அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் குறித்து முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, June 4, 2021

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் குறித்து முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்


அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் குறித்து முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்வெளியிடப்பட்டுள்ளன.
பொறியியல்படிப்புகளுக்கான நவம்பர் / டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், பிப்ரவரி / மார்ச் / ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, ஏப்ரலில்


தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால் அதில் முறைகேடுகள் நடைபெற்றதாகபுகார் எழுந்ததால், மறுத்தேர்வு நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.

 

இந்நிலையில்மறுத்தேர்வு மற்றும் ஏப்ரல் / மேமாத செமஸ்டர் தேர்வு (முதுகலை 2வதுசெமஸ்டர் தவிர்த்து) எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டுநெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

* தேர்வுகள்பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பு நடைபெற்றதை போல3 மணி நேரம் ஆஃப்லைன் முறையில், பேனா மற்றும் காகித முறையில்நடைபெறும்.

* வீட்டிலிருந்தேதேர்வு எழுத மாணவர்கள் தயாராகஇருக்க வேண்டும்.

 

* முன்னதாகமாணவர்கள் தேர்வுத் தாளைப் பதிவிறக்கம் செய்ய, கணினி / மடிக்கணினி / மொபைல்போன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணையவசதியுடன் வைத்திருக்க வேண்டும்.



* மாணவர்கள்தேர்வு எழுதத் தேவையான பேனா, பென்சில், அழிப்பான், ஏ4 தாள்கள் உள்ளிட்டதேவையான அனைத்து உபகரணங்களையும் தயாராகவைத்திருக்க வேண்டும்.

 

* ஹால்டிக்கெட்டை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மேலும் அந்தந்த தேர்வுக் கட்டுப்பாட்டுஅலுவலகம் மூலம் மாணவர்களின் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

* தேர்வுதொடங்குவதற்கு அரை மணி நேரம்முன்னதாகக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாகமின்னஞ்சல் / கூகுள் கிளாஸ்ரூம்ஸ் / மைக்ரோசாப்ட்டீம்ஸ் மூலம் வினாத்தாள் அனுப்பப்படும்.

* தேர்வுகாலை, பிற்பகல் என 2 பிரிவுகளாக 3 மணிநேரம் நடத்தப்படும். காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை5.30 மணி வரை தேர்வுகள் இருக்கும்.

 

* வினாத்தாளைப்பெறுவதற்கு 9 முதல் 9.30 வரையிலும், தேர்வுகளை எழுத 9.30 முதல் 12.30 வரையிலும் விடைத்தாளை ஸ்கேன் செய்து பதிவேற்றம்


செய்ய 12.30 முதல் 1.30 வரையிலும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோலபிற்பகல் வேளையில் 2 முதல் 2.30 வரை வினாத்தாளைப் பெறவும்2.30 முதல் 5 மணி வரை தேர்வுஎழுதவும் 5.30 முதல் 6 மணி வரைவிடைத்தாள்களை ஸ்கேன் செய்து அனுப்பவும்நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* வினாத்தாளைப்பதிவிறக்கம் செய்து, தனி வெள்ளைத்தாளில் நீலம் மற்றும் கருப்புநிற மையால் மட்டுமே தேர்வுஎழுத வேண்டும். விடைத்தாளில் காலிப்பக்கம் விடக்கூடாது. ஒருவேளை பக்கம் எழுதப்படாமல்இருந்தால் பேனாவால் கோடிட்டு அடிக்க வேண்டும்.

* ஏ4 தாளில் 30 பக்கங்களுக்கு மிகாமல் மாணவர்கள் தேர்வெழுதவேண்டும்.

* தேர்வுஎழுதி முடித்தவுடன் விடைத்தாளை ஸ்கேன் செய்து பிடிஎஃப்வெர்ஷனாக அனுப்பி வைக்க வேண்டும்.

* தேர்வுமுடிந்த ஒரு மணி நேரத்திற்குள்விடைத்தாளை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். காலதாமதமாக அனுப்பினால் விடைத்தாள் நிராகரிக்கப்படும்.

* விடைத்தாளைஎடுத்து நூலில் கட்டி, விரைவுத்தபால், பதிவுத் தபால் அல்லதுகொரியர் மூலம் அந்தந்தக் கல்விநிறுவனத்தின் முதல்வர் பெயரில் அன்றைய தினமேஅனுப்ப வேண்டும்.

* நேரடியாகக்கல்வி நிறுவனத்திற்குச் சென்று விடைத்தாளைத் தரக்கூடாது.

* ஒவ்வொருதாளின் மேல்புறத்திலும் மாணவரின் பெயர், பாடக் குறியீட்டுஎண், தேர்வின் பெயர், பதிவு எண்ஆகியவற்றை கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்.

* ஒவ்வொருதாளின் கீழ்ப்புறத்திலும் தேர்வு தேதி, பக்கம்எண், மாணவர்களின் கையொப்பம் ஆகியவை இருக்க வேண்டும். கூடுதல் தகவல் தேவைப்பட்டால் அந்தந்தக்கல்லூரி நிர்வாகத்தை மாணவர்கள் அணுகலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம்சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Post Top Ad