10th Social Science - Book Back Answers - Geography Unit 7 - Tamil Medium Guides

  

 


    SSLC / 10th Social Science - Book Back Answers - Geography Unit 7 - Tamil Medium

    Tamil Nadu Board 10th Standard Social Science - Geography Unit 7: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 7 – Geography from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Geography Unit 7 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 7:தமிழ்நாடு - மானுடப்புவியியல்

    I. சரியான விடையைத் தேர்வு செய்க.

    1. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா …………..
    அ) காவிரி டெல்டா
    ஆ) மகாந்தி டெல்டா
    இ) கோதாவரி டெல்டா
    ஈ) கிருஷ்ணா டெல்டா
    விடைகுறிப்பு:

    அ) காவிரி டெல்டா

    2. தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர் ……………….
    அ) பருப்பு வகைகள்
    ஆ) சிறுதானியங்கள்
    இ) எண்ணெய் வித்துக்கள்
    ஈ) நெல்
    விடைகுறிப்பு:

    ஆ) சிறுதானியங்கள்

    3. தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம் ……………….
    அ) மேட்டூர்
    ஆ) பாபநாசம்
    இ) சாத்தனூர்
    ஈ) துங்கபத்ரா
    விடைகுறிப்பு:

    அ) மேட்டூர்

    4. தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை ………………
    அ) 3 மற்றும் 15
    ஆ) 4 மற்றும் 16
    இ) 3 மற்றும் 16
    ஈ) 4 மற்றும் 15
    விடைகுறிப்பு:

    அ) 3 மற்றும் 15
     

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக

    1. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு ……………….. சதவீதத்தை வகிக்கிறது.
    2. சாத்தனூர் அணை …………….. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
    3. மும்பை மற்றும் டில்லியை அடுத்த இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ………. ஆகும்.
    4. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளுக்கு இடையிலுள்ள வேறுபாடு ………………. அழைக்கப்படுகிறது.
    விடைகுறிப்பு:

    21
    தென்பெண்னை
    சென்னை பன்னாட்டு விமான நிலையம்
    வணிக சமநிலை
     

    III. பொருத்துக

    1.
    பாக்சைட்
    சேலம்
    2.
    ஜிப்சம்
    சேர்வராயன் மலை
    3.
    இரும்பு
    கோயம்புத்தூர்
    4.
    சுண்ணாம்புக்கல்
    திருச்சிராப்பள்ளி
    விடைகுறிப்பு: 
    1.
    பாக்சைட்
    சேர்வராயன் மலை
    2.
    ஜிப்சம்
    திருச்சிராப்பள்ளி
    3.
    இரும்பு
    சேலம்
    4.
    சுண்ணாம்புக்கல்
    கோயம்புத்தூர்
     

    IV. சரியான கூற்றினை கண்டுபிடி

    1. கூற்று : கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
    காரணம் : இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கிறது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
    இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
    ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
    விடைகுறிப்பு:

    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.

    2. கூற்று : நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்.
    காரணம் : இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
    ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
    இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
    ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
    விடைகுறிப்பு:

    ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
     

    V. சுருக்கமான விடையளிக்கவும்.

    1. தமிழ்நாட்டின் வேளாண் பருவகாலங்களை எழுதுக.
    விடைகுறிப்பு:
    பருவம்
    விதைக்கும் காலம்
    அறுவடைகாலம்
    சொர்ணவாரி (சித்திரை பட்டம்)
    ஏப்ரல் - மே
    ஆகஸ்டு - செப்டம்பர்
     
    சம்பா
    (ஆடிபட்டம்)
    ஜூலை- ஆகஸ்டு
    ஜனவரி – பிப்ரவரி
    நவரை
    நவம்பர்-டிசம்பர்
    பிப்ரவரி - மார்ச்

    2. கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது.
    விடைகுறிப்பு:


    1. கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் (ஈரோடு, திருப்பூர்) ஏராளமான பருத்தி நெசவாலைகள் அமைந்துள்ளதால் கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது.
    2. கோயம்புத்தூர் நெசவுத் தொழில் மூலம் மாநில பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கிறது.

    3. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக.
    விடைகுறிப்பு:


    1. மேட்டூர் அணை
    2. பவானிசாகர் அணை
    3. அமராவதிஅணை
    4. சாத்தனூர் அணை
    5, பாபநாசம் அணை

    4. பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன?
    விடைகுறிப்பு:


    1. இத்திட்டம் சென்னையிலும், புறநகரிலும் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.
    2. மே 2017 முதல் மெட்ரோ இரயில் அமைப்பும், பாதாள இரயில் போக்குவரத்துடன் விரிவு செய்துள்ளது.

    5. தமிழ்நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பட்டியலிடுக விமான நிலையங்கள்: 
    விடைகுறிப்பு:

    விமான நிலையங்கள்:
    1. சென்னை
    2. தூத்துக்குடி
    3.மதுரை 
    4. சேலம்
    5. திருச்சி 
    6. கோவை

    துறைமுகங்கள்:
    1. சென்னை
    2. தூத்துக்குடி
    3. எண்ணூர்
    4. நாகை 

    VI. வேறுபடுத்துக.   

    1. கடல்மீன் பிடித்தல் மற்றும் உள்நாட்டு மீன் பிடித்தல்
    கடல்மீன் பிடித்தல்
    உள்நாட்டு மீன் பிடித்தல்
    1. கடல் மற்றும் பேராழிகளில் மீன் பிடித்தல்.
    ஏரிகள், ஆறுகள், குளங்கள் கழிமுகங்கள், சதுப்புநில நீர் நிலைகளில் மீன் பிடித்தல்.
    2. பெரிய மற்றும் இயந்திர படகுகள் மூலம் மீன் பிடித்தல்.
    கட்டுமரம், டீசல் படகுகள், மீன் வலைகள் மூலம்மீன் பிடித்தல்.
    3. மாநில கடல் மீன் உற்பத்தியில் 40% பங்களிப்பு.
    மாநில பொருளாதாரத்தில் 1-25% பங்களிப்பு.
     
    2. உணவுப் பயிர்கள் மற்றும் வாணிபப் பயிர்கள்
    உணவுப் பயிர்கள்
    வாணிபப் பயிர்கள்
    1. மனித தேவைக்காக பயிரிடப்படுவது
    இலாப நோக்கோடு விற்பனைக்கு பயிரிடப்படுவது
    2. முக்கிய உணவுப் பயிர் நெல், தினை, தானியங்கள்
    முக்கிய வாணிபப் பயிர் கரும்பு, சணல், பருத்தி
    3. காவிரிடெல்டா, மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம்
    விருதுநகர், மதுரை,திருநெல்வேலி,கடலூர், தஞ்சாவூர்
     
    3. மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர்
    மேற்பரப்பு நீர்
    நிலத்தடி நீர்
    1. ஆற்று வடிநிலம், ஏரிகள், நீர்தேக்கங்கள்
    ஆழ்துளை கிணறு, திறந்த கிணறுகள்
    2. 95% பயன்பாட்டில் இருந்து வருகிறது
    80% பயன்பாட்டில் இருந்து வருகிறது
    3. நீரின் அளவு சுமார் 24,864 மில்லியன் க.மீ
    நீர்வளம் 22,433 மில்லியன் க.மீ
     

    VII. கீழ்க்கண்டவற்றிக்குக் காரணம் கூறுக

    1. விவசாயிகள் இராசாயன வேளாண்மையிலிருந்து கரிம (இயற்கை) வேளாண்மைக்கு மாறுகிறார்கள் ஏன்?
    விடைகுறிப்பு:

    மத்திய அரசின் விழிப்புணர்வு மற்றும் இயற்கை வேளாண்மையில் (செயற்கை உரங்கள் பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக) மண்புழு உரங்கள், தாவர, விலங்கு கழிவுகள் பயன்படுத்துவதால் விவசாயிகள் மாறுகின்றனர்.

    2. கிராமங்களைவிட பெருநகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம் ஏன்?
    விடைகுறிப்பு:


    வேலை வாய்ப்பு, சுகாதாரம், சிறந்த கல்வி போக்குவரத்து, பொழுதுபோக்கு போன்ற வசதிகள் பெருநகரங்களில் கிடைப்பதால் மக்கள் தொகை அதிகம்.



    VIII. பத்தி அளவில் விடையளிக்கவும்

    1. தமிழ்நாட்டில் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக
    விடைகுறிப்பு:

    தோட்ட வேளாண்மை:
    • ஒரு பெரிய நிலப்பரப்பில் (மலைசரிவுகளில்) அறிவியல் முறைபடி ஒரே பயிரை அதிக அளவில் பயிரிடுவது.
    • எ.கா.) காப்பி, தேயிலை, ரப்பர், முந்திரி, சின்கோனா,
    காப்பி:
    • காப்பி உற்பத்தியில் தமிழகம் இந்தியாவில் இரண்டாமிடம் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலையில் பயிரிடப்படுகிறது.
    தேயிலை:
    • தேயிலை உற்பத்தியில் தமிழகம் இந்தியாவில் இரண்டாமிடம் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைகளில் பயிரிடப்படுகிறது.
    ரப்பர்:
    • கன்னியாகுமாரி மலைப்பகுதியில் அதிகம் உள்ளது.
    சின்கோனா:
    • ஆணை மலைப்பகுதியில் சின்கோனா பயிரிடப்படுகிறது.
    முந்திரி:
    • கடலூர் மாவட்டத்தில் அதிகம் பயிராகும்.
    ஏலக்காய்:
    • மதுரையை சுற்றியுள்ள மலைப்பகுதியில் பயிராகும்.
    மிளகு:
    • மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகளில் பயிராகிறது

    2. தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களை பற்றி எழுதுக.
    விடைகுறிப்பு:


    1. மனிதன் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் நீர் இயற்கையின் ஒரு விலைமதிப்பற்ற பரிசாகும்.
    2. இந்தியாவின் மக்கள் தொகையில் 6% உள்ள தமிழ்நாடு நீர்வளத்தில் 2.5% மட்டுமே பெற்றுள்ளது.
    3. தமிழ்நாடு நீர் ஆதாரத்திற்கு பருவ மழையையே சார்ந்து உள்ளது
    4. தமிழகத்தின் ஆண்டு சராசரி மழையளவு 930 மில்லிமீட்டர்
    5. தமிழ்நாட்டின் நீர் தேவையை பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள் பூர்த்தி செய்கின்றன. (எ.கா.) மேட்டூர், சாத்தனூர், முல்லை பெரியார் வைகை, அமராவதி,
    அணைகள்.
    6. மேற்பரப்பு நீர்வள ஆதாரங்கள்:
    • ஆற்று வடிநிலம், ஏரிகள், நீர்தேக்கங்கள் 95% பயன்பாடு
    • நீரின் அளவு சுமார் 24,864 மில்லியன் க.மீ
    7 நிலத்தடி நீர்:
    • ஆழ்துளை கிணறு, திறந்த கிணறுகள் 80% பயன்பாடு
    • நீர்வளம் 22,433 மில்லியன் க.மீ

    3. தமிழ்நாட்டின் கனிம பரவலை விவரி.
    விடைகுறிப்பு:

    கனிம வளங்கள்
    கனிம வளங்கள் பரவல்
    1. பழுப்பு நிலக்கரி
    கடலூர்- நெய்வேலி
    2.நிலக்கரி படிமங்கள்
    இராமநாதபுரம் பகுதிகள்
    3. இயற்கை எரிவாயு எண்ணெய்
    காவிரி வடிநிலப் பகுதிகள்
    4.இரும்புத்தாது
    சேலம், திருவண்ணாமலை
    5.மேக்னடைட்
    சேலம், வேலூர்
    6.ஜிப்சம்
    திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர்
    7. சுண்ணாம்புக்கல்
    கடலூர், கரூர், மதுரை, சேலம், கோயம்புத்தூர்.

    4. தமிழ்நாட்டின் பல்வேறு போக்குவரத்து முறைகளை முறைகளை விவரி ளை விவர்
    விடைகுறிப்பு:


    சாலை போக்குவரத்து:

    1. மொத்த சாலைகளின் நீளம் 1,67,000 கி.மீ
    2. மாநில நெடுஞ்சாலை பராமரிப்பு
    3. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய, கிராம பஞ்சாயத்து சாலைகள்

    இரயில் போக்குவரத்து:

     1. மொத்த இருப்பு பாதையின் நீளம் 6,693 கி.மீ
    2. தெற்கு ரயில்வே தலைமையிடம் சுமார் 690 ரயில் நிலையங்கள்
    3. சென்னையில் புறநகர் ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் திட்டம் என வளர்ந்துள்ளது வான்வழி போக்குவரத்து.
    வான் வழி போக்குவரத்து:
    1. சென்னை நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிலையம்
    2. 4-முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை.
    3. பயணிகள், சரக்கு போக்குவரத்திற்கு முக்கிய பங்கு
    நீர்வழிப் போக்குவரத்து:
    1.3 பெரிய துறைமுகங்களும் (சென்னை, எண்ணூர், தூத்துக்குடி) 15 சிறிய துறைமுகங்களும் உள்ளன
    2. சிறிய துறைமுகங்கள் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
    3. வாகன ஏற்றுமதிக்கு சென்னையும், நிலக்கரி இறக்குமதிக்கு எண்ணூர், தூத்துக்குடியும் பயன்படுகிறது.
     

    IX. நில வரைபடப் பயிற்சி

    1. முக்கிய பயிர் விளையும் பகுதிகள், தாதுக்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைத் தமிழ்நாடு வரைபடத்தில் குறிக்கவும். 
     
     பயிர் விளையும் பகுதிகள்:
    விமான நிலையங்கள்:

    துறைமுகங்கள்:

     
     
     
     




    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive