7th Tamil - Book Back Answers - Unit 2.3 - Guide

 


    7th Tamil - Book Back Answers - Unit 2.3 - Download

    Tamil Nadu Board 7th Standard Tamil - Unit 2.3: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 2.3 – from the Tamil Nadu State Board 7th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 2.3 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 7 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 2.3 தமிழரின் கப்பற்கலை  

    I.   கற்பவை கற்றபின்  

    1. பலவகையான கப்பல்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.
    விடைகுறிப்பு:
    பாய்மரக்கப்பல்கள்:

    காற்றின் உதவியால் செலுத்தப்படும் கப்பல்கள் பாய்மரக்கப்பல்கள் எனப்பட்டன.
    பெரிய பாய்மரம், திருக்கைத்திப் பாய்மரம், காணப் பாய்மரம், கோசுப் பாய்மரம் போன்ற பலவகையான பாய்மரங்களைத் தமிழர் பயன்படுத்தினர்.

    நீர்மூழ்கிக் கப்பல்கள் :
    இவை நீரில் மூழ்கியபடியே வெகு தொலைவு செல்லக்கூடிய நீர் ஊர்தி ஆகும்.
    நீர்மூழ்கிக் கப்பல்கள் போரில், பகைவர் கப்பல்களைத் தாக்குதல், முற்றுகையை முறியடித்தல், நீரில் இருந்தபடியே நிலப்பகுதியைத் தாக்குதல், இரகசியமாகச் சிறப்புப் E படைகளை முக்கியப் பகுதிகளில் இறக்கி வியூகம் அமைத்தல் ஆகிய பல பணிகளைச் ஓ செய்ய வல்லவை.
     
    2. தரைவழிப்பயணம், கடல்வழிப்பயணம், வான்வழிப்பயணம் ஆகியவை குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
    விடைகுறிப்பு:

    இடம் : அரசு உயர்நிலைப்பள்ளி.

    நடிகர்கள் : கபிலன், மணிவண்ண ன், கயல்விழி, தேன்மொழி, தமிழாசிரியர்,

    விளக்கம் : ஏழாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் கலந்துரையாடுகின்றனர். உடன் தமிழாசிரியர் தமிழ்வேந்தன் அவர்கள் உரையாடலில் உடன் பங்கேற்கின்றார்.

    தமிழ்வேந்தன் : மாணவச் செல்வங்களே! இன்று நாம் எதைப் பற்றி உரையாடப் போகிறோம் தெரியுமா?

    கயல்விழி : சொல்லுங்கள் ஐயா! தெரிந்து கொள்கிறோம்.

    தமிழ்வேந்தன் : கோடை விடுமுறையில் நீங்கள் ஊர்ப்பயணம் போவீர்களா?

    மணிவண்ணன் : நிச்சயமாக

    தமிழ்வேந்தன் : எங்கு போவீர்கள்?

    தேன்மொழி : எங்கள் பாட்டி வீட்டிற்குப் போவேன் ஐயா!

    தமிழ்வேந்தன் : எப்படி போவீர்கள்?

    தேன்மொழி : பேருந்தில் பயணம் செய்வேன் ஐயா!

    தமிழ்வேந்தன் : அதாவது தரைவழிப் பயணம் அப்படித்தானே!

    தேன்மொழி : ஆமாம் ஐயா!

    தமிழ்வேந்தன் : பேருந்து, சிற்றுந்து, மகிழுந்து, இரு சக்கரவாகனம் இவையாவும் தரைவழிப்பயணம் தானே!

    கயல்விழி : ஆமாம் ஐயா!

    தமிழ்வேந்தன் : தரைவழிப்பயணம் செல்வதில் சிக்கல்கள் ஏதாவது உண்டா?

    கபிலன் : ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல ! பெருகி வரும் மக்கள்தொகையில் நகர்புறம், கிராமப்புறம் எங்கும்போக்குவரத்து இடையூறுகள் அதிகம். வாகனங்கள் மக்கள் தொகைப் போல பன்மடங்கு பெருகி உள்ளன ஐயா!

    தமிழ்வேந்தன் : இதனைக் கட்டுப்படுத்த என்ன வழி?

    கபிலன் : சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் ஐயா!

    தமிழ்வேந்தன் : நல்ல கருத்து இது வரவேற்கத்தக்கது. இதைத்தவிர வேறு பயணம் ஏதாவது உண்டா ?

    தேன்மொழி : உண்டு ஐயா ! கடல்வழிப் பயணம்

    தமிழ்வேந்தன் : ஆதியில் பெருந்திரளான மக்கள் தங்களையும் தங்கள் உடைமைகளையும் ஏற்றிச் செல்ல கப்பலைமலைபோல நம்பி இருந்தனர்.

    தேன்மொழி : அது மட்டுமல்ல ஐயா, நீண்ட தூரம் கடலிலேயே செல்ல வேண்டி இருந்தால் கப்பல் பயணம் பாதுகாப்பானது மற்றும் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியது.

    கயல்விழி : போக்குவரத்து இடையூறு கப்பல் பயணத்தில் இல்லை
    ஐயா ! கடல் வழிப்பயணத்தில் துரிதமாக போக வேண்டிய இடத்திற்கு போய்ச் சேரலாம். மனதிற்கும் உடலுக்கும் புது தெம்பு தருவது இந்த ..
    கடல் வழிப் பயணம்தான்.

    தமிழ்வேந்தன் : நல்லது. இதைத் தவிர வேறு பயணம் ஏதாவது உண்டா ?

    மணிவண்ணன் : தரைவழிப் பயணம், கடல் வழிப்பயணம் இரண்டையும் பின்னுக்குத்
    தள்ளும் பயணம் வான் வழிப் பயணம்தான்.

    தமிழ்வேந்தன் : எப்படி?

    மணிவண்ணன் : கட்டணச் செலவு கூடுதலாக இருந்தாலும் நாம் போய் சேர வேண்டிய இடத்திற்குச் சில மணிநேரங்களில் அலுங்காமல் குலுங்காமல் போய் சேரலாம். இதனால் நேரம் மிச்சம். சுகமான பயணம் ஐயா!

    தமிழ்வேந்தன் :
    உண்மைதான்! இருப்பினும் நடுத்தர மக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் சாதகமாக இருக்கும் பயணம் தரைவழிப் பயணம் மட்டும் தான். காத்திருப்பதிலும் ஒரு சுகம்தான்! கூட்ட நெரிசலில் பயணிப்பதும் ஒரு தனி சுகம்தான் !
     
      

    II. மதிப்பீடு 

    சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

    1. தமிழரின் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப்பயன்படுத்தியது ____________.
    ஈ) ஓடம்

    2. தொல்காப்பியம் கடற்பயணத்தை ___________ வழக்கம் என்று கூறுகின்றது. 
    இ) முந்நீர்

    3. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப்பயன்படும் கருவி ________________.
    அ) சுக்கான்
     

    கோடிட்ட இடங்ளை நிரப்புக.

    1. காற்றின் உதவியால் செலுத்தப்படுபவை ___________ கப்பல்கள் எனப்பட்டன.
    2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது __________.
    3. உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினைக் கொண்ட அமைப்பு _____________ ஆகும்.

    விடைகுறிப்பு:
    1. பாய்மரக் கப்பல்  
    2. நங்கூரம்
    3. கலங்கரை விளக்கம்
     

    பொருத்துக

    1
    எரா
    திசைகாட்டும் கருவி
    2
    பருமல்
    அடிமரம்
    3
    மீகாமன்
    குறுக்கு மரம்
    4
    காந்த ஊசி
    கப்பலைச் செலுத்துபவர்
    விடைகுறிப்பு: 
    1
    எரா
    அடிமரம்
    2
    பருமல்
    குறுக்கு மரம்
    3
    மீகாமன்
    கப்பலைச் செலுத்துபவர்
    4
    காந்த ஊசி
    திசைகாட்டும் கருவி
        

    குறுவினா

    1. தோணி என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.
    விடைகுறிப்பு:

    மரத்தின் உட்பகுதியைக் குடைந்து தோண்டியவை 'தோணி' எனப்பட்டன.

    2. கப்பல் கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் (அ)பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?
    விடைகுறிப்பு:
    மரப்பலகை உராய்ந்து தேய்மானம் ஏற்படாமல் இருக்கதேங்காய் நார் (அ)பஞ்சு வைத்தனர். 

    3. கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.
    விடைகுறிப்பு:
    எரா,பருமல்,வங்கு, கூம்பு, பாய்மரம்.சுக்கான், நங்கூரம் 
     
     

    சிறுவினா

    1. சிறிய நீர்நிலைகளையும் கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்களை எழுதுக.
    விடைகுறிப்பு:

    சிறிய நீர்நிலை கடக்க:
    தோணி,ஓடம்,படகு, புணை,மிதவை,தெப்பம் கடல்களைக் கடக்க: கலம்,வங்கம்,நாவாய் 

    2. பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றிக் கூறுக.
    விடைகுறிப்பு:
    காற்றின் திசை அறிந்திருந்தனர். கடலில் காற்று வீசும் திசை, நீரோட்டங்களின் திசை அறிந்து கப்பலைச் செலுத்தினர்.திசைக் கருவி மற்றும் விண்மீன்களின் நிலையை அறிந்து கப்பலைச் செலுத்தினர். கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை, கடல் நீர் பொங்கும் காலம் அறிந்து கப்பலைச் செலுத்தினர்.

    3. கலங்கரை விளக்கம் - சிறு குறிப்பு வரைக.
    விடைகுறிப்பு:
    கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தைக் காட்டுவது கலங்கரை விளக்கம். இதன் உயரமான கோபுரத்தின் உச்சியில் விளக்கு இருக்கும்.கலம் என்றால் கப்பல்.கரை என்றால் அழைக்கும்.கப்பலை அழைக்கும் விளக்கு கலங்கரை விளக்கம் ஆகும்.

    சிந்தனை வினா

    1. தற்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளாதது ஏன் எனச் சிந்தித்து எழுதுக.
    விடைகுறிப்பு:
    நீண்ட காலப் பயணம்,அதிகப் பயணச் செலவு,புயல்,சுனாமி போன்ற காரணங்களால் இக்காலத்தில் மக்கள் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளவில்லை.





     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive