10th Social Science - Book Back Answers - Geography Unit 3 - Tamil Medium Guides

  


 


    SSLC / 10th Social Science - Book Back Answers - Geography Unit 3 - Tamil Medium

    Tamil Nadu Board 10th Standard Social Science - Geography Unit 3: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 3 – Geography from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Geography Unit 3 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 3:இந்தியா – வேளாண்மை

    I. சரியான விடையைத் தேர்வு செய்க.

    1. ……………… மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது.
    அ) வண்டல்
    ஆ) கரிசல்
    இ) செம்மண்
    ஈ) உவர் மண்
    விடைகுறிப்பு:

    இ செம்மண்

    2. எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?
    அ) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
    ஆ) இந்திய வானியல் துறை
    இ) இந்திய மண் அறிவியல் நிறுவனம்
    ஈ) இந்திய மண் ஆய்வு நிறுவனம்
    விடைகுறிப்பு:

    அ) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

    3. ஆறுகளின் மூலம் உருவாகும் மண் ………….
    அ) செம்மண்
    ஆ) கரிசல் மண்
    இ) பாலைமண்
    ஈ) வண்டல் மண்
    விடைகுறிப்பு:

    ஈ) வண்டல் மண்

    4. இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை …………………….
    அ) ஹிராகுட் அணை
    ஆ) பக்ராநங்கல் அணை
    இ) மேட்டூர் அணை
    ஈ) நாகர்ஜூனா சாகர் அணை
    விடைகுறிப்பு:

    ஆ) பக்ராநங்கல் அணை

    5. ……………. என்பது ஒரு வாணிபப்பயிர்.
    அ) பருத்தி
    ஆ) கோதுமை
    இ) அரிசி
    ஈ) மக்காச் சோளம்
    விடைகுறிப்பு:

    அ) பருத்தி

    6. கரிசல் மண் ……………… எனவும் அழைக்கப்படுகிறது.
    அ) வறண்ட மண்
    ஆ) உவர் மண்
    இ) மலை மண்
    ஈ) பருத்தி மண்
    விடைகுறிப்பு:

    ஈ) பருத்தி மண்

    7. உலகிலேயே மிக நீளமான அணை ………….
    அ) மேட்டூர் அணை
    ஆ) கோசி அணை
    இ) ஹிராகுட் அணை
    ஈ) பக்ராநங்கல் அணை
    விடைகுறிப்பு:

    இ ஹிராகுட் அணை

    8. இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது ………………….
    அ) பருத்தி
    ஆ) கோதுமை
    இ) சணல்
    ஈ) புகையிலை
    விடைகுறிப்பு:

    இ சணல்



    II. சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்

    1. கூற்று : பழங்கள் காய்வகைகள் மற்றும் பூக்கள் பயிரிடலில் ஈடுபடுவது தோட்டக்கலைத் துறையாகும்.
    காரணம் : உலகளவில் இந்தியா மா, வாழை மற்றும் சிட்ரஸ் பழவகை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
    இ) கூற்று சரி, காரணம் தவறு
    ஈ) கூற்று தவறு, காரணம் சரி

    விடைகுறிப்பு:

    இ கூற்று சரி, காரணம் தவறு.

    2. கூற்று : வண்டல் மண் ஆறுகளின் மூலம் அரிக்கப்பட்டு படியவைக்கப்பட்ட, மக்கிய பொருட்களால் ஆன ஒன்று.
    காரணம் : நெல் மற்றும் கோதுமை வண்டல் மண்ணில் நன்கு வளரும்.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரியான விளக்கமல்ல
    இ) கூற்று சரி, காரணம் தவறு
    ஈ) கூற்று தவறு, காரணம் சரி.

    விடைகுறிப்பு:
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்
     
     

    III. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்

    1.
    அ) கோதுமை
    ஆ) நெல்
    இ) திணை வகைகள்
    ஈ) காபி

    விடைகுறிப்பு:
    ஈ) காபி

    2.
    அ) காதர்
    ஆ) பாங்கர்
    இ) வண்டல் மண்
    ஈ) கரிசல் மண்

    விடைகுறிப்பு:
    ஈ) கரிசல் மண்

    3.
    அ) வெள்ளப் பெருக்க கால்வாய்
    ஆ) வற்றாத கால்வாய்
    இ) ஏரிப்பாசனம்
    ஈ) கால்வாய்

    விடைகுறிப்பு:
    இ ஏரிப்பாசனம்
     
     

    IV. பொருத்துக

    1.
    இந்தியாவின் சர்க்கரை கிண்ணம்
    மகாநதி
    2.
    காபி
    தங்கப் புரட்சி
    3.
    டெகிரி அணை
    கர்நாடகா
    4.
    ஹிராகுட்
    உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார்
    5.
    தோட்டக் கலை
    இந்தியாவின் உயரமான அணை
    விடைகுறிப்பு: 
    1.
    இந்தியாவின் சர்க்கரை கிண்ணம்
    உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார்
    2.
    காபி
     
    கர்நாடகா
    3.
    டெகிரி அணை
    இந்தியாவின் உயரமான அணை
    4.
    ஹிராகுட்
    மகாநதி
    5.
    தோட்டக் கலை
    தங்கப் புரட்சி


    V. சுருக்கமான விடையளிக்கவும்.

    1. "மண்" - வரையறு.
    விடைகுறிப்பு:
     
    மண் வரையறை:
    • மண் என்பது கனிமங்களின் கூட்டுப் பொருட்கள், மக்கிய தாவரங்கள், விலங்கினப் பொருட்கள், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது.
    • இது புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும்.

    2. இந்தியாவில் காணப்படும் மண் வகைகளின் பெயர்களைப் டியலிடுக.
    விடைகுறிப்பு:
     
    இந்தியாவில் காணப்படும் மண் வகைகளின் பெயர்கள் :
    • வண்டல் மண்
    • சரளை மண்
    • உப்பு மற்றும் கார மண்
    • கரிசல் மண்
    • வறண்ட பாலை மண்
    • களி மண் மற்றும் சதுப்பு நிலம் 
    • செம்மண்
    • காடு மற்றும் மலை மண்

    3. கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக.
    விடைகுறிப்பு:
     
    கரிசல் மண்ணின் பண்புகள் :
    • டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்கள் உள்ளதால் கருப்பு நிறமாக உள்ளது.
    • ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் உடையது.

    4. "வேளாண்மை" - வரையறு.
    விடைகுறிப்பு:
     
    வேளாண்மை வரையறை:
    • வேளாண்மை என்பது குறிப்பிடப்பட்ட பயிர்களை உற்பத்தி ய்தும் மற்றும் கால்நடைகளை வளர்த்தும் மக்களுக்கு உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும், நார் மற்றும் யான இதர பொருட்களை வழங்குவதாகும்.

    5. இந்தியாவின் வேளாண்மை முறைகளை குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:
     
    இந்தியாவின் வேளாண்மை முறைகள் :
    • தன்னிறைவு வேளாண்மை, இடப்பெயர்வு வேளாண்மை, தீவிர வேளாண்மை.

    6. இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:
     
    இந்திய வேளாண் பருவங்கள் :
    • காரிஃப் பருவம் ஜூன் முதல் செப்டம்பர் வரை
    • ராபி பருவம் - அக்டோபர் முதல் மார்ச் வரை
    • சையத் பருவம் - ஏப்ரல் முதல் ஜூன் வரை

    7. இந்தியாவின் தோட்டப் பயிர்களைக் குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:
     
    இந்தியாவின் தோட்டப் பயிர்கள் :
    • இந்தியாவில் தேயிலை, காபி, இரப்பர், வாசனைப் பொருட்கள் பயிராகின்றன.
    • மலைச் சரிவுகளில் விளைகின்றன. இதை ஏற்றுமதி செய்யுவே பயிரிடுகின்றனர்.

    8. இந்தியாவில் மீன்வளர்ப்பு பிரிவுகளைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பு தருக.
    விடைகுறிப்பு:
     
    இந்தியாவில் மீன்பிடிப்பு பிரிவுகள்:
    • கடல் மீன் பிடிப்பு - கடற்கரைப் பகுதி, கடற்கைரையை ஒட்டிய பகுதி மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிப்பை குறிக்கிறது.
    • உள்நாட்டு மீன் பிடிப்பு ஆறுகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் கண்மாய்கள் பகுதிகளில் மீன்பிடிப்பை குறிக்கிறது.

    VI. காரணம் கூறுக

    1. வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு.
    விடைகுறிப்பு:
    • இந்தியாவில் வேளாண்மை 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு வேலை வாய்ப்பும் நாட்டின் மொத்த வருமானத்தில் 25 சதவீதமும் அளிக்கிறது.

    2. மழைநீர் சேமிப்பு அவசியம்.
    விடைகுறிப்பு:
    • மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும், நிலத்தடி நீர்மட்டதை உயர்த்தவும் மழைநீர் சேமிப்பு அவசியமாகிறது


    VII. வேறுபடுத்துக

    1. ராபி பருவம் மற்றும் காரிஃப் பருவம்.
    விடைகுறிப்பு:
    ராபி பருவம்
    காரிஃப் பருவம்
    அக்டோபர் முதல் மார்ச் வரை.
    ஜூன் முதல் செப்டம்பர் வரை.
    வட மாநிலங்கள் கோதுமை, பருப்பு, ஆலிவிதைகள், கடுகு, பார்லி.
    வட மாநிலங்கள் - நெல், பருத்தி, மக்காச்சோளம், கம்பு, உளுந்து.
    தென் மாநிலங்கள் - நெல், கேழ்வரகு, மக்காச்சோளம், கம்பு, நிலக்கடலை.
    தென் மாநிலங்கள் - நெல், கேழ்வரகு, மக்காச்சோளம், கம்பு, நிலக்கடலை.
     
    2. வெள்ளப் பெருக்கு கால்வாய் மற்றும் வற்றாத கால்வாய்.
    விடைகுறிப்பு:
    வெள்ளப் பெருக்கு கால்வாய்
    வற்றாத கால்வாய்
    நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் இன்றி தண்ணீர் எடுக்கப்படுகிறது.
    வற்றாத நதிகளின் குறுக்கே அணை கட்டி தண்ணீர் எடுக்கப்படுகிறது.
    வெள்ளக் காலங்களில் தண்ணீரை திசை திருப்பப் பயன்படுகிறது.
    நீர்பாசனத்திற்கு தண்ணீரை அனுப்பி வைக்கப் பயன்படுகிறது.
    மழைக் காலங்களில் மட்டும் பயன்பாட்டில் இருக்கும்.
    ஆண்டு முழுவதும் இருக்கும். பயன்பாட்டில்
     
    3. கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன் பிடிப்பு.
    விடைகுறிப்பு:
    கடல் மீன்பிடிப்பு
    உள்நாட்டு மீன் பிடிப்பு
    கடற்கரைப் பகுதி, மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் நடைபெறுகிறது.
    ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களில் நடைபெறுகிறது.
    கண்டத்திட்டு பகுதிகளில் மீன் பிடித்தல்.
    நன்னீர் நிலைகளில் மீன் பிடித்தல்.
    கேரளா முதன்மை மாநிலமாககும்.
    ஆந்திரா முதன்மை மாநிலமாககும்.
     
    4. வண்டல் மண் மற்றும் கரிசல் மண். 
    விடைகுறிப்பு:
    வண்டல் மண்
    கரிசல் மண்
    நெல், கோதுமை, கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் விளைகிறது.
    பருத்தி, தினை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு விளைகிறது.
    சிற்றோடைகள் மற்றும் ஆறுகளினால் படிய வைக்கப்பட்டு உருவானது.
    தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது.
    பரவல் - பஞ்சாப், ஹரியானா, பீகார், மேற்கு வங்கம் உத்திரப் பிரதேசம்,
    பரவல் - மகராஷ்டிரா, மாளவப் பீடபூமி கத்தியவார் தீபகற்பம், தெலங்கானா.
         

    VIII. பத்தியளவில் விடையளி

    1. இந்திய மண்வகைகளைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி.

    1. வண்டல் மண்:
    • பண்புகள் - வண்டல், மண்மண்டி களிமண் போன்ற கலவைகளுடன் காணப்படுகிறது.
    • பரவல் - உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்கம், பீகார்.
    2. கரிசல் மண்:
    • பண்புகள் ஈரமாக இருந்தால் சேறாக மாறும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைக்கும்.
    • பரவல் - மகராஷ்டிரா, கத்தியவார் தீபகற்பம், மாளவப் பீடபூமி, தெலங்கானா, ராயல்சீமா.
    3. செம்மண் :
    • பண்புகள் - மென்துகள்கள், உப்புக் கரைசல், வெண்களிப் பாறைத் தாதுக்கள் உடையது.
    • பரவல் - தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஜார்கண்ட், சோட்டா நாகபுரி பீடபூமி.
    4. சரளை மண்:
    • பண்புகள் உயரமான பகுதியில் அமிலத் தன்மை அதிகம். ஈரப்பதத்தை தக்க வைக்காது.
    • பரவல் - அசாம் குன்றுகள், ஒடிசா, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம்.
    5. காடு மற்றும் மலை மண்:
    • பண்புகள் - மென்மையான மணல் மற்றும் பாறைத் துகள்கள் கலந்து காணப்படுகிறது. மற்றும்
    • பரவல் - இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், ஜம்மு காஷ்மீர்.
    6. வறண்ட பாலை மண்:
    • பண்புகள் - குறைந்த ஈரத் தன்மை, குறைந்த இலைமக்கு சத்து, வெளிர் நிறம் உடையது.
    • பரவல் - இராஜஸ்தான், வடக்கு குஜராத், தெற்கு பஞ்சாப்.
    7. உப்பு மற்றும் கார மண்:
    • பண்புகள் சிதைக்கப்படாத பாறைகள் மற்றும் சிதைவுற்ற கனிமங்களை உடையது.
    • பரவல் - ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா, இராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப் பிரதேசம்.
    8. களிமண் மற்றும் சதுப்பு நிலம்:
    • பண்புகள் அதிக ஈரத் தன்மை, அதிக இலைமக்கு சத்து, கருமை நிறம் உடையது.
    • பரவல் - ஒடிசா, பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளாவில் கோட்டயம், ஆலப்புழை.


    2. ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக.

    இந்திய பல்நோக்கு திட்டங்கள்:


    1. ஹிராகுட் திட்டம்:
    • உலகின் மிக நீளமான அணையாகத் திகழ்கிறது.
    • மகாநதி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது.
    • ஒடிசா மாநிலம் அதிகம் பயன் பெறுகிறது.
    • 347.5 மெகாவாட் நீர்மின்சக்தி உற்பத்தியாகிறது.
    • 1,41,600 சதுர.கி.மீ. பரப்பளவு நிலம் நீர்பாசனம் பெறுகிறது.
    2. பக்ரா நங்கல் திட்டம்:
    • உலகின் பெரிய புவிஈர்ப்பு அணையாகத் திகழ்கிறது.
    • சட்லஜ் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது.
    • பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான் அதிகம் பயன் பெறுகின்றன.
    • 1500 மெகாவாட் நீர்மின்சக்தி உற்பத்தியாகிறது.
    • 52,609 சதுர.கி.மீ. பரப்பளவு நிலம் நீர்பாசனம் பெறுகிறது.


    3. தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை வெளிக்கொணர்க.
    தீவிர வேளாண்மையின் பண்புகள்:
    • இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன யுக்திகள் மூலம் உற்பத்தியை அதிகரித்தல்.
    • பூச்சிக் கொல்லிகள், இரசாயன உரங்கள் பயன்படுத்தி விளைச்சலை பெருக்குதல்.
    • இயந்திர மயமாக்கல் மற்றும் தீவிரப்படுத்துதல் மூலம் கால்நடைகளை வளர்த்தல்.
    • பசுக்கள், பன்றிகள், கோழிகள் ஆகியவை பெரிய பண்ணைகள் மூலம் வளர்த்தல்.

    தோட்ட வேளாண்மையின் பண்புகள்:
    • தேயிலை, காபி, இரப்பர், வாசனைப் பொருட்கள் ஆகியவை தோட்டப் பயிர்கள்.
    • தோட்டப் பயிர்கள் மலைச் சரிவுகளில் பெரிய எஸ்டேட் பண்ணைகளாக உள்ளன.
    • தோட்ட வேளாண்மை பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நோக்குடன் பயிரிடப்படுகிறது.
    • தோட்ட வேளாண்மையில் பரந்த நிலத்தில் ஒரு பயிர் மட்டுமே விளைவிக்கின்றனர்

    4. நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழல்கள் பற்றி விவரி.

    நெல் பயிரிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழல்கள்:
    • நெல் விளைய 240 செல்சியஸ் சராசரி வெப்ப நிலை தேவைப்படுகிறது.
    • ஆண்டுக்கு 150 செ.மீ மழையளவு உள்ள பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
    • வளமான களிமண் அல்லது வண்டல் மண் நெல் சாகுபடிக்கு ஏற்றது.
    • நெல் ஒரு அயன மண்டலப் பயிர். டெல்டா பகுதிகளில் அதிகம் விளைகிறது.
    கோதுமை பயிரிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழல்கள்:
    • கோதுமை விளைய விதைக்கும் பருவத்தில் 100 -15° C வெப்ப நிலையும், முதிர் பருவத்தில் 200-25°C வெப்ப நிலையும் தேவைப்படுகிறது.
    • ஆண்டுக்கு 50-60 செ.மீ மழையளவு உள்ள பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
    • களிமண் அல்லது வண்டல் மண் கலந்த களிமண் கோதுமை சாகுபடிக்கு ஏற்றது.
    • கோதுமை ஒரு மித வெப்ப மண்டலப் பயிர். குளிர் பிரதேசங்களில் அதிகம் விளைகிறது.

    IX. உயர் சிந்தனை வினாக்கள்

    Soon

    X. நிலவரைபட பயிற்சி

    Soon

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive