8th Tamil - Book Back Answers - Unit 8.4 - Guides

 


    8th Tamil - Book Back Answers - Unit 8.4 - Download

    Tamil Nadu Board 8th Standard Tamil - Unit 8.4 : Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 84 – from the Tamil Nadu State Board 8th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 8.4 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 8.4 புணர்ச்சி 

    I. கற்பவை கற்றபின்

    1.இயல்பு, தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய புணர்ச்சிகளுக்குரிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பட்டியல் ஒன்று உருவாக்குக.
    விடைகுறிப்பு:
    1
    இயல்புப் புணர்ச்சி சான்றுகள்
    படம் பார்த்தான், கூடை பிண்ணினாள், படம் வரைந்தான், தமிழ்மணி, அண்ணன் தம்பி, பழம் தின், பயணம் சென்றான், தெருவிளக்கு, நீதிமன்றம், கடைவீதி, தலைவலி.
    2
    தோன்றல் விகாரப் புணர்ச்சி சான்றுகள்
    மாங்கனி, தைத்திங்கள், வாழைப்பூ, சாரைப்பாம்பு, படித்துறை, குதிரைக் கால், மழைச்சாரல், பனித்துளி, கொடிச்சீலை.
    3
    திரிதல் புணர்ச்சி சான்றுகள்
    மட்குடம், பொற்சிலை, கற்சிலை, பெண்பாற்புலவர், முட்செடி, கட்செவி, மரத்தடி, மரப்பலகை, சதுரக் கல்.
    4
    கெடுதல் விகாரப் புணர்ச்சி சான்றுகள்
    சிறு படை, பெருவெள்ளம், வெண்குடை, முதுமலை, செம்பனி, சிறு மகன், செம்மொழி.
     
     

    II. மதீப்பீடு

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    1. விகாரப் புணர்ச்சி __________ வகைப்படும்.
    இ மூன்று 

    2. 'பாலாடை' - இச்சொல்லுக்குரிய புணர்ச்சி___________.
    அ) இயல்பு
     

    பொருத்துக

    1
    மட்பாண்டம்
    திரிதல் விகாரம்
    2
    மரவேர்
    கெடுதல் விகாரம்
    3
    மணிமுடி
    இயல்புப் புணர்ச்சி
    4
    கடைத்தெரு
    தோன்றல் விகாரம்
    விடைகுறிப்பு:
    1
    மட்பாண்டம்
    தோன்றல் விகாரம்
    2
    மரவேர்
    இயல்புப் புணர்ச்சி
    3
    மணிமுடி
    கெடுதல் விகாரம்
    4
    கடைத்தெரு
    திரிதல் விகாரம்
        

    சிறுவினா

    1.இயல்பு புணர்ச்சி எடுத்துக்காட்டு விளக்கு.
    விடைகுறிப்பு:
    எவ்வித மாற்றமும் இல்லாமல் சேருவதை இயல்பு புணர்ச்சி ஆகும்.
    சான்று - தாய்மொழி

    2.மரக்கட்டில் இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.
    விடைகுறிப்பு:
    கெடுதல் விகாரம் மர கட்டில் 
    தோன்றல் விகாரம்- மரக்கட்டில்
     

    III மொழியைஆள்வோம்

    கேட்க

    1. உயிர்களிடம் அன்பு காட்ட வேண்டும் என்பதை மையக்கருத்தாகக் கொண்ட கதைகளைப் பெரியவர்களிடம் கேட்டு மகிழ்க.
     

    கீழ்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.

    1. நம்பிக்கையே உயர்வு.
    2. நல்வாழ்விற்கு தேவையான நற்பண்புகள்.
      

    IV அறிந்து பயன்படுத்துவோம்

    தான், தாம் என்னும் சொற்கள்
    தான் என்பது ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது பன்மையைக் குறிக்கும். இவ்வேறுபாட்டினை அறிந்து தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

    தான், தன்னை , தன்னால், தனக்கு , தனது ஆகியவற்றை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

    தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது ஆகியவற்றைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

    (எ.கா.) தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்.
    மாணவன் தனது கையால் பெற்றுக் கொண்டான்.
    (இங்குத் தலைவர் என்பது ஒருவரைக் குறித்தாலும் இது மரியாதைப் பன்மை ஆகும்.) (எ.கா.) மாடுகள் தமது தலையை ஆட்டின.
    கன்று தனது தலையை ஆட்டியது.

    கோடிட்ட இடங்களை நிரப்புக          

    1. சிறுமி ……………… (தனது/தமது) கையில் மலர்களை வைத்திருந்தாள்.
    2. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் ……………… (தனது தமது) உழைப்பை நல்கினார்.
    3. உயர்ந்தோர் …………… (தம்மைத்தாமே/தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ளமாட்டார்கள்.
    4. இவை ………………. (தான்/தாம்) எனக்குப் பிடித்த நூல்கள்.
    5. குழந்தைகள்……………. (தன்னால் தம்மால்) இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்.

    விடைகுறிப்பு:
    1. தனது
    2. தமது
    3. தம்மைத்தாமே
    4. தாம்
    5. தம்மால்
     

    தொடரில் உள்ள பிழைகளை திருத்தி எழுதுக

    1. முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தம்முடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள் இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.
    விடைகுறிப்பு:

    முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தன்னுடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள் இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.
     
     

    கட்டுரை எழுதுக

    1.  "உழைப்பே உயர்வு தரும்"

    முன்னுரை:
    உழைப்பே உயர்வு தரும் என்பத பற்றி இனிக் காண்போம்.

    உழைப்பு:
    இறைவனால் முயற்சியாலும் முடியாத காரியம் கூட உழைப்பாலும் செய்ய முடியும் என்கிறது திருக்குறள். உழைப்பால் உடலும் உள்ளமும் வலுப்பெறுகிறது.
     
    உழைப்பே உயர்வு:
    உழைப்பே உயர்வு தரும் என்பது பழமொழி. விலங்குகளும் பறவைகளும் தமக்குத் தேவையான உணவை தாமே உழைத்து தேடிப் பெற்றுக்கொள்கின்றன.
    உழைப்பில்லாமல் வரும் செல்வத்தை விட்டுவிட்டு உண்மையான உழைப்பால் வரும் செல்வத்தை நாம் அனுபளிக்க வேண்டும்.
     
    உழைப்பால் சிறந்தவர்கள்:
    எடிசன், ஐன்ஸ்டின், ஜீ.டி. நாயுடு, டாக்டர் அப்துல் கலாம் ஆகிய எண்ணற்ற அறிஞர்கள் தம்முடைய கடின உழைப்பால் வாழ்வில் முன்னேறி இருக்கிறார்கள் என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
     
    முடிவுரை:
    அனைவரும் நல்வழியில் கடின உழைப்பு செய்து வாழ்வில் முன்னேற வேண்டும்.
     
     

    V உவமைத் தொடர்கள்

    பொருத்துக

    1
    காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல
    ஒற்றுமையின்மை
    2
    கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல
    பயனற்ற செயல்
    3
    பசுமரத்து ஆணி போல
    தற்செயல் நிகழ்வு
    4
    விழலுக்கு இறைத்த நீர் போல
    எதிர்பாரா நிகழ்வு
    5
    நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல
    எளிதில் மனதில் பதிதல்
    விடைகுறிப்பு:
    1
    காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல
    தற்செயல் நிகழ்வு
    2
    கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல
    எதிர்பாரா நிகழ்வு
    3
    பசுமரத்து ஆணி போல
    எளிதில் மனதில் பதிதல்
    4
    விழலுக்கு இறைத்த நீர் போல
    பயனற்ற செயல்
    5
    நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல
    ஒற்றுமையின்மை
     

    உவமைத் தொடர்களைப் பயன்படுத்தி தொடர் அமைக்க.

    1. குன்றின் மேலிட்ட விளக்கைப் போல :
    விடைகுறிப்பு:

    குன்றின் மேலிட்ட விளக்கைப்போல திருக்குறளின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது.

    2. வேலியே பயிரை மேய்ந்தது போல :
    விடைகுறிப்பு:

    வேலியே பயிரை மேய்ந்தது போல நாட்டைக் காப்பாற்ற வேண்டிய தலைவர்களே மக்களைத் துன்புறுத்துகின்றனர்.

    3. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல :
    விடைகுறிப்பு:

    பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் நான் எதிர்பார்க்காமலேயே என் பிறந்த நாளுக்கு எனக்குப் புத்தாடை வாங்கித் தந்தார் என் அப்பா, என் மாமா மிதிவண்டி வாங்கித் தந்தார்.

    4. உடலும் உயிரும் போல :
    விடைகுறிப்பு:

    உடலும் உயிரும் போல கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் நட்புடன் திகழ்ந்தனர்

    5. கிணற்றுத் தவளை போல :
    விடைகுறிப்பு:

    கிணற்றுத் தவளை போல மூடர்கள் தம் பேச்சினாலேயே தம் அறியாமையை வெளிப்படுத்தி விடுவர்.
     
     

    VI தமிழ் எண்கள் அறிவோம்.

    விடுபட்டகட்டங்களை நிரப்புக


    வண்ணம்மிட்டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக.

    1. உலக ஈர நில நாள் பிப்ரவரி 2.
    2. உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16.
    3. உலக இயற்கை நாள் அக்டோபர்
    4. உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6.
    5. உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள் அக்டோபர் 5.

    விடைகுறிப்பு:
    1. உ
    2. கச
    3. ங
    4. க
    5. ரு
     
     

    VII மொழியோடு விளையாடு

    பின்வரும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

    உடலின் உறுதி உடையவரே 
    உலகில் இன்பம் உடையவராம்; 
    இடமும் பொருளும் நோயாளிக்கு 
    இனிய வாழ்வு தந்திடுமோ?

    சுத்தம் உள்ள இடமெங்கும் 
    சுகமும் உண்டு நீயதனை 
    நித்தம் நித்தம் பேணுவையேல் 
    நீண்ட ஆயுள் பெறுவாயே!

    காலை மாலை உலாவிநிதம் 
    காற்று வாங்கி வருவோரின் 
    காலைத் தொட்டுக் கும்பிட்டுக் 
    காலன் ஓடிப் போவானே!"

    கூழை யேநீ குடித்தாலும் 
    குளித்த பிறகு குடியப்பா 
    ஏழை யேநீ ஆனாலும், 
    இரவில் நன்றாய் உறங்கப்பரி

    தூய காற்றும் நன்னீரும், 
    சுண்டப் பசித்த பின் உணவும் 
    நோயை ஓட்டி விடும்அப்பா! 
    நூறு வயதும் தரும்அப்பா!

    அருமை உடலின் நலமெல்லாம்
    அடையும் வழிகள் அறிவாயே! 
    வருமுன் நோயைக் காப்பாயே! 
    வையம் புகழ வாழ்வாயே!
             -கவிமணி தேசிக விநாயகனார்
    வினாக்கள்:
    1.உலகின் இன்பம் உடையவர் யார்?   
    உடலின் உறுதி உடையவரே ,உலகில் இன்பம் உடையவர் ஆவார். 
     
    2. காலன் யாரை நெருங்க மாட்டான்?
     காலை மாலை உலாவிநிதம் 
    காற்று வாங்கி வருவோரின் 
    காலைத் தொட்டுக் கும்பிட்டுக் 
    காலன் ஓடிப் போவானே!"
     
    3. ஏழையாக இருந்தாலும் ஒரு மனிதனுக்கு என்ன தேவை?
    ஏழையாக இருந்தாலும் ஒரு மனிதனுக்கு இரவில் நன்றாய் உறங்கம் தேவை.
     
    4. நோய் ஓட்டிவிடுபவை யவை?
    தூய காற்றும் நன்னீரும், சுண்டப் பசித்த பின் உணவும் நோய் ஓட்டிவிடுபவை. 
     
      

    வட்டத்தில்உள்ள பல மொழிகளை கண்டுபிடித்து எழுதுக.

     
    விடைகுறிப்பு:
    முயற்சி திருவினை ஆக்கும்.
    அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.
    சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.
    அறிவே ஆற்றல்.
    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
    வருமுன் காப்போம்.
    சுத்தம் சோறு போடும்.
    பருவத்தே பயிர் செய்.
    பசித்து புசி.

     

    நிற்க அதற்குத் தக 

    கலைச்சொற்கள் அறிவோம்

    1. குறிக்கோள் – Objective
    2. நம்பிக்கை – Confidence
    3. முனைவர் பட்டம் – Doctorate
    4. வட்ட மேசை மாநாடு – Round Table Conference
    5. இரட்டை வாக்குரிமை – Double voting
    6. பல்கலைக்கழகம் – University
    7. ஒப்பந்தம் – Agreement
    8. அரசியலமைப்பு – Constitution                   
              


     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive