10th Social Science - Book Back Answers - Geography Unit 6 - Tamil Medium Guides

  

 


    SSLC / 10th Social Science - Book Back Answers - Geography Unit 6 - Tamil Medium

    Tamil Nadu Board 10th Standard Social Science - Geography Unit 6: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 6 – Geography from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Geography Unit 6 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 6:தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள்

    I. சரியான விடையைத் தேர்வு செய்க.

    1. தமிழ்நாட்டின் அட்சப் பரவல் ………. முதல் ……………….. வரை உள்ளது.
    அ) 8°4’வ முதல் 13°35’வ வரை
    ஆ) 8°5’தெ முதல் 13°35’தெ வரை
    இ) 8°0’வ முதல் 13°05’வ வரை
    ஈ) 8°0’தெ முதல் 13°05’தெ வரை
    விடைகுறிப்பு:

    அ) 8°4’வ முதல் 13°35’வ வரை


    2. தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் …………………….. முதல் ………………… வரை உள்ளது.
    அ) 76°18’கி முதல் 80°20’கி வரை
    ஆ) 76°18’மே முதல் 80°20’மே வரை
    இ) 10°20’கி முதல் 86°18’கி வரை
    ஈ) 10°20’மே முதல் 86°18’மே வரை
    விடைகுறிப்பு:

    அ) 76°18’கி முதல் 80°20’கி வரை


    3. தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் …………….. ஆகும்.
    அ) ஆனைமுடி
    ஆ) தொட்டபெட்டா
    இ) மகேந்திரகிரி
    ஈ) சேர்வராயன்
    விடைகுறிப்பு:

    ஆ) தொட்டபெட்டா


    4. கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது?
    அ) பாலக்காடு
    ஆ) செங்கோட்டை
    இ) போர்காட்
    ஈ) அச்சன்கோவில்
    விடைகுறிப்பு:

    இ) போர்காட்


    5. கீழ்க்க ண்டவற்றில் அரபிக் கடலில் கலக்கும் ஆறு எது?
    அ) பெரியார்
    ஆ) காவிரி
    இ) சித்தார்
    ஈ) பவானி
    விடைகுறிப்பு:

    அ) பெரியார்


    6. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?
    அ) இராமநாதபுரம்
    ஆ) நாகப்பட்டினம்
    இ) கடலூர்
    ஈ) தேனி
    விடைகுறிப்பு:

    இ கடலூர்


    7. பின்னடையும் பருவக்காற்று ……………… லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது.
    அ) அரபிக்கடல்
    ஆ) வங்கக் கடல்
    இ) இந்தியப் பெருங்கடல்
    ஈ) தைமுர்க்கடல்
    விடைகுறிப்பு:

    ஆ வங்கக் கடல்


    8. கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம் ………………..
    அ) தேனி
    ஆ) மதுரை
    இ) தஞ்சாவூர்
    ஈ) இராமநாதபுரம்
    விடைகுறிப்பு:

    அ) தேனி

    9. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம் ………………
    அ) தர்மபுரி
    ஆ) வேலூர்
    இ) திண்டுக்கல்
    ஈ) ஈரோடு
    விடைகுறிப்பு:

    அ) தர்மபுரி
     

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக

    1. நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கிடையே காணப்படும் பீடபூமி ……………. ஆகும்.
    2. கிழக்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம் …………….. ஆகும்.
    3. ஆற்றுத் தீவான ஸ்ரீரங்கம் ……………. மற்றும் ……………. ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.
    4.………………. தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.
    விடைகுறிப்பு:
    கோயம்புத்தூர் பீடபூமி
    சோலைக்கரடு
    கொள்ளிடம், காவிரி
    நீலகிரி வரையாடு
     
     

    III. பொருத்துக

    1.
    குளிர்காலம்
    முன் பருவ மழை
    2.
    கோடைக்காலம்
    ஜூன் - செப்டம்பர்
    3.
    தென்மேற்கு பருவக்காற்று
    மார்ச் – மே
    4.
    வடகிழக்கு பருவக்காற்று
    டிசம்பர் - பிப்ரவரி
    5.
    மாஞ்சாரல்
    அக்டோபர் - நவம்பர்
    விடைகுறிப்பு: 
    1.
    குளிர்காலம்
    டிசம்பர் - பிப்ரவரி
    2.
    கோடைக்காலம்
    மார்ச் – மே
    3.
    தென்மேற்கு பருவக்காற்று
    ஜூன் - செப்டம்பர்
    4.
    வடகிழக்கு பருவக்காற்று
    அக்டோபர் - நவம்பர்
    5.
    மாஞ்சாரல்
    முன் பருவ மழை
     

    IV. கூற்று வகை வினா

    1. கூற்று : தமிழ்நாடு தென்மேற்கு பருவகாற்று காலங்களில் அதிக மழையைப் பெறுவதில்லை
    காரணம் : இது மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
    அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
    ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
    இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
    ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று தவறு.
    விடைகுறிப்பு:
    அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
     
     

    V. சுருக்கமான விடையளிக்கவும்.

    1. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக
    விடைகுறிப்பு:


    கிழக்கு
    வங்காள விரிகுடா
    மேற்கு
    கேரளா
    வடக்கு
    ஆந்திர பிரதேசம்
    வடமேற்கு - கர்நாடகா
    தெற்கு
    இந்தியப் பெருங்கடல்

    2. தேரி என்றால் என்ன?
    விடைகுறிப்பு:


    இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் உருவாக்கப்பட்ட மணல் குன்றுகள் தேரி எனப்படும். 

    3. கடற்கரை சமவெளி எவ்வாறு உருவாகிறது?
    விடைகுறிப்பு:


    1. இச்சமவெளி கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகளால் உருவாகிறது.
    2. சில இடங்களில் 80 கி.மீ அதிகமான அதிகமான அகலத்துடன் காணப்படுகிறது.

    4. தமிழ்நாட்டின் முக்கியத் தீவுகளை குறிப்பிடுக
    விடைகுறிப்பு:


    1.பாம்பன்.
    2. முயல்தீவு,
    3. குருசடை,
    4. நல்லதண்ணி தீவு
    5. புள்ளிவாசல்,
    6. ஸ்ரீரங்கம்,
    7. உப்புதண்ணித்தீவு,
    8 தீவுத்திடல்,
    9. காட்டுப்பள்ளித்தீவு,
    10 குவிப்பில்தீவு
    11. விவேகானந்தர் நினைவுப்பாறை

    5. தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகளின் பெயர்களை எழுதுக.
    விடைகுறிப்பு:


    1. கரையாறு
    2. சேர்வலாறு
    3. மணிமுத்தாறு
    4. சித்தாறு
    5. பச்சையாறு
    6. கடனா நதி
    7. ராமநதி

    6. பேரிடர் அபாய நேர்வு-வரையறு
    விடைகுறிப்பு:
     
    ஐ.நாவின் UNDRR கூற்றின் படி பேரிடருக்கான காரணங்களை முறையாகக் கண்டறிந்து பேரிடரின் போது அதன் தாக்கங்களைக் குறைப்பதாகும்.

    7. புயலின் போது வானிலை மையம் மீனவர்களை எவ்வாறு எச்சரிக்கிறது.
    விடைகுறிப்பு:


    1. கைபேசி மூலமாகவும், வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மூலமும் மீனவர்களை எச்சரிக்கிறது.
    2. மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்தும், படகுகளை பாதுகாக்கவும் கூறுகிறது.
     

    VI. வேறுபடுத்துக.

    1. தாமிரபரணி மற்றும் காவேரி
    தாமிரபரணி
    காவேரி
    மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலை முகடுகளில் தோன்றுகிறது.
    மேற்குத் தொடர்ச்சி மலையில் தலைக்காவிரி என்னும் இடத்தில் தோன்றுகிறது.
    துணை அறுகள்: காரையாறு சேர்வலாறு, மணிமுத்தாறு, பச்சையாறு, சித்தாறு,
    துணை அறுகள்; பவானி, நொய்யல்,அமராவதி
    திருநெல்வேலி காத்துக்குடி மாவட்டங்களை கடந்து வங்கக்கடலில் கலக்கிறது.
    கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களை கடந்து கடலூருக்கு தெற்கே) வங்கக்கடலில் கலக்கிறது.
     

    VII. கீழ்கண்ட்வற்றிற்க்கு காரணம் கூறுக

    1. கிழக்கு தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது.
    விடைகுறிப்பு:


    இவை பல இடங்களில் வங்காள கடலில் கலக்கும் ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளதால் தொடர்ச்சியற்று காணப்படுகிறது.

    2. தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு மிக குறைந்த மழையைப் பெறுகிறது.
    விடைகுறிப்பு:


    தென்மேற்கு பருவக்காற்றின் மழை மறைவுப் பிரதேசத்தில் தமிழ்நாடு அமைந்துள்ளதால், தமிழ்நாடு மிக குறைந்த மழையைப் பெறுகிறது.
     

    VIII. பத்தி அளவில் விடயளிக்கவும்

    1. தமிழ்நாட்டின் பீடபூமி நிலத்தோற்றத்தின் தன்மையை விவரிக்கவும்.
    விடைகுறிப்பு:

    1. தமிழ்நாட்டிலுள்ள பீடபூமி மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கும் இடையில் அமைந்துள்ளது.
    2. 60,000 ச.கி.மீ. கொண்ட முக்கோண வடிவம்
    3. பாரமஹால் பீடபூமி தமிழ்நாட்டின் வடமேற்கில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இதில் அடங்கும்
    4. கோயம்புத்தூர் பீடபூமி சேலம், கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்கள் பவானி, நொய்யல், அமராவதி ஆறுகள் இந்த பீடபூமியில் பள்ளத்தாக்குகளை உருவாக்குகிறது. 
    5. சிகூர் பீடபூமி நீலகிரி பகுதியில் உள்ளது.
    6. மதுரை பீடபூமி தாமிரபரணி வடிநிலங்கள் உள்ளன மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. வைகை மற்றும் தாமி

    2. காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக.
    விடைகுறிப்பு:


    1. கர்நாடக மாநிலம் - குடகு மாவட்டம் - தலைக்காவிரியில் உற்பத்தி
    2. கர்நாடகா-தமிழ்நாட்டிற்கு 64 கி.மீ எல்லையாக உள்ளது.
    3. தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் நீர்வீர்ச்சியை பெற்றுள்ளது.
    4. சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை உள்ளது
    5. துணை ஆறுகள்- பவானி நொய்யல், அமராவதி
    6. திருச்சி மாவட்டத்தில் கல்லணை உள்ளது
    7. திருச்சி மாவட்டத்தில் இரு கிளையாக பிரிந்து (கொள்ளிடம், காவிரி) ஸ்ரீரங்கம் தீவை உருவாக்குகிறது.
    8. இறுதியாக கடலூருக்குத் தெற்கே கடலில்கலக்கிறது.

    3.  தமிழ்நாட்டில் உள்ள மண் வகைகளின், பரவல் மற்றும் அவற்றின் பண்புகளை விளக்குக.

    விடைகுறிப்பு:
     
    1. வண்டல் மண்
    • ஆறுகளால் படியவைக்கும் நுண் படிவுகளால் உருவான வளம் மிக்க மண்
    • ஆற்றுப் பள்ளத்தாக்கு (தஞ்சாவூர், நாகை, திருநெல்வேலி) பகுதிகளில் இம்மண் அதிகம் உள்ளது.
    • நெல், கரும்பு, வாழை மற்றும் மஞ்சள் நன்கு வளரும்.
    2. கரிசல் மண்
    • தீப்பாறைகள் சிதைவால் உருவாகிறது
    • தக்காண பீடபூமி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் காணப்படுகிறது.
    • பருத்தி, கம்பு, சோளம், கால்நடை தீவனங்கள் பயிரிடலாம்.
    3. செம்மண்
    • மணல் மற்றும் களிமண் கலந்த ஈரத்தை தக்க வைக்கும் மண்
    • இராம நாதபுரம், சிவகங்கையில் அதிகம் காணப்படுகிறது.
    • இரும்பு ஆ ஆக்ஸைடு அதிகம் உள்ளதால் நெல், கேழ்வரகு, புகையிலை, காய்கறிகள் பயிரிடலாம்.
    4. சரளை மண்
    • இதில் உள்ள சத்து சத்துக்கள் அடித்து செல்வதால் மண் ருவாகும் வளமற்ற மண்.
    • காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சை நீலகிரியில் உள்ளது.
    • நெல், வாழை, மிளகு, காபி, தேயிலை பயிரிடலாம்.
    5. உவர் மண்
    • சோழமண்டல கடற்கரை பகுதியில்  மட்டும் உள்ளது.
    • பயிரிட உகந்த மண் அல்ல.

    4. புயலுக்கு முன்னரும் பின்னரும் மேற்கெ மேற்கொள்ள வேண்டிய அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகளை ஏழுதுக.
    விடைகுறிப்பு:


    புயலுக்கு முன்:
    • வதந்திகளை நம்பாமல் அமைதிகாத்தல்
    • வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் வானிலை நிகழ்வை தெரிந்து கொள்ளல்
    • விலைமதிப்புள்ள பொருட்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாத்தல்
    • அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
    • குடியிருப்பு பாதுகாப்பை உறுதி செய்தல்
    • மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை செய்தல்.
    புயலுக்குப் பின்:
    • நிவாரண முகாம்களை மறு அறிவுப்பு வரும் வரை பாதுகத்தல்
    • பாம்பு, பூச்சிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருத்தல்
    • கழிவுகள் இறந்த விலங்குகளின் உடல்களையும் அகற்றுதல்.
    • இழப்பின் உண்மையான மதிப்பு, அளவினை அதிகாரிகளிடம் தெரிவித்தல்

    IX. நில வரைபடப் பயிற்சி

    1. தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள், மண் பரவல் மற்றும் காடுகளின் வகைகளை வரைபடத்தில் குறிக்கவும்.
     ஆறுகள்:
    மண் பரவல்:

    காடுகளின் வகைகள்: 

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive