10th Social Science - Book Back Answers - History Unit 6 - Tamil Medium Guides

  

 


    SSLC / 10th Social Science - Book Back Answers - History Unit 6 - Tamil Medium

    Tamil Nadu Board 10th Standard Social Science - History Unit 6: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 6 – History from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 6 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 6: ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்க கால கிளர்ச்சிகள்

    I. சரியான விடையைத் தேர்வு செய்க.

    1. கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?
    அ) மருது சகோதரர்கள்
    ஆ) பூலித்தேவர்
    இ) வேலுநாச்சியார்
    ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்
    விடைகுறிப்பு:

    ஆ) பூலித்தேவர்

    2. சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?
    அ) வேலுநாச்சியார்
    ஆ) கட்டபொம்மன்
    இ) பூலித்தேவர்
    ஈ) ஊமைத்துரை
    விடைகுறிப்பு:

    இ) பூலித்தேவர்

    3. சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
    அ) கயத்தாறு
    ஆ) நாகலாபுரம்
    இ) விருப்பாட்சி
    ஈ) பாஞ்சாலங்குறிச்சி
    விடைகுறிப்பு:

    ஆ) நாகலாபுரம்

    4. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
    அ) மருது சகோதரர்கள்
    ஆ) பூலித்தேவர்
    இ) வீரபாண்டிய கட்டபொம்மன்
    ஈ) கோபால நாயக்கர்
    விடைகுறிப்பு:

    அ) மருது சகோதரர்கள்

    5. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
    அ) 1805 மே 24
    ஆ) 1805 ஜூலை 10
    இ) 1806 ஜூலை 10
    ஈ) 1806 செப்டம்பர் 10
    விடைகுறிப்பு:

    இ 1806 ஜூலை 10

    6. வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?
    அ) கர்னல் பேன்கோர்ட்
    ஆ) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
    இ) சர் ஜான் கிரடாக்
    ஈ) கர்னல் அக்னியூ
    விடைகுறிப்பு:

    இ சர் ஜான் கிரடாக்

    7. வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?
    அ) கல்கத்தா
    ஆ) மும்பை
    இ) டெல்லி
    ஈ) மைசூர்
    விடைகுறிப்பு:

    அ) கல்கத்தா


    II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

    1. பாளையக்காரர் முறை தமிழகத்தில் ……………… என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
    2. வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக ………………. பாதுகாப்பில் இருந்தனர்.

    3. கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் என்பவரை அனுப்பிவைத்தார்.
    4. கட்டபொம்மன் ………………. என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
    5. மருது சகோதரர்களின் புரட்சிபிரிட்டிஷ்குறிப்புகளில் …………….. என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    6. …………….. என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.
    விடைகுறிப்பு:

    1. ஃபதேக் ஹைதர்
    2. 2ம் பாளையக்காரர் போர்
    3. கயத்தார்
    4. இராமலிங்க முதலியார்
    5. கோபால நாயக்கர்
    6. விஸ்வநாத நாயக்கர்
     

    III. சரியான கூற்றைத் தேர்வு செய்க. 

    1. (i) பாளையக்காரர் முறை காகதீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
    (ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் செவலை 1764இல் மீண்டும் கைப்பற்றினார்.
    (iii) கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
    (iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழி நடத்தினார்.
    அ) (i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி.
    ஆ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி.
    இ) (iii) மற்றும் (iv) மட்டும் சரி.
    ஈ) (i) மற்றும் (iv) மட்டும் சரி.
    விடைகுறிப்பு:

    ஆ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி.

    2. (i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன.
    (ii) காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர்.
    (iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழி நடத்தினார்.
    (iv) காரன்வாலிஸ் மே 1799ல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.
    அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி
    ஆ) (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
    இ) (ii), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி
    ஈ) (i) மற்றும் (iv) ஆகியவை சரி
    விடைகுறிப்பு:

    ஆ) (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
     
    3. கூற்று : பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற முயன்றார்.
    காரணம் : மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது.
    அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை .
    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
    இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
    ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.
    விடைகுறிப்பு:

    இ கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.


    IV. பொருத்துக.   

    1.
    தீர்த்தகிரி
    வேலூர் புரட்சி
    2.
    கோபால நாயக்கர்
    இராமலிங்கனார்
    3.
    பானெர்மென்
    இ 
    திண்டுக்கல்
    4.
    சுபேதார் ஷேக் ஆதம்
    வேலூர் கோட்டை
    5.
    கர்னல் பேன்கோர்ட்
    ஓடாநிலை
    விடைகுறிப்பு:
    1.
    தீர்த்தகிரி
     
    ஓடாநிலை
    2.
    கோபால நாயக்கர்
    திண்டுக்கல்
    3.
    பானெர்மென்
    இராமலிங்கனார்
    4.
    சுபேதார் ஷேக் ஆதம்
    வேலூர் புரட்சி
    5.
    கர்னல் பேன்கோர்ட்
    வேலூர் கோட்டை
     
      

    V. சுருக்கமான விடையளிக்கவும்.

    1. பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?
    விடைகுறிப்பு:


    1. வரி வசூல், நிலப்பகுதியை நிர்வகித்தல், வழக்குகள், விசாரித்தல், சட்டம் ஒழுங்கு பாதுகாத்தல் பணிகள்.
    2. காவல் காக்கும் கடமை (படிக்காவல், அரசுக்காவல்)
    3. நாயக்கர்களின் அதிகாரத்தை தக்க வைக்க உதவினர்.

    2. கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக.
    விடைகுறிப்பு:


    கிழக்கு பாளையங்கள்
    சாத்தூர், நாகலாபுரம், எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி,
    மேற்கு பாளையங்கள்
    ஊத்துமலை, தலைவன் கோட்டை நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி சேத்தூர்

    3. களக்காடு போரின் முக்கியத்துவம் என்ன?
    விடைகுறிப்பு:


    1. நவாப்பின் கூடுதல் படைகள், கம்பெனியின் சிப்பாய்கள்/ கர்நாடக பகுதியின் ஆதரவு ஆகியன மாபூஸ்கானுக்கு கிடைத்தது.
    2. ஆனால் மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தன் படைகளை நிலைநிறுத்தும் முன் திருவிதாங்கூர் படைகள் பூலித்தேவர் படைகளோடு சேர்ந்ததால் களக்காடு போரில் மாபூஸ்கான் தோற்கடிக்கப்பட்டார்.

    4. கம்பெனியாருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே சர்ச்சை ஏற்படக் காரணமாக விளங்கியது எது?
    விடைகுறிப்பு:


    1. பாளையங்களில் வரிவசூல் செய்யும் உரிமை பெற்ற கம்பெனி ஆட்சியாளர்கள் பாளையக்காரர்களை அவமானபடுத்தியும், படைகளை வைத்தும் வரிவசூல் செய்தனர்.
    2. இதுவே பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரரான கட்ட பொம்மனுக்கும், கம்பெனிக்கும் இடையே சர்ச்சை ஏற்பட காரணமானது.

    5. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கியக் கூறுகளைத் தருக,
    விடைகுறிப்பு:


    1. மருது சகோதரர்களால் வெளியிடப்பட்டது.
    2. பிரிட்டிஷாருக்கு எதிராக அனைத்து வேறுபாடுகளையும் (சாதி,சமய, இனம்) கடந்து எதிர்க்க விடுக்கப்பட்ட முதல் அறை கூவல்.
    3. இதனால் தமிழகப் பாளையக்காரர்கள் பலர் ஒன்று திரண்டனர்
     

    VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.   

    1. கிழக்கிந்தியக் கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக.
    விடைகுறிப்பு:

    1. வீரபாண்டிய கட்டபொம்மனின் கலகம் (1790-1799):பாஞ்சாலக்குறிச்சியின் பாளையக்காரராக தன் 30-வது வயதில் கட்டபொம்மன் பொறுப்பேற்றார். பாளையப் பகுதியில் வரி வசூல் செய்த கம்பெனி, நிர்வாக படை பலத்துடன் வசூல் செய்தது கட்டபொம்மனுக்கும் கம்பெனிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது.

    2. ஜாக்சனோடு ஏற்பட்ட மோதல்:
    ஆட்சியர் ஜாக்சனை சந்திக்க சென்ற கட்டபொம்மன் அவமானப்பட்டதால் ஆபத்தை உணர்ந்து தப்பி செல்ல முயன்றார். ஊமைத்துரை ஆட்களின் உதவியோடு கோட்டையிருந்து தப்பினார். அமைச்சர் சிவசுப்ரமணியனார் கொல்லப்பட்டார்.

    3. பாஞ்சாலங்குறிச்சி வந்த கட்டபொம்மன் ஆட்சியர் ஜாக்சன் தம்மை அவமானப்படுத்தியதை கம்பெனி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார்.

    4. சிவகங்கை மருது பாண்டியரின் கூட்டமைப்பில் சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்க்க முடிவு செய்தார்.


    5. பாஞ்சாலங்குறிச்சி முற்றுகை :

    1799 மே மாதம் வெல்லெஸ்லிபிரபு கட்டளையின்படி கம்பெனிபடையும், திருவிதாங்கூர் படையும் இணைந்து கட்டபொம்மனை சரணடைய கோரின.
     
    6. கட்டபொம்மன் சரணடைய மறுத்து புதுக்கோட்டைக்கு தப்பி ஓடினார். எட்டையபுரம், புதுக்கோட்டை மன்னர்களின் துரோகத்தால் பிடிபட்டார்.
     
    7. பிடிபட்ட கட்டபொம்மன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக் கொண்டு இறுதியில் கயத்தாறில் உள்ள புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார். (1799-அக்-16)

    2. சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சிக்குக் காரணமானவற்றை ஆய்ந்து அதன் விளைவுகளை எடுத்தியம்புக
    விடைகுறிப்பு:


    1. சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலை தலைமையிடமாக கொண்டு மருது சகோதரர்கள் பிரிட்டிஷாரை எதிர்க்க முற்பட்டனர்.
    2. கம்பெனி ஆட்சி எதிர்ப்பு மற்றும் கட்டபொம்மனுக்கு ஆதரவு, என இவர்களின் போக்கு சிவகங்கை வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.
    3. கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரை, செவத்தையாவுக்கு மருது சகோதரர்கள் அடைக்கலம் கொடுத்தது கம்பெனி ஆட்சிக்கு பிடிக்காமல் அவர்களை ஒப்படைக்குமாறு கம்பெனி வற்புறுத்தியது.
    4. இதை மறுத்து 1801ல் நாட்டின் விடுதலைக்காக திருச்சிராப்பள்ளி பேரறிக்கையை வெளியிட்டனர்.
    5. சில பாளையக்காரர்களுடன் மருது சகோதரர்கள் படையும், சில பாளையக்காரர்களுடன் கம்பெனி படையும் போரிட்டன.
    6. கம்பெனியில் தொடர் தாக்குதலால் மருது சகோதரர்கள் படைகள் தோற்கடிக்கப்பட்டு சிவகங்கை பிரிட்டீஷ் கம்பெனியுடன் இணைந்தது.
    7. 1801-அக்டோபர் 24ல் திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டவுடன் சிவகங்கையின் துயரமான வீழ்ச்சி முடிவடைந்தது.

    3. வேலூரில் 1806ல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக.
    விடைகுறிப்பு:
     
    புரட்சியின் கூறுகள்:
    1. 1792ல் திப்புவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின் சேலம் திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூர் கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.
    2. மனமுடைந்த சிற்றரசர்கள், நிலச் சுவான்தாரர்கள் ஏற்படுத்தியதே 1806ம் ஆண்டு வேலூர் புரட்சியாகும்.

    புரட்சிக்கான காரணங்கள்:
    1. பிரிட்டீஷ் இராணுவத்தல் இந்திய வீரர்களுக்கு குறைந்த ஊதியம், குறைந்த பதவி உயர்வு
    2. சமய நம்பிக்கைகளுக்கு ஆங்கிலேய அதிகாரிகளின் குறைவான மதிப்பு
    3. சிக்கலான வேளாண் கொள்கை
    4. 1805-ல் கடும் பஞ்சம், நெருக்கடி
    5. ராணுவத்தில் புதிய விதிமுறைகள் மத அடையாளங்கள், காதணிகள் அணியத் தடை, தாடி, மீசையில் கட்டுப்பாடு, விலங்கு தோலினால் ஆன தலைப்பாகை அறிமுகம்

    புரட்சி வெடித்தல்:
    1. கம்பெனியின் கட்டுப்பாடுகளை 1806 ஜூலை 10 அதிகாலையில் நடந்தபுரட்சியில் ஆங்கில அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
    2. கர்னல் கில்லஸ்பியின் பதிலடியால் புரட்சி ஒடுக்கப்பட்டது. இவ்வாறு பல கூறுகள் 1806ம் ஆண்டு வேலூர் புரட்சிக்கு இட்டுச் சென்றன.
     
     

    VII. செயல்பாடுகள்.   

    Soon

    VIII. வரைபடப் பணி.   

    Soon 


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive