12th Tamil - Book Back Answers - Unit 4 - Guides

  
 
 



 


    Plus Two / 12th Tamil - Book Back Answers - Unit 4 - Download

    Tamil Nadu Board 12th Standard Tamil - Unit 4: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 4 – from the Tamil Nadu State Board 12th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 4 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 4 

    I. திறன் அறிவோம்

    அ) பலவுள் தெரிக.

    1. 'கண்ணாடியாகும் கண்கள்' என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
    அ) நகுலன்
    ஆ) பிரமிள்
    இ) அய்யப்ப மாதவன்
    ஈ) சிற்பி
    விடைகுறிப்பு:
    அ) நகுலன்

    2. ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஓர் 
    ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் - தொடர்களில் வெளிப்படும் செய்திகள் __________.

    அ) மாதவி ஏழு ஆண்டுகள்வரை நாட்டியம் பயின்றாள்.
    ஆ) ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.
    அ) 1 சரி, 2 தவறு
    ஆ) 1 தவறு, 2 சரி
    இ) 1 தவறு 2 தவறு 
    ஈ) 1 சரி 2 சரி
    விடைகுறிப்பு:
     ஈ) 1 சரி 2 சரி

    3. பொருத்துக.
    அ) ஆமந்திரிகை – 1) முத்து
    ஆ) நித்திலம்         – 2) மூங்கில்
    இ) கலஞ்சு             – 3) இடக்கை வாத்தியம்
    ஈ) கழை                  – 4) எடை அளவு

    அ) 2 1 3 4
    ஆ) 3 4 2 1 
    இ) 3 1 4 2 
    ஈ) 1 3 4 2 
    விடைகுறிப்பு:
    இ) 3 1 4 2 

    4. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
    அ) வசும்பு
    ஆ) மணத்தக்காளியிலைச் சாறு
    இ) கடுக்காய்
    ஈ) மாவிலைக்கரி
    விடைகுறிப்பு:
    இ) கடுக்காய்

    5. 'குழிமாற்று', என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை
    அ) இலக்கியம்
    ஆ) கணிதம்
    இ) புவியியல்
    ஈ) வேளாண்மை
    விடைகுறிப்பு:
    ஆ) கணிதம்

    ஆ) குறு வினா

    1. மாதவியின் நாட்டிய நிகழ்வில் ஒலித்த இசைக்கருவிகளைப் பட்டியலிடுக.
    • மாதவி அரங்கேறியபோது முறைப்படியான தெய்வப்பாடல் இசைக்கப்பட்டது.
    • தொடர்ந்து இசைக்கருவிகள் ஒலிக்கத் தொடங்கின. குழல்வழி, யாழிசை நின்றது.
    • யாழிசைக்கு ஏற்ப, தண்ணுமையாகிய மத்தளம் ஒலித்தது.
    • மத்தளத்துடன் இயைந்து, முழவு ஒலித்தது.
    • முழவுடன் இடக்கை வாத்தியம் இணைந்து ஒலித்தது.

    2. சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
    • இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரத்திற்குக் குடிமக்கள் காப்பியம், மூவேந்தர் காப்பியம், புரட்சிக் காப்பியம் என்னும் வேறு பெயர்களும் வழங்கப் பெறுகின்றன.
    • செய்யுளாகிய பாடலும் உரைநடையும் கலந்து அமைந்ததால், 'உரைஇடைஇட்ட பாட்டுடைச் செய்யுள்' எனவும் வழங்கப்பெறுகிறது. இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றாகவும் குறிப்பிடப் படுகிறது.

    3. காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் சென்றது?
    • ஒரு பறவையின் வாழ்வைச் சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, வானுக்கும் நிலத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் வீசும் காற்றின் தீராத பக்கங்களில், எழுதிச் சென்றது.

    4. அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
    • தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் முதலியன,
    • கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள்,
    • சிறுவர்கள் படிக்கும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்றவை, அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்களாகும்.

    இ) சிறு வினா

    1. ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி - விளக்குக.
    • அரங்கின் மேடையில் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படுவது ஒருமுக எழினி எனப்படும்.
    • மேடையின் இரு பக்கங்களிலிருந்தும் நகர்ந்து நடுவில் ஒன்றுபட்டுப் பொருந்துமாறு அமைக்கப்படுவது பொருமுக எழினி.
    • மேடையின் மேலிருந்து வேண்டும்போது கீழாக இறங்கும் வகையில் அமைக்கப்படுவது கரந்துவரல் எழினி ஆகும்.

    2. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?
    • நான் ஆசிரியரானால் மாணவர்களிடம் வெறுப்புக் காட்டமாட்டேன்.
    • மாணவர் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டாலும், அன்பால் முறைப்படுத்துவேன்.
    • பொறுமையாலும் அறிவாலும் அவர்களை நெறிப்படுத்துவேன்.
    • மாணவர்களின் மனம் புண்படும்படி கடுமையாகப் பேச மாட்டேன்.
    • மாணவர்கள் விரும்பும் வண்ணம் வகுப்பு எடுப்பேன்.
    • மாணவர்களுக்குச் சிறு சிறு கதைகள் கூறி, அவர்களை என் வசப்படுத்துவேன்.
    • கற்றலில் பின்தங்கியோருக்குத் தனிவகுப்பு எடுத்து, அவர்களைத் தேர்ச்சியடைய வைப்பேன்.

    3. மணலில் எழுதியதுமுதல் தற்காலம்வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
    • பண்டைய காலத்தில் பிள்ளைகள் முதலில் மணலில் எழுதிப் பழகுவார்கள். 
    • அதனால் அவர்களுடைய எழுத்துகள், வரிசையாகவும், நன்றாகவும் இருந்தன. உபாத்தியாயர் முதலில் தரையில் எழுத, அதன்மேல் பிள்ளைகள் எழுதுவார்கள். பிறகு தாமே எழுதிப் பழகுவார்கள்.
    • எழுத்துகள் ஒன்றோடொன்று படாமலும் வரிகோணாமலும் பழைய காலத்தில் எழுதினார்கள். 
    • எழுத்துகளின் உருவங்கள், பல காலமாக மாறாமல் இருந்து வருகின்றன.
    • தற்காலத்தில் மாணாக்கர்களுக்கு எழுதும் பழக்கம் நன்றாக அமைய வேண்டுமென்று, ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களைத் தனித்தனியே ஏடுகளில் தாமே எழுதி, அதைப்போல் எழுதிவரச் செய்வார்கள்.
    • மாணாக்கர்களின் கையெழுத்து தெளிவாக இருக்க, ஏடுகளில் ஆசிரியர்கள் எழுதித் தர, அதைத் தொடர்ந்து எழுதும் முறையை மாணவர்கள் தற்காலத்தில் பின்பற்றுகின்றனர்.
    • திறன்பேசியின் தொடுதிரையில் பேனா பென்சில் என எதுவும் இல்லாமலே விரல் கொண்டு எழுதும் முறை தற்போது உள்ளது.

    4. கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனத்தில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக.
    • கவிதை என்பது மனத்தில் ஏற்படும் தாக்கத்தைச் சொற்களில் வடிப்பதாகும். 
    • நகுலன் கண்முன் நிகழ்வதை மனநிகழ்வுகளோடு தொடர்புபடுத்திக் கவிதையாக்கியுள்ளார்.
    • சாதாரணமாக நிகழும் இறப்பினைச் சுட்ட, 'மூச்சு நின்றுவிட்டால் பேச்சு அடங்கும்' என்ற எளிய சொற்கள்மூலம் கவிதையாகப் படைக்கிறார்.
    • எல்லோரும் பூமியில் இருக்க வேண்டுமென்று வருகிறோம். ஆனால், இல்லாமல் போகிறோம் என்பதைத் தம் சிந்தனையில் செதுக்கிக் கவிதையாக்கியுள்ளார்.
    • ஓர் உண்மையை மறைக்க என்று சாதாரணமாகச் சொல்லும் நிகழ்வைச் சொல்பவர் பார்வையில் அது பொய்யாகத் தெரியாது என்பதை உணர்த்த, அவர் பல உண்மைகளைச் சொல்கிறார், ஓர் உண்மையைச் சொல்லாமல் இருப்பதற்கு என்ற சொற்களைப் பயன்படுத்திக் கவிதையாக்குகிறார்.
    • இவ்வாறு கண்முன் நிகழ்வதையும் மனத்தில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சிந்தனையைச் சொற்சிமிழில் அடைக்கும் வல்லமை பெற்றவர் நகுலன் என்பது புலப்படும்.

    ஈ) நெடு வினா

    1. அரங்கின் அமைப்பை சிலப்பதிகாரத்தின்வழி விளக்கி எழுதுக.
     
        மாதவியின் ஆடல் அரங்கேறிய அரங்கமானது, சிற்பநூல் ஆசிரியரால் கூறப்பட்ட இயல்புகளில் சிறிதும் மாறுபடாவகையில், அரங்கு அமைப்பதற்குரிய நல்ல நிலத்தைத் தேர்வு செய்தனர். பொதிகைமலை போன்ற மலையில் நீண்டு வளர்ந்த மூங்கிலில், ஒரு கணுவுக்கும் மற்றொரு கணுவுக்கும் இடையில் ஒருசாண் அளவு இருக்குமாறு தேர்வு செய்தனர். சிற்ப நூல் வல்லாரின் கைப்பெருவிரல் இருபத்து நான்கு அளவு கொண்டதாக அம்மூங்கிலை வெட்டி எடுத்தனர்.
     
       அதனையே அரங்கை அமைக்கும் அளவுகோலாகக் கொண்டு ஏழுகோல் அகலமும், எட்டுக்கோல் நீளமும், ஒருகோல் உயரமும் உடையதாக அரங்கு மேடையை அமைத்தனர்.
     
        அரங்கின் தூண்களுக்குமேல் வைத்த உத்திரப் பலகைக்கும் தளத்திற்கும் இடையே இடைவெளி, நான்குகோல் அளவு இருக்குமாறு அமைத்தனர். அரங்கின் உள்ளே செல்லவும் வெளியே வரவும் அளவாக இருவாயில்களை அழகாக அமைத்திருந்தனர்.
     
       அந்த அரங்கின்மேல் நிலைமாடத்தில் ஐம்பூதங்களை எல்லாரும் புகழும்படி சித்திரித்து வைத்திருந்தார்கள். தூணில் நிழல், அவையிலோ நாடக அரங்கிலோ விழாதவகையில் அழகிய நிலை விளக்குகளையும் நிறுத்தி இருந்தனர்.
     
       மேடையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்ல 'ஒருமுக எழினி'யும், மேடையில் இருபுறங்களிலிருந்தும் நகர்த்தப்பட்டு நடுவில் ஒன்றாகப் பொருந்தும் 'பொருமுக எழினி'யும், மேடையின் மேலிருந்து கீழாக இறங்கும்வகையில் கரந்துவரல் எழினி'யும் அமைக்கப்பட்டிருந்தன. 
     
            அத்துடன் வேலைப்பாடு அமைந்த ஓவிய மேல் விதானமும் அமைத்து, அரங்கம் முழுவதும் முத்து மாலைகளைத் தொங்கவிட்டு அலங்கரித்திருந்தனர். இத்தகையவகையில் அரங்கம் வெகு சிறப்பாக அமைக்கப்பட்டிருந்ததைச் சிலப்பதிகாரத்தால் அறியமுடிகிறது.

    2. பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.

    முன்னுரை:
        பண்டைக்காலம் முதலே, கல்வியும் அதன் நோக்கமும், கல்விக்கூட அமைப்பும் கற்பிக்கும் முறைகளும் காலந்தோறும் இலக்கியங்களில் தடங்களாகப் பதிவு பெற்றுள்ளன.

    வித்தியாரம்பம் அல்லது கல்வித்தொடக்கம்:
        பண்டைய காலத்தில் ஊர்தோறும் மன்றங்கள் பள்ளிகளாகத் திகழ்ந்தன. பண்டைக்காலத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் காலம் ஒரு பெரிய சிறப்பு நாளாகக் கொண்டாடப்பட்டது. உபாத்தியாயர், ஏட்டின்மீது மஞ்சள் பூசி, பூசித்துப் பையனிடம் கொடுத்து வாசிக்கச் சொல்வர். தொடர்ந்து நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுக்க, மாணாக்கன் அதைப் பின்பற்றிச் சொல்வான்.

    எழுத்துப் பயிற்சி:
        உபாத்தியாயர் வழிகாட்டலில் குழந்தைகள் முதலில் மணலில் எழுதப் பழுகுவார்கள். அதனால், அவர்களுடைய எழுத்துகள் வரிசையாகவும் நன்றாகவும் அமைந்தன. உபாத்தியாயர், முதலில் தரையில் எழுத, அதன்மேல் பிள்ளைகள் எழுதுவார்கள். எழுத்துகள் ஒன்றோடொன்று படாமல் வரிகோணாமல் எழுதப் பழக்கி வந்தார்கள். ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் ஏடுகளில் மேலே எழுதி, அதைப்பார்த்து அதுபோல் எழுதிவரச் சொல்வார்கள்.

    மனனப் பயிற்சி:
        தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள் முதலியன, பாடமாக இருந்தன. அவற்றை அக்கால மாணவர்கள் மனனமாகப் பயின்றனர். கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்பாடுகளைக் கட்டாயமாக மனனம் செய்தனர்.

    சாந்துணையும் கற்றல்:
        பள்ளிக்கூடத்தில் பல நூல்களையும் பயின்றதோடு நில்லாமல், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து படித்து வந்துள்ளனர். பள்ளியில் கற்ற பின்னரும் சிலர், சிறந்த கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் இருப்பிடம் அறிந்து, தேடித் தேடிக் கற்றுள்ளனர்.

    ஒதற்பிரிவு:
        இல்லறம் நடத்தும் காலத்தில்கூட, வேற்று நாட்டுக்குச் சென்றும், கடல்கடந்தும் ஆங்காங்கே உள்ளோருக்குத் தம்முடைய கல்வியைக் கற்பித்தும், வாதம் புரிந்தும், வென்றும் வந்ததோடு, தாம் முன்பு கற்று அறியாதவற்றைக் கற்றும் வந்துள்ளனர்.

    முடிவுரை:

        அந்தப் பழைய காலத்துப் பள்ளிக்கூடங்களைக் காலத்தின் வேகம் மாற்றி அமைத்துவிட்டாலும், அக்காலத்தில் நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளால் விளைத்தவற்றை உள்ளடக்கிய இலக்கியங்கள் வாயிலாகவும் அவற்றால் விளைந்த நற்பயன்களையும், அவற்றில் படித்த பேரறிஞர்கள் நமக்கு ஈட்டி வைத்துள்ள நூற்செல்வத்தையும் நினைக்கும்போது, அந்த நினைவே நம்முள் பெருமிதத்தை வளர்க்கிறது.

    3. 'சூரியனைப் பிரசவிக்கும் பாறை' எனும் சிறுகதை உணர்த்தும் கருத்துகளைச் சுவை குன்றாமல் சுருக்கி வரைக.

            மனிதனுக்குக் குழந்தைப் பருவம் என்பது அற்புதமான அனுபவங்களை அளிக்கும் பருவமாகும். இதனை ஒரு சிறுவன் வாயிலாகத் தோப்பில் முகம்மது மீரான் தமது 'சூரியனைப் பிரசவிக்கும் பாறை என்ற கதைமூலம் நயம்படக் கூறியுள்ளார். அது உணர்த்தும் கருத்தைச் சுவை குன்றாது காண்போம்.
     
            பள்ளியில் ஆசிரியர் "சூரியன் எங்கே உதிக்கிறது?" என்று கேட்டதும் மீரான்மட்டும் எழுந்திருந்து கிழக்குத் திசையைக் காட்டிப் பாராட்டைப் பெறுகிறான். அவன் நாள்தோறும் தன் கிராமத்தில், காலையில் எழுந்து பார்க்கும்போது பாறையின் பிளவிலிருந்து வெளிப்படுவதைக் கண்டிருக்கிறான். பகலில் வானில் மேயும் சூரியன், பொழுதானதும் மீண்டும் வேறு பாறையின் வயிற்றுக்குள் சென்றுவிடுவதையும், அதன்பின் இரவு மேய்வதையும் பார்த்திருக்கிறான். இளம் வயதில் அவன் கேள்விப்பட்ட செய்திகள் உண்மையா என அறிய ஏங்கினான்.
     
        சூரியனைப் பெறும் பாறையைக் காணவும், அங்கு இருப்பதாகச் சொல்லப்பட்ட ஊசிக் கிணற்றையும் அதைக் காவல் காத்து நிற்கும் பாம்பையும் பார்க்க ஆசைப்பட்டான். அதற்கு ஆற்றைத் தாண்டிப் போக வேண்டும் என்று கேள்விப்பட்ட சின்ன மனம், வழி அறியாது திகைத்தது.

            கொழும்பிலிருந்து வந்த தங்கன் (சமய அறிஞர்) தாகம் தீர்க்க உருவாக்கிய கிணறு ஆழமானது. அதைத் தம் தாகத்தைத் தீர்த்துக் கொண்டதும் அவர் மூடிவிட்டார். அதைக் காக்கும் பாம்பு அங்குச் செல்பவரைத் தீண்டிக் கொன்றுவிடுமென்றும் அம்மா சொன்னது இளம் மனத்தில் ஆழப்பதிந்திருந்தது. மீரானுக்கு அந்தப் பாறையில் ஒரு தடவையாவது ஏறிப் பார்த்துவிடவேண்டும் என்ற தீராத ஆசை வளர்ந்தது.

            மேலே உள்ள பள்ளிக்கு (மசூதிக்கு) நேச்சா இல்லாமல் போகக் கூடாது. அந்தக் கிணறு ஒரு கப்பல் அளவு நூலாலும் ஆழம் காணமுடியாதது என்பதெல்லாம் உண்ணும்போதும் உறங்கும்போதும் மனத்தில் ஒடிக்கொண்டே இருந்தது.

            ஒருமுறை நேச்சா கொண்டு சென்றவர்களைத் தொடர்ந்து சென்றவன், நேச்சா (நேர்த்திக்கடன்) முடித்தவர்கள் திரும்பியபோது தனித்துத் தங்கி, ஊசிக்கிணற்றையும் அதை மூடிய பாறையையும் சென்று பார்க்க நினைத்தான். பாறைமேல் நின்று பச்சைப் பசேலென்ற பெருவெளியையும் மாதா கோவிலையும் சிலுவையையும் கண்டான். சற்றுத் தொலைவில் நெடும்பனையில் எடுத்த பதனி எடுத்து வந்தவனைத் திரும்பிப் பார்த்தான். பின்னால் பாம்பு படம் எடுத்து நிற்பதைக் கண்டு பயந்தான். கையும் காலும் மரத்து இதயத் துடிப்பு நின்றது. பாம்பு படத்தைச் சுருக்கிக் கொண்டது. பாம்புடன் பேசினான்.

            பாம்பு 'இல்லை சுடிக்கமாட்டேன்' எனக் கூறி நகர்ந்தது. நடந்த வழியில் மீண்டும் திரும்பிப் பார்த்தான். பாம்பு தலை தூக்கியது. தன்னைக் கடிக்கக்கூடாது என்றும் தெரியாமல் வந்து விட்டதால் போய் விடுவதாகவும் மீரான் சொன்னான். எதிரில் வந்த பாம்பின் அசைவு மொழி மீரானுக்குப் புரிந்தது. தான் சூரியனைப் பிரசவிக்கும் பாறையையும் ஊசிக் கிணற்றையும் பார்க்க வந்ததாகக் கூறினான். அந்தப் பாறை சூரியனைப் பிரசவிக்கும் பாறை இல்லை என்றும் அதற்குக் கிழக்கிலுள்ள பகுதிகளை மறைத்து நிற்கிறது என்றும் பாம்பு கூறியது. உண்மை அறிய விரும்பிய பையனைப் பாம்பு பாராட்டிவிட்டு சிறுவனைத் தன் நண்பன் எனக் கூறியது.
     
        பாம்புடன் நடத்திய உரையாடலில், பாம்புகள் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவை என்பதையும் மனிதர்கள் சத்தியத்திற்குக் கட்டுப்படாத நீசர்கள் என்றும் காலப்போக்கில் புரிந்து கொள்ளமுடியும் என்றும் பாம்பின்மூலம் மிரான் அறிந்தான்.

            தான் கிணறு பற்றிக் கேட்டது கட்டுக்கதை என்றும் பாம்பு குறித்துத் தான் கேள்விபட்டதெல்லாம் மூடர் பேச்சு என்றும் புரிந்து கொண்டான். வட்டக்கல் என்பது கிணற்றின் மூடி அல்லவென்றும் பாம்புகளுக்கு வீடு என்றும் தெரிந்து கொண்டான். யாரோ ஒருவர் முன்பு சொன்ன பொய் மூடநம்பிக்கையாக மாறியதை இச்சந்திப்பு மீரானுக்கு அறிவுறுத்தியது. உண்மையை விளக்கிவிட்டுப் பாம்பு நீங்கிச் சென்று வட்டக்கல் கீழ் மறைந்தது. அன்று சூரியனும் மறையவே பாறை மீதிருந்து மீரான் இறங்கியபோது, தந்தை கம்புடன் நின்றதைக் கண்டு, “வாப்பா அடிக்காதே" எனத் தந்தையிடம் கெஞ் சினது நினைவுக்கு வந்தது.

            இன்று மிரானுக்கு வயது முப்பத்தாறு முடிந்துவிட்டது. அன்று பாம்பு சொன்னதன் பொருளும் புரிந்தது. பாம்புக்கு அன்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற உறுதி பூண்டான். இன்று தந்தை கம்புடன் நிற்கவில்லை. இளமை நினைவுகள் வளரவளர, அந்த எண்ணங்களிலிருந்து மறைவதில்லை. இளமையில் கற்பது கல்மேல் எழுத்தாகுமல்லவா?

    II. மொழியை ஆள்வோம்

    அ) தமிழாக்கம் தருக.

            The serious dearth of library facilities in this country is scarcely keeping with India's status in the international community of nations or with her educational and social needs. In this matter, India compares unfavourably not only with other independent Dominions of the commonwealth but even with certain British colonies. She possesses only one public library on any considerable size, and even this institution is inadequate to serve the need of the capital city. Only a few towns can boast of possessing any library at all. The rural population is completely neglected, There are no travelling libraries to reach them of kind that are to be found even in some backward countries.

            The growth of libraries has lagged. Far behind the increase in the number of schools and the rise in the rate of literacy. The great mass of the people in India do not have the means to buy books or even magazines and newspapers; in the absence of sufficient public libraries and reading room, most of them cannot attain regular reading habits.

          கல்வி மற்றும் சமுதாயத் தேவைகளோடு ஒப்பிடும்போது, உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையேயான நிலைப்பாட்டில், இந்தியாவில் நூலக வசதி என்பது அரிதான ஒன்றாகவும், பற்றாக்குறை உள்ள ஒன்றாகவுமே காணப்படுகிறது. காமன்வெல்த் அமைப்பின் கீழுள்ள நாடுகளுடனும், பிரிட்டிஷ் காலனி ஆதிக்க நாடுகளுடனும் பாகுபாடின்றி இந்தியா ஒப்பீடு செய்கிறது. வரையறைக்கு உட்பட்ட பொது நூலக அமைப்பு என்பது ஒரு தலைநகரத்தின் தேவைக்குப் போதுமானதாக அமையவில்லை. ஒருசில நகரங்களில் மட்டுமே பெருமைக்குரிய வகையில் நூலகம் அமைந்திருக்கிறது. ஊரகப் பகுதிகளில் வாழும் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். நடமாடும் நூலகங்களும் அவர்களை அணுகுவதில்லை. பின்தங்கிய நாடுகள் பலவற்றிலும் இந்நிலையே காணப்படுகிறது.

            நூலக வளர்ச்சி என்பது பின்தங்கிய நிலையில் இருக்கிறது. பள்ளிகளின் எண்ணிக்கையும் கல்வியறிவு பெற்றவர்களின் விகிதாச்சாரமும் அதிகரித்திருந்தும் நூலக வளர்ச்சி பின்தங்கியே உள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் நூல்கள், இதழ்கள், செய்தித்தாள்களை வாங்கி வாசிக்கும் எண்ணம் உடையவர்களாக இல்லை. பொது நூலகங்களிலும், படிப்பகங்களிலும் மக்கள் பெரும்பான்மையாகக் காணப்படுவதில்லை. பெரும்பாலானோருக்கு அன்றாடம் வாசிக்கும் பழக்கமே இல்லை.

    ஆ) கீழ்க்காணும் பத்திகளைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்குக.

        இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே, பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு மூல காரணமாகின்றன. மருத்துவம் சார்ந்த தேவைகளுக்கென்று குறிப்பிட்ட தொகையை ஒதுக்கும் அளவிற்கு உடல்நிலையைக் கவனத்தில் கொள்ளாமல், ஓர் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

            'உணவே மருந்து மருந்தே உணவு' என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே, அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.

        உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள சத்துகள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றிய தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.

            தேவையான தானியங்களுடன் பருப்பு மற்றும் பயறு வகைகளைச் சேர்த்து, அதிகக் காய்கறி களுடனும் பழங்களுடனும் கூடிய உணவு முறையே, நம் ஆரோக்கியத்திற்கான சரியான தீர்வு. (164)

    சமச்சீர் உணவு (திருந்தாப் படிவம்)
        இன்றைய வாழ்க்கையில் மருத்துவம் சார்ந்த தேவைகளுக்கென்று, குறிப்பிட்ட தொகையை ஒதுக்கும் அளவிற்கு உடல்நிலையைக் கவனத்தில் கொள்ளாமல், இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உணவே மருந்து மருந்தே உணவு என்பதை அறிந்து, எல்லாச் சத்துகளும் அடங்கிய சமச்சீர் உணவை உண்ண வேண்டும். ஊட்டச் சத்துகளின் தேவையறிந்து, ஏற்ற சமச்சீர் உணவுகளை உண்ண வேண்டும். தானியம், பருப்பு, பயறு வகைகளையும் காய்கறி, பழங்களையும் உண்பதே, ஆரோக்கியத்திற்கான சரியான தீர்வு. (46)

    சமச்சீர் உணவு (திருந்திய படிவம்)
        இன்றைய வாழ்க்கையில் மருத்துவத்திற்குக் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கும் அளவிற்கு, உடல்நிலையைக் கவனத்தில் கொள்ளாமல் வாழ்கிறோம். மாவுப் பொருள் செரிக்க வேண்டுமானால், உணவுடன் உமிழ்நீரும் உட்செல்ல வேண்டும். தானியம், பருப்பு, பயறு வகைகளையும், காய்கறி, பழவகைகளையும் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். (28)

    தலைப்பு: காலமறிந்து உண்.

    இ) தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

    1. வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன. 
    வாழைத்தோட்டத்தில் குயில்கள் கூவிக்கொண்டும், காகங்கள் கரைந்துகொண்டும் இருந்தன.

    2. முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான். 
    முருகன் சோறு உண்டு, பால் பருகினான்.

    3. கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார். 
    கோவிந்தன் குடியிருக்கச் சுவர் எழுப்பிக் கூரை வேய்ந்தார்.

    4. வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குட்டியும் யானைக் குட்டியும் கண்டேன்.
    வனவிலங்குக் காப்பகத்தில், சிங்கக் குருளையையும் யானைக் கன்றையும் கண்டேன்.

    5. ஆட்டுத்தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன. 
    ஆட்டுப்பட்டியைச் சுற்றிலும் எலிகள் வளைகள் அமைத்திருந்தன. 

    6. பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.
    பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர்.

    ஈ) தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.

    எ - கா : 
    நம் மானிலம், இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.
    நம் மாநிலம், இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது.

    1. எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது.
    விடைகுறிப்பு : 

    எங்கள் ஊரில் நூலகக் கட்டடம் கட்ட, அரசு நிதி ஒதுக்கியது.

    2. ரங்கன், வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
    விடைகுறிப்பு : 

    அரங்கன், வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.

    3. மானம் பார்த்த பூமியில், பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
    விடைகுறிப்பு : 

    வானம் பார்த்த பூமியில், பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

    4. ஐப்பசி அடைமழையில், ஊருனி நிறைந்தது.
    விடைகுறிப்பு : 

    ஐப்பசி அடைமழையில், ஊருணி நிறைந்தது.

    5. இன்னிக்கு சாயங்காலம், கபடி போட்டி நடைபெறும்.
    விடைகுறிப்பு : 

    இன்றைக்குச் சாயுங்காலம், கபடிப்போட்டி நடைபெறும்.

    உ) பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.

    1. ஆனைக்கும் அடிசறுக்கும்.

    பழமொழி விளக்கம்:
            மிகப்பெரிய வலிமையுடைய விலங்கு என்று கருதப்படும் யானைகூடச் சில சந்தர்ப்பங்களில் நிலைதடுமாறித் தோல்வியைச் சந்திக்கும்.

    வாழ்க்கை நிகழ்வு:
            ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வீரன் என்பவன் கலந்துகொண்டு, அதிக அளவில் காளைகளை அடக்கி வென்று, நிறைய பரிசுப் பொருட்களைக் கைப்பற்றுவான். அலங்காநல்லூர், பாலமேடு என தமிழ்நாடு முழுக்க நடைபெறும் புகழ்மிக்க ஜல்லிக்கட்டுகளில் கலந்துகொண்டு, வெற்றி வாகை சூடியவன். மாட்டின் கொம்புகளுக்கு இடையே கட்டப்பட்டிருக்கும் உருமாபட்டையை அவிழ்ப்பதில், வீரனுக்கு நிகர் வீரனே ஆவான். ஆனால், நேற்றுச் சூலைமேட்டு ஜல்லிக்கட்டில் அவனால் ஒரு காளையைக்கூட அடக்க முடியவில்லை. ஆனைக்கும் அடிசறுக்குவதுபோல் ஒரு காளைகூட வீரனது கட்டுப்பாட்டிற்குள் அடங்கவில்லை. ஒரு பரிசும் இன்றி ஊர் திரும்பினான்.

    பழமொழிப் பொருத்தம்:
        யானை : ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் வெற்றிவாகை சூடிய வீரன்.
        அடிசறுக்கல் : சூலைமேடு ஜல்லிக்கட்டில் வீரன் ஒரு காளையைக்கூட அடக்க இயலாமல் ஊர் திரும்பியது.

    2. தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

    பழமொழி விளக்கம் :
            ஒருவன் எதை விதைக்கிறானோ, அதுவே விளையும். நெல் பயிரிட்டால் அதற்குப் பதிலாகச் சோளம் விளையாது. அதுபோல நாம் நல்லது செய்தால் நல்லதும், தீயது செய்தால் தீயதும் நமக்கு விளைபயனாகக் கிடைக்கும் என்பது கருத்து.

    வாழ்க்கை நிகழ்வு
            கபிலனும், சண்முகமும் ஒரே ஊரில் மளிகைக்கடை நடத்தி வந்தனர். கபிலன், நியாயமான விலைக்குப் பொருட்களை விற்பான். வாடிக்கையாளர்களிடம் அன்பாகப் பேசுவான். பணம் இல்லை. பிறகு தருகிறேன் என்றால்கூட வறியவர்களுக்குக் கடனாகப் பொருட்களைத் தருவான். இதனால் கபிலனின் கடையில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.

            ஆனால், சண்முகம் கடன் தரமாட்டான்; விலை, கூடுதலாக விற்பான். வாடிக்கையாளர்களை மதிக்க மாட்டான். இதனால், சண்முகம் கடையில் கூட்டமிருக்காது. பொறாமைப்பட்ட சண்முகம், கபிலனை வீழ்த்த நினைத்தான். சர்க்கரையில் ரவையைக் கலந்து, கபிலனின் கடைக்குத் திருட்டுத்தனமாக அனுப்பத் திட்டமிட்டான். அன்று சண்முகத்தின் மளிகைக் கடைக்குத் திடீரெனச் சோதனைபோட வந்த உணவுக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளிடம் வசமாகச் சிக்கிக்கொண்டான். சண்முகம் தினையா விதைத்தான்? வினைதானே விதைத்தான். அதனால் கலப்படச் சர்க்கரையை வியாபாரம் செய்வதாகக் கூறி அதிகாரிகள் சண்முகத்திற்கு பல ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்தனர்.

    பழமொழிப் பொருத்தம் :
            நன்மை செய்த கபிலனுக்குச் சிக்கல் இல்லை. கெடுதல் நினைத்த சண்முகம் அபராதம் செலுத்தினான்.

    3. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

    பழமொழி விளக்கம்:
                சுற்றமாகிய உறவுகளிடமும் நட்புகளிடமும் குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால், உறவுகளும் நட்புகளும் நம்மைவிட்டு விலகிவிடுவர்.

    வாழ்க்கை நிகழ்வு:
            கதிரவனின் அப்பா கண்டிப்பானவர். கதிரவனிடமும் அவனுடைய அம்மாவிடமும் வீட்டில் மிகக் கண்டிப்புடன் நடந்து கொள்வார். அவருக்கு அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். ஒரு தாளின் முனையில் குண்டூசி குத்தினாலும் தாள் கசங்காமல் குத்த வேண்டும். வீட்டிற்குள் ஒரு குப்பைகூட இருக்கக்கூடாது. யாரும் சத்தமாகப் பேசக்கூடாது. அவரது விருப்பத்திற்கு மாறாக நடந்தால் கூச்சலிடுவார். 
     
            வீட்டிற்கு வரும் உறவினர்களிடமும் கண்டிப்பாக நடந்துகொள்வார். செருப்பை வரிசையாகக் கழட்டிவிடுங்கள்; கால் கழுவிக்கொண்டு உள்ளே வாருங்கள்; டி. வி. பார்க்கக்கூடாது; சினிமாவிற்குப் போகக்கூடாது; சிரித்துப் பேசக்கூடாது; காலையில் 5 மணிக்கு எல்லோரும் எழுந்துவிட வேண்டும்; குளிக்காமல் சாப்பிடக்கூடாது எனப் பல கட்டுப்பாடுகளை விதித்ததால், உறவினர்கள் யாரும் அவர் வீட்டிற்கு வருவதில்லை. அவர் வீட்டில் திருமணம் நடந்தபோதும், புதுமனை புகுவிழா நடந்தபோதும் ஓர் உறவினர்கூட வரவில்லை. அனைவரிடமும் குற்றங்குறைகளைக் கண்டுபிடித்துப் பேசியதால், நண்பர்களோ சுற்றத்தவர்களோ எவரும் வரவில்லை என்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார்.

    பழமொழிப் பொருத்தம்: 
                கதிரவனின் அப்பா மற்றவர்களைத் திருத்துவதாக நினைத்து, குறைகூறிக் கொண்டே இருந்ததால் உறவுகளையும் நட்புகளையும் இழந்தார்.

    4. எறும்பு ஊரக் கல்லும் தேயும்.

    பழமொழி விளக்கம் :
                ஒரு செயலில் வெற்றி பெறத் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டால், இறுதியில் வெற்றி கிடைக்கும்.

    வாழ்க்கை நிகழ்வு
                கந்தன் தேர்வில் எப்போதும் தோல்வியைமட்டுமே எதிர்கொள்வான். 32, 28, 14 என்பதே அவன் பெறும் மதிப்பெண்கள். ஆனால், வகுப்பில் எப்போதும் அழகுதுரை முதலிடம். 98, 97 என்பதே அவன் பெறும் மதிப்பெண்கள். நாம் அதிக நேரம் படிக்கிறோம் தோல்வியடைகிறோம்; அழகுதுரை குறைவான நேரம் படித்து அதிக மதிப்பெண்களைப் பெறுகிறானே என்பதே கந்தனின் மனக்குறை. என்ன செய்வது? அவனுக்குப் பிடித்த ஆசிரியரிடம், 'நான் வெற்றி பெறுவது எப்படி?' என்று கேட்டான், ஆசிரியர், “புரிந்து கொண்டு படி; படித்ததை எழுதிப் பார்; பிறகு மனத்திற்குள் சொல்லிப் பார். ஒவ்வொரு வினா விடையையும் இப்படிச் செய்தால் தேர்ச்சி பெறுவாய்; எறும்பு ஊரக் கல்லும் தேயும்” என்று அறிவுறுத்தினார். கந்தன் அதைக் கடைப்பிடித்தான். எட்டுமணி நேரம் படித்தவன், பன்னிரண்டுமணி நேரம் படித்தான். படித்ததை எழுதிப் பார்த்தான்; பார்க்காமல் சொல்லிப் பார்த்தான்; தேர்வு வந்தது; அருமையாக எழுதினான்; நல்ல மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெற்றான்.

    பழமொழிப் பொருத்தம் :
                கந்தன் தொடர்ந்து படித்தலில் ஈடுபட்டு முயன்றதால் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றான். தொடரும் முயற்சி வெற்றி தரும் அல்லவா.

    5. ஊழி பெயரினும் தாம் பெயரார்.

    பழமொழி விளக்கம் :
                உலகமே அழியும்நிலை ஏற்பட்டாலும், தம் நிலையிலிருந்து சிலர் மாற மாட்டார்கள்.

    வாழ்க்கை நிகழ்வு
                அவர் ஒரு வட்டாட்சியர். அவர் பெயர் பரமசிவம். ஆளும் கட்சியைச் சார்ந்த ஒரு பெரும் அரசியல்வாதி அவரிடம் வந்து அந்த ஊரில் உள்ள குன்றை அவர் பெயரில் பட்டா செய்து தருமாறு வற்புறுத்தினார். “ஒரு குன்றை எப்படித் தனியாருக்குப் பட்டா செய்யமுடியும்?" என்று மறுத்தார் தாசில்தார். தமக்குப் பட்டா செய்து கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் தருவதாகக் கூறினார் வந்தவர். வட்டாட்சியர் இசையவில்லை. அக்குன்று பற்றி விசாரித்தார் வட்டாட்சியர். அக்குன்று முழுவதும் கிரானைட் கற்களால் ஆனது என்ற விவரத்தை அறிந்தார். மீண்டும் அந்தப் பணக்காரர் வட்டாட்சியரைச் சந்தித்துப் பெருந்தொகையை அவரிடம் கொடுக்க முன்வந்தார். வட்டாட்சியர் மனம் மாறவில்லை. அரசியல்வாதி ஊராட்சித் தலைவரிடம் சொல்லி வீட்டுக்குடிநீர் இணைப்பைத் துண்டித்தார். மின்வாரியத்திலும் கூறி, மின்வெட்டு செய்தார். சிலரை ஏவி வீட்டின்முன் தகராறு செய்யச் சொன்னார். அலுவலகம் போகும்போது அவரது வாகனத்தை மோதித்தள்ள வேறு வாகனத்தை இயக்கினார். குடித்துவிட்டு அலுவலகத்தில் வந்து தாறுமாறாகப் பேச ஆட்களை ஏவினார். கடைக்குச் செல்லும் வட்டாட்சியரின் துணைவியாரிடம் தகராறு செய்தார். ஊழி பெயரினும் தாம் பெயரார் என்பதற்கு ஏற்ப, அரசியல்வாதியின் எந்தத் தொல்லைக்கும் அவர் அடிபணியவில்லை; உறுதி குலையாது செயல்பட்டார்.

    பழமொழிப் பொருத்தம் :
                பணக்காரர் பெரும் இன்னல்களை விளைவித்தாலும், வட்டாட்சியர் மனம் மாறவில்லை. தம் பதவிக்குப் பொருந்தாததைச் செய்யவில்லை. ஊழி பெயரினும் தாம் பெயரார் என்பதற்குப் பொருத்தமானவர் அவர்.

    6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

    பழமொழி விளக்கம் :
                ஆற்றல் மிக்க, திறமை வாய்ந்த ஒருவருக்கு எதுவும் ஆயுதமாகப் பயன்படும் என்பது பொருள்.

    வாழ்க்கை நிகழ்வு
                வேளச்சேரி சாலையில் ஒரு தள்ளுவண்டிக்காரர் வேர்க்கடலையை அவித்துச் சுடச்சுட விற்பனை செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பைப் பற்ற வைக்கத் தயாரானார். அடுப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு முன், அதன் ஒட்டை சிறியதாக இருந்ததால் தன் மூளையைப் பயன்படுத்தினார்.

                வழுவழுப்பான விளம்பரத்திற்குப் பயன்படும் தாளை எடுத்து கூம்பு வடிவத்தில் புனலாகச் செய்தார். நுனிப்பகுதியில் சிறிது துவாரம் (ஓட்டை) இருக்குமாறு பார்த்துக்கொண்டார். அதனை ஸ்டவ் அடுப்பின் துவாரத்தில் பொருத்தி, எண்ணெய்க் கேனில் இருந்த மண்ணெண்ணெயைச் சிந்தாமல் சிதறாமல் ஊற்றி முடித்து, அடுப்பைப் பற்ற வைத்தார். திறமைசாலியான தள்ளுவண்டிக்காரன் தாளையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தியது 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    7. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

    பழமொழி விளக்கம் :

                மக்களாயினும் பிற உயிர்களாயினும் கூடி வாழ்ந்தால் நன்மைகள் பல ஏற்படும்.

    வாழ்க்கை நிகழ்வு
                முகிலன், தன் கிராம மக்கள் குடிநீருக்காகப் பல மைல் தூரம் சென்று ஒரிரு குடங்கள் தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்துவதைப் பார்த்து வருத்தமடைந்தான். தன் கிராமத்தில் உள்ள நீராதாரங்களைச் சரிசெய்ய முடிவெடுத்தான். தன் நண்பர்களை உதவிக்கு அழைத்து, ஊரில் இருந்த ஊருணிகளைத் தூர் வாரி, சுற்றி மண்ணெடுத்துக் கூட்டிச் சரிசெய்ய எண்ணினான். இச்சிந்தனை பலர் மனத்தில் இருந்தாலும் அதனைச் செய்துமுடிக்க இயலவில்லை. இதனை முன்னெடுத்த முகிலனுடன் ஊர்மக்கள் கூடி அவ்வேலையைத் தொடர்ந்தனர். ஓரிரு நாட்களில் அந்த வேலை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது. "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" உண்டாகும். முகிலன் முன்னெடுத்து, ஊர்மக்கள் அனைவரும் கூடிச் செய்த செயல் அனைவருக்கும் நன்மையைத் தந்தது.

    8. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

    பழமொழி விளக்கம் :
                ஒருவரின் மனநிலை, உணர்வுகள் மற்றும் உள்ளக்கிடக்கைகள் முகபாவனைகள் மூலம் வெளிப்படும்.

    வாழ்க்கை நிகழ்வு:
                எட்டாம் வகுப்புக் கணித ஆசிரியர் சில கணக்குகளைக் கொடுத்து வீட்டுப் பாடமாகச் செய்து வரச் சொன்னார். வகுப்பில் எல்லா மாணவர்களும் தாங்கள் செய்து வந்த பயிற்சி ஏடுகளை ஆசிரியரின் மேசைமேல் அடுக்கி வைத்தனர். அமுதன் என்ற மாணவன் மட்டும் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்தான்.

            கணித ஆசிரியர் அவனது முகத்தைப் பார்த்து, “ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?" எனக் கேட்டார். அதற்கு அவன் “ஐயா! நேற்று இரவு எங்கள் வீட்டில் தாய் தந்தையர் இருவருக்குள்ளும் ஏதோ சண்டை. அதன் காரணமாக என் மனநிலை சரியில்லை. எனவே, வீட்டுப்பாடம் செய்யவில்லை" என்றான். ஆசிரியரும் புரிந்து கொண்டு, “உன் மனம் சரியில்லை என்பதை உனது முகம் காட்டிவிட்டது” என்று கூறி ஆறுதல் சொல்லி அமர வைத்தார். நல்ல மனநிலையை முகம் மலர்ச்சியுடன் காட்டும். மன வேறுபாட்டை முகம் காட்டிக் கொடுத்து விடும்.

    III. மொழியோடு விளையாடு

    அ) எண்ணங்களை எழுத்தாக்குக.

    நூலைப் புரட்டினால் அறிவு விரிவாகும்! 
    ஆற்றல் அதிகரிக்கும் பொருள்வளம் பெருகும்! 
    ஆழ்ந்து படித்தால் அகிலம் ஆளலாம் 
    ஆன்றோர் போற்றுவர்! உலகம் சுற்றலாம்! 
    கல்வியைப் பெற்றால் கற்றோர் போற்றுவர்! 
    காலம் மதிக்கும்! பாதுகாப்புப் பெறலாம்! 
    நிறைந்த கல்வி பண்பாளனாக்கும்! 
    பாரெல்லாம் போற்றும்! புகழும் பதவியும் சேரும்!

    ஆ) சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.

    எ-கா: 
    பலகை
    பலகையால் ஆனா மேசையில் உணவு உண்டனர்.
    பல கைகள் ஒன்றிணைந்து, வெற்றியைத் தமதாக்கின.
     
    1. தாமரை: மலர்
    தாமரை மலர் நம்நாட்டின் தேசிய மலராகும்.
    தாமரை:
    தா + மரை - தாவுகின்ற மான் 
    தா மரையின் ஒட்டம் படுவேகமாக இருக்கும்.

    2. கோவில்: 
    இறைவன் உறையும் ஆலயம்.
    பல சிவன் கோவில்களை இராசராச சோழன் கட்டினான்.
    கோவில்:
    கோ + வில் - அரசனின் வில்
    கோ வில் ஏந்திய இராமனே, கோதண்டராமன்.

    3. வெங்காயம்:
    சமையலுக்குப் பயன்படும் பொருள்.
    இட்டிலியும் வெங்காயச் சாம்பாரும் அருமை.
    வெங்காயம்:
    வெம்மை + காயம் - துன்பம் தரும் கொடிய புண் 
    போரில் போர் வீரர்கள் வெங்காயம் பட்டனர்.

    4. தலைமை: முதன்மை.
    தலைமை ஆசிரியர், ஆசிரியர் கூட்டம் நடத்தினார்.
    தலைமை:
    தலை + மை - தலையில் தடவும் மை 
    வெண்மையான தலைக்குத் தலை மை தடவுகின்றனர் பலர்.

    5. முன்:
    அதிகாரிகளிடம் குறைகள் சிலவற்றை மக்கள் முன் வைத்தனர். 
    அதிகாரிகள் விதிமுறைகள் சிலவற்றை மக்கள்முன் வைத்தனர்.

    இ) செய்து கற்போம்.

    அருகிலுள்ள கல்லூரிக்குச் சென்று அங்குள்ள பாடப்பிரிவுகளை அறிந்து அட்டவணைப்படுத்துக.
     

    IV. நிற்க அதற்குத் தக.

    அ) நீவிர் செல்லும் வழியில் விபத்தினைக் காண்கிறீர்கள். விபத்திற்கான காரணங்கள் என்ன? பட்டியலிடுக. பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் எவ்விதம் உதவலாம்?  

    விபத்திற்கான காரணங்கள்
    பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் எவ்விதம் உதவலாம்?
    அனுமதித்த அளவைவிட வேகமாக ஒட்டுதல்.
    முதலுதவி செய்தபின் வேகமாக ஓட்டக்கூடாது என்று அறிவுரை கூறுவேன்.
    செல்பேசியில் பேசிக்கொண்டே ஒட்டுதல்.
    நிறுத்தி ஓரமாக நின்று பேசிவிட்டுச் செல்ல, அறிவுரை கூறுவேன்.
    இருசக்கர வாகனத்தில் இருவருக்குமேல் செல்லுதல்.
    தவறு எனச் சுட்டிக்காட்டித் திருத்த முயற்சி செய்வேன்.
     

    ஆ) படிப்போம், பயன்படுத்துவோம்!

    Discussion - கலந்துரையாடல்
    Higher Education - உயர்கல்வி
    Value Education - மதிப்புக்கல்வி
    Road Safety - சாலைப் பாதுகாப்பு
    Traffic Signal - போக்குவரத்துச் சமிக்ஞை
    Vice Chancellor - துணைவேந்தர்

    இ) அறிவை விரிவு செய்

    கவிபாடலாம் - கி.வா. ஜகந்நாதன்
    படைப்புக்கலை - மு. சுதந்திரமுத்து
    கவிஞராக - அ.கி. பரந்தாமனார்
    வெயிலும் நிழலும் - பிரமிள்
    மெய்ப்பாடு - தமிழண்ணல்
    வேர்களின் பேச்சு - தோப்பில் முகம்மது மீரான்

     
     
     
     

     
     
     
     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive