Tamil Nadu Board 7th Standard Tamil - Unit 2.5: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 2.5 – from the Tamil Nadu State Board 7th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 2.5 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 7 students! Prepare well and aim for top scores. Thank you!
இயல் 2.5 நால்வகைக் குறுக்கங்கள்
I. கற்பவை கற்றபின்
1. ஐகார, ஔகார, மகர, ஆய்தக் குறுக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் சொற்களைத் தொகுத்து எழுதுக.விடைகுறிப்பு:
(i) ஐகாரக்குறுக்கம் :
வையம், ஐம்பது, ஐந்து, சமையல், தலைவன், வளையல், பறவை, கடலை, திண்ணை
(ii) ஔகாரக்குறுக்கம் :
ஔவை, வௌவால்
(iii) மகரக் குறுக்கம் :
வரும் வண்டி, போண்ம்
வலம் வந்தான், மருண்ம்
(iv) ஆய்தக்குறுக்கம் :
முள் + தீது – முஃடீது.
கல் + தீது – கஃறீது
II. மதிப்பீடு
சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
ஆ)ஒன்று
2. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் _____________.
ஈ) பணம் கிடைத்தது
3. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது________.
ஆ)ஔகாகரக்குறுக்கம்
குறுவினா
விடைகுறிப்பு:
ஒள எழுத்து தனித்து வரும் இடங்களில் தன்னுடைய இரண்டு மாத்திரையில் முழுமையாக ஒலிக்கும்.
2.சொல்லின் முதல், இடை,கடை ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?
விடைகுறிப்பு:
முதல்- 1மாத்திரை,இடை- 1 மாத்திரை,கடை- 1 மாத்திரை
3.மகரக்குறுக்கத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக
விடைகுறிப்பு:
1.வலம் வந்தான்
2.போன்ம்
III மொழியை ஆள்வோம்
கேட்க
1. இயற்கை ஆர்வலர் ஒருவரது உரையைக் கேட்டு மகிழ்க.விடைகுறிப்பு:
இயற்கை ஆர்வலர் ஒருவரது உரை:
ஓய்வறியா உழவன்
நெல் ஜெயராமன் தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், கட்டிமேடு கிராமத்தில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டார். அவர் கவனம் இயற்கை வேளாண்மையின் பக்கம் திரும்பியது. நஞ்சில்லா உணவை வலியுறுத்தி நாடெங்கும் பயணம் செய்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வரின் அடிச்சுவட்டைப் பின்பற்றினார்.
நெல் வகைகளின் பாரம்பரியத்தையும் மருத்துவக்குணங்களையும் கேட்டறிந்த நம்மாழ்வார் ஏழுபாரம்பரிய நெல் விதைகளை நெல் ஜெயராமன் கைகளில் ஒப்படைத்தார். பதினைந்து ஆண்டுகள் பாரம்பரிய நெல் வகைகள் குறித்த தேடலைத் தொடர்ந்தார்.
தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த பாரம்பரிய நெல் ரகங்களும் பசுமைப் புரட்சி அளித்த ரசாயன உரங்களின் பயன்பாட்டால். அழிந்து போனதையும் பல நெல் ரகங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதையும் அறிந்தார்.
மருத்துவக் குணமிக்க நெல் ரகங்கள் தமிழகத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்ததையும் நம் முன்னோர்கள் நோய் நொடி இன்றி நெடுங்காலம் உயிர் வாழ்ந்தார்கள் என்பதனையும் அதற்கான காரணத்தையும் கண்டறிந்தார். அழிந்து போன நெல் ரகங்களை மீட்டெடுக்க உறுதிக் கொண்டார்.
அவர் மேற்கொண்ட பயணத்தில் சந்தித்த சவால்களும், அவமதிப்புக்களும் ஏராளம் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தம் அயராத முயற்சியால் அனைத்திலும் வெற்றி முத்திரையைப் பதித்தார்.
மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, மைசூர் மல்லி, கிச்சிலி சம்பா எனப் பல வகையான பாரம்பரிய நெல் ரகங்களை அவர் மீட்டெடுக்கத் தொடங்கினார். நம்மாழ்வார் அளித்த பாரம்பரிய ரக நெல் விதைகளையும், தன்னால் சேகரிக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களையும் பயிரிடத் தொடங்கினார்.
நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை 2 கிலோ எடையில் இலவசமாக அளித்து, அதனை இயற்கை முறையில் மறு உற்பத்தி செய்து அடுத்த ஆண்டு திருவிழாவில் 4 கிலோ விதை நெல்லாகத் திருப்பி அளிக்க வேண்டும் என்றார். இதுவரை 174 பாரம்பரிய நெல் வகைகளை மீட்டுள்ளார்.
கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்றைப் பற்றி இரண்டு நிமிடம் பேசுக
1. காட்டு வளமே நாட்டு வளம்!விடைகுறிப்பு:
- ஐவகை நிலங்கள் பற்றி தமிழர்கள் அறிந்திருந்தனர். குறிஞ்சி, முல்லை , மருதம். நெய்தல், பாலை. இவற்றுள் முல்லை நிலத்தின் தன்மைப் பற்றி பேச வந்துள்ளேன்.
- காடும் காடு சார்ந்த இடமும் முல்லைத் திணையாகும்.
- ஒரு நாட்டின் வளம் அந்த நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது.
- ‘காட்டின் வளமே நாட்டின் வளம்’ என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
- பல்லுயிர்களின் வாழ்விடம் காடாகும். இது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் வளர்வதற்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது.
- மனிதனின் முயற்சி இன்றி வளர்ந்த மரங்கள், செடிகள், கொடிகள், புல்வெளிகள், புதர்கள், பூச்சியினங்கள், பறவை இனங்கள்.
- விலங்கினங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடம் தான் இக்காடு. இதன் இடையே காட்டாறுகளும், நீரோடைகளும் இருக்கும்.
- யானை, புலி, சிறுத்தை, சிங்கம், மான், கரடி, காட்டு மாடு போன்ற அரிய விலங்குகள் இக்காட்டில் வாழ்கின்றன.
- காடுகள் நிழல் தருகின்றன; காய்கள் தருகின்றன; கனிகள் தருகின்றன.
- இயற்கைத் தங்கும் இடம் இந்தக் காடுதான். சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகள் எங்கும் அலைந்து திரியும்.
விடைகுறிப்பு:
- வளம் நிறைந்த நிலம். மரம், செடி, கொடிகள், நல்ல நீர், தூய்மையான காற்று இவை அனைத்தும் நிரம்பியதுதான் காடு.
- காடு பறவைகள் விலங்குகள், தாவரங்கள் போன்ற எண்ணற்ற உயிர் இனங்கள் வாழும் வாழ்விடமாகும்.
- புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு.
- இயற்கை அன்னைத் தந்த அன்பு பரிசுதான் இந்தக் காடு.
- இயற்கையாக வளர்ந்த மரம், செடி, கொடிகள், புதர்கள், புல்வெளிகள் இவையாவும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல.
- காடுகள் விலங்கினங்களுக்கு புகலிடம் அளிக்கின்றன.
- இயற்கை காய்கனிகள் தருகின்றன. நிழல் தருகின்றன.
- மழைவளம் பெருக மூலக் காரணமாக அமைகின்றன.
- காட்டுப்பகுதியில் மருத்துவக் குணம் கொண்ட தாவரங்கள், மரங்கள் இருக்கின்றன.
- வீடு கட்டுவதற்குத் தேவையான பொருட்களை நமக்கு அள்ளி வழங்குவதும் இந்தக் காடுகள் தான். மழைவளம் பெருகவும் மண் வளம் பெருகவும், நிலம் வளம் பெருகவும் முக்கியக் காரணமாக இருப்பதும் இந்தக் காடுகள் தான்.
- வன விலங்குகளின் உறைவிடமாகவும், பறவைகளின் சரணாலயமாகவும் மனிதர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குவது இந்தக் காடுகள் தான். எனவே காடுகளை பாதுகாப்போம் காட்டின் பயன்களை முழுமையாக பயன்படுத்துவோம். பலன் பெறுவோம்.
கடிதம் எழுதுக.
1. நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.நண்பனுக்குக் கடிதம்
_______ (ஊர்)
நாள்:------
உன் உயிர் நண்பன் எழுதும் கடிதம். நலம் நலம் அறிய விரும்புகின்றேன்.நாங்கள் சென்னைக்குச் சுற்றுலாசென்றோம். மாமல்லபுரம்,உயிரியியல்பூங்கா, மெரினா கடற்கரை,பாம்புப் பண்ணை ஆகிய இடங்களுக்குச் சென்றோம். மிகவும் அருமையாக இருந்தது.அடுத்த வாரம் நேரில் வரும் போது இன்னும் விளக்கமாகக் கூறுகின்றேன்.அன்புடன் முடிக்கின்றேன்.
18.பாண்டியன் நகர்,
மதுரை-1
IV மொழியோடு விளையாடு
வட்டத்திலுள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை அமைக்க.

1. புதையல்
2. கடல்
3. கயல்
4. இயல்
5. தையல்
6. புயல்
7. புல்
8. இழை
9. இலை
10. கலை
11. கதை
12. இல்லை
சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க
(எ.கா.) வாழை + காய் = வாழைக்காய்
(i) வாழை + பழம் = வாழைப்பழம்
(ii) குருவி + கூடு = குருவிக்கூடு
(iii) விளையாட்டு + போட்டி = விளையாட்டுப்போட்டி
(iv) தயிர் + சோறு = தயிர்ச்சோறு
(v) அவரை + காய் = அவரைக்காய்
(vi) விளையாட்டு + திடல் = விளையாட்டுத்திடல்
(vii) பாட்டு + போட்டி= பாட்டுப்போட்டி
(viii) கொய்யா + பழம் = கொய்யாப்பழம்
விடுகதைகளுக்கு விடை எழுதுக
1. மரம் விட்டு மரம் தாவுவேன்; குரங்கு அல்ல.வளைந்த வாலுண்டு; புலி அல்ல.
கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல.
முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார்?…..
விடைகுறிப்பு:
அணில்
3. வெள்ளையாய் இருப்பேன்; பால் அல்ல.
மீன் பிடிப்பேன். தூண்டில் அல்ல
தவமிருப்பேன்; முனிவரல்ல நான் யார்?…..
விடைகுறிப்பு:
கொக்கு
V நிற்க அதற்குத் தக
கலைச்சொல் அறிவோம்
வனவியல் - Forestry
இயற்கை வளம் - Natural Resource
வனப் பாதுகாவலர் - Conservator of Forest
0 Comments:
Post a Comment