10th Social Science - Book Back Answers - Economics Unit 5 - Tamil Medium Guides

  

 


    SSLC / 10th Social Science - Book Back Answers - Economics Unit 5 - Tamil Medium

    Tamil Nadu Board 10th Standard Social Science - Economics Unit 5: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 5 – Economics from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 5 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 5:தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

    I. சரியான விடையைத் தேர்வு செய்க.

    1. ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது ……………………..
    அ) தூத்துக்குடி
    ஆ) கோயம்புத்தூர்
    இ) சென்னை
    ஈ) மதுரை
    விடைகுறிப்பு:

    இ) சென்னை

    2. குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது ………………
    அ) சேலம்
    ஆ) கோயம்புத்தூர்
    இ) சென்னை
    ஈ) தருமபுரி
    விடைகுறிப்பு:

    ஆ) கோயம்புத்தூர்

    3. ……………….. என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும்.
    அ) வேளாண்மை
    ஆ) தொழில்
    இ) இரயில்வே
    ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
    விடைகுறிப்பு:

    ஆ) தொழில்

    4. திருப்பூர் ………………. தொழிலுக்கு பெயர்பெற்றது.
    அ) தோல் பதனிடுதல்
    ஆ) பூட்டு தயாரித்தல்
    இ) பின்னலாடை தயாரித்தல்
    ஈ) வேளாண் பதப்படுத்துதல்
    விடைகுறிப்பு:

    இ பின்னலாடை தயாரித்தல்

    5. …………….. இல் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்டது.
    அ) ஓசூர்
    ஆ) திண்டுக்கல்
    இ) கோவில்பட்டி
    ஈ) திருநெல்வேலி
    விடைகுறிப்பு:

    அ) ஓசூர்



    II. கோடிட்டஇடங்களை நிரப்புக.

    1. நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் தமிழ்நாட்டில் …………………. மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளது.
    2. சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகள் ……………ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
    3. ………. என்பவர் புத்தாக்க சிந்தனைகள் மற்றும் வணிக செயல்முறைகளின் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.
    விடைகுறிப்பு:

    1. வேலூர்
    2. ஏப்ரல் 2000
    3. தொழில் முனைவோர்
     

    III. தவறான ஒன்றினை தேர்வு செய்க

    1. பின்வருவனவற்றில் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது?
    அ) ராணிப்பேட்டை
    ஆ) தர்மபுரி
    இ) ஆம்பூர்
    ஈ) வாணியம்பாடி
    விடைகுறிப்பு:

    ஆ) தர்மபுரி

    2. பின்வருவனவற்றில் எது தொழில் துறை வளர்ச்சி நிறுவனம் அல்ல?
    அ) TIDCO
    ஆ) SIDCO
    இ) MEPG
    ஈ) SIPCOT
    விடைகுறிப்பு:

    இ MEPG
     

    IV. பின்வருவனவற்றைப் பொருத்துக

    1
    தொழில் முனைவோர்
    ஏற்றுமதி செயலாக்க மண்டலம்
    2
    MEPZ
    கோயம்புத்தூர்
    3
    TANSI
    புனைபவர்
    4
    தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
    1965
    விடைகுறிப்பு: 
    1
    தொழில் முனைவோர்
    புனைபவர்
    2
    MEPZ
    ஏற்றுமதி செயலாக்க மண்டலம்
    3
    TANSI
    1965
    4
    தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
    கோயம்புத்தூர்
     
     

    V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி

    1. விவசாயத் துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?
    விடைகுறிப்பு:


    1. நிலத்தின் இறுதி நிலை உற்பத்தி திறன் குறைந்து வருவதால் இத்துறையில் உழைப்பவர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியவில்லை
    2. அதிக அளவு மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் இருப்பதால் ஊதியத்தை உயர்த்த முடியவில்லை

    2. தொழில்துறை தொகுப்பு என்றால் என்ன?
    விடைகுறிப்பு:


    1. நோக்கம் நிறுவனங்களிடையே பரஸ்பர தொடர்பு ஏற்படுத்துவது
    2. வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்கள் தங்களின் தேவைகளான சந்தைகள், தொழில் நுட்பங்கள், திறன்களை பகிர்வதே தொழில்முறை தொகுப்பாகும்.

    3. தொழில் தொகுப்புகள் உருவாவதற்கான வழிகள் யாவை?
    விடைகுறிப்பு:


    1. சில தொழில் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் அங்கு குடியேறி தங்குவதால்
    2. சில துறைகளில் பெரிய நிறுவனங்களை நிறுவும் போது அதன் பணிகள் சேவைகளை கவனிப்பதால்
    3. வட்டார மூலப்பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு முடிவு செய்தால் தொழில் தொகுப்புக்கள் உருவாகின்றன.

    4. தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக
    விடைகுறிப்பு:


    1. SIPCOT-1971-ல் தொழில் முன்னேற்றத்திற்காகவும், தொழில் பேட்டைகள் அமைக்கவும் நிறுவப்பட்டது.
    2. TANSIDCO- சிறு தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டது
    3. TIIC- புதிய தொழில் பிரிவுகளை நிறுவ நிதி
    4. TANSI - சிறு சிறு தொழில் அமைப்புகளை தன் பொறுப்பில் எடுத்தல்

    5. தற்போது தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் சிக்கல்கள் யாவை?
    விடைகுறிப்பு:


    1. திரவக் கழிவுகளால் சுகாதாரம், நீர் நிலைகள், விவசாய நிறுவனங்கள் கெடுகின்றன.
    2. முதன்மையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதால் நிலையான வேலைவாய்ப்புகான குறை ஏற்படுகிறது.
    3. தற்காலிக பணியால் பணியாளர்களின் தரம் குறைகிறது

    6. தொழில் முனைவோர் என்றால் என்ன?
    விடைகுறிப்பு:


    1. புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைகளுக்கும் புத்தாக்கம் புனைபவர் தொழில் முனைவோர் ஆவார்.
    2. சிறந்த நிர்வாகத்திறன், வலிமையான குழுவை அமைக்கும் திறமை, தேவையான தலைமை பண்புகளை கொண்டவர்

    7. தொழில் முனைவு என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    1. தொழில் முனைவோர் தங்கள் தொழிலை பெருக்குவதற்கான முனைவு எனப்படும் > பெருக்குவதற்கான செயல்முறைகள் தொழில் MEG
    2. தொழில் முனைவு ஒன்றை உருவாக்குவதற்கும் மேலும் பெரிதுபடுத்துவதற்குமான திறன் ஆகும்.
     
     

    VI. விரிவான விடையளி  

    1. வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் என்ன?
    விடைகுறிப்பு:
    • துறை சார்ந்த சிறப்பு கவனம்
    • நிறுவனங்களுக்கு இடையே பரஸ்பர முறையில் இணைதல் புத்தாக்கத்தால் போட்டி
    • நம்பிக்கையை எளிதாக்கும் சமூக கலாச்சாரம்
    • பல்வேறு திறமையான தொழிலாளர்கள்
    • சுய உதவிக் குழுக்களின் செயல்பாடு
    • பிராந்திய மற்றும் நகராட்சிகளுக்கு அரசின் ஆதரவு
    • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிக்கு அருகில் இருத்தல்

    2. தொழில் மயமாதலுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் வகைகள் பற்றி விரிவாக எழுதுக.
    விடைகுறிப்பு:

    1.கல்வி:

    • திறமையான மனித வளம் தொழிற்சாலைக்கு தேவை
    • படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, எண் கணித திறன்கள் வளர்ப்பது
    • அதிக தொழில்நுட்ப வல்லுநர்கள் தருதல்

    2.உள்கட்டமைப்பு:
    • மின்சார விநியோகம் மாநிலம் முழுவதும் சிறப்பான பங்களிப்பை தருகிறது.
    • உள்கட்டமைப்பு ஒரு சிறந்த போக்குவரத்தாகும்
    • கிராம-நகரங்களை, அரசு-தனியார் போக்குவரத்து இணைத்து, உற்பத்தியாளர்களை சந்தைகளாடு இணைக்கிறது.
    3.தொழில்துறை ஊக்குவிப்பு:
    • சிறந்த தொழிற்பிரிவுக்கு தொழிற்சாலைகளை சிறந்த பகுதிகளில் ஏற்படுத்த முயற்சி
    • தானியங்கி, உயிரி தொழில்நுட்பம், செய்தி தொடர்புகளில் நல்ல நடைமுறை
    • அனைத்து பிரிவு உள் கட்டமைப்பை மேம்படுத்த தொழில் துறை மேம்பாட்டு முகமை நிறுவுதல்

    3. தொழில் முனைவோரின் பங்கினைப் பற்றி விளக்குக
    விடைகுறிப்பு:
    • கிராமபுற, பின்தங்கிய தொழிற்சாலைகளை முன்னேற்றுகிறார்கள்
    • வட்டார ஏற்றத் தாழ்வுகளை நீக்குகிறார்கள்
    • மொத்த உள்நாட்டு உற்பத்தி, தலா வருமானம் உயர உதவுகிறார்கள்
    • வருமானம் மற்றும் செல்வத்தின் செறிவை குறைத்து சமூக வளர்ச்சிக்கு உதவுகிறார்கள்
    • மக்களின் அசையா சேமிப்பு மற்றும் நாட்டின் ஏற்றுமதி வியாபாரம் மூலம் மூலதனத்தை செயல்பட வைக்கிறார்கள்.
    • கைவினைஞர்கள், தொழில் நுட்பம் பெற்றவர்கள், தொழில் வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறார்கள்.
    • புத்தாக்கத்தின் மூலம் இலாபத்தை அதிகரிக்கிறார்கள்
    • குறைந்த விலையில் தரமான பொருட்கள் வழங்க உதவுகிறார்கள்
     

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive