியை உருவாக்கினார். அது சித்தாரா என்ற ழைக்கப்பட்ட து. (SITARA – Software for Integrated Trafectory Analysis with Real Time Applications) இது செயற்கைக் கோள் ஏவு ஊர்தி பற்றிய முழுவிவரங்களையும் மின்னியக்க முறையில் (Digital) சேகரிக்கும்.

    இ) சிறு வினா

    1. ‘என் சமகாலத் தோழர்களே“ கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?
    விடைகுறிப்பு:

            அறிவியல் என்னும் வாகனத்தின் மீது நம்மை ஆளும் தமிழ்மொழியை நிறுத்துங்கள். பழங்கால மன்னர்களுள் ஒருவன் கரிகாலன். அவனது பெருமைகளையும் சிறப்புகளையும் கணிப்பொறிக்குள்ளே பதிவு செய்து வையுங்கள்.

            அடுத்தவர் ஏவுகின்ற திசையில் நோக்கமில்லாமல் செல்லும் அம்பைப்போல் இருந்த மக்கள் இனத்தை மாற்றுங்கள். ஏவுகணை செலுத்துவதிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிகளிலும் ஏற்றிச் செலுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுக்கிறார்.

    2. அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்பு படுத்துகிறார்?
    விடைகுறிப்பு:

    3. பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவைகளை எழுதுக.
    விடைகுறிப்பு:

    1. தமிழக அரசு ஆண்டு தோறும் பல கல்வி உதவி தொகை தேர்வுகளை நடத்துகின்றன.
    2. 8ம் வகுப்பு மாணவர்களுக்கு – தேசியத்திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு (NMMS)
    3. 9ம் வகுப்பு கிராம பள்ளி மாணவர்களுக்கு – ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)
    4. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு – தேசியத்திறனாய்வு தேர்வு (NTSE) நடத்தப்படுகின்றது. 
    5. அவற்றில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இணையத்தின் சேவையைப் பெறலாம்.
    6. 10 மற்றும் 12 ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்யப்பட வேண்டிய பதிவு, ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இணையத்தின் வழியாகச் செய்யப்பட்டு வருகிறது. அரசின் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றைப் பெற
    7. மாணவர்களின் விவரங்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    4. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக்கோளின் பங்கு யாது?
    விடைகுறிப்பு:

    1. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக்கோளின் பங்கு மகத்தானது ஆகும். 
    2. ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தின் மூலம் எவ்வளவு விளைச்சல் கிடைக்கும் என்பதைக் கணித்து அரசின் கவனத்துக்குத் தெரியப் படுத்தப்படுகிறது. 
    3. இதைப் பயன்படுத்தி அரசால் அதற்கேற்ற திட்டங்களை வகுத்து மக்களுக்கு பயன்படுத்த முடிகிறது.
    4. நிலத்தில் எந்த இடத்தில் நீரின் அளவு எவ்வளவு இருக்கும் என்பதைச் செயற்கைக்கோள் மூ லம் கண்டுபிடித்ததை மக்களுக்கு பயனுள்ள வழியில் செய்யமுடிகிறது.
    5. கடல் பகுதியில் எந்தெந்த இடங்களில் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் என்று மீனவர்களுக்குச் சொல்ல பயன்படுத்தப்படுகிறது.
    6. மக்கள் பயன்படுத்தும் இணையவழிச் சேவைகளுக்கு செயற்கைக்கோள் இவ்வாறாகப் பயன்படுகிறது.

    5. வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
    விடைகுறிப்பு:

    செடிகொடி என்பதற்கும் செடிக்கொடி என்பதற்கும் வேறுபாடு உண்டு.

    செடிகொடி என்னும் தொடருக்கு செடியும் கொடியும் என்பது பொருள் செடிக்கொடி என்னும் தொடரானது செடியில் ஏறியுள்ள கொடி என்றே பொருள்.

    செடி கொடி என்று எழுதும் போது செடி + உம் கொடி + உம் எனப் பிரித்து எழுதுவது ‘உம்’ என்ற சொல் தொக்கி வருவதால் உம்மைத்தொகை எனப்படும்.
    உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.

    எழுத்துகள் – எழுத்துக்கள் – இவற்றில் எது சரி?
    இதே போல கருத்துக்கள், வாக்குக்கள், வாழ்த்துக்கள் விளக்குக்கள் இவற்றில் வரும் வல்லினம் மிகுமா?
    விகுதிப் புணர்ச்சியில், கருத்து + கள் (விகுதி) வல்லெழுத்துக்குப்பின் வரும் வலி மிகுவதற்கு இலக்கணத்தில் எந்த விதியும் இல்லை.

    வல்லெழுத்து (க், ச், த், ப்) ஏன் மிக வேண்டும்?
    பொருளைத் தெளிவாகவும் சரியாகவும் உணர்வதற்கும் தமிழ்மொழிக்கே உரிய இன்னோசையை வெளிப்படுத்துவதற்கும் இன்றியமையாது வேண்டப்படுகிறது.
     

    ஈ) நெடு வினா

    1. அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக.
    விடைகுறிப்பு:

     
            தற்காலத்தில் பேருந்து முன்பதிவு, விமான முன்பதிவு தங்கும் விடுதிகள் முன்பதிவு ஆகியவற்றை இணையம் மூலமாக மேற்கொள்ளப் பலமுகமைகள் உள்ளன. 
     
            இது பலருக்கு வேலைவாய்ப்பையும் தருகிறது. பெரு நகரங்களில் திரைப்படங்களுக்கு இருக்கைகள் முன்பதிவு செய்வதுகூட இணையம் மூலம் நடைபெறுகின்றது. அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, தண்ணீர் வரி, ஆகியன இணைய வழியில் செலுத்தப்படுகின்றன. 
     
            இச்சேவைகளில் ஒன்று பயணச்சீட்டு வழங்குவதையும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வதையும் பயனுள்ள வகையில் செய்து வருகிறது. இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக்கழகம். மற்றொன்று தானியக்கப் பண இயந்திரம்.
     
    இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழக இணைய வழிப் பதிவு (IRCTC – INDIAN RAILWAY CATERING AND TOURISM CORPORATION) :
            மக்கள் தொகை மிகுந்த இந்தியா போன்ற நாடுகளில் வரிசையில் நிற்பது நேரவிரயம். இதனைக் குறைப்பதுடன் இருந்த இடத்திலிருந்தே பயணச் சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப்பெரிய அமைப்பு இந்நிறுவனம் ஆகும். 
     
            பயணம் செய்ய வேண்டிய நாளில் ஊர்களுக்குச் செல்லும் தொடர்வண்டிகளையும் அவற்றின் நேரங்களையும் பயணம் செய்ய விரும்பும் பெட்டி வகைகளையும் அதற்குரிய தொகையையும் காண்பிக்கிறது. வங்கி அட்டைகளின் உதவியுடன் தெகையைச் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மின்னஞ்சலில் பயணச்சீட்டு வந்து விடுகிறது. 
     
            நமது அலைபேசிக்குக் குறுஞ்செய்தியும் வந்து விடுகிறது. 2002 ஆம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஒரு நிமிடத்திற்கு 1500 பயணச் சீட்டுகள் பதிவு செய்யவும் ஒரே நேரத்தில் மூன்று இலட்சம் பயனர்கள் இணைய வழிச் சேவையைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தானியக்கப் பண இயந்திரம் (Automated Teller Machine) :
            இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளரான ஜான் ஷெப்பர்டு பாரன் (John Sheperd Barron) என்பவர் தலைமையிலான குழுவொன்று பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் 1967 ஜுன் 27 இல் தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியது.
    வங்கியில் வழங்கப்பட்ட காசோலையைக் கொண்டு தான் அப்போது பணம் எடுக்கப்பட்டது. அந்தக் காசோலையில் உள்ள குறியீடுகளை இயந்திரம் படித்துப் புரிந்து கொண்டு பணத்தைத் தள்ளும். அதற்குப்பின் வாடிக்கையாளரின் ஆறிலக்கக் கடவுச்சொல் (Password) தருமாறு மேம்படுத்தப்பட்டது. வங்கிகளின் அட்டைகளில் தனிப்பட்ட அடையாள எண்ணை உருவாக்கித் தானியக்கப் பண இயந்திரத்தில் பயன்படுத்தத் தொடங்கினர்.

    2. இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க.
    விடைகுறிப்பு:

            இது, இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இதன் தலைமையகம், இந்தியாவில், பெங்களூருவில் நீயூஸல் சாலையில் ‘அன்தரீஷ் பவன்’ என்ற பெயரில் உள்ளது. 
     
            இதன் முதன்மை விண்வெளி நிலையம் சதீஸ்தவன் விண்வெளிமையம். இதன் தலைவராக திரு கே. சிவன், 14.1.2018 அன்று முதல் பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார். இவர், நாகர்கோவில், வல்லங் குமாரவிளை கிராமத்தில் பிறந்தவர். எம்.ஐ.டி யில் சேர்ந்து எம்.இ., பட்டம் பெற்று விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

            இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளி தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும். இந்நிறுவனம், 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ‘ஆரியப்பட்டா’ அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது.

            இதற்குக் காரணமானவர் விக்ரம் சாராபாய் ஆவார். 1980 இல் இந்தியாவில் கட்டமைக்கப்பெற்ற ஏவுதளம் SLV3 மூலமாக முதல் செயற்கைக் கோள் ‘ரோகினி’ ஏவப்பட்டது. இந்நிறுவனத்தின் சாதனையாக 2008 ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதற்பயணமாக “சந்திராயன்-1” ஏவப்பட்டது.

            1957 ஆம் ஆண்டு முதலே ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக் கோள்களை ஏவியிருக்கின்றன. அவற்றை எல்லாம் இராணுவத்துக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். வல்லரசு நாடுகள் அவற்றின் ஆற்றலைக் காண்பிக்கவே, இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டு அறிவியலாளர் டாக்டர் விக்ரம் சாராபாய் இந்தத் தொழில்நுட்பம் மக்களுக்கு எவ்வாறு பயன்படும் என்றே சிந்தித்தார்.

            இந்திய ஏவுகணை நாயகன் அப்துல் கலாம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநர், வளர்மதி, மங்கள்யான் செயற்கைக்கோள் திட்ட இயக்குநர் அருணன் சுப்பையா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
     

    II. மொழியை ஆள்வோம்

    அ) படித்து சுவைக்க.

    மயில்பொறியை வானத்தில் பறக்க வைத்தோம்
        மணிபல்லவத் தீவிற்குப் பறந்து சென்றோம்
    குயில்மொழியாம் கண்ணகியை அழைத்துச் செல்லக்
        குன்றுக்கு வானவூர்தி வந்த தென்றே
    உயில் போன்று நம்முன்னோர் எழுதி வைத்த
        உண்மைகளான அறிவியலின் அற்பு தத்தைப்
    பயில்கின்ற காப்பியத்தில் படித்த தெல்லாம்
        பார்தன்னில் நனவாகக் காணுகின்றோம்!
                                                                            - பாவலர் கருமலைத்தமிழாழன்

    ஆ) மொழி பெயர்க்க.

    Bottle xylophone, Make music with bottles.
    • You will need: 6 glass bottles, Wooden spoon, Water, Food colouring.
    • Fill one bottle with water, then fill each other bottle with slightly less than the bottle next to it.
    • Add some food colouring to help you to see the different levels of water.
    • Tap the bottles with the end of a wooden spoon. Can you play a tune?

    இ) Water Music.

    Hitting the bottles with the spoon makes them vibrate and produce a sound. The more the bottle vibrates, the higher the note will be. The more water in a bottle, the less it vibrates, so less water means higher notes.
    கண்ணாடிப் புட்டிகளாலான இசைக்கருவி.
    கண்ணாடி புட்டிகள் மூலம் இசையை உருவாக்குதல்.

    தேவையான உபகரணங்கள்:
    • ஆறு கண்ணாடி புட்டிகள்
    • மரத்தாலான கரண்டி ஒன்று
    • தண்ணீர்
    • உணவுப்பொருளுக்குப் பயன்படும் வண்ணப்பொடி
    செய்முறை:
    • முதல் புட்டியில் முழுவதுமாக தண்ணீ ரை நிரப்பு. அடுத்தடுத்து வரும் புட்டிகளில் சற்று குறைவாக நிரப்பிக் கொள்.
    • உணவுப் பொருளுக்குப் பயன்படுத்தப்படும் வண்ணப் பொடியை தண்ணீரில் கலந்து கொண்டு, ஒவ்வொரு புட்டியிலும் வேறுபட்ட அளவில் தண்ணீர் நிரப்பியிருப்பதை அறிந்துகொள் (பார்த்துக்கொள்)
    • இப்போது மரத்தாலான கரண்டியின் அடிப்பாகத்தைக் கொண்டு புட்டிகளில் தட்டினால், இசையை உன்னால் உருவாக்க முடியும்.
    தண்ணீர் இசையாகிறதா?
    • மரக்கரண்டியின் அடிப்பாகத்தால் புட்டிகளைத் தட்டும் போது ஏற்படும் அதிர்வுகளால் ஒலி ஏற்படுகிறது.
    • புட்டிகளில் நிறைய நீர் இருந்தால் குறைவான அதிர்வுகளும், குறைவான நீர் உள்ள புட்டிகளில் நிறைய அதிர்வுகளும் ஏற்படும். 
    • ஒலியின் அளவுகள் வேறுபட்டு வரும்பொழுது, அதற்கேற்ப இசையும் (Tune) மாறுபட்டு ஒலிக்கும்.

    ஈ) பின்வரும் பத்தியில் இடம்பெற்றுள்ள பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை எழதுக.

    1. ரொம்ப வீக்கு - நிரம்ப சபலம் 
    2. ஆதார ருசிகள் - அடிப்படைச் சுவைகள் 
    3. காபி - குழம்பி, கோப்பி, கொட்டை வடிநீர்  
    4. ஸேவரி - காரசுவையுண்டி 
    5. டேஸ்ட் - சுவை 
    6. ருசிகள் - சுவைகள் 
    7. சராசரி - ஏறத்தாழ
    8.  அலட்டல் - மிகைப்படுத்திச் சொல்லுதல் 
    9. எக்ஸ்பிரஷன் - விளைவுகள் 
    10. வாசனை - நறுமணம் 
    11. அல்வா - இனிப்புக்களி 
    12. ஐஸ்க்ரீம் - பனிக்குழைவு
    13. ரசிக்க - களிக்க
    14. ஜில்லென்று - குளிர்ச்சி என்று 
    15. கற்பூர வாசனை - சூடம் நறுமணம் 
    16. பெப்பர்மிண்ட் வாசனை - புதினாச்சுவையுள்ள மிட்டாய்கள் 
    17. மஸ்க் அரபுசேக் செண்ட் - ஆண்மானிலிருந்து எடுக்கப்பெற்ற வாசனைத் திரவியம் 
    18. ஈத்தர் - தீப்பற்றக் கூடிய பொருள். 
    19. பெட்ரோல் வாசனை - கல்நெய் (கன்னெய்) 
    20. அமில வாசனை - காடிப் புளியம்.
     

    உ) கதையைப் படித்து உரையாடலாக மாற்றுக.

            ஒரு சிப்பி, இன்னொரு சிப்பியிடம் சொன்னது – ‘ஐயோ, என்னால் வலி தாங்க முடியவில்லையே’. ‘ஏன்? என்னாச்சு?’ என்று விசாரித்தது இரண்டாவது சிப்பி.
    ‘எனக்குள் ஏதோ ஒரு கனமான உருண்டை, பந்து உருள்வதுபோல் இருக்கிறது. ரொம்ப வலி.’

            இதைக் கேட்டதும் இரண்டாவது சிப்பிக்கு மிகுந்த மகிழ்ச்சி. பெருமையுடன் நெஞ்சு நிமிர்த்தி, ‘ஆகா! நான் எந்த வலியும் இல்லாமல், நலமாக இருக்கிறேன்’ என்றது உற்சாகமாக.

            இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்டு, இரண்டாவது சிப்பியிடம் சொன்னது- ‘உனக்கு எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். வலியைத் தாங்க விரும்பாத நீ, எப்பொழுதும் இப்படியே வெறுமையாகக் கிடக்க வேண்டியதுதான். ஆனால், இப்போது சிரமப்படுத்தும் அந்த வலி, இன்னும் சில நாள்களில், ஓர் அழகான முத்தாக உருவெடுக்கும். அது பெருமை தேடித்தரும்.’

    விடைகுறிப்பு:

    உரையாடல்
    (கடற் கரையோரம் அலையிலிருந்து மீண்டு வந்தன இரண்டு சிப்பிகள்)

    சிப்பி 1: வலி தாங்கமுடியவில்லையே? என்ன செய்வது என்று தெரியவில்லை.
    சிப்பி 2: ஏன்? என்ன ஆச்சு; நேற்று நன்றாகத் தானே இருந்தாய்; இன்றைக்கு என்ன ஆனது?
    சிப்பி 1: என் வயிற்றுக்குள் ஏதோ கனமான உருண்டை பந்து உருளுவது போல இருக்கிறது. அதனால் தாங்க முடியாத வலி….
    சிப்பி 2: எனக்கு எந்த வலியும் இல்லை! நல்ல வேளை எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை! நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
    (அடுத்த அலையிலிருந்து கரையில் மீண்டு நின்றது ஒரு நண்டு)
    நண்டு: (2வது சிப்பியிடம்) அந்த சிப்பி வலியால் துடிக்கிறது. உனக்கு எந்த வலியும் இல்லை ;
    “நன்றாக இருக்கிறேன்” என்று சொல்கிறாய்? வலியைத் தாங்க விருப்பமில்லை என்கிறாய். வலியைத் தாங்கத் தயராக இல்லை என்கிறாய்? அப்படி என்றால் நீ வெறுமையாகக் கிடக்க வேண்டியது தான்.
    சிப்பி 2: ஏன் வலி வந்தால் என்ன வாகும்? எனக்குக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன.
    நண்டு: அந்த நண்டுக்கு வலி சிரமப்படுத்தும். ஆனால் சில நாள்களில் அதன் வயிற்றிலிருந்து ஒரு அழகான முத்தாக வெளிவரும். அந்த முத்து எல்லோருக்கும் பெருமை தேடித்தரும்.

    ஊ) செய்து கற்க.

    1. செய்தித்தாள்களில் இடம்பெற்றுள்ள ஒரு வாரத்திற்குரிய அறிவியல் செய்திகளைப் படித்துக் குறிப்பெடுக்க.
    விடைகுறிப்பு:

    நாள்: 14.4.18
    சனிக்கிழமை
    தினமணி
    சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து புதிய செயலி உருவாக்கிய திண்டுக்கல் மாணவர்களுக்கு முதல்பரிசு.

    சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களைப் பொதுமக்களிடம் எளிதாகக் கொண்டு செல்வதற்கான புதிய செயலி மற்றும் இணைய முகவரி உருவாக்கி இருக்கின்றனர் மாணவர்கள்.
     
    நாள்: 14.4.18
    சனிக்கிழமை
    தி இந்து
    மம்மி பூனை
    எகிப்தில் பூனை கடவுளின் ஒரு வடிவம். அரசர் குடும்பத்தைப் போலவே பூனைகளையும் பாடம் பண்ணிக் காத்துவந்தனர். பிரமிடுகளிலுள்ள சுவற்றில் புனிதப் பூனைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி பிரபல சூழலியல் எழுத்தாளர். சு. தியோடர் பாஸ்கரன் கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.

    நாள்: 13.4.18
    வெள்ளிக்கிழமை
    தினமணி
    ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். I ஐ செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம். செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி.41. ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா ஆராய்ச்சி மைய ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து அதன் தலைவர் சிவன் கூறினார்.

    (இதுபோன்று, அன்றாடச் செய்தித்தாள்களில் வெளியாகும் அறிவியல் செய்திகளைத் தொடர்ந்து படித்துக் குறிப்பெடுத்துக் கொள்க)

    2. அங்காடியில் வாங்கிய உணவுப் பொருளின் உருவாக்க நாள், முடிவு நாள், உறையில் அச்சடிக்கப்பட்ட உணவுப்பொருளின் ஆற்றல், குறியீட்டுப் பட்டை (Barcode) ஆகியவற்றின் விவரங்களைக் கொண்டு உணவுப் பொருளின் உண்மைத்தன்மையை எப்படி அறிவது?
    விடைகுறிப்பு:

            நாம் அங்காடிக்குச் சென்று, உணவுப்பொருள், குளிர்பானங்கள், அழகுசாதனப் பொருள்கள் போன்றவற்றை வாங்கும்போது, அதன் உறைகளிலோ அல்லது மேல் அட்டைப் பெட்டியிலோ குறியீட்டு பட்டை (Barcode) அமைந்திருக்கும், அதன் உண்மைத் தன்மையை ஆராயும் முறை. குறியீட்டுப் பட்டை இடம் பெற்றிருக்கும் பகுதியை கணினியுடன் கூடிய ஒளிக் கதிர் மூலம் வருடும் போது (Scanning) அப்பொருளின்
    • எடை 
    • விலை 
    • உற்பத்தி செய்த இடம்
    • நாள் எந்த நாள் வரை பயன்படுத்தலாம் (முடிவு நாள்)
    • அப்பொருளில் அடங்கியிருக்கும் பிறபொருள்களின் அளவு, தன்மை, உற்பத்தி உரிமம் போன்ற அனைத்து விபரங்களும் திரையில் தெரியவரும்.  இம்முறையில் தான் ஒரு பொருளை வாங்கும்பொழுது ஆராய்ந்து வாங்குதல் வேண்டும்.

    எ) நயம் பாராட்டுக.

    பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்
    சிங்கமே! வான வீதி திகுதிகு எனஎ ரிக்கும்
    மங்காத தணற்பிழம்பே! மாணிக்கக் குன்றே! தீர்ந்த
    தங்கத்தின் தட்டே! வானத் தகளியிற் பெருவி ளக்கே!
    கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்றுகின்றாய்
    நெடுவானில் கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி
    இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ
    அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி வாழி!
                                                - பாரதிதாசன்.
    விடைகுறிப்பு:


            பாரதிதாசனார் 29.4.1891 இல் புதுவையில் பிறந்தார். இவர் பெற்றோர் கனகசபை; இலக்குமி அம்மாள். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம். பாரதியார் புதுவையில் வாழ்ந்த போது, அவருடன் நட்புக் கொண்டு, அவர் மீது கொண்ட அன்பு காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் எனப் புனைந்து கொண்டார்.
            இவர் குடும்பவிளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, கண்ணகி புரட்சிக் காப்பியம் முதலான தொண்ணூற்றுக்கும் மேலான நூல்களை இயற்றியுள்ளார்.

    பாடலின் மையக்கருத்து:
            இயற்கையை வருணித்துப் பாடுவதில் வல்லவர். இப்பாடலில், சூரியனை பல்வேறு வடிவங்களில் வருணித்துப்பாடுகிறார். உலகெங்கும் இருளைப் போக்கி தன் ஒளி அளாவ சுடர்க்கைகள் நீட்டி ஊன்றுகின்றது.

    பாடலின் திரண்டகருத்து:
            கடலுக்குள்ளிருந்து பொங்கிப் பொழிந்து பிடரிமயிர் சிலிர்க்க வரும் சிங்கம் போல வருகிறாய் நீ! வானத்தில் திகுதிகு என எரிக்கும் தணற்பிழம்பே! மாணிக்கக் குன்றே! தங்கத் தட்டே! வானத் தகளியற் பெரு விளக்கே!
            கடலில் உன் கோடிக் கைகளை ஊன்றுகின்றாய் நெடுவானில் சுடர்க்கைகளை நீட்டுகிறாய். இடையில் தென்படுகின்ற மலை, காடு, இல்லம், பொய்கை, ஆறு அத்துணையிலும் உன் ஒளி அளாவுகின்றது. கதிரவனே! நீ வாழ்க.

    நயம்:
            பாடவந்த பொருள் பற்றி மட்டும் பாடாமல் செய்யுளுக்கேயுரிய பல்வேறு நயங்களையும் உடன் அமைத்துப் பாடியிருக்கிறார்.

    எதுகை நயம்:
            அடிதோறும் சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரப் பாடுவது எதுகை நயம் ஆகும்.
    கவிஞர் அடிதோறும் எதுகை நயம் அமைத்துச் செய்யுளுக்குச் சொல்லழகு ஊட்டியிருக்கிறார்.

    மோனை நயம்:
            அடிதோறும் சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்.
    காட்டுக்கு அழகு யானை
    பாட்டுக்கு அழகு மோனை என்பது போல மோனைத் தொடர்களை அமைத்துப் பாடியிருக்கிறார்.

    அணி நயம்:
    வனிதைக்கு மணி அழகு
    செய்யுளுக்கு அணி அழகு – என்றாற் போல கவிஞர்கள் தாம் சொல்ல வந்த பொருளைச் சுவைஞர்களின் இன்பத்திற்கேற்பப் பயன்படுத்துவார்கள்.
    பாரதிதாசன் பரிதியைப்(சூரியனை) பல்வேறு உருவகங்களாகக் காட்சிப் படுத்துகிறார். எனவே இச்செய்யுளில் உருவக அணி பயின்றுவந்துள்ளது.

    இயைபு நயம்:
            பாட்டுக்கு ஓசையின்பம் தருவது இயைபுநயம். இப்பாடலில் கவிஞர், அடிதோறும் இறுதிச் சீர் ஒன்றிணைய இயைபு நயம் அமைய இயைத்துப் பாடியிருக்கிறார்.
     

    III. மொழியோடு விளையாடு

    அ) குழுவில் விளையாடுக.

    • நான்கு மாணவர்கள் கொண்ட குழுக்களாக எண்ணிக்கைக்கு ஏற்பப் பிரிந்து கொள்க.
    • முதல் மாணவர் ஒரு சொல்லைத் தொடங்குக.
    • அதனோடு தொடர்புடைய ஒரு சொல்லை இரண்டாம் மாணவர் கூறுக.
    • இப்படியே நான்கு மாணவர்களும் கூறிய சொற்களைக் கொண்டு ஒரு தொடர் அமைக்க.
    எ.கா.
    மாணவர் 1 : கணினி
    மாணவர் 2 : அறிவியல்
    மாணவர் 3 : தமிழ்
    மாணவர் 4 : மொழி
    சொல்லப்பட்ட சொற்கள்: கணினி, அறிவியல், தமிழ், மொழி
    தொடர்: அறிவியல், கணினித் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஈடுகொடுத்துத் தமிழ் மொழி வளர்ந்து வருகிறது.
    விடைகுறிப்பு:
     
    மாணவர்களே இவ்வாறாக உங்கள் நண்பர்களுடன் விளையாடும்போது உங்கள் மொழி அறிவு வளரும்.

    ஆ) அகராதியில் காண்க.

    இமிழ்தல், இசைவு, துவனம், சபலை, துகலம்
    விடைகுறிப்பு:

    இமிழ்தல் – இனிதாதல், ஒலித்தல், கக்குதல்
    இசைவு – இணக்கம், சம்மதி, பொருத்து தகுதி, ஏற்றது, உடன்பாடு, ஓட்டம்
    துவனம் – அக்கினி, நெருப்பு
    சபலை – இலக்குமி, திப்பிலி, நா, மின்னல், வேசி
    துகலம் – பங்கு
     

    இ) ஒரு சொல்லால் தொடரின் இரு  இடங்களை நிரப்புக. (விலங்கு, எழுதி, அகல், கால், அலை)

    அ) எண்ணெய் ஊற்றி _________. விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு அகல்
    ஆ) எனக்கு  _________. பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்: பார்த்து உன் _________ ஐ வை.
    இ) கைப்பொருளைக் கடல்  _________. யில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?
    ஈ) வீட்டு  _________. ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து  _________. உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
    உ) எழுத்தாணிகொண்டு  _________. தமிழை, ஏவுகணையில் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.
    விடைகுறிப்பு:

    அ) எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு அகல்
    ஆ) எனக்கு கால் பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்: பார்த்து உன் கால் ஐ வை.
    இ) கைப்பொருளைக் கடல் அலையில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?
    ஈ) வீட்டு விலங்கு ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து விலங்கு உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
    உ) எழுத்தாணிகொண்டு எழுதிய தமிழை, ஏவுகணையில் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.

    ஈ) ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக.     

    குவிந்து – குவித்து; சேர்ந்து – சேர்த்து; பணிந்து – பணித்து; பொருந்து – பொருத்து; மாறு – மாற்று.
    (எ.கா) விரிந்தது – விரித்தது
    அ) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
    ஆ) _____________________________________.
    இ) ______________________________________.
    ஈ) ______________________________________.
    ஊ) _____________________________________.
    விடைகுறிப்பு:

    அ) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
    ஆ) ஆற்றில் அடித்து வந்த மணல் குவிந்தது; வாங்கிய மணலை வீட்டுக்கு முன்பு குவித்து வைத்தோம். 
    இ) கையில் காசு சேர்ந்தது; சேர்ந்த காசுகளைச் சிறுசேமிப்பில் சேர்த்து வைத்தோம்.
    ஈ) ஆசிரியர் சொல்லுக்கு மாணவர்கள் பணிந்து நடந்தனர். விடுமுறையில் இன்னின்ன பாடங்களைப் படித்து வருமாறு பணித்திருக்கிறார்.
    உ) பின்வரும் சொற்களைப் பின்குறித்த பிறசொற்களோடு பொருந்துமாறு பொருத்திக் காட்டுக.
    ஊ) பிறருடைய தீயவழியில் இருந்து நீ மாறு; அவர்களை உன் வழிக்கு மாற்று.

    உ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

    மனிதன் வேட்டையாடி 
    விலங்களை அடிமைப்படுத்தினான் 
    அடிமைகளிடம் முதலாளி ஆகிக் கொண்டான் 
    அறிவியல் கண்டுபிடிப்புகளைப் 
    பயன்படுத்திக் கொண்டான் 
    அறிவைக் கருவிக்கு அடிமையாக்கினான் 
    கருவிகள் மனிதனை அடிமையாக்கியது.

    IV. செயல் திட்டம்

    மின்சார சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு முழக்கத்தொடர்களை எழுதி வகுப்பறையிலும் பள்ளியிலும் காட்சிப்படுத்துக.
    விடைகுறிப்பு:

     
    மின்சார சேமிப்புப் பற்றிய முழக்கத் தொடர்கள்:
    1. மின் இயந்திரங்களைத் தவிர்ப்போம்
    மின்சாரம் சேமிப்போம் – நம்
    ஆரோக்கியத்தையும் காப்போம்.
    2. மின்சார சேமிப்பு மின்சார உற்பத்திக்குச் சமமாகும்.
    3. நீராதாரம் பெருக்குவோம் மின்
    உற்பத்தியையும் பெருக்குவோம்.
    4. ஆள் இல்லா அறைகளில் 
    மின் விசிறி இயக்காதீர்.
    5. மின்சார சிக்கனம்
     தேவை இக்கணம்.
    6. குழல் விளக்கையும்
    குண்டு விளக்கையும்
    தவிர்ப்போம்.
    மின்சாரம் சேமிப்போ
    ம்.
     

    V. நிற்க அதற்குத் தக...

    என் பெற்றோர் மகிழுமாறு நான் செய்ய வேண்டியது
    1. என் வீட்டின் நிலையறிந்து, தேவையறிந்து பொருள்கள் வாங்குவது.
    2. அலைபேசிப் பயன்பாட்டினைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நீட்டிக்காமல் இருப்பது.
    3. தொலைக்காட்சி பார்ப்பதைக் குறிப்பிட்ட நேரமாகக் குறைத்துக் கொள்வது.
    4. _____________________________.
    5. _____________________________.
    6. _____________________________.
    விடைகுறிப்பு:

    1. என் வீட்டின் நிலையறிந்து, தேவையறிந்து பொருள்கள் வாங்குவது.
    2. அலைபேசிப் பயன்பாட்டினைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நீட்டிக்காமல் இருப்பது.
    3. தொலைக்காட்சி பார்ப்பதைக் குறிப்பிட்ட நேரமாகக் குறைத்துக் கொள்வது.
    4. முயற்சி செய்தால் முடியும், என் வேலையை நானே செய்து தருவேன்.
    5. என் தங்கையோடு போட்டிபோடாமல் ஆண், பெண் வேறுபாடின்றி உரிமையைச் சமமாகப் பெற செய்வேன்.
    6. நான் குடியிருக்கும் தெருவில் குப்பைக் கூளங்கள் தேங்காதவாறு பார்த்துக் கொண்டு பிறர்க்கு முன்மாதிரியாக நடந்து கொள்வேன்.
     

    VI. கலைச்சொல் அறிவோம்

    ஏவு ஊர்தி - Launch Vehicle 
    ஏவுகணை - Missile 
    கடல்மைல் - Nautical Mile 
    காணொலிக் கூட்டம் Video Conference -
    பதிவிறக்கம் - Download 
    பயணியர் பெயர் பதிவு - Passenger Name Record (PNR) 
    மின்னணுக் கருவிகள் - Electronic devices

     
     
     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive