Tamil Nadu Board 8th Standard Science - Unit 18: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 18 – from the Tamil Nadu State Board 8th Standard Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 18 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 18: உயிரினங்களின் ஒருங்கமைவு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. __________ என்பது உறுதியான தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது.அ) ஸ்கிளிரா
ஆ) கண்ஜங்டிவா
இ) கார்னியா
ஈ) ஐரிஸ்
விடைக்குறிப்பு:
அ) ஸ்கிளிரா
2. __________ செல்கள் சிறப்பு வாய்ந்த செல்களாகும். இவை உடலின் எந்த ஒரு செல்லாகவும் மாற இயலும்.
அ) நரம்பு
ஆ) மூல
இ) இதய
ஈ) எலும்பு
விடைக்குறிப்பு:
ஆ) மூல
3. உடலின் உள் சூழ்நிலையை சீராகப் பராமரித்தல் __________ எனப்படும்.
அ) தன்னிலை காத்தல்
இ) ஹோமியோஹைனசிஸ்
ஈ) ஹோமியோவிலிக்ஸ்
விடைக்குறிப்பு:
அ) ஹோமியோஸ்டாசிஸ்
4. காற்றில்லா அல்லது ஆக்ஸிஜனற்ற சூழலில் குளுக்கோஸ் சிதைவடைந்து __________ ஐக் கொடுக்கும்.
அ) லாக்டிக் அமிலம்
ஆ) சிட்ரிக் அமிலம்
இ) அசிட்டிக் அமிலம்
ஈ) நைட்ரிக் அமிலம்
விடைக்குறிப்பு:
அ) லாக்டிக் அமிலம்
5. நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு __________ என்று பெயர்.
அ) உட்சுவாசம்
ஆ) வெளிச்சுவாசம்
இ) சுவாசம்
ஈ) ஏதுமில்லை
விடைக்குறிப்பு:
இ) சுவாசம்
6. சவ்வூடு பரவலின் மூலம் சுரைசலின் இடப்பெயர்ச்சி __________.
அ) செறிவுமிக்க கரைசலிலிருந்து செறிவு குறைவான கரைசலுக்குச் செல்லும்.
ஆ) செறிவு குறைவான கரைசலிலிருந்து செறிவு மிக்க கரைசலுக்குச் செல்லும்.
இ) இரு நிகழ்வும் நடைபெறும்
ஈ) இவற்றில் ஏதுமில்லை
விடைக்குறிப்பு:
அ) செறிவுமிக்க கரைசலிலிருந்து செறிவு குறைவான கரைசலுக்குச் செல்லும்
7. சைட்டோபிளாசத்தை விட குறைந்த கரைபொருள் செறிவும், அதிக நீர்ச் செறிவும் உள்ள __________ கரைசலில் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.
அ) குறை செறிவு கரைசல்
ஆ) மிகை செறிவு கரைசல்
இ) நடுநிலைக் கரைசல்
ஈ) அமிலக் கரைசல்
விடைக்குறிப்பு:
அ) குறை செறிவு கரைசல்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. __________ என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.விடைக்குறிப்பு:
செல்
2. மிகப்பெரிய செல் __________ இன் முட்டை ஆகும்.
விடைக்குறிப்பு:
நெருப்புக் கோழி
3. __________ என்பது காற்றில்லா சுவாசத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
விடைக்குறிப்பு:
ஈஸ்ட்
4. கண்களின் இறுதியில் விழித்திரையின் பின்புறம் __________ நரம்பு அமைந்துள்ளது.
விடைக்குறிப்பு:
பார்வை
5. செல்லானது __________ என்ற அலகால் அளக்கப்படுகிறது.
விடைக்குறிப்பு:
மைக்ரான்
III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.
1. குறை செறிவுக் கரைசலில், செல்லிற்கு உள்ளே உள்ள கரைசலின் செறிவும் செல்லிற்கு வெளியே உள்ள கரைசலில் செறிவும் சமம்விடைக்குறிப்பு:
தவறு
ஒத்த செறிவுக் கரைசலில், செல்லிற்கு உள்ளே உள்ள கரைசலின் செறிவும் செல்லிற்கு வெளியே உள்ள கரைசலில் செறிவும் சமம்.
2. குறைந்த செறிவுடைய மூலக்கூறுகள் அதிக செறிவுடைய மூலக்கூறுகள் உள்ள பகுதிக்கு இடம்பெயர்வது பரவல் எனப்படும்.
விடைக்குறிப்பு:
தவறு
அதிக செறிவுடைய மூலக்கூறுகள் குறை செறிவுடைய மூலக்கூறுகள் உள்ள பகுதிக்கு இடம்பெயர்வது பரவல் எனப்படும்.
3. மனிதன் ஒரு வெப்ப இரத்தப் பிராணி.
விடைக்குறிப்பு:
சரி
4. தசை மடிப்புக்களாலான குரல் வளையானது காற்று நுழையும் போது அதிர்வடைந்து ஒலியை எழுப்புகிறது.
விடைக்குறிப்பு:
சரி
5. முன் கண்ணறை திரவம் கண்ணின் வடிவத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
விடைக்குறிப்பு:
தவறு
பின் கண்ணறை நிரவம் கண்ணின் வடிவத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
IV. பொருத்துக.
|
1
|
கார்போஹைட்ரேட்
|
CO₂, நீர்
மற்றும் வெப்பம்
|
|
2
|
குளுக்கோஸ்
|
அமினோ அமிலம்
|
|
3
|
புரதம்
|
குளுக்கோஸ்
|
|
4
|
அமினோ அமிலம்
|
கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள்
|
|
5
|
கொழுப்பு அமிலம்
|
நொதிகள், ஹார்மோன்கள்
மற்றும் புரதங்கள்
|
|
1
|
கார்போஹைட்ரேட்
|
குளுக்கோஸ்
|
|
2
|
குளுக்கோஸ்
|
CO₂, நீர்
மற்றும் வெப்பம்
|
|
3
|
புரதம்
|
அமினோ அமிலம்
|
|
4
|
அமினோ அமிலம்
|
நொதிகள், ஹார்மோன்கள்
மற்றும் புரதங்கள்
|
|
5
|
கொழுப்பு அமிலம்
|
கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள்
|
V. மிகச் சுருக்கமாக விடையளி.
- கருமுட்டையானது தொடர்ச்சியான பல மைட்டாசிஸ பிளவுறுதல்களை அடைந்து வெவ்வேறு அளவு மற்றும் உட்பொருள்களைக் கொண்ட திரள் செல்களாலான கருவை உருவாக்குகிறது.
- கருச்செல்கள் படிப்படியாக அவற்றின் அமைப்பிலும், பணியிலும், மாற்றங்களை அடைகின்றன. இந்நிகழ்வுக்கு செல் மாறுபாடடைதல் என்று பெயர்.
2. வெவ்வேறு வகையான திசுக்களை வகைப்படுத்துக.
- எபிதீலியம் திசு, தசை திசு, இணைப்புத் திசு, நரம்புத் திசு
3. காற்று நுண்ணறைகளின் பணிகளைக் கூறுக.
- காற்று நுண்ணறைகளின் உள்ளே இழுக்கப்படும் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் எளிய பரவல் மூலம் இரத்தத்தினுள் நுழைகிறது.
- திசுக்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்ஸைடு இரத்தத்தின் வழியே காற்று நுண்ணறைகளுக்கு எடுத்துவரப்பட்டு பரவல் மூலம் வெளியேற்றப்படுகிறது.
4. நுரையீரலில் காற்றானது உள்ளிழுக்கப்படும் மற்றும் வெளியேற்றப்படும் நிகழ்வின் பெயரைக் குறிப்பிடு.
- உள் சுவாசம், வெளிச் சுவாசம்
5. ஊடுகலப்பு ஒத்தமைவான்கள் மற்றும் ஊடுகலப்பு ஒழுங்கமைவான்களை வேறுபடுத்துக.
|
ஊடுகலப்பு
ஒத்தமைவான்கள்
|
ஊடுகலப்பு
ஒழுங்கமைவான்கள்
|
|
இத்தகைய
உயிரினங்கள் சுற்றுச்சூழலுக்கேற்ப தங்கள் உடலின் ஊடுகலப்பு அடர்த்தியை மாற்றிக் கொள்கின்றன. எ.கா:
கடல்நீரில் வாழும் மீன்கள்
|
இத்தகைய
உயிரினங்கள் புறச்சூழலின் தன்மை எப்படி இருந்தாலும் உடல் செயலியல் நிகழ்வுகள்
மூலம் தங்களது உட்புற ஊடுகலப்பு அடர்த்தியை நிலையான அளவுடன் பராமரித்துக்
கொள்கின்றன.
எ.கா:
நன்னீர் மீன்கள்
|
- உயிரினங்கள் தொடர்ந்து வாழ்வதற்குத் தேவையான அனைத்து வேதிவினைகளின் தொகுப்பே வளர்சிதை மாற்றம் எனப்படும்.
VI. சுருக்கமாக விடையளி.
- பாக்டீரியா, சயனோ பாக்டீரியா மற்றும் மைக்கோபிளாஸ்மா போன்ற உயிரினங்களில் உட்கரு காணப்படுவதில்லை.
- எனவே இவ்வுயிரினங்கள் புரோகேரியாடிக் செல் எனப்படும்.
2. காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசத்திற்கு இடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.
|
காற்றுள்ள சுவாசம்
|
காற்றில்லா சுவாசம்
|
|
ஆக்சிஜன்
உள்ள சூழலில் நடைபெறுகிறது.
|
ஆக்ஸிஜன்
இல்லாத சூழலில் நடைபெறுகிறது.
|
|
CO2
மற்றும் நீர் ஆகியவை விளை பொருள்களாக கிடைக்கின்றன.
|
CO₂, மற்றும் எத்தனால் அல்லது லாக்டிக் அமிலம்
வினை பொருள்களாகக் கிடைக்கின்றன.
|
|
அனைத்து
உயர்நிலை தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நடைபெறுகிறது.
|
சில
நுண்ணியிரிகள் மற்றும் மனித செல்களில் நடைபெறுகிறது.
|
3. கண்ணை ஏன் புகைப்படக் கருவியுடன் ஒப்பிடுகிறோம்?
- மனிதக் கண்ணானது ஒளியை ஒருங்கிணைத்தல், குவித்தல் மற்றும் பொருளின் பிம்பத்தை உருவாக்குவதற்காக ஒளியை லென்சு வழியே செலுத்துதல் ஆகிய பணிகளைச் செய்வதன் மூலம் புகைப்படக் கருவியைப் போலவே செயல்படுகிறது.
- எனவே கண்ணை ஒரு புகைப்படக் கருவியுடன் ஒப்பிடுகிறோம்.
4. தன்னிலை காத்தலை ஒழுங்குபடுத்த உதவும் உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் யாவை?
உறுப்பு:
- கல்லிரல், சிறுநீரகம் மற்றும் முளை (ஹைபோதலாமஸ்)
- தானியங்கு நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லாச் சுரப்பி மண்டலம்.
VII. விரிவாக விடையளி.
- சவ்வூடு பரவல் என்பது அரைகடத்து சவ்லின் வழியாக அதிக செறிவுடைய பகுதியிலிருந்து குறைவான செறிவுடைய பகுதிக்கு கரைப்பான் மூலக் கூறுகள் நகர்வது ஆகும்.
- இதைப் பொறுத்து சவ்வூடு பரவலின் நிலையை மூன்றாக வகைப்படுத்தலாம்.
- இதில் செல்லின் உட்புறக் கரைசலின் செறிவும் வெளிப்புறக் கரைசலின் செறிவும் ஒரே மாதிரியாக இருக்கும்.
- இதில் செல்லின் வெளியே உள்ள கரைசலின் செறிவு, உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட குறைவு.
- அதனால் வெளியிலிருந்து நீரானது செல்லின் உள்ளே செல்கிறது.
- இதில் செல்லின் வெளியில் உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட அதிகம்.
- இதனால் நீரானது செல்லை விட்டு வெளியேறுகிறது.
3. உட்சுவாசத்திற்கும், வெளிச்சுவாசத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
|
உட்சுவாசம்
|
வெளிச்சுவாசம்
|
|
உதரவிதானத்
தசைகள் சுருங்குகின்றன.
|
உதரவிதானத்
தசைகள் மீட்சியடைகின்றன
|
|
உதரவிதானம்
கீழ்நோக்கி நகர்கிறது.
|
உதரவிதானம்
மேல்நோக்கி நகர்கிறது.
|
|
விலா
எலும்புகள் மேல் நோக்கியும் வெளிப்புறமும் நகர்கின்றன.
|
விலா
எலும்புகள் கீழ்நோக்கி நகர்கின்றன.
|
|
மார்பறையின்
கொள்ளளவு அதிகரிக்கிறது.
|
மார்பறையின்
கொள்ளளவு குறைகிறது.
|
|
காற்று
மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் நுழைகிறது.
|
வழியாக
நுரையீரலிலிருந்து வெளியேறுகிறது. காற்று மூக்கின்
|
4. வளர்சிதை மாற்றத்தின் வகைகளை உதாரணத்துடன் விளக்குக.
- வளர்மாற்றம் மற்றும் சிதைமாற்றம் என்ற இரு நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.
- உருவாக்குதல் மற்றும் சேமித்தலைக் குறிக்கிறது.
- புதிய செல்களின் வளர்ச்சி, உடல்திசுக்களை பராமரித்தல் மற்றும் எதிர்காலத் தேவைக்காக ஆற்றலை சேமித்தல் ஆகியவற்றிற்கு காரணமாகிறது.
- வளர் மாற்றத்தின் போது கார்போ ஹைட்ரேட் புரதம் மற்றும் கொழுப்பின் எளிய மூலக்கூறுகள் பெரிய சிக்கலான மூலக்கூறுகளாக மாற்றப்படுகின்றன.
- எ.கா: குளுக்கோஸ் → கிளைக்கோஜன் பிற சர்க்கரைகள்
- அமினோ அமிலம் → நொதிகள், ஹார்மோன்கள் புரதங்கள்
- கொழுப்பு அமிலம் → கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள்
- செல்லின் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்கும் நிகழ்ச்சி ஆகும்.
- இந்நிகழ்ச்சியின்போது பெரிய மூலக்கூறுகள் சிதைக்கப்பட்டு ஆற்றல் வெளியிடப்படுகிறது.
- சிக்கலான வேதி மூலக்கூறுகள் சிதைக்கப்படுவதால் கழிவுப் பொருட்கள் உருவாகி தோல், சிறுநீரகங்கள், நுரையீரல் வழியாக வெளியேற்றப்படுகின்றன.
- மனித உடலின் அயனிச் சமநிலையைப் பராமரிக்கிறது. மனித உடலின் இயக்கம், வளர்ச்சி, செல்கள், திசுக்களின் பராமரிப்பு மற்றும் சரி செய்தலுக்கு காரணமாகிறது.
- எ.கா: கார்போ ஹைட்ரேட் → குளுக்கோஸ்
- குளுக்கோஸ் → CO₂+ நீர் + வெப்பம்
- புரதம் → அமினோ அமிலம்
5. சுவாச செயலியல் நிகழ்வுகளை விளக்குக.
உட்சுவாசம்:
- காற்றை நுரையீரல்களுக்குள் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு உள்சுவாசம் எனப்படும்.
- உட்சுவாசத்தின் போது மார்பெலும்பு மேல் நோக்கியும், வெளி நோக்கியும் தள்ளப்படுவதோடு உதரவிதானம் கீழ் நோக்கியும் இழுக்கப்படுகிறது.
- இதனால் மார்பறையின் கொள்ளளவு அதிகரித்து அழுத்தம் குறைவதால் வெளிக்காற்றானது நுரையீரல்களினுள் நுழைகிறது.
- இங்கு காற்றுக்கும், இரத்தத்திற்கும் இடையே வாயுப் பரிமாற்றம் நிகழ்கிறது.
- நுரையீரல்களிலிருந்து காற்றை வெளியேற்றும் நிகழ்வு வெளிச் சுவாசம் எனப்படும்.
- வெளிச் சுவாசத்தின் போது நுரையீரல்கள் காற்றை அதிக விசையுடன் வெளித் தள்ளுகின்றன.
- விலா எலும்பிடைத் தசைகள் மீட்சியடைந்து, மார்பறையின் சுவர் அதன் பழைய நிலைக்குத் திரும்புகிறது.
- உதரவிதானமும் மீட்சியடைந்து மார்பறையில் மேல் நோக்கி நகர்கிறது.
- இதன் காரணமாக மார்பறையின் அழுத்தம் புறச்சூழலை ஒப்பிடும் போது அதிகரிக்கிறது.
- மார்பறைக்கும் வளி மண்டலத்திற்கும் இடையே காணப்படும். இந்த அழுத்த வேறுபாட்டால் காற்றானது விசையுடன் வெளியேறுகிறது.
VIII. உயர் சிந்தனை வினாக்கள்.
1. நமக்கு ஏன் உடனடியாக ஆற்றல் தேவைப்படுகிறது? குளுக்கோஸ் அந்த ஆற்றலை வழங்க முடியுமா? விளக்குக.- நமது உடலில் உள்ள செல்களுக்கு ஆற்றல் தேவைப்படுவதால், குளுக்கோஸ் அந்த ஆற்றலை நமக்கு உடனடியாக தருகிறது.
- குளுக்கோஸ் ஒரு எளிய சர்க்கரையாகும்.
- இது இரத்தத்தால் எளிதில் உறிஞ்சப்படுகிறது, மற்ற கார்போஹைட்ரேட்டுகள் முதலில் குளுக்கோஸாக உடைக்கப்பட்டு பின்னர் உறிஞ்சப்படுகின்றன.
2. ஊறுகாய் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதில் எந்தெந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன?
- முதலில் ஊறுகாய்க்கு தேவையான காய்களை உப்பு அல்லது வினிகர் சேர்த்து ஊறவைக்க வேண்டும்.
- இதனை சுத்தமான பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் வைத்து சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும்.
- பின்பு தேவையான பொருட்களை சேர்த்து சமைத்து பயன்படுத்தலாம்.
IX. மதிப்புசார் வினாக்கள்.
1. மருத்துவர் உஷா என்பவர் நுரையீரல் நிபுணர், ஒரு நாள் அர்ஜுன் என்ற மாணவனை அவர் சந்தித்தார். அவனுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டிருந்தது. அவனைப் பரிசோதித்து பின்பு, அவனை தினமும் விளையாட்டுத் திடலுக்குச் சென்று கால்பந்து அல்லது கூடைப்பந்து விளையாடுமாறு அறிவுரை கூறினார். மேலும் தினமும் காலையில் மூச்சுப் பயிற்சி செய்யுமாறும் அறிவுரை வழங்கினார்.அ) மருத்துவர் ஏன் அந்த மாணவனை தினமும் விளையாட்டு மைதானத்திற்கு செல்ல அறிவுரை வழங்கினார்?
- அர்ஜுனுக்கு நுரையீரல் தொற்று இருப்பதால் சுவாசப் பிரச்சனை இருக்கிறது.
- உடற்பயிற்சி அல்லது விளையாட்டுகளால் சவாசக் கோளாரை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
- விளையாடும் போது அதிகமான அளவு ஆக்ஸிஜன் நுரையீரல் உள்ளெ செல்வதால் அர்ஜுனால் எளிதாக சுவாசிக்க முடியும்.
- எனவே மருத்துவர் அவனை விளையாடுமாறு அறிவுரை கூறினார்.
- நமது இரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது.
- சுவாசக் கோளாரை (ஆஸ்துமா) சரி செய்கிறது.
- இதயம் சம்பந்தமான நோய்களை ஓரளவு கட்டுக்குள் வைக்கிறது.
2. நாம் மூடிய அறை அல்லது கூட்டம் அதிகமாக உள்ள பகுதிக்குச் சென்றால் மூச்சு விடுதலில் ஏன் சிரமம் ஏற்படுகிறது என்பதை விளக்குக.
- மூடிய அறை அல்லது கூட்டம் அதிகமாக உள்ள பகுதியில் மக்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
- அனைவரும் வெளியிடக்கூடிய கார்பன் ஆக்ஸைடு அளவு அதிகமாகிறது.
- அனைவருக்கும் தேவையான ஆக்ஸிஜன் அளவைவிட கார்பன்டை ஆக்ஸைடு அளவு அதிகமாக இருப்பதால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படுகிறது.
3. சைலேஷ் என்பவர் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். அவனுக்கு அலைபேசியில் காணொலி விளையாட்டு விளையாடுவதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தான். சில மாதங்களுக்குப் பிறகு அவனது கண்கள் சிவந்து, வலியை உணர்ந்தான். அவனது அறிவியல் ஆசிரியர் அதற்கான காரணங்களைக் கேட்டறிந்து அவனது பெற்றோரை அழைத்து கண் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுமாறு கூறினார்.
அ) அதிக அளவு அலைபேசியைப் பயன்படுத்துவது எவ்வாறு நமது கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது?
- உடல் மற்றும் மனநல குறைபாடுகள், கண் வலி, மங்கலான பார்வை, உலர் தன்மையுள்ள கண்கள், தலைவலி, கவனக்குறைவு, தூக்கமின்மை போன்றவை ஏற்படுகிது.
- மாணவரின் உடல் நலனில் அக்கறை காட்டுதல்.







0 Comments:
Post a Comment