Tamil Nadu Board 8th Standard Science - Unit 20: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 20 – from the Tamil Nadu State Board 8th Standard Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 20 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 20: வளரிளம் பருவமடைதல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. __________ வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம் எனப்படும்.அ) 10 முதல் 16
ஆ) 11 முதல் 17
இ) 11 முதல் 19
ஈ) 11 முதல் 20
விடைக்குறிப்பு:
இ) 11 முதல் 19
2. உயிரினங்கள் பாலின முதிர்ச்சியடையும் காலம் __________ என்று அழைக்கப்படுகிறது.
அ) பருவமடைதல்
ஆ) வளரிளம் பருவம்
இ) வளர்ச்சி
ஈ) முதிர்ச்சி
விடைக்குறிப்பு:
அ) பருவமடைதல்
3. பருவமடைதலின்போது, இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதி ஆனது __________ ல் அகன்று காணப்படுகிறது.
அ) ஆண்கள்
ஆ) பெண்கள்
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவுமில்லை
விடைக்குறிப்பு:
ஆ) பெண்கள்
4. ஆடம்ஸ் ஆப்பிள் என்பது இதன் வளர்ச்சியைக் குறிக்கிறது
அ) தொண்டைக்குழி
ஆ) தைராய்டு
இ) குரல்வளை
ஈ) பாரா தைராய்டு
விடைக்குறிப்பு:
இ) குரல்வளை
5. வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் __________ சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன.
அ) வியர்வை
ஆ) எண்ணெய்
இ) வியர்வை மற்றும் எண்ணெய்
ஈ) எதுவுமில்லை
விடைக்குறிப்பு:
ஆ) எண்ணெய்
6. விந்து செல்லானது __________ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது.
அ) ஆண்குறி
ஆ) அண்டகம்
இ) கருப்பை
ஈ) விந்தகங்கள்
விடைக்குறிப்பு:
ஈ) விந்தகங்கள்
7. நாளமில்லா சுரப்பினால் உற்பத்தி செய்யப்படும் வேதிப் பொருள்கள் __________ எனப்படும்.
அ) ஹார்மோன்கள்
ஆ) நொதிகள்
இ) புரதங்கள்
ஈ) கொழுப்பு அமிலங்கள்
விடைக்குறிப்பு:
அ) ஹார்மோன்கள்
8. ஆன்ட்ரோஜன் உற்பத்தி __________ ஆல் ஒழுங்குப்படுத்தபடுகிறது.
அ) GH ஹார்மோன்
ஆ) LH ஹார்மோன்
இ) TSH ஹார்மோன்
ஈ) ACTH ஹார்மோன்
விடைக்குறிப்பு:
ஆ) LH ஹார்மோன்
9. மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு __________.
அ) குறைகிறது
ஆ) அதிகரிக்கிறது
இ) நின்று விடுகிறது
ஈ) இயல்பாக உள்ளது.
விடைக்குறிப்பு:
இ) நின்று விடுகிறது
10. நமது வாழ்வின் பிந்தைய பகுதியில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க __________ எடுத்துக் கொள்வது அவசியம்.
அ) பொட்டாசியம்
ஆ) பாஸ்பரஸ்
இ) இரும்பு
ஈ) கால்சியம்
விடைக்குறிப்பு:
ஈ) கால்சியம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. பெண்களில் அண்டகத்தால் __________ உற்பத்தி செய்யப்படுகிறது.விடைக்குறிப்பு:
ஈஸ்ட்ரோஜன்
2. இனப்பெருக்க உறுப்புகளால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் __________ ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.
விடைக்குறிப்பு:
லூட்டினைசிங் ஹார்மோன்
3. பாலூட்டுதலின் போது பால் உற்பத்தியானது __________ ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது.
விடைக்குறிப்பு:
புரோலாக்டின்
4. ஆண் மற்றும் பெண் இனச் செல்கள் இணைந்து __________ ஐ உருவாக்குகின்றன.
விடைக்குறிப்பு:
கரு
5. பருவமடைதலின் போது ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சி __________ என்று அழைக்கப்படுகிறது.
விடைக்குறிப்பு:
பூப்படைதல்
6. பொதுவாக அண்டம் விடுபட்ட 14 நாட்களுக்குப் பின் __________ ஏற்படுகிறது.
விடைக்குறிப்பு:
மாதவிடாய்
7. __________ என்பது புரதங்கள், கார்போ ஹைட்ரேட்டுகள், கொழுப்பு மற்றும் உயிர்ச் சத்துக்களை குறிப்பிட்ட அளவில் உள்ளடக்கியதாகும்.
விடைக்குறிப்பு:
சரிவிகித உணவு
8. தைராய்டு சுரப்பி தொடர்புடைய நோய்களைத் தடுப்பதில் __________ உதவுகிறது.
விடைக்குறிப்பு:
அயோடின்
9. இரும்புச் சத்துப் பற்றாக்குறை __________ க்கு வழிவகுக்கிறது.
விடைக்குறிப்பு:
இரத்த சோகை
10. பெண்களில் கருவுறுதல் __________ ல் நிகழ்கிறது.
விடைக்குறிப்பு:
பெலோப்பியன் நாளத்தி
III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.
1. ஆண்கள் மற்றும் பெண்களில் பருவமடைதலின் போது, திடீரென உயரம் அதிகரிக்கின்றது.விடைக்குறிப்பு:
2. கருப்பையிலிருந்து அண்டம் வெளியேறுதல் அண்டம் விடுபடுதல் என அழைக்கப்படுகிறது.
விடைக்குறிப்பு:
தவறு
அண்டகத்திலிருந்து அண்டம் வெளியேறுதல் அண்டம் விடுபடுதல் என அழைக்கப்படுகிறது.
3. கர்ப்பத்தின் போது, கார்பஸ்லூட்டியம் தொடர்ந்து வளர்ந்து அதிக அளவில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரானை உற்பத்தி செய்கிறது.
விடைக்குறிப்பு:
தவறு
கர்ப்பத்தின் போது, கார்பஸ்லூட்டியம் தொடர்ந்து வளர்ந்து அதிக அளவில் புரோஜெஸ்டிரானை உற்பத்தி செய்கிறது.
4. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் அல்லது டாம்பூன்களைப் பயன்படுத்துதல் நோய்த் தொற்றிற்கான அதிகரிக்கின்றது.
விடைக்குறிப்பு:
தவறு
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் அல்லது டாம்பூன்களைப் பயன்படுத்துதல் நோய்த் தொற்றிற்கான
குறைக்கிறது.
5. சுத்தமான கழிவறைகளை மலம் கழிக்கப் பயன்படுத்துதல் ஒரு நல்ல பழக்கமாகும்.
விடைக்குறிப்பு:
சரி
IV. பொருத்துக.
|
1
|
பருவமடைதல்
|
டெஸ்ட்டோஸ்டீரான்
|
|
2
|
ஆடம்ஸ் ஆப்பிள்
|
தசை உருவாக்கம்
|
|
3
|
ஆண்ட்ரோஜன்
|
45 முதல் 50 வயது
|
|
4
|
ICSH
|
பாலின முதிர்ச்சி
|
|
5
|
மாதவிடைவு
|
குரலில் மாற்றம்
|
|
1
|
பருவமடைதல்
|
பாலின முதிர்ச்சி
|
|
2
|
ஆடம்ஸ் ஆப்பிள்
|
குரலில் மாற்றம்
|
|
3
|
ஆண்ட்ரோஜன்
|
தசை உருவாக்கம்
|
|
4
|
ICSH
|
டெஸ்ட்டோஸ்டீரான்
|
|
5
|
மாதவிடைவு
|
45 முதல் 50 வயது
|
V. சுருக்கமான விடையளி.
1. வளரிளம் பருவம் என்றால் என்ன?- வளரிளம் பருவம் என்ற சொல்லானது அடோலசர்' என்ற இலத்தின மொழி வர்த்தையிலிருந்து வந்ததாகும்.
- இதன் பொருள் 'வளர்வதற்க்க' அல்லது 'முதிர்ச்சிக்கான வளர்ச்சி' எனப் பொருளாகும்.
2. பருவமடைதலின் போது ஏற்படும் மாற்றங்களைப் பட்டியலிடுக.
- உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள்.
- உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்
- முதல்நிலை பால் பண்புகளின் வளர்ச்சி.
- இரண்டாம்நிலை பால் பண்புகளின் வளர்ச்சி
3. இரண்டாம்நிலை பால் பண்புகள் என்றால் என்ன?
- இரண்டாம்நிலை பால் பண்புகள் ஆண்கள் மற்றும் பெண்களிடையே உடல் அமைப்பில் வேறுபாட்டை ஏற்படுத்துகின்றன.
- இவை ஆண்களில் விந்தகங்களால் சுரக்கப்படும் டெஸ்ட்ரோஸ்டீரான் அல்லது ஆண்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோனாலும், பெண்களில் அண்டகங்களில் சுரக்கப்படும் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோனாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
4. கருவுறுதல் என்றால் என்ன?
- ஆண் இனச்செல்லான விந்துச் செல்லும், பெண் இனச்செல்லான அண்டமும் இணைந்து கருவினை தோற்றுவிக்கும் நிகழ்ச்சி கருவுறுதல்.
5. பூப்படைதல் - குறிப்பு வரைக.
- பருவமடைதலின் போது முதன்முதலில் தோன்றும் மாதவிடாய் சுழற்சி பூப்படைதல் எனப்படுகிறது.
- பருவமடைதலின் தொடக்க நிலையில் அண்டம் முதிர்ச்சியடைகிறது.
6. கருவுறுதல் நிகழ்வை விளக்குக.
- அண்டகத்திலிருந்து விடுபட்ட அண்டம் பெலோப்பியன் நாளத்தை அடைந்தவுடன் விந்தணுவினை சந்திக்கும் பொழுது கருவுறுதல் நடைபெறுகிறது.
- கருவுற்ற முட்டை வளர்ச்சியடைந்தவுடன், அது கருப்பையில் பதிய வைக்கப்படுகிறது.
- கார்பஸ்லூட்டியத்திலிருந்து அதிக புரோஜெஸ்ட்டிரான் உற்பத்தி செய்யப்படுகிறது. இது கர்ப்பத்தைத் தோற்றுவிக்கிறது.
- பொதுவாக இது 280 நாட்கள் நீடிக்கும். இதன் முடிவில் குழந்தைப் பிறப்பு உண்டாகிறது.
7. பெண்களில், மாதவிடாய் சுழற்சியின் போது தூய்மையின் முக்கியத்துவம் பற்றிக்கூறுக.
- மாதவிடாய் சுழற்சியின் போது பெண்கள் தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டும். துணிகளை விட சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டும்.
- ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் அல்லது டாம்பூன்களைப் பயன்படுத்துதல் நோய் தொற்றிற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
- மாதவிடாய் அளவைப் பொறுத்து அவை அடிக்கடி மாற்றப்பட வேண்டும்.
8. வளரிளம் பருவம் குழந்தைப் பருவத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
| குழந்தைப் பருவம் | வளரிளம் பருவம் |
| இது குழந்தை பிறப்புக்கும் 11 வயது வரைக்குமுள்ள காலத்தை குறிப்பதாகும். | இது 11 வயது முதல் 19 வயது வரைக்கும் உள்ள காலத்தினை குறிப்பதாகும். |
| பால்பற்கள் விழுந்து நிரநதர பற்கள்
தோன்றுகிறது. | முதல் நிலை பால் பண்புகளின் வளர்ச்சி மற்றும் இரண்டாம் நிலைப் பால் பண்டகள் தோன்ற ஆரம்பிக்கின்றது. |
| குழந்தைகளின் மூளை 70% வரைக்கும் வளர்ச்சியடைகிறது. | உயரம், எடை,
பால் உறுப்புகள், தசை தொகுப்பு, மூளையின் அமைப்பு மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது. |
VI. விரிவான விடையளி.
1. வளரிளம் பருவத்தில் ஆண்கள் மற்றும் பெண்களில் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள் யாவை?அ. உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள்
ஆ.உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்
இ. முதல்நிலை பால் பண்புகளின் வளர்ச்சி
ஈ. இரண்டாம்நிலை பால் பண்புகளின் வளர்ச்சி
அ) உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள்:
- பருவமடையும் நேரத்தில் ஏற்படும் முதல் பெரிய மாற்றம் வளர்ச்சியாகும்.
- இது உடலின் உயரம் மற்றும் எடையில் ஏற்படும் அதிகரிப்பாகும்.
- வழக்கமாக பெண்களில் இது 10 முதல் 12 வயதில் துவங்கி 17 முதல் 19 வயதில் முடிவடைகிறது.
- ஆண்களில் 12 முதல் 13 வயதில் துவங்கி 19 முதல் 20 வயதில் முடிவடைகின்றது.
- இந்தக் காலகட்டத்தில் ஆண்களில் தசை வளர்ச்சியும், பெண்களில் கொழுப்பின் அளவும் அதிகரிகிறது.
- குழந்தைகளாக இருந்தபோது சிறியதாகக் காணப்பட்ட சில குறிப்பிட்ட உடல் பாகங்கள் படிப்படியாக அளவில் பெரிதாகி முதிர்ச்சியடைகின்றன.
- மேலும், உடல் பகுதியில் இடுப்பு மற்றும் தோள்பட்டை ஆகியவை விரிவடைந்து உடலானது வயது வந்தோரின் தோற்றத்தைப் பெறுகிறது.
- பருவமடைதலின் போது ஆண்கள் மற்றும் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் முழுமையாக செயல்படுகின்றன.
- ஆண்களில், விந்தகங்கள் பெரிதாக வளர்ச்சியடைவதைத் தொடர்ந்து இனப்பெருக்க உறுப்பின் நீளம் மற்றும் அதன் அளவு அதிகரிக்கின்றது.
- இதேபோல், பெண்களின் இனப்பெருக்க உறுப்பும் பருவமடைதலின் போது வளர்ச்சி அடைகின்றது. இதனால், கருப்பையின் அளவு மற்றும் அண்டகங்களின் எடை ஆகியவை இப்பருவத்தில் அதிகரிக்கின்றன.
- இரண்டாம்நிலை பால் பண்புகள் ஆண்கள் மற்றும் பெண்களிடையே உடல் அமைப்பில் வேறுபாட்டை ஏற்படுத்துகின்றன.
- இவை ஆண்களில் விந்தகங்களால் சுரக்கப்படும் டெஸ்ட்ரோஸ்டீரான் அல்லது ஆண்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோனாலும், பெண்களில் அண்டகங்களில் சுரக்கப்படும் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோனாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
2. இனப்பெருக்கத்தில் ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.
- ஆண்கள் மற்றும் பெண்களில் இனப்பெருக்கம் மற்றும் இனப்பெருக்க நடத்தைகள் முக்கியமாக LH (லூட்டினைசிங் ஹார்மோன்) மற்றும் FSH (பாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன்) ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
- பெண்களில் FSH எனும் ஹார்மோன் கிராஃபியன் பாலிக்கிள்களின் வளர்ச்சியைத் தூண்டி ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி செய்கிறது.
- ஆண்களில் விந்து நாளங்களின் வளர்ச்சி மற்றும் விந்தணுவாக்கத்தில் இது அவசியமாகிறது.
- பெண்களில் அண்டம் விடுபடுதல், கார்பஸ்லூட்டியம் உருவாக்கம் மற்றும் லூட்டியல் ஹார்மோனான புரோஜெஸ்ட்டிரான் உற்பத்தி, கிராஃபியன் பாலிக்கிள்களின் இறுதி முதிர்வுநிலை ஆகியவற்றிற்கு இந்த ஹார்மோன் தேவைப்படுகிறது.
- ஆண்களில் விந்தகங்களில் காணப்படும் இடையீட்டுச் (லீடிக்) செல்களை தூண்டி டெஸ்டோஸ்டீரானை உற்பத்தி செய்வதால், இது இடையீட்டுச் செல்களைத் தூண்டும் ஹார்மோன் எனப்படுகிறது. (ICSH)
- பாலூட்டுதலின் போது பாலை உற்பத்தி செய்வது இதன் பணியாகும்.
- ஆக்சிடோசின் ஹார்மோன் மார்பகங்களிலிருந்து பால் வெளியேறுதலுக்குக் காரணமாகிறது.
- மேலும், குழந்தைப் பிறப்பின் போது தசைகளை சுருங்கச் செய்து குழந்தைப் பிறப்பை எளிதாக்குகிறது.
3. மாதவிடாய் சுழற்சியினைப் பற்றி சுருக்கமாக விவரி.
- ஒரு பெண் சுமார் 10 முதல் 20 வயதில் பருவ வயதை அடையும் போது, அவளது இரத்தத்தில் வெளியாகும் பாலியல் ஹார்மோன்கள் அவளது அண்டகத்தில் உள்ள சில அண்டத்தை முதிர்ச்சியடையச் செய்கின்றன.
- பொதுவாக ஒரு அண்டகத்திலிருந்து ஒரு முதிர்ச்சியடைந்த அண்டமானது, 28 நாட்களுக்கு ஒருமுறை அண்டநாளத்தை வந்தடைகிறது. இது அண்டம் விடுபடுதல் என்றழைக்கப்படுகிறது.
- அண்டம் விடுபடுதலுக்கு முன், கருப்பையின் சுவரானது தடித்து, மென்மையானதாகவும், முழுவதும் சிறிய இரத்தக் குழாய்களைக் கொண்டும் காணப்படுகிறது. இது கருவுற்ற முட்டையை ஏற்க தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது.
- அண்டமானது கருவுறுவில்லையெனில், தடித்த மென்மையான கருப்பைச் சுவர் தேவைப்படாது. எனவே, அது சிதைந்து விடுகிறது. ஆதனால், தடித்து, மென்மையான கருப்பைச் சுவர் இரத்தக் குழாயுடன் சேர்ந்து சிதைந்த அண்டத்துடுன் கால்வாயின் வழியாக இரத்தமாக வெளியேறுகிறது. இதுவே மாதவிடாய் எனப்படுகிறது.
- அண்டம் விடுபடுதலிலிருந்து 14-ஆவது நாள் தோன்றும் மாதவிடாய் 3 முதல் 4 நாட்கள் வரை காணப்படுகிறது.
- மாதவிடாய் முடிந்ததும், அடுத்த கருமுட்டையைப் பெற கருப்பையின் உட்புறப் பகுதி தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது.
- இந்த நிகழ்வின்போதும் அண்டமானது கருவுறவில்லையெனில், மறுபடியும் மாதவிடாய் நடைபெறுகிறது. பெண்களில் 28 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும்.
4. வளரிளம் பருவத்தினருக்கான ஊட்டச்சத்துத் தேவைகள் பற்றி சுருக்கமாக விளக்குக.
- வளரிளம் பருவம் என்பது விரைவான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான ஒரு நிலையாகும்.
- எனவே, முறையான வளர்ச்சி மற்றும் உடல் செயல்பாடுகளுக்கு சரியான ஆற்றல் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு தேவைப்படுகிறது.
- வளரிளம் பருவத்தில் எலும்பின் எடை மற்றும் இரத்தத்தின் கனஅளவு அதிகரிப்பதால், உடலுக்கு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற சுனிமங்கள் தேவைப்படுகின்றன.
- நமது வாழ்வின் பிந்தைய பகுதியில் உண்டாகும் ஆஸ்டியோபோரோ சிஸைத் (எலும்பு உடையும் தன்மை) தடுக்க கால்சியத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
- இது பால் மற்றும் பால் பொருள்களில் காணப்படுகிறது. பால் ஒரு சரிவிகித உணவாகும்.
- மேலும் தாய்ப்பால் சரியான ஊட்டச்சத்தினை வழங்குகிறது.
- தைராய்டு சுரப்பி தொடர்பான நோய்களைத் தடுக்க இது உதவுகிறது.
- இரத்தத்தை உருவாக்குவதில் இரும்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
- இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான பச்சை இலை காய்கறிகள், வெல்லம், இறைச்சி, சிட்ரஸ் பழங்கள், நெல்லிக்காய் மற்றும் முழு பருப்பு வகைகள் ஆகியவை வளரிளம் பருவத்தினருக்கு உகந்தவையாகும்.
- உணவில் உள்ள இரும்புச் சத்துக் குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்துகிறது
- எனவே, வளரிளம் பருவத்தினருக்கு இரும்புச் சத்து நிறைந்த உணவு அவசியமாகும்.
- ஆண்களில் தசைகளின் வளர்ச்சி அதிகளவு ஏற்படுவதால் இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது.
- மாறாக, பெண்களில் இது தசை வளர்ச்சி மற்றும் மாதவிடாயின் காரணமாக ஏற்படுகிறது.
VII. உயர் சிந்தனை வினாக்கள்.
1. தங்களைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உன் வகுப்பு நண்பர்களுக்கு நீ என்ன பரிந்துரை செய்வாய்?- ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிக்க வேண்டும். அடிவயிறு, இடுப்புப்பகுதி மற்றும் பிறப்புறுப்புகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி நன்றாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
- உள்ளாடைகளை தினந்தோறும் மாற்ற வேண்டும். சுத்தமாக துவைத்துப் பயன்படுத்த வேண்டும்.
- பதின்ம வயதில் உள்ளவர்களுக்கு வியர்வைச் சுரப்பியின் அதிகப்படியான செயல்பாட்டினால் சில நேரங்களில் உடலில் துர்நாற்றம் ஏற்படும்.
- உடலை சுத்தமாகப் பராமரிக்கவில்லையெனில் பூஞ்சை, பாக்டீரியா மற்றும் தேவையற்ற பிற நோய்த் தொற்று உண்டாக வாய்ப்பு உள்ளது.
2. வளரிளம் பருவமானது ஆற்றல்மிக்க பருவம். இப்பருவத்தில் எந்த மாதிரியான ஆரோக்கியம் மற்றும் நல்ல பழக்கங்களை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர்கள்?
- விரைவான வளர்ச்சி மற்றும் வளரிளம் பருவம் என்பது முன்னேற்றத்திற்கான ஒரு நிலையாகும்.
- எனவே, முறையான வளர்ச்சி மற்றும் உடல் செயல்பாடுகளுக்கு சரியான ஆற்றல் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு தேவைப்படுகிறது.
- வளரிளம் பருவத்தில் சரிவிகித உணவு மிகவும் முக்கியமானதாகும்.
- சரிவிகித உணவில் புரதங்கள், கார்போ ஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் தேவையான விகிதத்தில் அடங்கியுள்ளன.
- வளரிளம் பருவத்தில், வளரும் குழந்தைகள் உணவு, உடற்பயிற்சி மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
- தனிப்பட்ட சுகாதாரம் என்பது ஒரு மனிதனின் ஆளுமையினைக் குறிக்கும் தெளிவான குறியீடாகும்.







0 Comments:
Post a Comment