Tamil Nadu Board 8th Standard Science - Unit 21: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 21 – from the Tamil Nadu State Board 8th Standard Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 21 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 21: பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மண்ணில் விதைகளை இடும் செல்முறையின் பெயர் __________.அ) உழுதல்
ஆ) விதைத்தல்
இ) பயிர்ப்பெருக்கம்
ஈ) பயிர்ச் சுழற்சி
விடைக்குறிப்பு:
ஆ) விதைத்தல்
2. மண் பரப்பில் பாய்ந்து மண்ணினுள் ஊடுருவும் முறை __________
அ) நீர்ப் பாசனம்
ஆ) பரப்பு நீர்ப் பாசனம்
இ) தெளிப்பு நீர்ப் பாசனம்
ஈ) சொட்டு நீர்ப் பாசனம்
விடைக்குறிப்பு:
ஆ) பரப்பு நீர்ப் பாசனம்
3. பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளையும், சிறு பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் உயிரினங்கள்
அ) உயிரி-பூச்சிக் கொல்லிகள்
ஆ) உயிரி-உரங்கள்
இ) மண்புழுக்கள்
ஈ) வேம்பு இலைகள்
விடைக்குறிப்பு:
அ) உயிரி-பூச்சிக் கொல்லிகள்
4. திறன்மிக்க நுண்ணுயிரிகளின் தயாரிப்பு எதில் பயன்படுவது இல்லை?
அ) விதை நேர்த்தி செய்தல்
ஆ) இலைத்தெளிப்பு
இ) மண் நேர்த்தி செய்தல்
ஈ) உயிரி-கொன்றுண்ணிகள்
விடைக்குறிப்பு:
ஆ) இலைத்தெளிப்பு
5. பின்வருவனவற்றுள் பஞ்சகவ்யாவில் இல்லாதது எது?
அ) பசுவின் சாணம்
ஆ பசுவின் சிறுநீர்
இ) தயிர்
ஈ) சர்க்கரை
விடைக்குறிப்பு:
ஈ) சர்க்கரை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஓர் இடத்தில் வளரக்கூடிய பயிர்களைப் பிடுங்கி வேறொரு வளரிடத்தில் நடவு செய்யும் முறை __________ ஆகும்.விடைக்குறிப்பு:
நாற்று நடுதல்
2. விரும்பாத இடத்தில் வளரும் தாவரத்தின் பெயர் __________.
விடைக்குறிப்பு:
களைகள்
3. களைகளைக் கொள்வதற்கு அல்லது அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்குப் பயன்படும் வேதிப்பொருளின் பெயர் __________.
விடைக்குறிப்பு:
களைக் கொல்லிகள்
4. __________ விதைகள் தனது தனித்துவப் பண்புகளை அதன் வழித் தோன்றலுக்குக் கடத்துகின்றன.
விடைக்குறிப்பு:
பாரம்பரிய
5. மையங்கள் ICAR மற்றும் விவசாயிகளுக்கிடையேயான இறுதி இணைப்பாகச் செயல்படுகின்றன.
விடைக்குறிப்பு:
க்ரிஷி விஞ்ஞான கேந்த்ரா
6. அதிக விளைச்சலைத் தரக்கூடிய பெரும் பயிர் வகைகள் __________ ஆல் உருவாக்கப்பட்டுள்ளன.
விடைக்குறிப்பு:
IARI
III. பொருத்துக.
|
1
|
உயிரி-பூச்சிக் கொல்லிகள்
|
வேப்பிலைகள்
|
|
2
|
உயிரி-கொன்றுண்ணிகள்
|
பேசில்லஸ் துரின்ஜியென்சிஸ்
|
|
3
|
உயிரி-உரங்கள்
|
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துகிறது
|
|
4
|
உயிரி-சுட்டிக்காட்டிகள்
|
மண் வளத்தை மேம்படுத்தல்
|
|
5
|
உயிரி-பூச்சி விரட்டிகள்
|
சூழ்நிலையின் தரம்
|
|
1
|
உயிரி-பூச்சிக் கொல்லிகள்
|
பேசில்லஸ் துரின்ஜிபென்சிஸ்
|
|
2
|
உயிரி-கொன்றுண்ணிகள்
|
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துகிறது
|
|
3
|
உயிரி-உரங்கள்
|
மண் வளத்தை மேம்படுத்தல்
|
|
4
|
உயிரி-சுட்டிக்காட்டிகள்
|
சூழ்நிலையின் தரம்
|
|
5
|
உயிரி-பூச்சி விரட்டிகள்
|
வேப்பிலைகள்
|
IV. சுருக்கமான விடையளி.
1. உழுதல் வரையறு.- விவசாயப் பயிர்களின் வேர்ப்பகுதியில் ஊட்டப்பொருட்கள் கிடைப்பதற்கு மண்ணை மேல்கீழாக மாற்றி மற்றும் தளர்வடையச் செய்யும் முறை உழுதல் எனப்படும்.
2. விதைத்தலின் வகைகளைப் பட்டியலிடுக.
- அ) கைகளால் விதைத்தல்
- ஆ) விதைக்கும் கருவி மூலம் விதைத்தல்
- இ) ஊன்றுதல்
3. இலைப்பரப்பில் தெளித்தல் என்றால் என்ன?
- இலையில் தெளிப்பு எனப்படுவது திரவநிலை உரங்களை இலைகளில் நேரடியாக செலுத்தி தாவரங்களுக்கு ஊட்டமளிக்கும் நுட்பம் ஆகும்.
4. கிரிஷி விஞ்ஞான கேந்திரா பற்றி ஒரு சிறு குறிப்பு தருக.
- க்ரிஷி விஞ்ஞான கேந்திரா ஒரு வேளாண் அறிவியல் நிலையமாகும்.
- இந்த மையம் இந்தியா வேளாண் ஆராய்ச்சி கழகம் (ICAR) மற்றும் விவசாயிகளுக்கு இடையேயான இணைப்பாக செயல்படுகிறது.
- உள்ளூரில் வேளாண்மை ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை பயன்படுத்துதல் இவைகளில் நோக்கமாகும்.
- முதல் KVK 1974-ல் பாண்டிச்சேரியில் நிறுவப்பட்டது.
5. உயிரி-சுட்டிக்காட்டிகள் என்றால் என்ன? மனிதருக்கு இவை எவ்வாறு உதவுகின்றன?
- சுற்றுச்சூழலின் தரம் சார்ந்த நிலைகளை வெளிப்படுத்தக்கூடிய ஓர் உயிரினம் அல்லது இனங்களின் தொகுப்பு உயிரி சுட்டிகள் அல்லது உயிரியல் சுட்டிக்காட்டிகள் எனப்படும்
- மண்வளம் பற்றிய உயிரி சுட்டிக்காட்டிகள் மண் அமைப்பு மேம்பாடு, ஊட்டப் பொருள் சேமிப்பு மற்றும் உயிரினங்களில் செயல்பாடுகளை பற்றிய தகவல்களை அளிக்கிறது.
6. களையெடுத்தல் என்பதன் பொருள் என்ன?
- விவசாய நிலத்தில் முக்கியகியமான பயிர் வகைகளுடன் பல விரும்பதகாத தாவரங்கள் வளரலாம்.
- இந்ததாவரங்களை நீக்கப்படுதல் களையெடுத்தல் எனப்படும்.
7. பயிர்ச் சுழற்சி என்றால் என்ன?
- ஒரே இடத்தில் ஒரு குறிப்பிட்ட கால வரிசையில் பலவகைப் பயிர்களை வரிசையாகப் பயிரிடும் முறை பயிர்சுழற்சி எனப்படும்.
8. பசுந்தழை உரம் என்றால் என்ன?
- விவசாயிகள் நாற்று நடுவதற்கு முன்பாக வேம்பு, அவரை மற்றும் பல லெகுமினஸ் வகை பசுந்தாவரங்களை உழும் பொழுது மூழ்கச் செய்து மண்ணின் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கச் செய்வது பசுத்தழை உரம் எனப்படும்.
V. விரிவான விடையளி.
1. வேளாண் செயல்முறைகளை விவரி?i) காரிப் பயிர்கள்:
- (ஜூன் - செப்டம்பர் மாதம் வரை) இந்த பயிர்கள் மழைக்காலங்களில் விதைக்கப்படுகிறது.
- எ.கா: நெல், சோளம், சோயா மொச்சை, நிலக்கடலை, பருத்தி போன்றவை காரிப் பயிர்களாகும்.
- குளிர் காலங்களில் வளர்க்கப்படும் பயிர்களாகும்.
- எ.கா: கோதுமை, பருப்பு, பட்டாணி, கடுகு மற்றும் ஆளி விதை
- கோடைக்காலங்களில் வளர்க்கப்படும் பயிர்களாகும்.
- எ.கா: தர்பூசணி, வெள்ளரி
- நெல் மற்றும் சோளம் மனித பயன்பாட்டிற்காக வளர்க்கப்படுகிறது.
- கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுகிறது.
- மக்காச்சோளம் மற்றும் சிறு தானியங்கள்.
- கயிறு தயாரிக்க உதவும் நார்கள் மற்றும் துணி ஆலை நார்கள் தயாரிக்க இந்த வகைப் பயிர்கள் பயன்படுகிறது.
- எ.கா: பருத்தி, புளிச்சை
- மனித பயன்பாட்டிற்கு அல்லது தொழிற்சாலை பயன்பாட்டிற்கு எண்ணெய் பயிர்கள் பயன்படுகிறது.
- எ.கா: நிலக்கடலை, எள்
- நிலத்தில் இயற்கை அலகுத் தோட்டங்களை மேம்படுத்த வளர்க்கப்படுகின்றன.
- எ.கா: குரோட்டன்
2. நீர்ப்பாசன முறைகளைப் பற்றி விளக்குக.
அ) பாரம்பரிய முறைகள்
ஆ) நவீன முறைகள்
அ) பாரம்பரிய முறைகள்:
- இங்கு ஒரு விவசாயி கிணற்றிலிருந்து அல்லது நீர் கால்வாயிலிருந்து தானாகவோ அல்லது எருதுகளின் உதவியுடனோ நீரை இழுத்து விவசாய நிலத்தில் பாய்ச்சுகிறார்.
- டீசல், உயிர் வாயு, மின்சாரம் மற்றும் சூரிய ஆற்றல் இந்த விசையியக்க கருவிகளை இயக்க தேவையான சில முக்கிய ஆற்றல் ஆதாரங்களாகும்.
- இம்முறை மிக மலிவானது என்பது இம்முறையின் முக்கியமான நிறையாகும்.
i. தெளிப்பு நீர் பாசன அமைப்பு:
- தெளிப்பு நீர்ப்பாசனம் உந்துவிசையியக்க கருவி ஒன்று குழாய்களோடு இணைக்கப்படுகிறது இது அழுத்தத்தை உருவாக்குவதால் குழாயின் நுண்துளையின் வழியாக நீர் தெளிக்கப்படுகிறது.
- நீர் குழாயினை பயன்படுத்தி சரியாக வேர் பகுதியில் நீரானது சொட்டு சொட்டாகவிடப்படுகிறது.
3. களை என்றால் என்ன? களைக் கட்டுப்பாட்டின் பல்வேறு முறைகளை விளக்குக.
களை:
- விவசாய நிலத்தில் முக்கிய பயிர் வகைகளுடன் பல விரும்பத்தகாத தாவரங்கள் வளரலாம். இந்த தாவரங்கள் களை எனப்படும்.
i இயந்திர முறைகள்:
- இயந்திர முறை சுளைகள் நீக்கப் பயன்படும் ஒரு பொதுவான முறையாகும். களை கொத்தி உதவியுடன் கையினால் நீக்குதல்.
- அனைத்து வகை களைகளையும் அழிப்பதற்கான ஒரு வகை செயல் முறையாகும்.
- ஆழமாக உழுவதால் களைகள் மண்ணில் புதைக்கப்படுகிறது அல்லது சூரிய வெப்பத்தில் இடப்படுகிறது.
- ஒரே இடத்தில் ஒரு குறிப்பிட்ட கால வரிசையில் பலவகைப் பயிர்களை வரிசையாகப் பயிரிடப்படுகிறது.
- குளிர் பருவ அறுவடைக்குப் பிறகு நடக்கும் ஆழமான உழுதல் மற்றும் கோடை காலங்களில் களைகளின் தரைகீழ்ப் பகுதிகளை தீவிர சூரிய ஒளிக்கு உட்படுத்துல் ஓராண்டு மற்றும் பல்லாண்டு களைகளை அழிப்பதற்கு பயனுள்ளதாக உள்ளது.
- இந்த முறையில் பூச்சிகள் மற்றும் நோயூக்கிகள் போன்ற உயிர் காரணிகள் களைகளின் கட்டுப்பாட்டிற்கு பயன்படுகிறது.
- களைகளை கொல்வதற்கு அல்லது அவற்றின் வளர்ச்சியை தடுப்பதற்கு பயன்படும் வேதிப்பொருட்கள் கொல்லிகள் எனப்படும்.
- இது பலவகை உழவியல் செயல்பாடுகளைக் கொண்டது.
- ஏதேனும் ஒரு களை கட்டுப்பாட்டு நுட்பம் குறைக்கப்படும் அளவிற்கு களை மேலாண்மையில் களைக் கொல்லி பயன்படுகிறது.







0 Comments:
Post a Comment