9th Tamil - Book Back Answers - Unit 3 - Guide

  
 
 



 


    9th Tamil - Book Back Answers - Unit 3 - Download

    Tamil Nadu Board 9th Standard Tamil - Unit 3: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 3 – from the Tamil Nadu State Board 9th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 3 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 3

    I. திறன் அறிவோம்

    அ) பலவுள் தெரிக.

    1. பொருந்தாத இணை எது?
    அ) ஏறுகோள் – எருதுகட்டி
    ஆ) திருவாரூர்- கரிக்கையூர்
    இ) ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு
    ஈ) பட்டிமன்றம் – பட்டிமண்டபம்
    விடைகுறிப்பு
    ஆ) திருவாரூர் – கரிக்கையூர்

    2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
    அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.
    ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.
    இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.
    ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.
    விடைகுறிப்பு
     ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

    3. சொற்றொடர்களை முறைப்படுத்துக.
    அ) ஏறுதழுவுதல் என்பதை
    ஆ) தமிழ் அகராதி
    இ) தழுவிப் பிடித்தல் என்கிறது
    i) ஆ, அ, இ
    ii) ஆ, இ, அ
    iii) இ, ஆ, அ
    iv) இ, அ, ஆ
    விடைகுறிப்பு
     i) ஆ, அ, இ

    4. பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று.

    அ) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.
    ஆ) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
    இ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
    ஈ) பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.
    விடைகுறிப்பு
    இ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

    ஆ) குறு வினா

    1.நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகின்றது?
        ஜல்லிக்கட்டு, ஏறு விடுதல், மஞ்சுவிரட்டு

    2.ஏறுதழுவதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும், வேறுபெயர்களைக் குறிப்பிடுக. 
        1.ஏறுகோள் 
        2.எருதுகட்டி
     
    3.பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் -இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
    இடம்:

        முரசு கொட்டுபவன் இவ்வரியை மக்களுக்குக் கூறினான்.

    பொருள் விளக்கம்:
        தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புது மணலைப் பரப்புங்கள் என்று முரசு கொட்டுபவன் அறிவித்தான்.
     
    4. ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.
            ஏறுதழுவுதல் குறித்த பல நடுகற்கள், புடைப்புச் சிற்பங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

    இடங்கள்:
    1. சேலம் மாவட்டத்தில் எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட “எருது பொருதார் கல்” ஒன்று உள்ளது.
    2. கோவுரிச் சங்கன் கருவந்துறை எனும் ஊரில் எருதோடு போராடி இறந்து பட்டான். சங்கன் மகன் பெரிய பயல் எடுத்த நடுகல் ஒன்றுள்ளது.
    3. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கரிக்கையூரில் மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் காணப்படுகிறது.
    4. திமிலுடன் கூடிய காளை ஒன்றை அடக்க முயல்வது போன்ற ஓவியம் மதுரை உசிலம்பட்டி அருகே கல்லூத்து மேட்டுப்பட்டியில் கண்டறியப்பட்டுள்ளது.

    5. பட்டிமண்டபம், பட்டிமன்றம் – இரண்டும் ஒன்றா? விளக்கம் எழுதுக.
            பட்டிமண்டபம் என்பது இலக்கிய வழக்கு. ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள். பேச்சு வழக்கும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

    “மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன்”
    பகைப் புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம் எனச் சிலப்பதிகாரத்திலும்,
    “பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்” என மணிமேகலையிலும்
    “பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை;
    எட்டினோடு இரண்டும் அறியனையே” என்று திருவாசகத்திலும்
    “பன்னரும் கலை தெரி பட்டிமண்டபம்” எனக் கம்பராமாயணத்திலும்
    இச்சொல் பயின்றுவருதலை அறியலாம்.

    6. தொல்லியல் ஆதாரங்கள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்?
            தொல்லியல் அகழாய்வு செய்தல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச் செதுக்கி ஆராய்தல் ஆகும்.
            அகழாய்வு வரலாறு முழுமைபெற உதவுகிறது. அகழாய்வில் கிடைத்த பொருள்கள் நாம் வாழ்ந்த காலத்தை மட்டுமின்றி நம் வரலாற்றையும் உணர்த்துகின்றன.
     

    இ) சிறு வினா

    1. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.
            ஏறுதழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும், மருதநிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும், பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது. இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.

    2. ஏறுதழுவுதல் திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்துள்ளது?
    • மருத மக்களின் வேளாண்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது மாடுகள்.
    • பாலைநிலத்தில் போக்குவரத்திற்கு மாடுகள் பயன்படுத்தப்படுகின்றது.
    • முல்லை நிலத்தில் இதன் தொடர்ச்சியாக ஏறினைத் தழுவி விளையாடி மகிழ்வர்.

    3. உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.
    • ஊரையே தூய்மை செய்து,வண்ணம் அடித்து, தோரணம் கட்டுவர்
    • இசை,கலை நிகழ்ச்சி ஆகியவை நடக்க ஏற்பாடு செய்வர்.
    • இந்திரவிழாவுக்குத் தெருக்கள், மன்றங்கள் ஆகியவற்றை அழகுபடுத்தினர்.
    • பாக்கு, வாழை, கரும்பு நட்டு வைத்தனர்.
    •  எங்கும் புது மணலைப்பரப்பினர்.
    4. வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்த உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க.
                அறிவியல் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பழைய தலைமுறையைப் பற்றித் தெரிந்து என் செய்வது? செல்லிடப்பேசிக்குள்ளே உலகம் சுற்றும் வேளையில் அகழாய்வில் கிடைக்கும் செல்லாக்காசுகள் வந்தென்ன செய்ய முடியும்? மடிக்கணினி மலைக்கவைக்கிறது.
     
                அதையெல்லாம் விட்டுவிட்டு மண் ஓடுகள் இறந்தோரைச் சுமந்த மண்தாழிகள் கண்டறிந்து என்ன சாதிக்க முடியும்? இவ்வாறு இருக்க, அகழாய்வு என்ன செய்ய இருக்கிறது?

                அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன. அதனால் ரோமானியர்களுக்கும் நமக்கும் இருந்த வணிகத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது.

                ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டன.

                நம் முன்னோர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் அடிப்படையிலான பண்பாட்டு வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். தமிழர்களின் உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையைச் சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகளே ஆவணங்களாகத் திகழ்கின்றன.
     

     ஈ) நெடு வினா

    1.ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விளக்குக.
    • காளைச் சண்டை ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு.
    • அங்கு காளையைக் கொல்பவன் வீரன்.
    • தோற்றாலும் வென்றாலும் காளைகள் சில இடங்களில் கொல்லப்படும்.
    • இவை வன்மத்தையும் போர்வெறியையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
    • ஆனால் தமிழ்நாட்டில் காளைகளுக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தக்கூடாது.
    • வெற்றிபெற்ற காளைக்கும் பரிசு தருவார்கள்.

    2. பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.
    • ஏறு தழுவுதல் 2000 ஆண்டுகள் தொன்மையானது.
    • இயற்கை வேளாண்மையையும் கூறும் பண் பாட்டுக் குறியீடு
    • விலங்குகளை முன்னிலைப் படுத்தவும் நம் முன்னோர்கள் ஏறுதழுவுதலைப் பண்பாட்டுக் கூறாகக் கொண்டிருந்தனர்.
    • நாகரிகம் என்ற பெயரில் நாம் அதனை ஒதுக்காமல் அந்நிகழ்வுகளைச் செய்தல் வேண்டும்.
    • ஏறுதழுவுதல் பற்றி நம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
     
    II. மொழியை ஆள்வோம்

    அ) படித்து சுவைக்க.

    ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ 
    தூங்காத கண்ணே உன்னைத் தூங்க வைப்பேன் ஆரிராரோ 
    மாம்பழத்தைக் கீறி வயலுக்கு உரம்போட்டுத் 
    தேன் பார்த்து நெல்விளையும் செல்வந்தனார் புத்திரனோ!
    வெள்ளித்தேர் பூட்டி மேகம்போல் மாடுகட்டி 
    அள்ளிப் படியளக்கும் அதிர்ஷ்டமுள்ள புத்திரனோ 
    முத்துச் சிரிப்பழகா முல்லைப்பூப் பல்லழகா 
    தொட்டில் கட்டித் தாலாட்டத் தூக்கம் வருமோடா 
    கதிரறுக்கும் நேரத்திலே கட்டியுன்னைத் தோளிலிட்டால் 
    மதியத்து வெயிலிலே மயக்கமும்தான் வாராதோ 
    வயலிலே வேலை செய்வேன் வரப்பினிலே போட்டிடுவேன் 
    வயலைவிட்டு ஏறுமுன்னம் வாய்விட்டு அழுவாயோ? 
                                    -நாட்டுப்புறப்பாட்டு, தகவலாளர்: வேலம்மாள்
     

    ஆ) மொழி பெயர்க்க. 

    1. A nation’s culture resides in the hearts and in the soul of its people -Mahatma Gandhi
    விடைகுறிப்பு:

            நம் நாட்டினுடைய பண்பாட்டினை மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.

    2. The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru
    விடைகுறிப்பு:

            மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி

    3. The biggest problem is the lack of love and charity – Mother Teresa
    விடைகுறிப்பு:

            அன்பு செலுத்துதல், தர்மம் செய்தல் இவற்றின் குறைபாடே, மிகப்பெரிய பிரச்சனையாய் உள்ளது.

    4. You have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam
    விடைகுறிப்பு:

            உங்கள் கனவு நனவாகும் வரை, கனவு காணுங்கள்.

    5. Winners don’t do different things; they do things differently – Shiv Khera
    விடைகுறிப்பு:

            வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை மாறாக ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாக செய்கிறார்கள்.
     

    இ) வடிவம் மாற்றுக. 

    பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, வரிசைப்படுத்தி முறையான பத்தியாக்குக.
     
    1. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
     
    2. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல் பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.
     
    3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
     
    4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.
     
    விடைகுறிப்பு:
     
    1. தமிழ் மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன. 
     
    2. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ் மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. 
     
    3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன. 
     
    4.  உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
     

    ஈ) மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக. 

    1. மேடும் பள்ளமும்
    2. நகமும் சதையும்
    3. முதலும் முடிவும்
    4. கேளிக்கையும் வேடிக்கையும்
    5. கண்ணும் கருத்தும்
    விடைகுறிப்பு:

    எ. கா : மேலும் கீழும்:
    ஆரிப் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் குமார் மேலும் கீழும் பார்த்தான்.

    1. மேடும் பள்ளமும்:
            சேரி மக்களின் வாழ்க்கை மேடும் பள்ளமும் கொண்டதாக இருக்கிறது.

    2. நகமும் சதையும்:
            மும்தாஜும் தமிழரசியும் நகமும் சதையும் போல இணைபிரியாத் தோழிகள்.

    3. முதலும் முடிவும்: 
            இது போன்ற தவறுகள் முதலும் முடிவும் ஆக இருக்கட்டும் என்று ஆசிரியர் அவர்களிருவரையும் எச்சரித்தார்.

    4. கேளிக்கையும் வேடிக்கையும்:
            எங்கள் ஊர்த் திருவிழா கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்ததாக இருந்தது.

    5. கண்ணும் கருத்தும்:

            அன்பழகன் கண்ணும் கருத்துமாகப் படித்துத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.

    உ) தொகுப்புரை எழுதுக.

    பள்ளியில் நடை பெற்ற இலக்கிய மன்ற விழா நிகழ்ச்சிகளை திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.
    தொகுப்புரை
    • தமிழ்த்தாய் வாழ்த்துடன் இலக்கிய மன்ற விழா காலை 9 மணியளவில் தொடங்கியது.
    • தலைமை ஆசிரியர் தலைமை ஏற்று தலைமை உரை வழங்கினார்.
    • அவர் தலைமை உரை வழங்கும் பொழுது மாணவர்கள் அனைவரும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையோடும் படிக்க வேண்டும் என்றார்.
    • ஒன்பதாம் வகுப்பு மாணவர் முயற்சி என்னும் தலைப்பில் சிற்றுரை வழங்கினார். பேச்சுப் போட்டி - கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
    • பத்தாம் வகுப்பு மாணவர் தமிழரசன் நன்றியுரை வழங்க நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

    ஊ) பத்தியைப் படித்து வினாக்களுக்கு  விடையளிக்க.

    1. பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.
    அ) மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?
    ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது யாது?
    இ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது?
    ஈ) மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது?
    விடைகுறிப்பு:
    காங்கேயம் இனக் காளைகள்

    2. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
    அ) கர்நாடகம்
    ஆ) கேரளா
    இ) இலங்கை
    ஈ) ஆந்திரா
    விடைகுறிப்பு:
    இ) இலங்கை

    3. பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன.
    அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன.
    ஆ) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன.
    இ) கண்டெடுக்க + பட்டு + உள்ளன.
    ஈ) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன.
    விடைகுறிப்பு:
    அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன.

    4. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?
    அ) வினாத் தொடர்
    ஆ) கட்டளைத்தொடர்
    இ) செய்தித்தொடர்
    ஈ) உணர்ச்சித்தொடர்
    விடைகுறிப்பு:
    இ) செய்தித்தொடர்

    III. மொழியோடு விளையாடு

    அ) பொருள் எழுதித்  தொடரமைக்க.

    கரை, கறை; குளவி, குழவி; வாளை, வாழை; பரவை, பறவை; மரை, மறை;
    அலை – கடலை    இன்று கடலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது.
    அழை -  வரவழைதல்ளா என் நண்பர்களை வரவழைத்துள்ளேன்.
    விடைகுறிப்பு:
     
    1. அலை - கடலலை - இன்று கடலலையின் வேகம் மிக அதிகமாவுள்ளது. 
    2. அழை - வரவழைத்தல் - என் நண்பர்களை வரவழைத்துள்ளேன் 
    3. கரை - ஆற்றின் ஓரம் - ஆற்றங்கரையில் தென்னை மரங்கள் செழித்து வளர்ந்து உள்ளன. 
    4. கறை - படிவது கறை - சட்டையில் கறை படிந்துள்ளது. 
    5. குளவி - பூச்சி வகைகளுள் ஒன்று - வாசல் நிலைப்படியில் குளவி கூடுகட்டியிருக்கிறது. 
    6. குழவி - குழந்தை - குழவி மருங்கினும் கிழவதாகும் (பிள்ளைத்தமிழ்) 
    7. வாளை - மீன்களில் - ஒருவகை நீர் நிலைகளில் வாளை மீன் துள்ளிக் குதித்தது. 
    8. வாழை - வாழை மரம் - திருமணப் பந்தலில் வாழை மரங்கள் கட்டினர். 
    9. பரவை - பரந்துள்ள கடல் - மதுரைக்குப் பக்கத்திலுள்ள சிற்றூர் பரவை
    10. பறவை - பறப்பவை - காலைப் பொழுதில் பறவைகள் பாடும். 
    11. மரை - மான், தாமரை - தாமரை நீர் நிலையில் மலரும். 
    12. மறை – வேதம் - வேதபாட சாலையில் நான்மறை ஓதப்பட்டன.

    ஆ) அகராதியில் காண்க.

    இயவை, சந்தப்பேழை, சிட்டம், தகழ்வு, பௌரி
    விடைகுறிப்பு

    இயவை : வழி, மூங்கில் அரிசி, துவரை, தோரை நெல், காடு
    சந்தப்பேழை : சந்தனப் பெட்டி
    சிட்டம் :  நூல் சிட்டம், எரிந்து கருகியது, பெருமை அறிவு, நீதி, உயர்ந்து
    தகழ்வு : அகழ், அறிவு, உண்கலம்
    பௌரி : பெரும் பண்வகை.
     

    இ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


    1. பரதம் பாரதத்தின் பண்பாட்டுக் கலையாகும்.
    2. தமிழகத்தின் இசைக்கருவிகளுள் நாதசுரமும் ஒன்று. தவில் தோற் கருவிகளுள் ஒன்று.
    3. தம்புரா சுருதி தவறாமல் இருப்பதற்கு இசைக்கப்படுவது.
    4. பறை, தோல் கருவிகளுள் தொன்மையானது. நல்லதுக்கும் கெட்டதுக்கும் இசையில் நுண்ணிய வேறுபாடு உண்டு.
    5. தமிழ்நாட்டுப் பெண்களில் எண்ணங்களை வாசல் முன் வெளிப்படுத்துவது. எரியும் குத்துவிளக்கு மங்கலம் சின்னங்களில் ஒன்று.
    6. தமிழர்களின் காதலும் வீரமும் இருகண்கள், காளையை அடக்கி பெண்ணைத் திருமணம் செய்தனர். இஃது ஒரு பண்பாட்டு நிகழ்வு.விரிவான தொல்லியியல் ஆய்வு மேற்கொண்டால், பண்டைய தமிழர்களின் சிறப்புகளையும், வாழ்வியல் முறை, நாகரீகத்தையும் பண்பாட்டு அடையாளங்களையும் வெளிக்கொணர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    IV. செயல் திட்டம்

    தமிழ்நாட்டில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் குறித்த செய்திகளை, நாளிதழ்களிலோ புத்தகங்களிலோ திரட்டிச் செய்திப் படத்தொகுப்பினை உருவாக்குக.
    விடைகுறிப்பு

     
    தொல்லியல் பற்றிய செய்திகள்:
            தேனி மாவட்டம், போடி, சி.பி.ஏ., கல்லூரி வரலாற்றுத்துறை மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியியல் துறை மூலம், இந்த ஆய்வு நடந்தது.
     
    உதவி பேராசிரியர், மாணிக்கராஜ் கூறியதாவது:
            தே.கல்லுப்பட்டி அருகே, கவசகோட்டை கிராமத்தில், பண்ணைமேடு எனப்படும், அக்ரஹாரமேடு பகுதியில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில், ஆய்வு மேற்கொண்டோம். இதில், தமிழரின் தொன்மை எழுத்து வடிவமான, தமிழ், ‘பிராமி’ எழுத்துக்கள் பொறித்த, கருப்பு, சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, சுடுமண் பொம்மைகள், மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

            பானை ஓடுகளில், கி.பி. 1 மற்றும் 2ம் நூற்றாண்டை சேர்ந்த, தமிழ் பிராமி எழுத்து வடிவம் இடம் பெற்றுள்ளது. தொடர் எழுத்துகள் கிடைக்காததால், முழுவதும் படித்து அறிய முடியவில்லை. 
     
            இங்கு காணப்படும் செங்கல்கள், கீழடி அகழ்வாய்வு கட்டுமானத்தில் இருந்த
    செங்கல்களின் அமைப்பை போன்றே காணப்படுகிறது. துவாரங்கள் உள்ளது இதன் சிறப்பு. மற்றொரு பானை ஓட்டில், மீன் உருவம் பொறித்துள்ளது.

            முதுமக்கள் தாழிகளின் மேற்கு பகுதியில் வட்டவடிவமான அலங்காரங்கள் மூன்று மற்றும் நான்கு அடுக்கில் பொறிக்கப்பட்டுள்ளது.
    தாழியின் விளிம்பு பகுதியில் கயிறு போன்ற அலங்கார குறியீடுகள் காணப்படுகின்றன. இவை மண்பாண்டங்கள் சுடுவதற்கு முன் வரையப்பட்டவை என தெரிகிறது.

    V. நிற்க அதற்குத் தக..

    அ) நான் பாராட்டுப் பெற்ற சூழல்கள்.  

    அ) கூடுதலாக மீதம் கொடுத்த கடைக்காரரிடம் அந்தப் பணத்தை மீண்டும் அளித்தபோது.
    ஆ) கட்டுரை ஏடுகளைக் கீழே தவறவிட்ட என் ஆசிரியருக்கு அதை எடுத்துத் தந்தபோது.
    இ) _______________________________
    ஈ) _______________________________
    விடைகுறிப்பு:

    அ) கூடுதலாக மீதம் கொடுத்த கடைக்காரரிடம் அந்தப் பணத்தை மீண்டும் அளித்தபோது.
    ஆ) கட்டுரை ஏடுகளைக் கீழே தவறவிட்ட என் ஆசிரியருக்கு அதை எடுத்துத் தந்தபோது.
    இ) நகரப் பேருந்து நிலையத்தில் வழிகேட்ட பெரியவருக்கு வழிகாட்டிய போது.
    ஈ) பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது முதியவரின் பழுதாகி நின்ற இருசக்கர வாகனத்தைச்
    செய்த போது.
     

    VI. அறிவை விரிவுசெய். 

    1. தமிழர் நாகரிகமும் பண்பாடும் - அ. தட்சிணாமூர்த்தி 
    2. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் - மா. இராசமாணிக்கனார் 
    3 தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் - க.ரத்னம் 
    4. தொல்லியல் நோக்கில் சங்க காலம் - கா. ராஜன் 
    5. தமிழர் சால்பு சு. வித்யானந்தன்
     
     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive