8th Tamil - Book Back Answers - Unit 8.2 - Guides

 


    8th Tamil - Book Back Answers - Unit 8.2 - Download

    Tamil Nadu Board 8th Standard Tamil - Unit 8.2 : Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 8.2 – from the Tamil Nadu State Board 8th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 8.2 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 8.2 சட்டமேதை அம்பேத்கர்  

    I. கற்பவை கற்றபின்

    1. சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்களின் பெயர்களைப் பட்டியலிடுக
    விடைகுறிப்பு:

    சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்கள் :
    1. பெரியார்
    2. காந்தியடிகள்
    3. நெல்சன் மண்டேலா
    4. அம்பேத்கர்
    5. முத்துலெட்சுமி ரெட்டி
    6. மூவலூர் இராமாமிர்தம்
    7. பாரதியார்
    8. பாரதிதாசன்
    9. அயோத்திதாசர்
     
    2. அம்பேத்கரின் பண்புகளாக நீங்கள் உணர்ந்தவற்றை எழுதுக.
    விடைகுறிப்பு:

    இளமையில், இவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிப்பருவத்தில் பல அவமதிப்புகளுக்கு ஆளானவர். அதனால் அவர் பள்ளியையோ கல்வியையோ வெறுக்காமல் தொடர்ந்து படித்து இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம், பாரிஸ்டர் பட்டம் என்று முன்னேறி மிகச்சிறந்த சான்றோனாக உயர்ந்தார்.

    இதில் அவருடைய கடுமையான உழைப்பு தெரிகிறது. ‘நூலகத்திற்கு முதல் ஆளாய்ச் சென்று இறுதி ஆளாய் வருவார்’ என்று கூறும்போது அவருடைய உயர்வுக்கு இந்த நூலகமே தூணாக இருந்துள்ளது. தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினார்.

    அம்பேத்கர் “நான்வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெயவம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை” என்று கூறியுள்ளார். அதன்படியே அவர் நல்லறிவு பெற்றும், சுயமரியாதையுடனும் நன்னடத்தையுடனும் வாழ்ந்து காட்டினார்.

     

    II. மதீப்பீடு

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    1. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் _________.
    ஆ) அம்பேத்கர்

    2. பூனா ஒப்பந்தம் மாற்ற __________ ஏற்படுத்தப்பட்டது.
    ஈ) இரட்டை வாக்குரிமையை

    3. சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம்________________ .
    அ) சமாஜ் சமாத சங்கம்

    4. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு _______________ விருது வழங்கியது.
    ஆ) பாரத ரத்னா
     

    கோடிட்ட இடத்தை நிரப்புக

    1. புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் …………………..
    2. அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் ………………….
    3. பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் ……………… சென்றார்.
    விடைகுறிப்பு:

    1. புத்தரும் அவரின் தம்மமும்.
    2. சுதந்திரத் தொழிலாளர் கட்சி
    3. இலண்டன்
     
     

    குறுவினா

    1. அச்சில் வெளி வந்த அம்பேத்கரின் முதல் நூல் குறித்து எழுதுக.
    விடைகுறிப்பு:

    இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற ஆய்வுக்கட்டுரையை அம்பேத்கர் எழுதினார். இதுவே அச்சில் வெளிவந்த அவர் முதல் நூல் ஆகும்.

    2. தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் மேற்கொண்ட பணிகள் இரண்டினை எழுதுக.
    விடைகுறிப்பு:
    தீண்டாமைக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழைத் தொடங்கினார். மேலும் நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார்.

    3. வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது யாது?
    விடைகுறிப்பு:
    என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன், அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்றார்.
     
     

    சிறுவினா

    1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் யாவை?
    விடைகுறிப்பு:
    மக்கள் ஆட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றில் இருந்து இந்திய நடைமுறைக்குப் பொருந்தும் சட்டக் கூறுகளையும் இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, அயர்லாந்து முதலிய நாடுகளின் சட்டங்களையும் ஆராய்ந்து இந்திய நாட்டிற்கான சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கினார்.

    2.அம்பேத்கரின் முதல் தேர்தல் வெற்றி குறித்து எழுதுக.
    விடைகுறிப்பு:
    1935 ல் ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர் நலனைப் பாதுகாக்க தேர்தலில் போட்டியிட அம்பேத்கர் விரும்பினார். சுதந்திர தொழிலாளர் கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் 15 பேரையும் வெற்றி பெறச் செய்தார்.
     
     

    நெடு வினா

    1. பூனா ஒப்பந்தம் பற்றி எழுதுக.
    விடைகுறிப்பு:

    • இந்தியர்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது.  
    • ஆனால் இதை ஏற்க மறுத்த காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார் இதன் விளைவாக 24.9.1931 காந்தியடிகளும்,  அம்பேத்கரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டவர்.
    • அதன்படி ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
    • இந்த ஒப்பந்தமே பூனா ஒப்பந்தம் எனப்பட்டது.
     

    சிந்தனை வினா

    1. பாகுபாடில்லாத மக்கள் சமூகம் உருவாக நமது கடமைகளாக நீங்கள் கருதுவன யாவை?
    விடைகுறிப்பு:
    பாகுபாடில்லாத க கள் சமூகம் உருவாக நமது கடமைகள் :
    நாம் வாழும் சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பங்குண்டு. நாம் பேசும் சொற்கள், செய்யும் செயல்கள் மற்றவரைப் பாதிக்காமலும், துன்புறுத்தாமலும் இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு பெயர்களுடனும் வெவ்வேறு கடமைகளுடன்தான் வாழ்கிறோம். வீட்டில் மகன் அல்லது மகள், பள்ளியில் மாணவன், அலுவலகத்தில் தொழிலாளி அல்லது முதலாளி, சமுதாயத்தில் குடிமகன் எனப் பல்வேறு வேடங்களைத் த தரித்துக் கொண்டுள்ளோம். தரித்துள்ள வேடத்தில் தவறின்றி நடந்துகொள்ள வேண்டும்.

    தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கும், தன்னோடு வாழ்பவர்களுக்கும் உண்டான உரிமைகளைப் பேணி வாழ்வதற்கு அவன் முன் வர வேண்டும். அவ்வாறு வாழும்போது சமுதாயத்தில் மனித நேயம் தழைத்துவிடும். மனித நேயம் பேணப்பட்டால் உரிமைகள் பேணப்படும். சமூகச் சீர்குலைவு இருக்காது. ஒழுக்கக்கேடு, அச்சம் நிறைந்த சூழ்நிலை இவையெல்லாம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.

    ஆண், பெண் வேறுபாடுகளும், உயர்ந்தவர். தாழ்ந்தவர் என்று பாகுபாடின்றி இருக்க வேண்டும். இரு பாலரும் சம உரிமை பெற்று வாழ்ந்தால், பாகுபாடில்லாத மக்கள் சமூகம் நீ உருவாகும்.


     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive