8th Science - Book Back Answers - Unit 7 - Tamil Medium Guides



 


    8th Science - Book Back Answers - Unit 7 - Tamil Medium

    Tamil Nadu Board 8th Standard  Science - Unit 7: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 7 – from the Tamil Nadu State Board 8th Standard  Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 7 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 7: காந்தவியல்

    I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    1. பின்வருவனவற்றுள் காந்தத்தால் கவரப்படும் பொருள் __________.
    அ) மரப்பொருள்கள்
    ஆ) ஏதேனும் ஓர் உலோகம்
    இ) தாமிரம்
    ஈ) இரும்பு மற்றும் எஃகு
    விடைக்குறிப்பு: 
    ஆ) இரும்பு மற்றும் எஃகு

    2 கீழ்க்காணும் ஒன்று நிலைத்த காந்தத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
    அ) மின்காந்தம்
    ஆ) முமெட்டல்
    இ) தேனிரும்பு
    ஈ) நியோடிமியம்
    விடைக்குறிப்பு: 
    ஈ) நியோடிமியம்

    3. ஒரு சட்டக் காந்தத்தின் தென்முனையும், U வடிவ காந்தத்தின் வடமுனையும் __________.
    அ) ஒன்றையொன்று கவரும்
    ஆ) ஒன்றையொன்று விலக்கும்
    இ) ஒன்றையொன்று கவரவோ விலக்கவோ செய்யாது
    ஈ) மேற்கண்டவற்றுள் எதுவுமில்லை
    விடைக்குறிப்பு:
    அ) ஒன்றையொன்று கவரும்

    4. கற்பனையான புவிக் காந்தப்புலம் எந்த வடிவத்தினைப் போன்றது?
    அ) U வடிவ காந்தம்
    ஆ) மின்னோட்டத்தைக் கடத்தும் நேர்க்கடத்தி
    இ) வரிசுருள்
    ஈ) சட்டக் காந்தம்
    விடைக்குறிப்பு:
    ஈ) சட்டக் காந்தம்

    5. MRI என்பதன் விரிவாக்கம் __________.
    அ) Magnetic Resonance Imaging
    ஆ) Magnetic Running Image
    இ) Magnetic Radio Imaging
    ஈ) Magnetic Radar Imaging
    விடைக்குறிப்பு:
    அ) Magnetic Resonance Imaging

    6. காந்த ஊசி __________ பயன்படுகிறது.
    அ) காந்தவிசைக் கோடுகளை வரைய
    ஆ) காந்தப்புலத்தின் திசையை அறிய
    இ) கடல் பயணத்திற்கு 
    ஈ) மேற்காண் அனைத்தும்
    விடைக்குறிப்பு: 
    ஈ) மேற்காண் அனைத்தும்

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

    1. காந்தத்தின் வலிமை அதன் முனைகளில் __________.
    விடைக்குறிப்பு: 

    அதிகம்

    2. ஒரு காந்தம் __________ முனைகளை கொண்டது.
    விடைக்குறிப்பு: 

    இரு (வட, தென்)

    3. மின்சார உற்பத்திக்குப் பயன்படும் காந்தங்கள் __________.
    விடைக்குறிப்பு: 

    டைனமோ

    4. கனமான இரும்புப் பொருள்களை உயர்த்தப் பயன்படுவது __________.
    விடைக்குறிப்பு:
     
    மின்காந்தங்கள்

    5. தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதும் __________ வட, தென் முனைகளை நோக்கி இருக்கும்.
    விடைக்குறிப்பு: 

    புவியின்

    III.  பொருத்துக.  

    1
    மேக்னடைட்
    காந்த விசைக்கோடுகள்
    2
    ஒரு சிறு சுழலும் காந்தம்
    இயற்கைக் காந்தம்
    3
    கோபால்ட்
    காந்த ஊசிப்பெட்டி
    4
    வளைபரப்புகள்
    ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்
    5
    பிஸ்மத் 
    டயா காந்தப் பொருள்கள்
    விடைக்குறிப்பு:
    1
    மேக்னடைட்
    இயற்கைக் காந்தம்
    2
    ஒரு சிறு சுழலும் காந்தம்
    காந்த ஊசிப்பெட்டி
    3
    கோபால்ட் 
    ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்
    4
    வளைபரப்புகள்
    காந்த விசைக்கோடுகள்
    5
    பிஸ்மத்
    டயா காந்தப் பொருள்கள்
     

    IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தேர்வு செய்க.

    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிக்கு சரியான விளக்கம்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிக்கு சரியான விளக்கமல்ல.
    இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் தவறு.
    ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

    1. கூற்று: இரும்புத் துருவல்களில் செறிவு காந்தத் துருவப் பகுதிகளில் அதிகம்.
    காரணம் : காந்தங்கள் மிகவும் கூர்மையானவை.
    விடைக்குறிப்பு: 
    இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் தவறு.

    2. கூற்று: புவியின் காந்தப்புலம் அதன் உள்ளகத்தில் உள்ள இரும்பினால் உருவாகிறது.
    காரணம்: உயர் வெப்பநிலையில் ஒரு காந்தமானது அதன் காந்தப் பண்பினை இழக்கும்.
    விடைக்குறிப்பு: 
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றிக்கு சரியான விளக்கமல்ல.

    V. சுருக்கமான விடையளி.

    1. காந்தப்புலம் வரையறு.
    • ஒரு காந்தத்தினைச் சுற்றி காந்த விளைவு அல்லது காந்த விசை உணரும் பகுதி ஆகும்.
    • அலகு - டெஸ்லா அல்லது காஸ் [1 டெஸ்லா = 10,000 காஸ்)
     
    2. செயற்கைக் காந்தம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    • மனிதர்களால் உருவாக்கப்பட்ட காந்தங்களே செயற்கைக் காந்தங்கள் ஆகும்.
    • எ.கா. சட்டக் காந்தங்கள்
     
    3. இயற்கை மற்றும் செயற்கைக் காந்தங்களை வேறுபடுத்துக.
    இயற்கைக் காந்தங்கள்
    செயற்கைக் காந்தங்கள்
    இயற்கையில் காணப்படும் ஒழுங்கற்ற வடிவங்கள் பரிமாணங்களை கொண்ட காந்தங்கள்.
    மனிதர்களால் உருவாக்கப்படும் வெவ்வேறு வடிவங்களிலும், பரிமாணங்களிலும் உருவாக்க முடியும்.
    வலிமை கொண்ட காந்தமாகும்.
    குறிப்பிட்ட வலிமை கொண்ட காந்தம்.
    இவை நீண்ட காலம் காந்தப் பண்புகளை இழக்காதவை.
    இவற்றின் பண்புகள் குறிப்பிட்ட கால அளவு உடையது.
    மிகக் குறைந்த பயன்பாடு உடையவை.
    அன்றாட வாழ்வில் பெரும் அளவில் பயன்படக்கூடியது.
     
    4. புவியானது மிகப்பெரிய சட்டக் காந்தமாகும். ஏன்? காரணம் தருக.
    • பூமியில் உள்ளக பகுதிகளில் உலோகப்பொருள்கள் உருகிய நிலையில் காணப்படும். 
    • இதன் காரணமாகவே பூமியானது ஒரு காந்தத்தைப் போல செயல்படுகிறது.
     
    5. காந்தத் தன்மையற்ற பொருள்களை எவ்வாறு அடையாளம் காண்பாய்? காந்தத் தன்மையற்ற பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
    • காந்தத்தால் கவரப்படாத பொருள்களை காந்தத் தன்மையற்ற பொருள்கள் என்கிறோம்.
    • எ.கா: கண்ணாடி
     

    VI. விரிவான விடையளி.

    1. காந்தத்தின் அன்றாட வாழ்வியல் பயன்களைப் பட்டியலிடுக.
    • முற்காலத்தில் கடலில் பயணம் செய்வோரால் திசையினை அறிவதற்கான 'திசைக்காட்டும் கல்லாக' காந்தம் பயன்பட்டது.
    • மின்சார மணிகளிலும், மின் மோட்டார்களிலும், ஒலிப்பெருக்கிகளிலும், நுண்பேசிகளிலும் காந்தங்கள் பயன்படுகின்றன.
    • காசோலையில் அச்சடிக்கப்பட்ட MICR எண்களை அறிந்துக்கொள்ள பயன்படுகிறது.
    • தொழிற்சாலைகளில் காந்தப் பொருள்களோடு கலந்திருக்கும் காந்தம் அல்லாத கழிவுக் பொருள்களைப் பிரித்தெடுக்க 'காந்த கடத்தும் பட்டையாகப் பயன்படுகிறது.
    • மருத்துவமனைகளில் வலிமையான மின்காந்தங்களைப் பயன்படுத்தி MRT (Magnetic Resonance Imaging) ஸ்கேன் மூலம் குறிப்பிட்ட உள்ளுறுப்பின் நிழலுருக்களை உருவாக்கிட உதவுகிறது.

    2. ஓர் ஆணியை எவ்வாறு தற்காலிக காந்தமாக மாற்றுவாய்?
    • குண்டுசிகளை மரத்தாலான பலகையினில் பரப்பி வைத்து அதனருகே இரும்பு ஆணியினைக் கொண்டு செல்லவும். 
    • சட்டக் காந்தத்தின் ஒரு முனையினால் ஆணியின் ஒரு முனையினைத் தொடவும்.
    • மெதுவாக ஆணியின் மீது ஒரே திசையில் மறுமுனை வரை நகர்த்தவும்.
    • படத்தில் காட்டியவாறு மிண்டும் இதே போன்று 20 அல்லது 30 முறை செய்ய வேண்டும்.
    • ஆணியின் மீது முன்னும் பின்னும் நகர்ந்தாமல் ஒரே திசையில் நகர்த்த வேண்டும்.
    • தற்போது குண்டூசிகளுக்கருகில் இரும்பு ஆணியினைக் கொண்டு செல்லவும்.
    • இரும்பு ஆணி தற்காலிக காந்தமாக மாறுவதால் குண்டூசிகள் ஆணியின் மீது ஒட்டிக்கொள்கின்றன.

    3. புவிக் காந்தம் பற்றி குறிப்பெழுதுக.
    • புவியானது மிகப்பெரிய கருதப்படுகிறது முனையினைக் கொண்டதாக
    • புவியின் உட்பகுதியில் உள்ள கற்பனையான காந்தத்தின் தென் முனையானது, புவியில் வட முனைக்கருகிலும், புவிக்காந்தத்தில் வட முனையானது, புவியில் தென் முனைக்கருகிலும் அமைந்துள்ளது. 
    • இதே காந்தங்களின் துருவங்களை இணைக்கும் நேர்க்கோடானது காந்த அச்சு என்று அழைக்கப்படுகிறது.
    • காந்தத்தின் அச்சானது புவியில் வட முனையினை சந்திக்கும் புள்ளியானது புவிகாந்த் முனை அல்லது காந்த வட முனை என்றழைக்கபடுகிறது.
    • புவியில் தென் முனையினை சந்திக்கும் புள்ளியானது காந்த தென் முனை என்றழைக்கப்படுகிறது.
    • காந்த அச்சு மற்றும் புவியின் அச்சு ஒன்றுக்கொன்றாக இணையாக இருப்பதில்லை.
    • புவியின் அச்சிற்கு 10° அல்லது 15° வரை காந்த அச்சிற்கு சாய்வாக உள்ளது.

    VII.  உயர் சிந்தனை வினாக்கள்.

    1. பூமி மிகப்பெரிய காந்தம் போன்று செயல்பட்டாலும் பிற காந்தப் பொருள்களை பூமியால் கவர முடியவில்லை ஏன்?
    • புவியில் காந்தபுல வலிமையான எண்மதிப்பு 25-65 மைக்ரோ டெஸ்லா.
    • இம்மதிப்பு மிகக் குறைவு என்பதால், பிற காந்தப் பொருள்களை பூமியால் கவர முடியும்.

    2. ஒரு இரும்புத் துண்டினை ஒரு காந்தத்தினைக் கொண்டு காந்தமாக்கும்போது முன்னும் பின்னும் நகர்த்த அறிவுறுத்தப்படுவதில்லை. ஏன்?
    • இரும்புத் துண்டினை, காந்தத்திற்கு அருகில் கொண்டு சென்று முன்னும் பின்னும் நகர்த்தினால், அதனோடு தொடர்புடைய காந்தப்பாயம் மாறுபட்டு மின்னியக்கு விசையானது தூண்டப்படும். 

    3. தமிழ்தாரகா மற்றும் சங்கமித்திரை ஆகிய இருவரும் சட்டக் காந்தத்தினைக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது காந்தமானது கீழே விழுந்து நான்கு துண்டுகளானது. அவற்றில் எத்தனை காந்தத் துருவங்கள் கிடைக்கும்?
    எட்டு துருவங்கள்

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive