10th Social Science - Book Back Answers - History Unit 8 - Tamil Medium Guides

  

 


    SSLC / 10th Social Science - Book Back Answers - History Unit 8 - Tamil Medium

    Tamil Nadu Board 10th Standard Social Science - History Unit 8: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 8 – History from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 8 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 8:தேசியம்: காந்திய கால கட்டம்

    I. சரியான விடையைத் தேர்வு செய்க.

    1. அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?
    அ) மோதிலால் நேரு
    ஆ) சைஃபுதீன் கிச்லு
    இ) முகம்மது அலி
    ஈ) ராஜ் குமார் சுக்லா
    விடைகுறிப்பு:

    ஆ) சைஃபுதீன் கிச்லு

    2. இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?
    அ) பம்பாய்
    ஆ) மதராஸ்
    இ) கல்கத்தா
    ஈ) நாக்பூர்
    விடைகுறிப்பு:

    ஈ) நாக்பூர்

    3. விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?
    அ) 1930 ஜனவரி 26
    ஆ) 1929 டிசம்பர் 26
    இ) 1946 ஜூன் 16
    ஈ) 1947 ஜனவரி 15
    விடைகுறிப்பு:

    அ) 1930 ஜனவரி 26

    4. முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
    அ) 1858
    ஆ) 1911
    இ) 1865
    ஈ) 1936
    விடைகுறிப்பு:

    இ 1865

    5. 1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?
    அ) கோவில் நுழைவு நாள்
    ஆ) மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)
    இ) நேரடி நடவடிக்கை நாள்
    ஈ) சுதந்திரப் பெருநாள்
    விடைகுறிப்பு:

    அ) கோவில் நுழைவு நாள்

    6. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
    அ) 1858ஆம் ஆண்டு சட்டம்
    ஆ) இந்திய கவுன்சில் சட்டம், 1909
    இ) இந்திய அரசுச் சட்டம், 1919
    ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935
    விடைகுறிப்பு:

    ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935



    II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

    1. காந்தியடிகளின் அரசியல் குரு ……………… ஆவார்.
    2. கிலாபத் இயக்கத்துக்கு ……………… தலைமை ஏற்றனர்.
    3. 1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் ………………. அறிமுகம் செய்தது.
    4. வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் ………………
    5. சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகளை வழங்கும் ……………..ஐ ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார்.
    6. …………… என்பவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது காங்கிரஸ் வானொலியை திரைமறைவாக செயல்படுத்தினார். 
    விடைகுறிப்பு:

    1. கோபால கிருஷ்ண கோகலே
    2. அலி சகோதரர்கள்
    3. இரட்டை ஆட்சி முறையை
    4. கான் அப்துல் கஃபார்கான்
    5. வகுப்புவாரி ஒதுக்கீடு
    6. உஷா மேத்தா


    III. சரியான கூற்றைத் தேர்வு செய்க. 

    1. i) இந்திய பொதுவுடைமை கட்சி 1920ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது.
    ii) எம். சிங்காரவேலர் கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
    iii) ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவானது.
    iv) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சமதர்மவாதிகள் பங்கேற்கவில்லை.
    அ) (i) மற்றும் (ii) சரியானது
    ஆ) (ii) மற்றும் (iii) சரியானது
    இ) (iv) சரியானது
    ஈ) (i), (ii) மற்றும் (iii) சரியானது
    விடைகுறிப்பு:

    ஈ) (i), (ii) மற்றும் (iii) சரியானது

    2. கூற்று : காங்கிரஸ் முதலாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டது.
    காரணம் : காங்கிரஸ் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தி இர்வின் ஒப்பந்தம் வழிவகை செய்தது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
    ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
    இ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.
    ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுகான சரியான விளக்கம் ஆகும்.
    விடைகுறிப்பு:

    இ கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.

    3. கூற்று : காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939ஆம் ஆண்டு பதவி விலகின.
    காரணம் : காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை .
    ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
    இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.
    ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
    விடைகுறிப்பு:

    ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
     

    IV. பொருத்துக.   

    9th Social
    1.
    ரௌலட் சட்டம்
    பட்டங்களைத் திரும்ப ஒப்படைத்தல்
    2.
    ஒத்துழையாமை இயக்கம்
    இரட்டை ஆட்சி
    3.
    1919ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம்
    M.N.ராய்
    4.
    இந்தியப் பொதுவுடைமை கட்சி
    நேரடி நடவடிக்கை நாள்
    5.
    16 ஆகஸ்ட் 1946
    கருப்புச் சட்டம்
    விடைகுறிப்பு:
    1.
    ரௌலட் சட்டம்

    கருப்புச் சட்டம்

    2.
    ஒத்துழையாமை இயக்கம்

    பட்டங்களைத் திரும்ப ஒப்படைத்தல்

    3.
    1919ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம்

    இரட்டை ஆட்சி

    4.
    இந்தியப் பொதுவுடைமை கட்சி

    M.N.ராய்

    5.
    16 ஆகஸ்ட் 1946

    நேரடி நடவடிக்கை நாள்

      

    V. சுருக்கமான விடையளிக்கவும்.

    1. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரிக்கவும்.
    விடைகுறிப்பு:


    1. 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி அமிர்தசரசில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் (சீக்கியர்கள்) பொது கூட்டத்திற்கு கூடினர்.
    2. இதையறிந்த ஜெனரல் டயர் முன்னறிவிப்பின்றி அவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட உத்தரவிட்டார்.
    3. துப்பாக்கி சூட்டில் பலர் இறந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
    4. இதை எதிர்த்து தாகூர் தன் நைட்வுட் பட்டத்தையும், காந்தியடிகள் கெய்சர்-இ-ஹிந்த் பதக்கத்தையும் துறந்தனர்.

    2. கிலாபத் இயக்கம் பற்றி குறிப்பு வரைக
    விடைகுறிப்பு:


    1. முதல் உலகப் போருக்குப் பின் இசுலாம் மதத்தலைவரான துருக்கியின் கலிப் கடுமையாக நடத்தப்பட்டார்.
    2. - அவருக்கு அவருக்கு ஆதரவாக ஆதரவாக ஆதரவாக அலிசகோதரர்கள் (முகமது அலி, சௌகத் அலி) கிலாபத் இயக்கத்தை தொடங்கினார்கள்.
    3. இந்து-முஸ்லிம் இணைப்புக்கு வாய்ப்பாக அமையுமென காந்தியடிகள் இதை ஆதரித்தார்.


    3. ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் காந்தியடிகள் திரும்பப் பெற்றார்?
    விடைகுறிப்பு:


    1. 1922-ல் உத்திரபிரதேசம் சௌரிசௌரா என்ற கிராமத்தில் தேசியவாதிகள் நடத்திய பேரணி காவல்துறையினரால் வன்முறையாக மாறியது.
    2. குறைந்த எண்ணிக்கை கொண்ட காவல் துறையினரின் காவல்நிலையத்தை பேரணிக்கு வந்த கோபமுற்ற கூட்டத்தினர் தீயிட்டு கொளுத்தியதில் 22 காவலர்கள் உயிரிழந்தனர். 
    3. இதனால் வேதனையடைந்த காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்றார்.

    4. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?
    விடைகுறிப்பு:


    1. சைமன் குழுவில் இருந்த 7 உறுப்பினர்களும் ஆங்கிலேயர்களே, இந்தியர்கள் எவரும் இல்லை.
    2. இதனால் இந்தியர்கள் ஆத்திரமும், அவமானமும் அடைந்தனர்.
    3. தங்கள் அரசியல் சாசனத்தை நிர்ணயிக்கும் உரிமை தங்களுக்கு இல்லை என கருதி காங்கிரசும், முஸ்லீம் லீக்கும் சைமன் குழுவை புறக்கணித்தன.

    5. முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?
    விடைகுறிப்பு:


    1. முழுமையான சுயராஜ்ஜியம் என்பது முழுமையான சுதந்திரம் பெறுவது ஆகும்.
    2. காங்கிரசார் சிலர் டொமினியன் அந்தஸ்து என்பதில் திருப்தி அடையாமல் முழு சுயராஜ்யம் பெற விரும்பினர்.

    6. பகத்சிங் பற்றி குறிப்பு வரைக.
    விடைகுறிப்பு:


    1. ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் கைவிட்டதால் ஆங்கில ஆட்சியை எதிர்க்க பகத்சிங் தன் தோழர்களுடன் இந்துஸ்தான் குடியரசு ராணுவத்தை மீண்டும் அமைத்தார்.
    2. லாலாலஜ்பதி ராயின் உயிரிழப்புக்கு காரணமான ஆங்கில அதிகாரி படுகொலை செய்யப்பட்டார்.
    3. 1929-ல் மத்திய சட்டப் பேரவையில் புகைகுண்டு ஒன்றை பகத்சிங்கும். B.K.தத்தும் வீசினர்.
    4. பகத்சிங் கைது செய்யப்பட்டு மரண தண்டனை பெற்றார்.

    7. பூனா ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?
    விடைகுறிப்பு:


    1. தனித் தொகுதிகள் பற்றிய பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டு. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் யோசனை ஏற்கப்பட்டது.
    2. ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71 லிருந்து 148 ஆக அதிகரித்து, மத்திய சட்டப் பேரவையில் 18% இடங்கள் ஒதுக்கப்பட்டன.
     
     

    VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.   

    1. காந்தியடிகள் ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராய்க.
    விடைகுறிப்பு:


    1. தென்னாப்பிரிக்க இனவேறுபாடு கொண்ட ரயில் பயண அனுபவம்.
    2. டால்ஸ்டாய், ஜான் ரஸ்கின் படைப்புகள் இவரை மாற்றியது.
    3. லண்டனில் படிக்கும்போது கிடைத்த அனுபவங்கள்.
    4. உண்மையின் வடிவான சத்தியாகிரக வழி போராட்டம்.
    5. சம்பரானில் தீன் காதியா அகற்றி வெற்றி.
    6. இயக்கங்கள் நடத்தி (ஒத்துழையாமை, சட்டமறுப்பு, வரிகொடா போராட்டத்தை தீவிரப்படுத்தியது.
    7. உப்பு சத்தியாகிரகத்தால் ஒரு மக்கள் தலைவரானார்.
    8. தீண்டாமை, வகுப்புவாரி முறை ஒழிப்பு.
    9. வெள்ளையனே வெளியேறு இயக்கம் மூலம் மாபெரும் தலைவரானார்.
    மேற்கூறிய அனைத்தும் காந்தியடிகள் ஒரு மக்கள் தலைவராக உருமாற உதவிய காரணிகளாகும்.

    2. காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமாக சட்டமறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்
    விடைகுறிப்பு:


    1. 1929ல் லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழு சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது.
    2. இதன்படி வரிகொடா இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் மூலம் வன்முறையின்றி சுதந்திரம் அடைய உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    3. முக்கிய கோரிக்கையாக உப்பு வரியை ரத்து செய்யுமாறு காந்தியடிகள் அரச பிரதிநிதியிடம் அளித்தார்.
    4. பதில் அளிக்காததால் சட்ட மறுப்பு இயக்கத்தை தீவரப்படுத்தினார்.
    5. பெண்கள், பலபிரிவு மக்களுடன் தண்டி யாத்திரையை தொடங்கி உப்பு காய்ச்சி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
    6. ஆனால் காந்தியடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவரின் புகழ் இந்திய அளவில் உயர்ந்தது.
    இவ்வாறு காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமாக சட்ட மறுப்பு இயக்கம் அமைந்தது.


    3. இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்
    விடைகுறிப்பு:


    1. 1905 கர்சனின் வங்கப்பிரிவினை இந்தியப் பிரிவினைக்கு முதல் காரணம்.
    2. 1920ல் இந்து முஸ்லீம் இடையே ஏற்பட்ட மோதல் மத்திய சட்டபேரவையில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு என முஸ்லீம் லீக் கோரியது.
    3. 1932ல் ராம்சேமெக்டொனல்டு வகுப்புவாத அறிக்கை.
    4. முகமது அலிஜின்னா 1934-ல் முஸ்லீம் லீக்கிற்கு புத்துயிர் அளித்து 1940ல் தனிநாடு கோரிக்கை வைத்தார்.
    5. இந்து மகா சபையும், முஸ்லீம் லீக்கும் அரசியல் காரணங்களுக்காக மதத்தை பயன்படுத்தின.
    6. 1946 தேர்தல் இடைக்கால அரசில் இணைந்த முஸ்லீம் லீக் தனிநாடு கோரிக்கைக்கு வலு சேர்த்தது.
    7. 1947 ஜீலை 18 பிரிட்டீஷ் நாடாளுமன்றம் இந்திய விடுதலை சட்டம் மூலம் இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடாக பிரித்து விடுதலை அறிவித்தது.
    இவையே இந்தியாவின் பிரிவினைக்கு பின்னால் இருந்த காரணிகளாகும்.


    VII. செயல்பாடுகள்.   

    Soon 

    VIII. வரைபடப் பணி.   

    Soon 


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive