10th Social Science - Book back Answers - History Unit 2 - Tamil Medium Guides

  

 


    SSLC / 10th Social Science - Book Back Answers - History Unit 2 - Tamil Medium

    Tamil Nadu Board 10th Standard Social Science - History Unit 2: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 2 – History from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 2 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 2:இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

    I. சரியான விடையைத் தேர்வு செய்க.

    1. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?
    அ) ஜெர்மனி
    ஆ) ரஷ்யா
    இ) போப்
    ஈ) ஸ்பெயின்
    விடைகுறிப்பு:

    இ போப்

    2. யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?
    அ) ஹெர்மன் கோர்ட்ஸ்
    ஆ) பிரான்சிஸ்கோ பிசாரோ
    இ) தௌசெயின்ட் லாவெர்ட்யூர்
    ஈ) முதலாம் பெட்ரோ
    விடைகுறிப்பு:
    அ) ஹெர்மன் கோர்ட்ஸ்

    3. பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டனர்?
    அ) ஆங்கிலேயர்
    ஆ) ஸ்பானியர்
    இ) ரஷ்யா
    ஈ) பிரெஞ்சுக்காரர்
    விடைகுறிப்பு:
    ஆ) ஸ்பானியர்

    4. லத்தீன் அமெரிக்காவுடன் ‘அண்டை நாட்டுடன் நட்புறவு’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்? அ) ரூஸ்வெல்ட்
    ஆ) ட்ரூமன்
    இ) உட்ரோவில்சன்
    ஈ) ஐசனோவர்
    விடைகுறிப்பு:
    அ) ரூஸ்வெல்ட்

    5. உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை ?
    அ) ஐரோப்பா
    ஆ) லத்தீன் அமெரிக்கா
    இ) இந்தியா
    ஈ) சீனா
    விடைகுறிப்பு:
    ஆ) லத்தின் அமெரிக்கா

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

    1. சமூக ஜனநாயக கட்சியை நிறுவியர் …………………..
    2. நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர் ………………….
    3. வியட்நாம் தேசியவாதிகள் கட்சி ……………… இல் நிறுவப்பட்டது.
    4. நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை ……………………….. என அழைக்கப்பட்டது.
    5. தென்னாப்பிரிக்க ஒன்றியம் …………………… ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.
    6.ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா …………………….. ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
    7. போயர்கள் …………………….. என்றும் அழைக்கப்பட்டனர்.
    விடைகுறிப்பு:

    1. பெர்டினன்ட் லாஸ்ஸல்வி
    2. 1927
    3. ஜோசப் கோயபெல்ஸ்
    4. கெஸ்டபோ
    5. 1910
    6. 27
    7. ஆப்பிரிக்க நேர்கள்


    III. சரியான கூற்றைத் தேர்வு செய்க. 

    1. i) முதல் உலகப்போரின்போது ஆஸ்திரியாவை தெற்கு முனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட வைப்பதே இத்தாலியின் முக்கியக் கடமையாக இருந்தது.
    ii) இத்தாலியைக் காட்டிலும் நீண்ட காலங்கழித்தே ஜெர்மனி பாசிசத்தைக் கைக்கொண்டது.
    iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாளில் ஏற்பட்டது.
    iv) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
    அ) i), ii) ஆகியவை சரி
    ஆ) iii) சரி
    இ) iii), iv) ஆகியவை சரி
    ஈ) i), ii), iii) ஆகியவை சரி
    விடைகுறிப்பு:

    ஈ) i), ii), iii) ஆகியவை சரி

    2. கூற்று : 1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாடு காலனியாதிக்க சக்திகள் ஆப்பிரிக்காவைத் தங்களின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தது.
    காரணம் : ஆங்கிலேயருக்கும், போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும்.
    அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
    ஆ) கூற்று சரி ஆனால் காரணம் சரியான காரணமல்ல
    இ) கூற்று காரணம் இரண்டுமே தவறு
    ஈ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுடன் பொருந்தவில்லை .
    விடைகுறிப்பு:

    அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
     

    IV. பொருத்துக.    

    1.
    டிரான்ஸ்வால்
    அ)
    ஜெர்மனி
    2.
    டோன்கிங்
    ஆ)
    ஹிட்லர்
    3.
    ஹின்டன்பர்க்
    இ)
    இத்தாலி
    4.
    மூன்றாம் ரெய்க்
    ஈ)
    தங்கம்
    5.
    மாட்டியோட்டி
    உ)
    கொரில்லா நடவடிக்கைகள்
    விடைகுறிப்பு:
    1.
    டிரான்ஸ்வால்
    அ)
    தங்கம்
    2.
    டோன்கிங்
    ஆ)
    கொரில்லா நடவடிக்கைகள்
    3.
    ஹின்டன்பர்க்
    இ)
    ஜெர்மனி
    4.
    மூன்றாம் ரெய்க்
    ஈ)
    ஹிட்லர்
    5.
    மாட்டியோட்டி
    உ)
    இத்தாலி
     

    V. சுருக்கமான விடையளிக்கவும்.

    1. இந்தோ-சீனாவில் நடைபெற்ற "வெள்ளை பயங்கரம்" குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

    இந்தோ-சீனாவில் நடைபெற்ற வெள்ளை பயங்கரம்:
    • கம்யூனிஸ்டுகள் தலைமையில் மிகப்பெரும் விவசாயிகள் புரட்சி வெடித்தது.
    • புரட்சி ஒடுக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

    2. முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள் யாவை?

    முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள்:
    • முசோலினியின் வலிமையைக் கண்டு அரசர் வியந்துபோனார்.
    • இத்தாலிய அரசர், முசோலினியை ஆட்சியமைக்க வரவேற்றார்.

    3.பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியது?

    பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது ஏற்படுத்திய தாக்கம் :
    • வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலை பாதியாகக் குறைந்தது.
    • அரசுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பணம் இரண்டு மடங்காயிற்று.

    4.  "டாலர் ஏகாதிபத்தியம்" - தெளிவுபட விளக்குக.

    டாலர் ஏகாதிபத்தியம்:
    • டாலர் ஏகாதிபத்தியம் என்பது தொலைதூர நாடுகளுக்குப் பொருளாதார உதவிகள் செய்வதன் மூலம் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவும், தக்கவைத்துக் கொள்ளவும், அமெரிக்கா பின்பற்றியக் கொள்கையை குறிக்கிறது.

    VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.   

    1. ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.

    ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகள்:

    • 1919 இல், ஹிட்லர் உட்பட ஏழு பேர் கொண்ட குழு நாசிசக் கட்சியை நிறுவியது.
    • ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான ஒரு வன்முறைசார் அரசியலை வளர்த்தார்.
    • முதல் உலகப் போரின் போது பவேரியாவின் படையில் சிறப்பாக பணியாற்றினார்.
    • மியூனிச் நகரில் தேசியப் புரட்சியை நடத்திய குற்றத்திற்காக சிறைக்கு சென்றார்.
    • சிறையில் இருந்த போது தனது சுயசரிதையான மெயின் காம்ப் நூலை எழுதினார்.
    • 1932 இல் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகள் 6,000,000 வாக்குகளைப் பெற்றனர்.
    • முதலாளிகள், வங்கியாளர்கள், நில உரிமையாளர்கள் நாசிசத்தை ஆதரித்தனர்.
    • ஹிட்லர் தவறான வழியில் ஜெர்மனியின் சான்சலராக அதிகாரத்தைப் பிடித்தார்.

    2. உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் (1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதனைக் பதனைக்( குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்.

    உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் (1919-39) லத்தில் இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள்:
    • 1919 இந்திய அரசுச் சட்டம் கொண்டு வந்த இரட்டையாட்சியை காங்கிரஸ் எதிர்த்தது.
    • இந்தியாவைத் தொழில்மயமாக்க காலனிய அரசு குறைவான நடவடிக்கையே எடுத்தது.
    • 1932 இல் ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாடு இங்கிலாந்தின் நலநன பாதுகாத்தது.
    • அந்நியச் செலாவணி மாற்றுக் கொள்கை அரசியல் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியது.
    • விலைவாசி வீழ்ச்சி, இரு மடங்கு வரி விதித்தல் ஆகியவற்றை விவசாயிகள் எதிர்த்தனர்.
    • 1930 இல் சட்டமறுப்பு இயக்கம் கிராமப்புற இந்தியாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
    • 1935 இந்திய அரசுச் சட்டத்தின்படி நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றியை பெற்றது.
    • ஆங்கில அரசாங்கம் இந்தியாவை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தியதை எதிர்த்தது.

    3. தென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.

    தென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி :
    • தென்னாப்பிரிக்காவில் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள் செயல்பட்டு வந்தன.
    • தென்ஆப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்த போதா முதல் பிரதம மந்திரியாக இருந்தார்.
    • தென்ஆப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்த ஹெர்சாக் தேசியக் கட்சியை தொடங்கினர்.
    • 1920 இல் ஸ்மட்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கக் கட்சி ஆட்சியை பிடித்தது.
    • 1924 இல் தொழிலாளர் இயக்கங்களின் ஆதரவுடன் தேசியக் கட்சி வெற்றி பெற்றது.
    • 1923 மற்றும் 1924 இல் கருப்பின மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டன.
    • 1934 இல் ஹெர்சாக் மற்றும் ஸ்மட்ஸ் கூட்டணியில் ஐக்கிய கட்சி தொடங்கப்பட்டது.
    • ஹெர்சாக் 1939 வரையும், ஸ்மட்ஸ் 1948 வரையும் பிரதமராகப் பணியாற்றினார்கள்.


     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive