Tamil Nadu Board 10th Standard Social Science - History Unit 1: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 1 – History from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of History Unit 1 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 1:முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
அ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, உதுமானியர்
ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, ரஷ்யா
இ) ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி
ஈ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, இத்தாலி
விடைகுறிப்பு:
அ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, உதுமானியர்
அ) சீனா
ஆ) ஜப்பான்
இ) கொரியா
ஈ) மங்கோலியா
விடைகுறிப்பு:
ஆ) ஜப்பான்
அ) லெனின்
ஆ) மார்க்ஸ்
இ) சன் யாட் சென்
ஈ) மா சே தூங்
விடைகுறிப்பு:
அ) லெனின்
அ) ஆகாயப் போர்முறை
ஆ) பதுங்குக் குழிபோர்முறை
இ) நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
ஈ) கடற்படைப் போர்முறை
விடைகுறிப்பு:
ஆ) பதுங்குக் குழிபோர்முறை
ஆ) பிரான்ஸ்
இ) டச்சு
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
விடைகுறிப்பு:
அ) பிரிட்டன்
அ) ஜெர்மனி
ஆ) ரஷ்யா
இ) இத்தாலி
ஈ) பிரான்ஸ்
விடைகுறிப்பு:
ஆ) ரஷ்யா
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ………………..ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.2. 1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட ………………… உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது.
3. ……………… ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.
4. பால்கனில் ………………… நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.
5. டானென்பர்க் போரில் …………………. பேரிழப்புகளுக்கு உள்ளானது.
6. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் ……………… ஆவார்.
7. …………………ஆம் ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
விடைகுறிப்பு:
1. 1894
2. லண்டன்
3. 1902
4. மாசிடோனியா
5. ரஷ்யா
6. கிளமென்சோ
7. 1925
III. சரியான கூற்றைத் தேர்வு செய்க.
1. i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றியது.
iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
அ) i), ii) ஆகியன சரி
ஆ) i), iii) ஆகியன சரி
இ) iv) சரி
ஈ) i), ii), iv) ஆகியன சரி
விடைகுறிப்பு:
ஈ) i), ii), iv) ஆகியன சரி
2. கூற்று : ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன.
கராணம் : சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.
அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.
விடைகுறிப்பு:
அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.
IV. பொருத்துக.
1.
|
பிரெஸ்ட்-லிடோவஸ்க்
உடன்படிக்கை
|
வெர்செய்ல்ஸ்
|
2.
|
ஜிங்கோயிசம்
|
துருக்கி
|
3.
|
கமால் பாட்சா
|
ரஷ்யாவும் ஜெர்மனியும்
|
4.
|
எம்டன்
|
இங்கிலாந்து
|
5.
|
கண்ணாடி மாளிகை
|
சென்னை
|
1.
|
பிரெஸ்ட்-லிடோவஸ்க்
உடன்படிக்கை
|
ரஷ்யாவும் ஜெர்மனியும்
|
2.
|
ஜிங்கோயிசம்
|
இங்கிலாந்து
|
3.
|
கமால் பாட்சா
|
துருக்கி
|
4.
|
எம்டன்
|
சென்னை
|
5.
|
கண்ணாடி மாளிகை
|
வெர்செய்ல்ஸ்
|
V. சுருக்கமான விடையளிக்கவும்.
1. சீன - ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?சீன - ஜப்பானியப் போரின் முக்கியத்துவம்:
- பெரிய நாடான சீனாவைச் சிறிய நாடான ஜப்பான் தோற்கடித்தது.
- கிழக்கு ஆசியாவில் ஜப்பான் வலிமை மிகுந்த அரசு என நிரூபித்தது.
- லியோடங் தீபகற்பம் மற்றும் ஆர்தர் துறைமுகத்தை ஜப்பான் கைப்பற்றியது.
மூவர் கூட்டு நாடுகளின் பெயர்கள்:
- இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூன்றும் மூவர் கூட்டு நாடுகள்.
- இவைகள் நட்புறவு நாடுகள் அல்லது லது நேச நாடுகள் எனப்படுகின்றது.
ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள்:
- இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று Jingoism
- பிரான்சின் வெறிகொண்ட நாட்டுப்பற்று Chauvinism
- ஜெர்மனியின் பேரினவாத நாட்டுப்பற்று -Kultur
- பதுங்குக் குழிகள் உயிர் பிழைக்க போர் வீரர்களால் தோண்டப்படுவது.
- எதிரிகளின் சுடுதலில் இருந்து பாதுகாத்துக் கொண்டு நிற்க உதவின.
- முதல் உலகப் போரின் போது பதுங்குக் குழிகள் அதிகம் பயன்பட்டன.
5. முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?
முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரம்:
- துருக்கி மீண்டும் ஒரு நாடாக மறுபிறவி எடுக்க முக்கிய பங்காற்றினார்.
- துருக்கி நவீன மயமானது. கிலாபத் பதவிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
6. ரஷ்யப் புரட்சியின் உலகளாவியத் தாக்கத்தினைக் கோடிட்டுக் காட்டுக?
ரஷ்யப் புரட்சியின் உலகளாவியத் தாக்கம்:
- பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக்கப்பட்டன.
- காலனி நாடுகளை விடுதலைக்காக போராட ஊக்குவித்தது.
7. பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.
பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான இரண்டு காரணங்கள்:
- இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் - சங்கத்திற்கு கட்டுப்பட மறுத்தது.
- அமெரிக்கா பன்னாட்டு சங்கத்தில் உறுப்பினராக சேரவில்லை.
VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.
1. முதல் உலகப் போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி.முதல் உலகப் போருக்கான முக்கியக் காரணங்கள் :
(i) ஐரோப்பிய நாடுகளின் அணி சேர்க்கைகளும் எதிரணி சேர்க்கைகளும்:
- மூவர் உடன்படிக்கை ஜெர்மனி, ஆஸ்திரியா ஹங்கேரி, இத்தாலி.
- மூவர் கூட்டு நாடுகள் இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா.
- ஒரு நாட்டின் மீதான பற்று மற்றொரு நாட்டை வெறுக்கும் தேவை ஏற்பட்டது.
- இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று, பிரான்சின் வெறிகொண்ட நாட்டுப்பற்று.
- ஜெர்மனி பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியமின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை.
- ஜெர்மனியே உலகத்தின் தலைவன் என்றார். கப்பற்படை விரிவுபடுத்தப்பட்டது.
- 1871 இல் அல்சேஸ், லொரைன் பகுதிகளை பிரான்ஸ் ஜெர்மனியிடம் இழந்தது.
- மொராக்கோ விவகாரத்தில் பிரான்சுக்கு எதிராக ஜெர்மனி தலையிட்டது.
- முதல் பால்கன் போரில் துருக்கி தோற்கடிக்கப்பட்டு அதன் பேரரசு சுருங்கியது.
- இரண்டாவது பால்கன் போரில் பல்கேரியா தோற்கடிக்கப்பட்டது.
- பிரான்ஸ் பெர்டினாண்டு ஆஸ்திரியா - ஹங்கேரி பேரரசரின் வாரிசு ஆவார். ஹங்கேரி
- பெர்டினாண்டு செராஜிவோ நகரில் ஒரு செர்பியனால் கொலை செய்யப்பட்டார்.
2. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டு காட்டுக.
ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்கள்:
- ஜெர்மனி போர் இழப்பீட்டுத் தொகையாக 6600 மில்லியன் பவுண்டு தரவேண்டும்.
- ஜெர்மன் படையானது 1,00,000 வீரர்கள் மட்டுமே என்ற அளவில் சுருக்கப்பட்டது.
- நீர்முழ்கிக் கப்பல்களையும் போர் விமானங்களையும் வைத்துக் கொள்ளக் கூடாது.
- ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய இரண்டின் ஒருங்கிணைப்பு தடை செய்யப்பட்டது.
- ஜெர்மனி தனது கடல் கடந்த காலனிகள் மீதான உரிமையை விட்டுக் கொடுத்தல்.
- அல்சேஸ் - லொரைன் பகுதிகளை ஜெர்மனி பிரான்சுக்குத் திருப்பித் தரவேண்டும்.
- ரஷ்யா மற்றும் பல்கேரியா உடனான உடன்படிக்கையை ஜெர்மனி திரும்பப் பெறுதல்.
- ரைன்லாந்து நேச நாடுகளின் பிடியில் படை நீக்கம் செய்யப்பட்ட பகுதியாக இருக்கும்.
3. லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் போக்கினை விளக்குக.
லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் போக்கு:
- 1917 இல் ரஷ்யப் புரட்சி வெடித்த போது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார்.
- ரஷ்யாவில் புரட்சி தொடர்ந்து நடைபெற வேண்டுமென லெனின் விரும்பினார்.
- "அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே” என லெனின் முழக்கமிட்டார்.
- "ரொட்டி, அமைதி, நிலம்" என்ற லெனின் முழக்கத்தால் மக்கள் கவரப்பட்டனர்.
- லெனின் போல்ஸ்விக் கட்சியினரிடம் உடனடிப் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
- லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியே அக்டோபர் புரட்சி எனப்படுகிறது.
- 1917 நவம்பர் 7 இல் அரசுக் கட்டிடங்கள் புரட்சிப் படையால் கைப்பற்றப்பட்டது.
- 1917 நவம்பர் 8 இல் ரஷ்யாவில் புதிய கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிக்கு வந்தது.
4. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக. அதன் தோல்விக்கான காரணங்களையும் குறிப்பிடுக.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகள்:
- சுவீடனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஆலேண்டு தீவுகள் பின்லாந்துக்குத் தரப்பட்டது.
- போலந்திற்கும் ஜெர்மனிக்கும் இடையேயான எல்லை பிரச்சனையை தீர்த்து வைத்தது.
- கிரிஸ் பல்கேரியாவின் மீது படையெடுத்த போது போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட்டது.
- 1925 இல் லொக்கர்னோ உடன்படிக்கை ஐரோப்பாவில் அமைதி ஏற்பட வழிவகுத்தது.
அதன் தோல்விக்கான காரணங்கள்:
- இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் - சங்கத்தின் ஆணைகளுக்கு கட்டுப்பட மறுத்தன.
- அமெரிக்கா பன்னாட்டு சங்கத்தில் உறுப்பினராகச் சேராமல் தனித்து இருந்தது.
- பன்னாட்டு சங்கத்தின் முடிவுகளை செயல்படுத்த தனியாக ராணுவம் இல்லை.
- முதல் உலகப் போரில் வெற்றி பெற்ற நாடுகளின் அமைப்பாக சங்கம் இருந்தது.
VII. செயல்பாடுகள்.
9th SocialVIII. வரைபடப் பணி.
உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.- கிரேட் பிரிட்டன்
- ஜெர்மனி
- மொராக்கோ
- கிரிஸ்
- துருக்கி
- ஆஸ்திரிய-ஹங்கேரி
- பிரான்ஸ்
- செர்பியா
- பல்கேரியா
- இத்தாலி
- பாஸ்னியா
- ருமேனியா
0 Comments:
Post a Comment