பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யா மொழி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் ஆய்வு- PHOTO COLLECTION-PDF - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, June 13, 2021

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யா மொழி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் ஆய்வு- PHOTO COLLECTION-PDF




பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ்பொய்யா மொழி கரூர் மாவட்டத்தில்அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளில்திறன்மிகு வகுப்பறைகள், கழிப்பறைகள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட


கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆங்காங்கேநடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளைநேரில் ஆய்வு செய்தார் .

🦚 ஆய்வில், பெண்குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கினார்.. மேலும், அரசுப் பள்ளிகளில்மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும், கற்பித்தலை மேம்படுத்துவதற்குமான ஆலோசனைகளை வழங்கினார் .



🦚 நரிகட்டியூர் ஊராட்சிஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையின் மகன் ஹர்ஷத்தை, அதேபள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்தஆசிரியைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.



🦚 பள்ளி வளாகங்களில்மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்தார். கரூரில் உள்ள மாவட்டமைய நூலகத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தேவையான வசதிகளைத் தயக்கமின்றி எந்த நேரத்திலும் தன்னிடம்கேட்குமாறு கூறினார்.



🦚 ஆய்வின் போதுகரூர் மாவட்ட ஆட்சியர், சட்டமன்றஉறுப்பினர்கள், மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரகல்வி அலுவலர்கள், மாவட்ட உதவி திட்டஅலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள்மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர்

CLICK HERE TO VIEW PHOTO COLLECTION-PDF.


Post Top Ad