Tamil Nadu Board 8th Standard Science - Unit 14: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 14 – from the Tamil Nadu State Board 8th Standard Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 14 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 14: அமிலங்கள் மற்றும் காரங்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அமிலங்கள் __________ சுவையை உடையவை.அ) புளிப்பு
ஆ) இனிப்பு
இ) கசப்பு
ஈ) உப்பு
விடைக்குறிப்பு:
அ) புளிப்பு
2. கீழ்க்காண்பவற்றுள் நீர்க் கரைசலில் மின்சாரத்தைக் கடத்துவது __________
அ) அமிலம்
ஆ) காரம்
இ) அமிலம் மற்றும் காரம்
ஈ) இவற்றில் ஏதுமில்லை
விடைக்குறிப்பு:
இ) அமிலம் மற்றும் காரம்
3. நீல லிட்மஸ் தாள் அமிலக்கரைசலில் __________ நிறமாக மாறுகிறது.
அ) நீல
ஆ) பச்சை
இ) சிவப்பு
ஈ) வெள்ளை
விடைக்குறிப்பு:
இ) சிவப்பு
4. காரத்தை நீரில் கரைக்கும் போது அது __________ அயனிகளைத் தருகிறது.
அ) OH-
ஆ) OH+
இ) OH
ஈ) H
விடைக்குறிப்பு:
அ) OH-
5. சோடியம் ஹைட்ராக்சைடு ஒரு __________ ஆகும்.
அ) அமிலம்
ஆ) காரம்
இ) ஆக்சைடு
ஈ) உப்பு
விடைக்குறிப்பு:
ஆ) காரம்
6. சிவப்பு எறும்பின் கொடுக்கில் __________ அமிலம் உள்ளது.
அ) அசிட்டிக் அமிலம்
ஆ) சல்பியூரிக் அமிலம்
இ) ஆக்ஸாலிக் அமிலம்
ஈ) ஃபார்மிக் அமிலம்
விடைக்குறிப்பு:
ஈ) ஃபார்மிக் அமிலம்
7. மெக்னீசியம் ஹைட்ராக்சைடு __________ ஐ குணப்படுத்தப் பயன்படுகிறது.
அ) அமிலத்தன்மை
ஆ) தலைவலி
இ) பற்சிதைவு
ஈ) இவற்றில் ஏதுமில்லை
விடைக்குறிப்பு:
அ) அமிலத்தன்மை
8. அமிலமும் காரமும் சேர்ந்து __________ உருவாகிறது.
அ) உப்பு மற்றும் நீர்
ஆ) உப்பு
இ) நீர்
ஈ) இவற்றில் ஏதுமில்லை
விடைக்குறிப்பு:
அ) உப்பு மற்றும் நீர்
9. நாம் பல் துலக்குவதற்கு பற்பசையைப் பயன்படுத்துகிறோம் ஏனெனில் அது __________ தன்மை கொண்டது.
அ] காரம்
ஆ) அமிலம்
இ) காரம் மற்றும் அமிலம்
ஈ) ஏதுமில்லை
விடைக்குறிப்பு:
அ) காரம்
10. மஞ்சள் தூள் நிறங்காட்டியானது கார கரைசலில் மஞ்சள் நிறத்திலிருந்து __________ நிறமாக மாறுகிறது.
அ) நீலம்
ஆ) பச்சை
இ) மஞ்சள்
ஈ) சிவப்பு
விடைக்குறிப்பு:
ஈ) சிவப்பு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. பென்சாயிக் அமிலம் __________ ஆக பயன்படுகிறது.விடைக்குறிப்பு:
உணவு பாதுகாப்பானாக
2. புளிப்புச் சுவை” என்பது இலத்தின் மொழியில் __________ என்ற சொல்லால் வழங்கப்படுகிறது.
விடைக்குறிப்பு:
அசிடஸ்
3. காரங்கள் __________ சுவையைக் கொண்டவை.
விடைக்குறிப்பு:
நசப்பு
4. கால்சியம் ஆக்சைடின் வேதிவாய்ப்பாடு __________
விடைக்குறிப்பு:
CaO
5. குளவியின் கொடுக்கில் __________ அமிலம் உள்ளது.
விடைக்குறிப்பு:
அல்கலி என்ற காரப்பொருள்
6. உணவு தயாரிக்கப் பயன்படும் மஞ்சளானது __________ஆக பயன்படுகிறது.
விடைக்குறிப்பு:
இயற்கை நிறங்காட்டி
7. செம்பருத்தி பூ நிறங்காட்டி அமிலக்கரைசலில் __________ நிறத்தைத் தருகிறது.
விடைக்குறிப்பு:
இளஞ்சிவப்பு
III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.
1. பெரும்பாலான அமிலங்கள் நீரில் கரைவதில்லை.விடைக்குறிப்பு:
தவறு
பெரும்பாலான அமிலங்கள் நீரில் கரைகின்றன.
2. அமிலங்கள் கசப்புச் சுவை உடையவை.
விடைக்குறிப்பு:
தவறு
அமிலங்கள் புளிப்புச் சுவை உடையவை.
3. உலர்ந்த நிலையில் உள்ள காரங்களைத் தொடும்போது அவை வளவளப்புத் தன்மையுடன் காணப்படும்.
விடைக்குறிப்பு:
தவறு
நீர்க் கரைசலில் காரங்களைத் தொடும்போது அவை வளவளப்புத் தன்மையுடன் காணப்படும்.
4. அமிலங்கள் அரிக்கும் தன்மையைக் கொண்டவை.
விடைக்குறிப்பு:
சரி
5. அனைத்துக் காரங்களும் அல்கலிகள் ஆகும்.
விடைக்குறிப்பு:
தவறு
நீரில் கரையும் காரங்களே அல்கலிகள் ஆகும்.
6. செம்பருத்திப்பூ சாறு ஒரு இயற்கை நிறங்காட்டி ஆகும்.
விடைக்குறிப்பு:
சரி
IV. சுருக்கமாக விடையளி.
- புளிப்புச் சுவை கொண்ட வேதிச் சேர்மங்கள் அமிலங்கள்
- எனப்படுகின்றன.
- அனைத்து அமிலங்களும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ரஜன் அணுக்களைப் பெற்றுள்ளன.
- நீரில் கரைக்கும்போது ஹைட்ரஜன் (H+) அயனிகளை வெளியிடுகின்றன.
2. அமிலங்களின் ஏதேனும் நான்கு இயற்பியல் பண்புகளை எழுதுக.
- புளிப்புச் சுவை கொண்டவை.
- அரிக்கும் தன்மை கொண்டவை.
- நிறமற்றவை.
- நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகிறது.
3. அமிலங்கள் மற்றும் காரங்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் யாவை?
- இரண்டும் அரிக்கும் தன்மை கொண்டவை.
- இரண்டும் பொதுவாக நிறமற்றவை.
- நீர்க் கரைசலில் இரண்டுமே மின்சாரத்தை கடத்துபவை.
- நீர்க் கரைசலில் இரண்டுமே அயனிகளைத் தருபவை.
4. அமிலங்கள் மற்றும் காரங்களுக்கு இடையேயான வேற்றுமைகள் யாவை?
|
அமிலங்கள்
|
காரங்கள்
|
|
நீர்க் கரைசலில் H+ அயனிகளைத்
தருபவை.
|
நீர்க் கரைசலில் ОH- அயனிகளைத் தருபவை.
|
|
பொதுவாக திரவ நிலையில் காணப்படுபவை.
|
பொதுவாக திண்ம நிலையில் காணப்படுபவை.
|
|
புளிப்புச் சுவை உடையவை.
|
கசப்புச் சுவை உடையவை.
|
|
நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுபவை.
|
சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றுபவை.
|
5. நிறங்காட்டி என்றால் என்ன?
- ஒரு வேதிப்பொருள் அமிலத்தன்மை உடையதா? அல்லது காரத்தன்மை உடையதா? என்பதை பொருத்தமான நிறமாற்றத்தின் அடிப்படையில் அறிய உதவும் வேதிப்பொருள் நிறங்காட்டி எனப்படும்.
6. நடுநிலையாக்கல் வினை என்றால் என்ன?
- ஒரு அமிலமும், காரமும் வினைபுரிந்து உப்பையும் நீரையும் உருவாக்கும் வினை நடுநிலையாக்கல் வினை எனப்படும்.
7. காரங்களின் ஏநேனும் நான்கு வேதிப் பண்புகளை எழுதுக.
- அலுமினியம் மற்றும் துத்தநாகம் போன்ற உலோகங்கள் சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து சோடியம் அலுமினேட் மற்றும் ஹைட்ரஜன் வாயுவைத் தருகிறது.
- 2Al+2NaOH+2H2O→ 2NaAlO₂ + 3H2
- சோடியம் ஹைடராக்சைடு கார்பன்-டை-ஆக்சைடுடன் வினைபுரிந்து சோடியம் கார்பனேட்டைத் மற்றும் நீரைத் தருகிறது.
- 2NaOH + CO2 → Na2CO + H2O
- அம்மோனியம் உப்புகள் சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து உலோக உப்பு அம்மோனியா வாயு மற்றம் நீரைத் தருகிறது.
- NH4Cl + NaOH→ NaCl NH3 + H₂O
V. விரிவாக விடையளி.
- நமது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவுப்பொருள்களின் செரிமானத்திற்கு உதவுகிறது.
- உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் தடுக்க வினிகர் (அசிட்டிக் அமிலம்) பயன்படுகிறது.
- ஊறுகாய் போன்ற உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பென்சாயிக் அமிலம் பயன்படுகிறது.
- குளியல் சோப்புகள் மற்றும் சலவை சோப்புகள் தயாரிக்க உயர் கொழுப்பு அமிலங்களின் உப்புகள் பயன்படுகின்றன.
- சல்பியூரிக் அமிலம் பல வேதிப்பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
- சல்பியூரிக் அமிலம், ஹைட்ரோ குளோரிக் அமிலம் முக்கியமான வேதிகாரணிகளாக செயல்படுகின்றன.
- அனைத்து உயிரினங்களின் செல்களும் நியூக்ளிக் அமிலங்களை அடிப்படைப் பொருளாக கொண்டுள்ளன.
2. காரங்களின் பயன்கள் யாவை?
|
காரம்
|
பயன்கள்
|
|
பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
|
குளியல் சோப்புகள்
|
|
சோடியம் ஹைட்ராக்சைடு
|
சலவை சோப்புகள், காகித தொழிற்சாலைகள், ஆடைகள், மருந்துகள் தயாரிக்க.
|
|
கால்சியம் ஹைட்ராக்சைடு
|
வெள்ளை அடிக்க.
|
|
அலுமினியம் மற்றும் மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
|
வயிற்றில் உருவாகும் அமிலத் தன்மையை
நடுநிலையாக்க.
|
|
அம்மோனியம் ஹைட்ராக்சைடு
|
உரங்கள், நைலான்கள்,
நெகிழிகள் மற்றும் இரப்பர்கள் தயாரிக்க.
|
3. நமது அன்றாட வாழ்வில் நடைபெறும் நடுநிலையாக்கல் வினைகளை விளக்குக.
தேனி கொட்டுதல்:
- தேனீ அல்லது எறும்பு கடிக்கும் போது தோலினுள் ஃபார்மிக் அமிலம் உட்செலுத்தப்படுகிறது. இது எரிச்சல் உணர்வு மற்றும் வலியினை உண்டாக்குகிறது.
- வலி மற்றும் எரிச்சல் உணர்வுள்ள இடத்தில் கால்சியம் ஹைட்ராக்சைடை (சுண்ணாம்பு) தேய்த்து ஃபார்மிக் அமிலம் நடுநிலையாக்கப்படுகிறது.
- குளவி கொட்டும் போது ஏற்படும் எரிச்சல், வலிக்கு காரணம் உட்செலுத்தப்படும் அல்கலி என்ற காரப்பொருள் ஆகும். இதனை அமிலத்தன்மை கொண்ட வினிகர் நடுநிலையாக்க பயன்படுத்தப்படுகிறது.
- நம் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் பற்களின் இடைவெளியில் சிக்கியுள்ள உணவுத் துகள்களை சிதைத்து அமிலத்தை உருவாக்குகிறது.
- இது பற்சிதைவுக்கு வழி வகுக்கிறது. இதனை தடுக்க வலிமை குறைந்த காரங்களைக் கொண்ட பல்பொடி அல்லது பற்பசையை கொண்டு துலக்கும் போது அமிலம் நடுநிலையாக்கப்படுகிறது.
- நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகப்படியான சுரப்பின் காரணமாகவும், உணவைத் தவிர்க்கும் சூழ்நிலையிலும்,வயிறு மற்றும் உணவுக் குழாய்களில் புண் உருவாகி நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.
- இதனை நடுநிலையாக்க வலிமை குறைந்த காரங்கள் அலுமினியம் மற்றும் மெக்னீசியம் ஹைட்ராக்சைடு கலவை அமில நீக்கியாக பயன்படுகிறது.
- அதிக அமிலத்தன்மை உடைய மண் தாவர வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. இதனை சரி செய்ய விவசாயிகள் சுண்ணாம்பு, சுண்ணாம்பு கற்கள் அல்லது மரங்களை எரித்துக் கிடைத்த சாம்பல் உரங்களை சேர்த்து மண்ணை நடுநிலையாக்குகின்றனர்.
- ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெளியேறும் தொழிற்சாலை கழிவுகளில் உள்ள சல்பியூரிக் அமிலம் சுண்ணாம்பு சேர்ப்பதால் நடுநிலையாக்கப்படுகிறது.
4. மஞ்சள் தூளிலிருந்து எவ்வாறு இயற்கை நிறங்காட்டியைத் தயாரிப்பாய்?
- மஞ்சள் தூளில் சிறிது நீர் சேர்க்கப்பட்டு மஞ்சள் தூள் பசை தயாரிக்கப்படுகிறது.
- இதனை மை உறிஞ்சும் தாள் அல்லது வடிதாளின் மீது பூசி பின்பு உலர்த்தி நிறங்காட்டி தயாரிக்கப்படுகிறது.
- கரைசலின் அமில, கார தன்மையை கண்டறிய மஞ்சள் தூள் நிறங்காட்டி பயன்படுகிறது.
- அமிலக் கரைசல் - மஞ்சள் நிறம்.
- காரக் கரைசல் - சிவப்பு நிறம்
VI. உயர் சிந்தனை வினாக்கள்.
1. விணுபாலன் மற்றும் ப்ரியன் பள்ளியில் மதிய உணவினை எடுத்துக் கொள்கிறார்கள். விணுபாலன் எலுமிச்சை சோறு, பிரியன் தயிர் சோறும் சாப்பிடுகிறார்கள். எலுமிச்சை சோறு மற்றும் தயிர் சோறு இரண்டும் என்ன தன்மை உடையவை. அந்த சுவைக்குக் காரணம் என்ன?- இரண்டும் அமிலத்தன்மை உடையது.
- இரண்டும் புளிப்பச் சுவை உடையது.
- காரணம் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலமும், தயிரில் லாக்டிக் அமிலமும் உள்ளது. அமிலங்கள் புளிப்பு சுவை உடையது.
2. ஹேஸ்னாவும், கீர்த்தியும் நண்பர்கள். கீர்த்தியின் பற்களில் பற்சிதைவு இல்லை. ஆனால், ஹேஸ்னாவின் பற்களில் பற்சிதைவு உள்ளது. ஏன்? எதனால் பற்சிதைவு ஏற்படுகிறது?
- ஹேஸ்னா தன்னுடைய பற்களை சரியாக சுத்தம் செய்யாத காரணத்தால் பற்சிதைவு உள்ளது.
- வாயில் உள்ள பாக்டீரியாக்கள் பற்களிடையே உள்ள உணவுத் துகள்களை சிதைத்து அமிலத்தை உருவாக்குவதால் பற்சிதைவு ஏற்படுகிறது.







0 Comments:
Post a Comment