Tamil Nadu Board 11th Standard Tamil - Unit 4: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 4 – from the Tamil Nadu State Board 11th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 4 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 11 students! Prepare well and aim for top scores. Thank you!
இயல் 4
I. நம்மை அளப்போம்
அ) பலவுள் தெரிக.
அ) நூல்
ஆ) ஓலை
இ) எழுத்தாணி
ஈ) தாள்
விடை:
அ) நூல்/ ஆ) ஓலை
2. சரியான விடையைத் தேர்க.
அ) கல்வி அழகே அழகு - 1. புறநானூறு
ஆ) இளமையில் கல் - 2. திருமந்திரம்
இ) துணையாய் வருவது தூயநற் கல்வி - 3. ஆத்திசூடி
ஈ) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் - 4. திருக்குறள்
5. நாலடியார்
i) அ - 2, ஆ - 3, இ ) - 4, ஈ) - 1
ii) அ - 3, ஆ - 4, இ ) - 1, ஈ ) - 2
iii) அ) 5, ஆ) 3, இ) 2, ஈ) - 1
iv) அ) - 4,ஆ) - 1,இ) - 2,ஈ) - 5
விடை:
iii) அ - 5, ஆ - 3, இ - 2, ஈ - 1
3. பிள்ளைக்கூடம் கவிதை இடம்பெற்ற நூல்
அ) வடக்கு வீதி
ஆ) கொடி விளக்கு
இ) தகப்பன் கொடி
ஈ) சுட்டுவிரல்
விடை:
ஆ) கொடி விளக்கு
4. “விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்" - என்று உரைப்பவர்
அ) அழகிய பெரியவன்
ஆ) பிரமிள்
இ) அப்துல் ரகுமான்
ஈ) இரா. மீனாட்சி
விடை:
இ) அப்துல் ரகுமான்
ஆ) குறு வினா
1. சங்ககாலத்தில் தமிழ்மொழியின் நிலைபற்றி இராசமாணிக்கனாரின் கூற்று யாது?விடைகுறிப்பு:
- "சங்க காலத் தமிழகம் பெற்றிருந்த அரசியல் சுதந்திரத்தினால், தமிழ்நாடெங்கும் தமிழே ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் சமயம், வணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொது மொழியாகவும் விளங்கி வந்தது" என்று, இராசமாணிக்கனார் சங்ககாலத்தில் தமிழ்மொழியின் நிலைபற்றிக் கூறியுள்ளார்.
2. உ. வே. சா. அவர்கள் பயின்ற கல்விமுறை குறித்துக் குறிப்பு வரைக.
விடைகுறிப்பு:
- உ. வே. சா. பயின்ற கல்விமுறை தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்விமுறை என்ற வகைமைக்குள் அமைகிறது.
- திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப் புலவராக விளங்கிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் அவர்களிடம் தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாதர் இம்முறையில் பயின்றார்.
3. இங்கே ஐம்பதாண்டு வேம்பு
கோடையில் கொட்டும் பூக்களை
எண்ணச் சொல்கிறார்கள் எண்ணச் சொல்கிறவர்கள் யார்? எண்ணுபவர்கள் யார்?
- தாய்மொழி வாயிலாகக் கற்பிப்பிக்கும் ஆசிரியர்களே 'எண்ணச் சொல்கிறவர்கள்".
- தாய்மொழி வழிக் கல்வி கற்கும் மாணவ மாணவியர்களே 'எண்ணுபவர்கள்'.
4. 'கருங்கல்' - புணர்ச்சி விதி கூறுக.
- கருங்கல் - கருமை + கல்
- 'ஈறுபோதல்' கரு + கல்
- 'இனமிகல்' கருங் + கல் 'கருங்கல்' எனப் புணர்ந்தது.
5. “கற்றேன் என்பாய் கற்றாயா?" என்று அப்துல் ரகுமான் யாரிடம் எதற்குக் கேட்கிறார்?
விடைகுறிப்பு:
- காகிதத்தில் அச்சடித்த எழுத்துகளைப் படிப்பது கல்வியாகாது என்பதனைக் குறிப்பதற்கும்,
- கற்றல் என்பதன் உண்மைப் பொருளைத் தேடி அறிதல் வேண்டும் என்பதை உணர்த்துவதற்கும்,
- நடக்காததை நடந்ததாகக் கருதிக்கொண்டு மாயையில் வாழும் மக்களிடம் கேட்கிறார்.
இ) சிறு வினா
விடைகுறிப்பு:
- “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” புறநானூறு
- “துணையாய் வருவது தூயநற் கல்வியே” - திருமந்திரம்
- “கல்வி அழகே அழகு” - நாலடியார்
- “இளமையில் கல்" - ஆத்திசூடி
- கற்பிக்கும் இடங்களைப் 'பள்ளி' என்று 'பெரிய திருமொழி' கூறுகிறது.
- கற்பிக்கும் இடங்களை 'ஒதும்பள்ளி' என்று 'திவாகர நிகண்டு' கூறுகிறது.
- கற்பிக்கும் இடங்களைக் 'கல்லூரி' என்று 'சீவகசிந்தாமணி' கூறுகிறது.
2. சமணப் பள்ளிகளும், பெண்கல்வியும் - குறிப்பு வரைக.
விடைகுறிப்பு:
சமணப் பள்ளிகள்:
- கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் என்னும் நான்கு கொடைகளும் சமண சமயத்தின் தலையாய அறங்கள். திகம்பர சமணத் துறவிகள், மலைக்குகையில் தங்கினர்.
- தங்களின் தங்கும். படுக்கை இடங்களிலேயே கல்வியையும் சமயக் கருத்துகளையும் மாணவர்களுக்கு அவர்கள் போதித்தனர். அதனால் கல்வி கற்பித்த இடங்கள் பள்ளிக் கூடங்கள் எனப்பட்டன.
- வந்தவாசி அருகில் உள்ள 'வேடல்' என்ற ஊரில் இருந்த சமணப் பள்ளியில், பெண் சமண ஆசிரியர் ஒருவர் 500 மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தார்.
- 'பட்டினிக்குரத்தி' என்னும் சமணப்பெண் ஆசிரியர், விளாப்பாக்கத்தில் சமணப்பள்ளி ஒன்றை நிறுவி உள்ளார். சமணப் பள்ளிகளில் பெண்களும் ஆசிரியர்களாக இருந்துள்ளனர் என்பதை இவை வெளிப்படுத்துகின்றன. பெண்களுக்கு என்று தனியாகக் கல்வி கற்பிக்கும் சமணப்பள்ளிகள் 'பெண் பள்ளிகள்' என்று அழைக்கப்பட்டன.
3. அப்துல் ரகுமானின் கவிதையிலிருந்து வினா - விடை வடிவத்திற்கு ஏற்ற அடிகளைத் தருக.
வெறும் காகிதம் தின்பது கல்வியில்லை.
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்?
வெறும் பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல.
மேற்குறித்த அடிகள், அப்துல் ரகுமானின் கவிதையில் வெளிப்படும் வினாவிடை வடிவிலான அடிகள் ஆகும்.
4. கல்வியால் நீ அடைந்த சிறப்புகளைப் பத்து வரிகளில் எடுத்துரைக்க.
விடைகுறிப்பு:
- நான் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். பள்ளியில் சேர்ந்தபோது எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்கள் கல்வியின் சிறப்பையும், கல்வி கற்பதனால் பெறும் பயன்களையும் கற்பித்தனர். "கல்வி அழியாதது; அறிவை வளர்க்கும். தாய்தந்தையர், சேர்த்த செல்வம் இறுதிவரை உதவாது. எவரேனும் கவர்ந்து கொள்ளவும் கூடும். ஆனால், கற்கும் கல்வி, எக்காலத்திலும் நற்பெயரைத் தரும். கொடுத்தாலும் குறையாது. பெருகவே செய்யும்” என்றெல்லாம் சொன்னார்.
- நான் கற்றதால், என் சுற்றத்தவர் இன்று என்னிடம் மரியாதையுடன் பேசுகின்றனர். இன்னும் கல்லூரிப் படிப்பை முடித்து, நல்ல பணியில் சேர்ந்தால் சமுதாயம் என்னை மதிக்கும். நான் வாழும் சமுதாயத்திற்கு உதவும் வகையில் பணியாற்ற எண்ணுகிறேன். நான் கற்ற கல்விதான், என் சிந்தனைகளையும் உறவுகளையும் வளர்ப்பதோடு ஊக்கத்தைத் தூண்டுவதாகவும் நினைக்கிறேன்.
ஈ) நெடு வினா
1. பௌத்தக் கல்வி, சமணக் கல்வி, மரபுவழிக் கல்வி முறைகளால் தமிழகக் கல்விமுறையில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களை விவரிக்க.விடைகுறிப்பு:
முன்னுரை:
தனிமனிதனைச் சமுதாயத்திற்கு ஏற்றவனாய் மாற்றும் வல்லமை கொண்டதாய்க் கல்வி இருத்தல் வேண்டும். முன்னோர்களால் பலநூறு ஆண்டுகளாகச் செழுமைப்படுத்தப்பட்ட அக்கல்வி, ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவினையும் அனுபவத்தினையும் வழங்க வேண்டும்.
பண்டையக் கல்விநிலை:
'எல்லோருக்கும் கல்வி' என்னும் உயரிய நோக்கம் பண்டைய காலத்தில் உருப்பெறவில்லை. அக்காலத்தில் எண்ணற்ற தனியார் பள்ளிகள் இருந்தாலும், அவை ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. அனைத்து மாணவரும் படித்துப் பயன் பெற வேண்டும் என்னும் நோக்கில் அரசு பல பள்ளிகளைத் தொடங்கி, குறைந்த கட்டணத்தில் பயில்வதற்கு இன்று வழிவகை செய்துள்ளது. இந்த நோக்கோடு பண்டைய அரசுகள் செயல்படவில்லை. அதனால், கற்க விரும்புவோர், “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது" ஆசிரிர்களிடம் கல்வி பயில வேண்டிய நிலை ஏற்பட்டது.
சமண பௌத்த சமயக் கல்வித் தொண்டு:
'பள்ளி' என்னும் சொல்லுக்கு 'படுக்கை' என்பது பொருள். சமணத் துறவியின் படுக்கைகளின்மீது அமர்ந்து மாணவர் கற்றதால் அது 'பள்ளிக்கூடம்' என வழங்கப்படலாயிற்று. 'பள்ளி' என்னும் சொல் சமண, பௌத்த சமயங்களின் கொடையாகும். தமிழகத்தில் வேரூன்றிய சமண சமயம் கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் எனப் பல அறங்களைச் செய்ய முன்வந்தது. சமண சமயத்தைச் சார்ந்த திகம்பரத் துறவிகள் மலைக் குகைகளைத் தங்கள் தங்குமிடமாய்க் கொண்டனர். கற்பதற்கு, முன்வந்த மாணவர்களுக்கு அங்குத் துறவியர் கல்வியையும் சமயக் கருத்துகளையும் போதித்தனர்.
சமுதாயத்தின் இரு கண்கள்:
வந்தவாசிக்கு அருகிலுள்ள ஊர் வேடல். அங்கிருந்த சமணப்பள்ளியில் சமணப் பெண் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் 500 மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தார். பட்டினிக்குரத்தி என்பவர் சமணப் பெண் ஆசிரியர், விளாப்பாக்கத்தில் பள்ளி ஒன்று நிறுவியுள்ளார். பெண்களுக்கெனத் தனியாய்க் கல்வி கற்பிக்கப்படும் சமணப் பள்ளிகள் பெண் பள்ளிகள் என வழங்கப்பட்டன.
மரபுவழிக் கல்வி முறைகள்:
தமிழ்நாட்டுக் கல்வி வரலாறு
மரபுவழிக் கல்வி முறைகளுள் ஒன்று, குருகுலக் கல்விமுறை. இது செய்து கற்றல், வாழ்ந்து கற்றல், எளிமையாய் வாழ்தல் என்னும் அடிப்படையில் அமைந்தது. இம்முறை, போதனா முறையைத் தாண்டி, வாழ்வியலைக் கட்டமைப்பதில் உறுதியானதாய் விளங்கியது.
மற்றொரு மரபுவழிக் கல்விமுறை, திண்ணைப் பள்ளிகள் ஆகும். அக்காலத்தில் கிராமந்தோறும் திண்ணைப் பள்ளிகள் இருந்தன. இம்முறையைப் பின்பற்றி ஸ்காட்லாந்தில் ரெவரெண்ட் பெல் என்பார் 'மெட்ராஸ் காலேஜ்' என்னும் பெயரில் பள்ளிகள் அமைத்தார். இதனால் திண்ணைப் பள்ளியின் சிறப்பினை அறியமுடிகிறது,.
இன்னொரு மரபுவழிக் கல்வி, உயர்நிலைக் கல்விமுறையாகும். இம்முறைப்படி உயர்நிலைக் கல்வியைப் புலவர்களிடம் தனிப்பட்ட முறையில் கற்றுத் தேர்ச்சி பெறலாம்.
முடிவுரை:
ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னரே தமிழகம் பலவகைக் கல்வி முறைகளால் கல்வியின் பல நிலைகளில் சிறப்புற்று விளங்கி வந்துள்ளது
2. 'ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நண்பன் என்பவன் பிரிக்க முடியாத அங்கமாவான்' என்பதை ஜெயகாந்தனின் 'ஒரே நண்பன்' சிறுகதைவழி விளக்குக.
நல்ல நண்பர்கள் அமையும்போதுதான் வாழ்க்கை நலமாக அமையும் என்பது நடைமுறை. வள்ளுவர் நட்பைத் தேர்ந்து கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார். பழகுபவரிடையே நல்லவரைத் தேர்ந்தெடுப்பது என்பது அரிய செயலாகும். 'இடுக்கண் களைவதாம் நட்பு' என்னும் அரிய வழக்குக்குச் சான்றாக உள்ளது ஜெயகாந்தனின் 'ஒரே நண்பன்' கதையாகும்.
மாமாவின் ஆதரவுடன் சந்திரன் கல்லூரியில் சேர்ந்தான். அதே கல்லூரியில் மதுரை அருகே உள்ள சிற்றூரிலிருந்து வந்த வேணுவும் சேர்ந்திருந்தான். இருவரும் விடுதியில் ஒரே அரையில் உடன் உறைபவர்களாக இருந்தனர். சந்திரனின் மாமா திடீரென்று இறந்தார். சந்திரனுக்குப் படிப்பைத் தொடரமுடியாத நிலை உருவாயிற்று. இந்தச் செய்தியை அறிந்த வேணு, சந்திரனின் படிப்புக்குத் தான் உதவுவதாகக் கூறினான். இவ்வளவு நாள் மாமாவுக்குச் சுமையாக இருந்த தான் மற்றவருக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை என்றான். வேணு தனக்கு அவன் சுமை இல்லை என்றும் தன்னால் உதவமுடிந்தால் தனக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்றும் கூறினான். சந்திரன் தன் நண்பனாக வேணுவை ஏற்றான்.
சமமான ஒத்த தரத்தவராக வேணு சந்திரனைக் கருதியதால், கடிகாரம் வாங்கத் தந்தை அனுப்பிய 400 ரூபாயைக் கொண்டு இரண்டு கைக்கடிகாரங்களை வாங்கி நண்பனுக்கு ஒன்றைக் கொடுத்தான். உதவச் சக்தியுள்ள தான் தன் நண்பனுக்கு உதவி செய்வது சுமையாகாது எனக் கருதிய வேணு, சந்திரனை வற்புறுத்திக் கொடுக்க, சந்திரனும் கண்டிப்பை மீற முடியாமல் பெற்று அணிந்து மகிழ்ந்தான்.
படிப்பு முடிந்தது. வேணு தன் தந்தை மதுரையில் புதிதாகத் தொடங்கிய தொழிற்சாலைப் பொறுப்பை ஏற்கச் சென்றான். உலகம் எப்படி இருக்கிறது எனச் சொல்லத் தெரிந்த சந்திரனுக்கு உலகில் எப்படி வாழ்வது எனப் புரியாமல் திகைத்தான். 'உதவி கேட்பது நட்பின் உரிமை. அதைக் கேவலமாக நினைப்பதோ, வெட்கப்படுவதோ நட்பு முழுமை அடைய உதவாது' என விளக்கிய வேணு, தன் தந்தையின் நண்பர் ஒருவர் தொடங்கிய பத்திரிகையில் ஆசிரியராகப் பணிபுரிய வழிசெய்து “இது உனக்குப் பொருத்தமான தொழிலாக இருக்கும்" என்று தெரிவித்தான். சந்திரன் தான் எழுத்தாளனாகவும் பத்திரிகை ஆசிரியனாகவும் மாறப் போவதை எண்ணி மகிழ்ந்து பணியில் சேர்ந்தான்.
இருவரும் மாதத்தில் ஓரிரு முறை கடிதத் தொடர்பால் நட்பைக் கைவிடாமல் பேணிக் காத்தனர். தொழில் தொடர்பாக சென்னை வரும்போதெல்லாம் வேணு சந்திரனைச் சந்தித்து உரையாடி, ஊர் சுற்றிப் பொழுதுபோக்கி மகிழ்ந்தனர். வேணு ஊர் திரும்பும்போது நண்பன் மறுத்தாலும் செலவுக்கு நூறு இருநூறு கொடுத்துச் செல்வான். எவ்விதப் பொறுப்பும் சிரமமும் இல்லாமல் நண்பன் என்கிற முறையில் வேணு தரும் வசதிகளை அனுபவித்து வருவதாக எண்ணினான்.
பத்திரிகை உரிமையாளருக்கும் சந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், எழுத்தாளர்களைப் பற்றியும் எழுத்தைப் பற்றியும் புரிதல் இல்லாதவரிடம் பணியாற்ற விரும்பாமல், ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினான். வேணுவுக்கு இரண்டு கடிதங்கள் எழுதினான் சந்திரன். பதில் இல்லாததால் கையிலிருந்த பதினைந்து ரூபாயுடன் நண்பன் வேணுவைக் காண மதுரைக்குப் புறப்பட்டான்.
மதுரை ஜங்ஷனிலிருந்து வேணுவின் அலுவலகத்திற்குச் சென்று வரவேற்பு அறையில் காத்திருந்தான். பியூன் அழைத்ததால் சென்று வேணுவைச் சந்தித்து நட்பு முறையில் "என் கடிதங்களுக்குப் பதில் போடவில்லையே!” என்ற நண்பனைத் திகைக்க வைக்க நினைத்து வந்த சந்திரனுக்கு வேணு "எனக்கு நேரமில்லை” என்றதும், முகம் பார்க்காமல் சொன்ன பதிலும் சந்திரனால் புரிந்துகொள்ள முடியவில்லை. மனித குணங்கள் மாற்றமுறுவதாக எண்ணிய சந்திரன், தான் வேலையை விட்ட காரணத்தைக் கூறினான். “அது உன் சொந்த விஷயம்” என அலட்சியமாகப் பதில் கூறி வேணு ஒதுங்கினான். நண்பன் சந்திரன் இருநூறு போய் கேட்டபோது, தன்னிடம் இல்லை எனக் கூறி காரில் ஏறிவிட்டு இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை நீட்டினான். அதை வேண்டாமெனக் கூறிப் புறப்பட்ட சந்திரன், நண்பன் தந்த கடிகாரத்தை விற்றுச் சென்னை திரும்பினான்.
தற்செயலாக ஒரு விருந்தில் சந்தித்த மாஜி முதலாளி சந்திரனிடம் வங்காளத்தில் இருப்பதுபோல் உழைக்கும் பத்திகையாளர்களை ஒன்றிணைத்து செயல்படலாம். அதுவரை தம் பத்திரிகையிலேயே மறுத்து எழுதலாம் என்றார். “சொந்த சிந்தனையுள்ள உன்னைப்போல் இங்கு யாரும் இல்லை” எனப் பாராட்டினார். லட்சியங்கள் பேசுவது சுலபம் என உணர்ந்தான். வாழ்க்கைச் சக்கரம் உருண்டது.
ஒருநாள் தன் அறைக்குத் திரும்பிய சந்திரன், காத்திருந்த வேணுவைக் கண்டு திகைத்தான்; வேணு தோழமையுடன் தோள்மேல் போட்ட கையை விலக்கிவிட்டு அறைக்குள் நுழைந்தான். “என்மேல் கோபமா? நீ எழுதிய 'நட்பு'க் கதை என்னை நினைத்து எழுதியதுபோல் உள்ளது. ஒருவனைத் தப்பாகப் புரிந்து கொள்வதில்கூட எழுத்தாளனுக்கு ஒரு நன்மை இருக்கு" என்று பாராட்டினான் வேணு.
'சந்திரனின் தவறான எண்ணத்தை எப்படி மாற்றுவது' எனச் சிந்தித்த வேணு, “எனக்குத் தொழில் முறையில் பல நண்பர்கள் உண்டு. அவர்களின் தேவைக்கு என்னைப் பயன்படுத்திக் கொண்டவர்கள், எனக்குச் சந்தர்ப்பத்தில் உதவ முன்வருவதில்லை. அவர்கள் நட்பு எல்லாம் நட்பு ஆகாது. உன் நட்பை என் தோழமையாக எண்ணினேன். உயிருக்கு உயிரான நட்பின் பொறுப்பை யோசித்தேன். என் நட்பு உன்னை அசட்டு மனிதனாக ஆக்கிவிடக் கூடாது. நம் நட்பு முறிந்து விடக்கூடாது. நீயும் சராசரி மனிதனாகிவிடக் கூடாது என எண்ணி அவ்வாறு நடந்து கொண்டேன்" என்றான்.
சிறிதுநேர மௌனத்திற்குப்பின், சந்திரன் சிந்தித்துத் தெளிவு பெற்றான். போராடிச் சாதிக்க வேண்டும். “ஓர் இடத்தில் நிலையாக நிற்கப் பிரயத்தனப்படணும். நட்பு ஒரு சுமை இல்லைன்னு நீ சொல்லுவாயே?" என வேணு சிரித்தான்.
சந்திரன் மனம் லேசாகி வேணுவைப் பார்த்துச் சிரித்தான், “எல்லா நண்பர்களிடத்திலும் செய்த தவறை உன்னிடம் செய்ய விரும்பவில்லை. உனக்குப் பிடித்தமான 'கோட்ஸுட்டைப் பெற்றுக்கொள்" எனக் கொடுத்தான். "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்" எனக் கூறி பர்ஸைத் திறந்தான் வேணு. "சந்துரு! நட்புக்கு இவை ஆதாரம் இல்லை. இவை அல்பமானவை” என்று கூறி வேணு நீட்டிய கைகளைச் சந்திரன் பற்றிக்கொண்டான். கீழே சிதறிக் கிடந்த விலை உயர்ந்த ஸுட்டும் பணமும் அவர்களின் காலடியில் கிடந்தது.
அன்புக்கு அடைக்கும் தாழ் கிடையாது. உண்மை நட்புக்குப் பொன் பொருள் தேவை இல்லை. உற்றுழி உதவும் பாங்கு ஒன்றே நட்பை உறுதிப்படுத்தும். உணர்ச்சியும் பழகுதலும் பயன் கருதாது அன்பு செலுத்துவதுமே உண்மை நட்பு என்பதை ஜெயகாந்தன் வேணு சந்திரன் பாத்திரப் படைப்பின் வாயிலாக நிறுவியுள்ளமை பாராட்டத்தக்கதாகும்.
II. மொழியை ஆள்வோம்
அ) சான்றோர் சித்திரம்
- பிறந்தார் - படர்க்கைப் பலர்பால் இறந்தகால வினைமுற்று.
- அருளிய - பெயரெச்சம்.
- எந்த எண்ணத்தில் திருக்குறளை ஆங்கிலத்தில் ஜி.யு. போப் மொழி பெயர்த்தார்?
- பதிப்பித்தார் - பதிப்பி + த் + த் + ஆர்
- பதிப்பி - (பிறவினைப்) பகுதி,
- த் - சந்தி,
- த் - இறந்தகால இடைநிலை,
- ஆர் படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி.
- பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் போப் கருதினார்.
ஆ) செய்திக்குக் கீழுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை மொழிபெயர்ப்புப் பகுதியிலிருந்து கண்டறிந்து எழுதுக.
இ) கீழ்க்காணும் பத்திகளைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதுக.
ஈ) இலக்கிய நயம் பாராட்டுக
III. மொழியோடு விளையாடு
அ) எண்ணங்களை எழுத்தாக்குக.

விடுபட்ட இடத்தில் அடுத்து வரவேண்டிய சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க
IV. நிற்க அதற்குத் தக.
கல்வி நம்மைப் பண்படுத்த வேண்டும். நாம் பண்பட்டிருக்கிறோமா?
கல்வியின் விளைவு
|
என்ன செய்தீர்கள் / செய்வீர்கள்?
|
பெரியவர்களுக்கு
மதிப்பளித்தல்
|
நாள்தோறும் என் பெற்றோரை வணங்கி விட்டுத்தான்
பள்ளிக்கு வருகிறேன்.
|
பகுத்தறிவுச்
சிந்தனையை வளர்த்தல்
|
பூனை குறுக்கே
போனால் கெட்டது நடக்கும் என்பதை மறுத்துப் பேசி வருகிறேன்
|
பொறுமையைக்
கடைப்பிடித்தல்
|
என்னை அடித்த
என் மாணவ நண்பர்களை நான் திருப்பி அடிக்கவில்லை.
|
தன்னை அறிதல், தன்னம்பிக்கை வளர்த்தல்
|
ஆங்கிலப்
பாடத்தில் நான் குறைந்த மதிப்பெண்களைப் பெறுகிறேன். இருப்பினும் பொதுத்தேர்வில்
90% மதிப்பெண்களைப் பெறப் போராடுவேன்.
|
சமத்துவம்
பேணுதல்
|
நான் ஜாதி, மதங்களைப் பொருட்படுத்துவது
இல்லை. அனைவரும் சமமே.
|
உயிர்களிடத்தில்
அன்பு செலுத்துதல்
|
எங்கள் தெருவில்
திரியும் நாய்களுக்குத் தினமும் நாங்கள் உணவிடுவோம்
|
அ) படிப்போம்; பயன்படுத்துவோம்!
V இலக்கணத் தேர்ச்சி கொள்
VI திருக்குறள்
குறு வினா
- நோயாளி, மருத்துவர், மருந்து, மருத்துவ உதவியாளர் என்னும் நான்கு வகையில் பிரிவுகளாக மருத்துவம் அமையும் எனக் குறள் கூறுகிறது.
- வீரம், மானம், முன்னோர் வழியில் நடத்தல், நம்பிக்கைக்கு உரியவராதல் என்னும் நான்கே படைக்குப் பாதுகாப்பாக இருப்பவையாகும்.
- உண்டதும், செரித்தலும் அறிந்து உண்டால், மருந்து என்ற ஒன்று தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
0 Comments:
Post a Comment