12th Tamil - Book Back Answers - Unit 6 - Guides

  
 
 

 


 


    Plus Two / 12th Tamil - Book Back Answers - Unit 6 - Download

    Tamil Nadu Board 12th Standard Tamil - Unit 6: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 6 – from the Tamil Nadu State Board 12th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 6 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 6 

    I. திறன் அறிவோம்

    அ) பலவுள் தெரிக.

    1. ‘ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் கைகூடும்' என்று திருவள்ளுவர் குறிப்பிடும் அதிகாரம் _________.
    அ) ஊக்கமுடைமை
    ஆ) மடியின்மை
    இ) அறிவுடைமை
    ஈ) செங்கோன்மை
    விடைகுறிப்பு: 
    ஆ) மடியின்மை

    2. 'பில்கிரிம்ஸ் புராகிரஸ்' (Pilgrim's Progress) என்னும் ஆங்கில நூலின் தழுவல் நூல் எது?
    அ) தேம்பாவணி
    ஆ) இயேசு காவியம்
    இ) இரட்சணிய யாத்திரிகம்
    ஈ) இரட்சணிய மனோகரம்
    விடைகுறிப்பு: 
    இ) இரட்சணிய யாத்திரிகம்

    3. 'கிறித்துவக் கம்பர்' என்று அழைக்கப்படுவர் யார்?
    அ) கால்டுவெல்
    ஆ) ஜி. யு. போப்
    இ) வேதநாயகர்
    (ஈ) எச். ஏ. கிருட்டினனார்
    விடைகுறிப்பு: 
    ஈ) எச்.ஏ.கிருட்டினனார்

    4. புறநானூற்றை முதன்முதலாக அச்சில் பதிப்பித்தவர் _________.
    அ) உ.வே.சாமிநாதர்
    ஆ) மாயூரம் வேதநாயகம்
    இ) மா. இராசமாணிக்கனார்
    ஈ) சி.வை.தாமோதரனார்
    விடைகுறிப்பு:
    அ) உ.வே.சாமிநாதர்

    5. சோழ நாட்டில் இறக்குமதிப் பொருள்களுக்குச் சுங்கம் வசூலித்த செய்தியைக் கூறும் நூல் எது?
    அ) பதிற்றுப்பத்து
    ஆ) பட்டினப்பாலை
    இ) மலைபடுகடாம்
    ஈ) நெடுநல்வாடை
    விடைகுறிப்பு: 
    ஆ) பட்டினப்பாலை
     

    ஆ) குறு வினா

    1. பருவத்தே பயிர் செய் - நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.
            பருவநிலை மாற்றங்களை அறிந்து, எந்தப் பருவத்தில் எதைப் பயிர் செய்தால் விளைச்சல் கைகூடி வரும், உழைப்புக்குப் பலன் கிட்டும் என்பதைத் தெரிந்து பயிர் செய்ய வேண்டும்.

            உரிய நேரத்தில் உழுதல், விதைத்தல், நீர்ப் பாய்ச்சுதலை நெறிப்படுத்துதல், உரிய காலத்தில் அறுவடை செய்தல், சேமித்தல், பாதுகாத்தல் என்னும் செயல்களைச் செய்தால் பயன் விளையும்.

            ஆகவே, அந்தந்தக் காலத்தில் செய்ய வேண்டியவற்றைச் சரியாக நேர்த்தியாகச் செய்ய, நேர மேலாண்மை மிகமிக அவசியம்.

    2. தமிழர்கள் புகழ், பழி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?
            புகழ் வரும் எனில், தமிழர்கள் தம் உயிரையும் கொடுப்பார்கள்.
            பழி வரும் எனில், உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    3. இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்? 
            இறைமகனாருக்கு இழைக்கப்பட்ட இன்னல்களைக் கண்டு மனம் பொறுக்காத மக்கள்,

            "இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே! வானம் இடிந்து விழவில்லையே! கடல்நீர் வற்றிப்போகவில்லையே!

            இந்த உலகம் இன்னும் அழியாமல் தாமதிப்பதும் ஏனோ?” எனப் பலவாறு வருந்திப் புலம்பினர்.

    4. பொருண்மொழிக்காஞ்சித் துறையை விளக்குக.
            மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல், பொருண்மொழிக் காஞ்சித் துறையாகும்.

            இவ்வுலகம் நிலைப்பதற்கான காரணங்களை உரைக்கும் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் பாடல், 'பொருண்மொழிக்காஞ்சிக்கு'ச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

    இ) சிறு வினா

    1. வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக. 
            சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல், உரிய நேரத்தில் விதைத்தல், நீர் மேலாண்மையை நெறிப் படுத்துதல், அறுவடைக்குப்பின் பாதுகாத்தல், உரிய விலை வரும்வரை இருப்பு வைத்தல் என்று, ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்புணர்வும், பொறுப்புணர்வும், நிருவாக நெறியும் இணைந்தால்தான் வேளாண்மை செழித்து, மேலாண்மை பெறும்.

            மனமே ஒரு வேளாண்மைக்கு உட்பட்ட மேலாண்மை உடையதாகும். எச்செயலுக்கும் உரிய நேரத்தைத் தேர்ந்தெடுக்கவில்லையானால் வெற்றி கிடைக்காமல் போய்விடும். பொறுப்புணர்வோடு நிருவாக நெறியைச் செயல்படுத்துபவர்களே சிறந்த மேலாளர்களாகவும் நிருவாகிகளாகவும் இருப்பார்கள். அவர்களிடம் பணிபுரிபவர்கள் பணியைப் பாரமாக்காமல் சாரமாக்குவார்கள்.

    2. “ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

    இடம்: 
            'இரட்சணிய யாத்திரிகம்' என்னும் நூலில் கொடியவர்கள் இறைமகன்மீது பகை கொண்டு அவருக்கு இழிவான செயல்களைச் செய்தனர். அப்போது இறைமகனின் நிலையை நூலாசிரியர் கூறுகையில், 'ஈசன் மகன் நின்றனர்ஓர் ஏழையென ஓர்மின்' எனக் கூறுகிறார்.

    பொருள்: 
            எந்த உதவியும் பெற இயலாத ஏழை ஒருவனைப்போல், இறைமகன் அமைதியுடன் நின்றார்; இதனை எண்ணிப் பாருங்கள்.

    விளக்கம்:
            பகைவர்கள் இறைமகனைக் கயிற்றால் கட்டும்போது, அதற்கு அவர் உடன்பட்டு நின்றார். தமக்கு இழிவான செயல்களைச் செய்யும் இம்மனிதர்கள், 'காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ' என்று எண்ணி, அவர்களுக்காக இரக்கப்பட்டு, அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப்போல் அமைதியுடன் நின்றார். இதை எண்ணிப் பாருங்கள் என்கிறார் ஆசிரியர்.


    3. புறநானூற்றுப் பாடலின் கருத்திற்கு இணையான குறட்பாக்களைக் குறிப்பிடுக.

    i) "வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய வாழ்வாரே வாழா தவர்"

    (பழி நீங்கிப் புகழோடு வாழ்பவரே வாழ்பவராவார்; புகழின்றிப் பழியோடு வாழ்பவர் வாழாதவரே ஆவார்.)

    ii) "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்"
    (உலகம் அஞ்சும் செயல்களுக்குத் தான் அஞ்சாமல் இருப்பது அறியாமை; உலகம் அஞ்சும் செயல்களுக்கு அஞ்சுவது அறிவுடையார் செயல்.)

    4. “உண்டால் அம்ம...." எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் பொதுவியல் திணைக்கு உரியது என்பதை நிறுவுக.
            அமிழ்தமே கிடைத்தாலும் பலரோடு உண்ணுதல் வேண்டும்; பிறரிடம் வெறுப்புக் கொள்ளக்கூடாது.

            பிறர் அஞ்சத்தக்கவற்றுக்குத் தாமும் அஞ்சுதல் வேண்டும். புகழை வருந்தியும் கொள்ள வேண்டும். பழியினை எவ்வளவு நன்மை வரினும் கொள்ளுதல் கூடாது.

            தம் பொருட்டன்றிப் பிறர் பொருட்டே உயிர் வாழ்க்கை இருத்தல் வேண்டும் என்னும் உண்மைப் பொருள்கள் மக்களுக்கு இம்மை மறுமைகட்கு உறுதி பயக்கும் என்று தமது அனுபவத்தில் தெளிந்து இளம்பெருவழுதி கூறியிருப்பதால், இச்செய்யுள் பொருண்மொழிக்காஞ்சித் துறைக்குப் பொருத்தமாயிற்று.

    ஈ) நெடு வினா

    1. நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

    முன்னுரை:
            மனித மனம் தோன்றிய போதே, மேலாண்மையும் துளிர்க்கத் தொடங்கி விட்டது. புராதன மனிதனிடம் குருத்துவிட்ட தலைமைப் பண்பும் வழிநடத்தும் மேலாண்மை இயல்புகளுமே, அவனை இயற்கையோடு இயையவும் இடர்களைத் தாண்டி நீடிக்கவும் உதவின.

    திறமைசாலிகளை அறிதல்:
            உயர்பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாய் இருப்பது சாத்திய மில்லை. ஆனால், யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக்கொண்டால் போதும். தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால், யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு. இதனை நாலடியார், "கல்லாரே ஆயினும், கற்றாரைச் சேர்ந்து ஒழுகின், நல்லறிவு நாளுந் தலைப்படுவர்” எனக் கூறுகிறது.

    வரவிற்கேற்ற செலவு:
            நிருவாகத்தின் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டிச் செலவு செய்பவன் அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான். 'டைமன்' என்னும் ஷேக்ஸ்பியரின் நாடகம், நிதிமேலாண்மை பற்றிய மிகச்சிறந்த வாழ்வியல் விளக்கத்தைத் தருகிறது. ஔவையார், 'நல்வழியில் ஈட்டும் பொருளினைவிட அதிகமாய்ச் செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும் அறிவினையும் உணர்வையும் இழப்பார்கள்” என்று அறிவுறுத்துகிறார்.

            ஏதென்ஸ் நகரில் வாழ்ந்த 'டைமன்' என்பவனைக் குறித்த ஷேக்ஸ்பியரின் நாடகமும், நிதி நிருவாக மேலாண்மை குறித்து மிகச் சிறந்த வாழ்வியல் விளக்கம் தருகிறது.

    முன் அனுபவம் தேவையில்லை:
            மேலாண்மை என்பது வெறும் புத்தக அறிவுடன் முடிந்துவிடுவதன்று. நொடிக்கு நொடி சூழல்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. இப்போதெல்லாம் பல நிறுவனங்களில் 'முன் அனுபவம்' என்பது எதிர்மறையாகி விட்டது. அனுபவசாலிகள் செக்குமாடாய் இருப்பார்கள் என்று எண்ணி, ஜல்லிக்கட்டு காளைகளான இளைஞர்களையே தேர்வு செய்கிறார்கள்.

    முடிவுரை:
            உலக இலக்கியங்கள் அனைத்திலும் மேலாண்மைக் கருத்துகள் மென்மையாகப் பரவிக் கிடக்கின்றன. அவை பன்னீர்ப் புஷ்பங்கள் காற்றில் பரவவிடும் மணத்தைப்போல வசீகரமானவை.

    2. எச். ஏ. கிருட்டிணனார் 'கிறித்துவக் கம்பரே' என்பதை நும் பாடப்பகுதி தொகுத்து எழுதுக.

    முன்னுரை:
            தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் எச். ஏ. கிருட்டிணனார். இவர்தம் தந்தை கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றுவார். இதுவே இவருக்குக் கம்பராமாயணம் போலத் தாமும் காப்பியம் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொடுத்தது.

    இரட்சணிய யாத்திரிகம்:

            இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிய காலத்தில், இவர் ஆற்றிய சமயப் பணியும், தமிழ்ப் பணியும் மிகச் சிறப்பானவையாகும். கம்பரைப்போலத் தாமும் ஒரு காப்பியம் படைக்க வேண்டும் என்று ஆர்வப்பட்டு எழுதியதே இரட்சணிய யாத்திரிகம். இது கம்பரின் இராமாயணத்தைப் போன்று சந்த நயங்களுடன் எழுதப்பட்டுள்ளது. கம்பர் தம் கருத்தைத் தெளிவாகச் சொல்வதுபோல், இவரும் தம்முடைய இரட்சணிய யாத்திரிகம் நூலில் இறைமகன் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

    காப்பிய அமைப்பு:
            கம்பரைப்போல் இவரும் தாம் இயற்றியுள்ள இரட்சணிய யாத்திரிகப் பாடல்களில், உரிய தொடை நயங்களைப் பயன்படுத்தியுள்ளார். 
     
            கம்பராமாயணத்தில் காண்டம் அமைந்திருப்பதைப் போலவே, இதுவும் ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் என்று அமைந்துள்ளது. கம்பரைப் போலவே எச். ஏ. கிருட்டிணனாரும் உவமையைப் பயன்படுத்தியுள்ளார். கம்பரைப் போலவே அந்தந்தச் சூழலுக்கு ஏற்பச் சந்தநயமுடைய பாடல்களை இயற்றியுள்ளார். 'மக்கள் புலம்பல்' என்ற தலைப்பில் அமைந்துள்ள பாடலில், 'என் கொல்' என்ற சொல்லை ஒவ்வோர் அடியின் முதல் சீரிலும் அமைத்துள்ள கவிநயம், கிருட்டிணனாரின் தமிழ்த் திறமைக்குச் சான்றாகும்.

            கம்பர், வடமொழிக் காப்பியமான இராமாயணத்தைத் தமிழ் மரபுக்கு ஏற்பத் தமிழில் பாடிப் பெருமைப் படுத்தினார். எச். ஏ. கிருட்டிணனார், ஆங்கில நூலைத் தழுவி, இயேசு பெருமானின் வாழ்வைத் தமிழில், 'இரட்சணிய யாத்திரிகம்' எனப் படைத்தார். கம்பர் பாடல்கள்போலக் கிருட்டிணனாரின் பாடல்களும் எளிதில் கற்கும் வகையில் பாடப்பட்டுள்ளமையால், எச். ஏ. கிருட்டிணனாரைக் 'கிறித்தவக் கம்பர்' எனக் கூறல் பொருத்தமானதே.

    முடிவுரை:
            கம்பரின் பாடல்கள் மரபுக் கவிதையாக இருந்தாலும், அவற்றைச் சாதாரணமாகத் தமிழறிந்தோர் அனைவரும் புரிந்துகொள்ள முடியும். அதுபோலவே கிருட்டிணனாரின் இரட்சணிய யாத்திரிகமும் அமைந்துள்ளது. கம்பனைக் கற்கக் கற்க இனிமை அதிகமாவதுபோலக் கிருட்டிணனாரின் இரட்சணிய யாத்திரிகமும் அமைந்துள்ளது.

    3. 'கோடைமழை' கதை வாயிலாக விளக்கப்படும் மனிதநேயப் பண்புகளை விளக்குக.

    முன்னுரை:
            தன் மகனும் மருமகளும் பேரக்குழந்தையைத் தவிக்க விட்டுச் சென்ற பிறகு, ஆறுமுகம் பொறுப்பு மிகுந்தவராக வயதான காலத்திலும் அந்தக் குழந்தைக்காக வாழ வேண்டும் என்ற வைராக்கியம் மிகுந்தவராகக் காணப்பட்டார். குழந்தை என்ன பாவம் செய்தது என்ற சிந்தனை அவரிடம் இருந்தது.

    மருத்துவமனையில் வெளிப்பட்ட மனிதநேயம்:
            அரைமணி நேரத்திற்கும் அதிகமாகக் குழந்தை அழுது கொண்டிருந்தாலும், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் குழந்தையைத் தோளில் போட்டபடி நின்றபோதும், ஆறுமுகம் கொஞ்சமும் மனம் தளரவில்லை. குழந்தையை விரைவாக மருத்துவர் பார்த்துவிட வேண்டுமென்றே விரும்பினார்.

            வயதான முதியவர் இறந்ததற்காக அழுகுரல் கேட்டதும், அவருக்கு அவர் மகனின் நினைவு வந்தது. வருத்தம் மேலிட்டாலும் இந்த வாரிசுக்காகத் தான் வாழ வேண்டும் என்று, பொறுமையுடன் வரிசையில் நின்று மருத்துவரைச் சந்திக்கிறார்.

    மருந்துக்கடை ஊழியருடன் பேசிய பேச்சு:
            மருத்துவர் குழந்தையைப் பரிசோதித்துவிட்டுச் சாதாரண காய்ச்சல் என்று கூறி, மருந்து எழுதிக் கொடுத்த சீட்டை மருந்துக் கடைக்காரர் பாபுவிடம் கொடுத்து, 'எப்படியாவது இக்குழந்தை வாழ வேண்டும்; என் ஆசையும் அதுதான். குழந்தைக்காக நானும் உயிருடன் இருக்க ஆசைதான். என்ன செய்யமுடியும்? என் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று அவர் கூறுமிடத்தில், தான் இறந்தாலும் குழந்தை மனநிறைவோடு நீண்ட நாள்கள் வாழ வேண்டும் என்று நினைக்கும் மனித நேயத்தையும் அவரது பொறுப்புணர்வையும் அறியலாம்.

    குழந்தையைத் தத்துக் கொடுத்தல்:
            பாபு ஏற்கெனவே கூறியபடி குழந்தையைத் தத்தெடுக்க வந்தவர்களின் முகத்தைப் பார்த்ததும், ஆறுமுகத்திற்கு எல்லையற்ற மகிழ்ச்சி. ஏனென்றால், அவர்களின் முகங்களில் காணப்பட்டது ஏக்கம், தவிப்பு, எதிர்பார்ப்பு அத்தனையும் ஆறுமுகத்திற்கு ஆறுதலாக இருந்தன. தன் பேரக்குழந்தை, பாதுகாப்பான இடத்திற்குத்தான் செல்கின்றது என்ற மகிழ்ச்சியும் இருந்தது.

    உயிர் தந்த மனிதநேயம்:
            தத்தெடுக்க வந்த தம்பதியர்களின் மனிதநேயமே உயர் பண்பாகும். அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். குழந்தையைப் பிரிந்து நாம்தான் எப்படி இருக்கப் போகிறோமோ என்று ஏங்கிய ஆறுமுகத்திற்கு ஆறுதலாக இருந்தது தத்தெடுக்கும் ஆண் பேசிய பேச்சு. உயிர்நேயத்தின் உயிர்மூச்சாக இருந்தது. “நீங்களும் எங்களுடன் வந்துடுங்கையா" என்ற வார்த்தையில் அடங்கிப்போனது கோடைமழை.

    மனிதம் கொண்டாட வேண்டிய மனித நேயம்:
            இவ்வுலகில் பிறக்கின்ற எல்லோரும் உறவுகளுடன் இருக்க வேண்டும். ஏதிலிக் குழந்தையைத் தத்தெடுத்த தம்பதியினர் குழந்தை பிரிந்தால் ஆறுமுகம் தனிமையாவார் என்பதை உணர்ந்து, அவரையும் சேர்த்தே தத்தெடுத்து, 'அநாதை' என்ற சொல்லை அகராதியில் இருந்து அழிக்கும் உயிர்நேயப் பண்பைக் 'கோடைமழை' கதைமூலம் உணர முடிகிறது.

    முடிவுரை:
            மனிதநேயம் இன்னும் மண்ணில் வாழ்கின்றது என்பதற்குச் சாந்தா தத் எழுதிய 'கோடைமழை' மிகப் பெரிய சான்றாகும். பிற உயிர்களுடன் கொள்ளும் மனிதநேயப் பண்பை நாமும் வளர்த்துக் கொள்வோம்.

    II. மொழியை ஆள்வோம்

    அ) தமிழாக்கம் தருக.

            Popular as the 'Cultural Capital of India, Tamil Nadu is extremely well-known for its marvellous temples and other architectural gems. The state rose to prominence primarily because of its well-known and outstanding Tanjore Paintings that flourished at the time of Chola dynasty in ancient Tanjavoor. In this traditional art form, the paintings showcase the embellished form of the sacred deities of the region. The deities in the paintings are festooned with glass pieces, pearls, semi-precious stones, and gold and other vibrant colours. In the modern times, Tanjore paintings look up to human figures, animals, floral motifs and birds as muses.

            இந்தியாவின் பண்பாட்டுத் தலைநகரம்' என அழைக்கப்படும் தமிழ்நாடு, அதனுடைய வியப்புக்குரிய கோவில்களாலும், கலைநயமிக்க நவமணிகளாலும் புகழ்பெற்றது. தமிழகம் இத்தகைய முதன்மை பெற்றுத் திகழக் காரணம், பண்டைய சோழர் ஆட்சியில் தஞ்சாவூரில் தோன்றி வளர்ந்த வண்ண ஓவியக்கலையாகும். அப்பகுதியில் உள்ள தெய்வ உருவங்களை அழகுமிக்க ஓவியங்களாக்கித் தருவதே, இப்பழமை மிக்க கலை வடிவம் ஆகும். ஓவியங்களில் உள்ள தெய்வ உருவங்களின் உடல் முழுவதும் கண்ணாடித் துண்டுகளாலும், முத்துகளாலும், செயற்கைக் கற்களாலும், தங்கத்தினாலும், கண்கவர் வண்ணங்களாலும் அழகு படுத்தப்பட்டன. நவீன காலத் தஞ்சாவூர் ஓவியங்கள் மனித உருவங்களை, விலங்குகளை, பூக்களுடைய உருவங்களை, பறவைகளை வெளிப்படுத்துவனவாகக் கலைவடிவம் பெற்றுள்ளன.

    ஆ) மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

    1. ஆற அமர: 
    எதையும் செய்யும்முன் ஆற அமர யோசித்து ஒரு முடிவுக்கு வா.

    2. ஆணி அடித்தாற்போல:
    சமுதாயச் சீர்கேடுகளை ஆணி அடித்தாற்போல என் நண்பன் எழுதிய கவிதை உணர்த்தியது.

    3. அகலக்கால்: 
    வரவுக்கு மீறிச் செலவு செய்து, அகலக்கால் வைப்பது ஆபத்தில் கொண்டுபோய் விடும்.

    4. வழிவழியாக:
    எங்கள் வீட்டில் வழிவழியாகக் குலதெய்வ வழிபாடு நடத்தி வருகிறோம்.

    5. கண்துடைப்பு: 
    வேலைவாய்ப்புக்கான நேர்காணல், இன்று வெறும் கண்துடைப்பாகி விட்டது.
     

    இ) உங்கள் கனவு  ஆசிரியர் குறித்துக் கட்டுரை எழுதுக.

    என் கனவு ஆசிரியர்

    முன்னுரை: 
            அனைவருக்கும் எடுத்துக்காட்டாய்த் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவரே என் ஆசிரியர். என் வாழ்நாளில் நான் அப்படிச் சந்தித்த ஆசிரியர், பண்புமிகு குமார் ஐயா அவர்கள்தாம். அவரின் இயல்பு குறித்து நாம் இக்கட்டுரையில் சிந்திப்போம்.

    நேரம் தவறாமை:
            எல்லா நாட்களிலும் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையோடு காட்சியளிப்பவர், குறித்த நேரத்திற்குப் பள்ளிக்கு வருபவர். ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும், விடுமுறை விண்ணப்பம் எழுதித் தலைமை ஆசிரியரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுபவர். தலைமை ஆசிரியரே அனுமதித்தாலும், பள்ளிக்கு வரமாட்டார். நேரம் தவறாமையை மாணவர்களுக்குச் செயலில் காட்டிக் கற்பிப்பவர்.

    சிறுவர்களை மதிப்பவர்:
            மாணவ மாணவிகளை வாங்க' 'போங்க' என்று மரியாதையுடன்தான் அழைப்பார். வணக்கம் சொன்னால், இருகரம் கூப்பி வணக்கம் தெரிவிப்பார்.

    இலவசத் தனிப்பயிற்சி:
            பள்ளி நேரம் முடிந்த பிறகும், கல்வியில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்குத் தனிப்பயிற்சி அளிப்பார். அதற்காகத் தனியாகக் கட்டணம் ஏதும் வசூலிக்கமாட்டார்.

    சமூக சேவை:
            பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வாழ்ந்த குடிசைப் பகுதியில்தான் அவர் வசித்தார். தாமும் ஒரு கூரை வீட்டில்தான் வாசம் செய்தார். அக்கம் பக்கத்தார் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால், தம் சொந்தச் செலவில் மருந்துப் பொருட்களை வாங்கிக் கொடுப்பார். பசியால் வாடும் ஏழை எளியோருக்கு உணவளிப்பார்.

    பொறுமையான கற்பித்தல்:
            சின்னஞ்சிறு கதைகளைக் கூறிப் பாடங்களைக் கற்பிப்பார். மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் பதிலளிப்பார். எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும் பதிலளிப்பார். பாடங்களை மெதுவாகத்தான் கற்பிப்பார். ஆங்கில இலக்கணம், தமிழ் இலக்கணம், கணிதம் ஆகியவற்றை எளிய முறையில் கற்பிப்பார்.

    முடிவுரை:
            எத்தனையோ ஆசிரியர்கள் என் வாழ்நாளில் எதிர்ப்பட்டிருந்தாலும், குமார் ஐயா போன்றோரைச் சந்திப்பது மிக அரிய நிகழ்வாகத்தான் உள்ளது. எனவே, என் கனவு ஆசிரியராகக் குமார் ஐயாவே என் மனத்தில் நிற்கிறார்.

    ஈ) இலக்கிய நயம் பாராட்டுக.

    பூமிச்சருகாம் பாலையை 
            முத்துபூத்த கடல்களாக்குவேன்! 
    புயலைக் கூறுபடுத்தியே - கோடிப் 
            புதிய தென்றலாக்குவேன்! 
    இரவில் விண்மீன் காசினைச் - செலுத்தி 
            இரவலரோடு பேசுவேன்! 
    இரவெரிக்கும் பரிதியை - ஏழை 
            விறகெரிக்க வீசுவேன். 
                                            - நா. காமராசன்


    ஆசிரியர் குறிப்பு:
            இப்பாடலைப் பாடிய கவிஞர் நா. காமராசன், எளிய சொற்களைக் கொண்டு, அரிய செய்திகளை விளக்கும் திறன் உடையவர். இவர்தம் கவிதைகள், புதுமை கொஞ்சும் சிறப்புடையவை. இவரைப் பின்பற்றிப் புதுக்கவிஞர் பலர், தமிழ்வானில் உலா வந்தனர். இனிக் கவிதைப் பொருள்நயம் காண்போம்.

    மையக்கருத்து: 
            எழில்மிகு இயற்கையை, மனித வாழ்விற்கு உதவும் வகையில் மாற்ற வேண்டும் என்பது இக்கவிதையின் மையக்கருத்தாகும்.

    எதுகை: 
            அடிகளிலோ சீர்களிலோ முதலெழுத்து மாத்திரை அளவு ஒத்திருக்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை. 
    அடிஎதுகை 
    இரவில், இரவெரிக்கும் 
    சீர் எதுகை
    இரவில், இரவலரோடு 

    மோனை:
            அடிகளிலோ சீர்களிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை. சீர்மோனை 
    பூமிச்சருகாம், பூத்த புயலை, புதிய இரவில், இரவலரோடு 

    இயைபு
            செய்யுளில் அமைந்த அடிகள்தோறும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ ஒன்றி வருவது இயைபு. 
    அடிஇயைபு
    ஆக்குவேன், ஆக்குவேன், பேசுவேன், வீசுவேன் 

    முரண்: 
            செய்யுள் அடிகளில் அமைந்த தொடர்களில் சொல்லோ பொருளோ முரண்பட்டு வருவது முரண். 
    சீர்முரண்
    பூமிச்சருகாம், பூத்தகடல் புயலை, புதிய தென்றல் 

    அணி: 
            செய்யுளுக்குத் தனி அழகு சேர்ப்பது அணி ஆகும். பூமிச்சருகு, விண்மீன் காசு என்னும் உருவகங்கள் இக்கவிதையில் இடம்பெற்றுள்ளதால், 'உருவக அணி' அமைந்துள்ளது.

    சந்தம்: 
            சிந்துப்பாவில் அமைந்த இப்பாடல், இசையுடன் பாடுவதற்கு ஏற்ற ஓசை நயத்தைப் பெற்றுள்ளதால், சந்த நயம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

            நா. காமராசனின் "பூமிச்சருகாம் பாலையை..." எனத் தொடங்கும் பாடல் எதுகை, மோனை, இயைபு, முரண், அணி, சந்தம் என்னும் அனைத்து நயங்களையும் தன்னகத்தே கொண்டு படிப்போரை மெய்மறக்கச் செய்கிறது.

    உ) தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப்பிழைகளை நீக்கி எழுதுக.

    1. வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன. 
    வாழைத்தோட்டத்தில் குயில்கள் கூவிக்கொண்டும், காகங்கள் கரைந்துகொண்டும் இருந்தன.

    2. முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான். 
    முருகன் சோறு உண்டு, பால் பருகினான்.

    3. கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார். 
    கோவிந்தன் குடியிருக்கச் சுவர் எழுப்பிக் கூரை வேய்ந்தார்.

    4. வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குட்டியும் யானைக் குட்டியும் கண்டேன்.
    வனவிலங்குக் காப்பகத்தில், சிங்கக் குருளையையும் யானைக் கன்றையும் கண்டேன்.

    5. ஆட்டுத்தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன. 
    ஆட்டுப்பட்டியைச் சுற்றிலும் எலிகள் வளைகள் அமைத்திருந்தன. 

    6. பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.
    பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர்.
     

    உ) பத்தியைப் படித்துத் தேவையான இடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.

            இளங்கோவடிகள் சாத்தனாரிடம் முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே அவர்களுடைய முந்தைய வினை யாது அதன் விளைவு என்ன நிகழ்ந்த காலம் யாது அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.
    விடைகுறிப்பு: 

            இளங்கோவடிகள் சாத்தனாரிடம், “முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே! அவர்களுடைய முந்தைய வினை யாது? அதன் விளைவு என்ன? நிகழ்ந்த காலம் யாது? அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக!" எனக் கேட்டார்.

    உ) கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து நாளிதழ்ச் செய்தியாக மாற்றுக.


            சென்னை, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் 42-ஆவது புத்தகக் காட்சி, நந்தனம் ஒய். எம். சி. ஏ. உடற்கல்வியியல் கல்லூரியில், 04.01.2019 முதல் 20.01.2019வரை நடைபெற உள்ளது.

    புத்தகங்களை வாசிப்போம் வாழ்க்கையை நேசிப்போம்

            அனைத்து வயதினரும் கொண்டாடும் இந்த ஆனந்தத் திருவிழாவில் 12 இலட்சம் புத்தகத் தலைப்புகளில், 800 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 20 இலட்சம் வாசகர்களும், 30 இலட்சம் பார்வையாளர்களும் இப்புத்தகக் காட்சியைக் கண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

            இப்புத்தகக் காட்சிக்கு நுழைவுக் கட்டணமாய் ரூ. 10 செலுத்த வேண்டும். வார நாட்களில் பகல் 2 மணிமுதல் இரவு 9 மணிவரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரையிலும் திறந்திருக்கும்

            வாசகர்கள் வாங்கும் நூல்களுக்கு 10 சதவீதச் சிறப்புத் தள்ளுபடி உண்டு. மேலும், கூடுதல் விவரம் அறிய www.bapasi.com என்னும் இணையத்தளத்தோடும், 044-23155238 என்னும் தொலைபேசி எண்ணோடும் தொடர்பு கொள்ளலாம்.

    உ) எண்ணங்களை எழுத்தாகுக.

    கற்பிக்கும் ஆசிரியரின் 
    கருத்தான பாடங்களைக் 
    கவனமாய்க் கற்றுக்கொள்!

    நூலகம் சென்றால் 
    மண்ணுலகு வசமாகும் 
    நூல்களை வாசித்தால் 
    மனிதருள் மாணிக்கமாகலாம்!

    காலையும் மாலையும் 
    மகிழ்ந்து விளையாடு 
    உடலைப் பலமாக்கு 
    உள்ளத்தைத் தூய்மையாக்கு!

    நித்தமும் பாடு; தொலைக்காட்சி பாரு! 
    செய்திகளை உள்வாங்கு! 
    பெற்றோரை மதித்தால் 
    பேரின்பம் கிட்டும்! 
     
     

    III. மொழியோடு விளையாடு

    அ) படித்துப்பார்த்துப் படைக்க.


    ஆ) செய்து கற்போம்.

    உங்கள் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.

    IV. நிற்க அதற்குத் தக.

    அ) பொதுச்சொத்துகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் நீவிர் செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிடுக.

    பொதுச் சொத்துகள்
    அவற்றைப் பாதுகாக்கும் முறைகள்
    அரசுப் பேருந்து
    கல்லெறிந்து உடைக்கக்கூடாது. அதனால் இழப்பு நமக்கே!
    வழிபாட்டுத் தலங்கள்
    புனிதம் காக்கப்பட வேண்டும்; மாசுபடுத்தக் கூடாது;
    சமய நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும்.
    பள்ளிக் கூடங்கள்
    நம் உறைவிடமும் அறிவு பெறும் இடமும் ஆதலால்,
    வகுப்பறையையும் பள்ளிச் சூழலையும் தூய்மையாக வைக்க வேண்டும்.
    மருத்துவமனைகள்
    கழிப்பிடத் தூய்மை தேவை; மருத்துவக் கழிவுகளைக் கண்ட இடங்களில் கொட்டி வைக்கக்கூடாது; அமைதி காக்க வேண்டும்.
     

    ஆ) படிப்போம், பயன்படுத்துவோம்!

    Business Management - வணிக மேலாண்மை
    Mission - குறிக்கோள் பயணம்
    Customs officer - சுங்க அதிகாரி
    Emotion - மனவெழுச்சி

    இ) அறிவை விரிவு செய்.

    நீர்க்குமிழி - கே. பாலசந்தர்
    இயேசு காவியம் - கண்ணதாசன்
    முள்ளும் மலரும் - உமா சந்திரன்
    ஏழாவது அறிவு - வெ.இறையன்பு

     

     
     
     
     

     
     
     
     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive