9th Tamil - Book Back Answers - Unit 1 - Guides

 


    9th Tamil - Book Back Answers - Unit 1 - Download

    Tamil Nadu Board 9th Standard Tamil - Unit 1: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 1 – from the Tamil Nadu State Board 9th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 1 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 1

    I. திறன் அறிவோம்

    அ) பலவுள் தெரிக.

    1.திணை,பால்,எண், ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிடமொழி எது?
            இ) மலையாளம்

    2.தமிழ்விடு தூது என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
            இ) சிற்றிலக்கியம்

    3.பின்வருவனவற்றில் அளபெடை இடம்பெறாத தொடர் எது?

            ஈ) ஓடி வா ஓடி வா

    4..காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்த காலமும் நிலையாய் இருப்பது தமிழே!
    இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் யாவை?

            இ) மோனை, எதுகை, இயைபு

    5.சிந்தா மணி என்பதன் இலக்கணக்குறிப்பு-
            ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

    ஆ) குறு வினா

    1.நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
    நாங்கள் பேசும் மொழி தமிழ் திராவிட மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்தது.

    2.தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் கவர்ந்த அடிகள் குறித்து எழுதுக.
    காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே!
    -இவ்வடிகள் தமிழ் மொழி எல்லா மொழிக்கும் மூத்த மொழி என்கின்றது.

    3.கண்ணி என்பதன் விளக்கம் யாது?
    இரண்டு இரண்டு அடிகளை வைத்து எதுகையால் எழுதப்படும் செய்யுள் கண்ணி எனப்படும்.

    4. "அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் - அவை அமைந்ததைச் சொல்லும் இலணங்களவை இலக்கியங்களின் பாடுபொருளாக இவ்வரிகள் உணர்த்துவன யாவை?
    அகமும் புறமும் இலக்கியங்களின் பாடுபொருள்.

    5.தென்திராவிடமொழிகள் ஏதேனும் நான்கினை எழுதுக.
    1.தமிழ்
    2.மலையாளம்
    3.கன்னடம்
    4.குடகு

    6.அளபெடை எத்தனை வகைப்படும்?அவை யாவை?
    அளபெடை இரண்டு வகைப்படும்
    1.உயிர் அளபெடை
    2.ஒற்று அளபெடை

    இ) சிறு வினா

    1.தமிழ்விடு தூது உணர்த்தும் தமிழின்சிறப்புகள் யாவை?
    முக்திக் கனியே!
    முத்தமிழே!அறிவால்உண்ணப்படும் தேனே!
    என் வேண்டுகோள் கேள்.
    புலவர்கள் குறவஞ்சி, பள்ளு பாடி சிறப்பு பெறுகின்றனர்.
    உனக்கும் மூவகைப் பாவினங்களுக்கும் உறவு உண்டா?
    ஒளி வீசும் மணியாய் இருக்கும் உன்னைச் சிந்து என்பவர் நா இற்று விழும்.

    2.திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
    தென் திராவிட மொழிகள்,வட திராவிட மொழிகள். நடுத்திராவிட மொழிகள் ஆகியவை திராவிட மொழிகளின் பிரிவுகள் ஆகும்

    தெரிந்த மொழி: தமிழ்மொழி

    சிறப்பியல்புகள்:
    தொன்மையான மொழி தமிழ்.
    பிறமொழித் தாக்கம் இல்லாத மொழி.

    3.மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?
    மூணு - மலையாளம்
    மூரு-கன்னடம்
    மூடு -தெலுங்கு
    மூஜி துளு

    4.'புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் - உங்கள் பங்களிப்பை விளக்குக.
    1.புதிய கலைச்சொல்லாக்கத்தை உருவாக்குவேன்.
    2.தமிழ் மருத்துவக்கலைக்களஞ்சியம் உருவாக்குவேன்.
    3.கணினிச் சொற்களுக்குத் தமிழ்ச் சொல் உருவாக்குவேன்.
     

    ஈ) நெடு வினா

    1.காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப் பித்துக் கொள்ளும் தமிழின் தனித்தன்மைகள் பற்றி எழுதுக.
    மருத்துவம்,அறிவியல் ஆகிய துறைகளில் உள்ள கலைச்சொற்கள் தமிழில் மாற்றம் பெறுகின்றது.
    பிறமொழித் தாக்கம் குறைவாக உள்ளமொழி தமிழ்!
    சில மொழிகளுக்குத் தாயாகத் தமிழ் உள்ளது.
    ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்கள் உள்ளன.
    புதிய தமிழ்ச் சொற்கள் தொடரந்து உருவாக்க முடியும்.

    2.புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.
    ஆறாம் திணை

     
    முன்னுரை:
    புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாகக் காண்போம்.

    முத்துலிங்கம்
    இலங்கையில் உள்நாட்டுப் போர் காலம் அது. அப்போது முத்துலிங்கத்தின் குடும்பம் அங்கு இருந்தது.எப்போதும் தூங்காது,உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    அகதிகள் முகாம்
    அனைவரும் அகதிகள் முகாமிற்குச் சென்றனர்.
    யாரோ போட்ட உடைகள்கைதிகளைப் போல வரிசையில் நின்று சாப்பாட்டிற்கு கை ஏந்துகின்றனர்.
    அங்கு இரண்டு கரண்டி தான் சோறு கிடைக்கும்.

    வேறு நாடு
    உயிர் வாழ வேறு நாட்டிற்குச் சென்றனர்.
    30வயதுள்ள புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்.பல நாடுகளில் சிறை,பனிச்சரிவு. அடி உதை அனுபவித்தார்.
    எங்கும் வேலை கிடைக்கவில்லை.8வது இடம் கேட்ட கேள்விக்கு, "இன்று வரைக்கும் உயிர் தப்பி வாழ்கிறேன் என்றால் அது என் திறமை " என்றார்.
    அவர் இப்போது வரை கனரக வாகனம் ஓட்டுகிறார்.

    முடிவுரை
    புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என் பதை ஆறாம் திணை வாயிலாகக் காண்போம்.


    II. மொழியை ஆள்வோம்

    அ) படித்து சுவைக்க.

    Comparative Grammer- ஒப்பிலக்கணம்
    Lexicon-பேரகராதி
    Vowels- உயிரொலிகள்
    Consonants- மெய்யொலிகள்
     

    ஆ) மொழி பெயர்க்க.

    Linguistics - மொழியியல்
    Literature- இலக்கியம்
    Philologist- மொழி ஆய்வறிஞர்
    Polyglot- பன்மொழி அறிஞர்
    Phonologist- ஒலியியல் ஆய்வறிஞர்
    Phonetics- ஒலியியல்

    இ) கடிதம் எழுதுக .

    உங்களின் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய "கால் முளைத்த கதைகள்" (ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன்) என்னும் நூல் குறித்த கருத்துக்களைக் கடிதமாக எழுதுக.
    நண்பனுக்குக் கடிதம்
    10.தமிழ் நகர்,
    இடம்:இஇஇ.
    நாள்:-------
    அன்புள்ள நண்பனுக்கு,
            உன் நண்பன் எழுதும் கடிதம்.நலம் நலமறிய ஆவல். பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "கால்முளைத்த  கதைகள்" என்னும் நூலைப் படித்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.
            பழங்குடியினத்தவர்கள் சொன்ன கதைகளிலிருந்து இந்தக் கதைத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இதனைப் படிக்க வைத்த உனக்கு மிக்க நன்றிகள்.மீண்டும் சந்திப்போம்!
    இப்படிக்கு
    --------(பெயர்)
    உறைமேல் முகவரி
    பெறுநர்:
        இ.இளங்கோ
        12,காந்தி நகர்,
        கோவை-1

    ஈ) நயம் பாராட்டுக.

    கொடுக்கப்பட்டுள்ள பாடலைப் படித்து நயம் பாராட்டுக.

    விடுகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
    விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில் 
    பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில் 
    புல்வெளியில், நல்வயலில், விலங்கில், புள்ளில் 
    தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில் 
    தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே. 
    அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள் 
    அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே!

    திரண்ட கருத்து

    வானம், கடல், மலை. அருவி, புல்வெளி,வயல், விலங்கு, பறவை என அனைத்திலும் காணுகின்ற பாடலே! தூய்மை ஊற்றே! மக்கள் உள்ளத்தில் நிலையாக இருக்க வேண்டுகின்றேன்.

    பொருள் நயம்
    தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே என்பதில் பொருள் நயம் சிறப்பாக உள்ளது.

    சொல் நயம்
    காட்டில், புல்வெளியில்,நல்வயலில் ஆகிய சொற்கள் சொல் நயம் தோன்ற உள்ளது.

    மோனை நயம்
    முதல் எழுத்து ஒரே மாதிரி வருவது மோனை.
    விரிகின்ற - விண்ணோங்கு, தெரிகின்ற - தெவிட்டாத

    எதுகை நயம்
    இரண்டாம் எழுத்து ஒரே மாதிரி வருவது எதுகை.
    பொழிகின்ற -பொழிலில் புல்வெளியில் நல்வயலில்

    அணி நயம்
    இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.

    சந்த நயம்
    சிந்து சந்தத்தில் இப்பாடல் அமைந்துள்ளது.

    சுவை நயம்
    பெருமிதச் சுவையில் இப்பாடல் அமைந்துள்ளது.
     

    ஏ) நிகழ்ச்சி நிரல் வடிவமைக்க.

    உங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் உலகத்தாய் மொழி நாள்(பிப்ரவரி 21) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வடிவமைக்க.
    உலகத் தாய்மொழி நாள் விழா நிகழ்ச்சி நிரல்
    நிகழ்ச்சி நிரல்
    இறைவணக்கம்
    தமிழ்த்தாய் வாழ்த்து
    வரவேற்புரை    : வை.மணி (10-அ), இலக்கிய மன்றச் செயலாளர்
    தலைமையுரை  :அ.அருண் அவர்கள், தலைமையாசிரியர்
    சிறப்புரை       : கவிஞர் திரு.மு.மேத்தா அவர்கள்
    நன்றியுரை     : ச.மதி, 10-ஈ
    நாட்டுப்பண்

     
     
     
     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive